வெள்ளி, 30 டிசம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 79

துருப்பு சீட்டு

தன் மூளையில் இதுவரை தோன்றாத யோசனையை தனக்கு கூறியதன்னுடைய உதவியாளனை ஏற இறங்க ஒரு முறை பார்த்தான் தர்மபாலன்.

"நீ என்ன சொல்ல வருகிறாய்?"

" பாருங்கள் எஜமானே! நீலனின் கப்பல் நம் கண் முன்னால் நிற்கிறது. அதற்குள் மார்க்கதரிசியின் புதையல் இருப்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதை நம்மால் கைப்பற்ற முடியாது. அந்த யவனன் கப்பலுக்கு காவலாக தன்னுடைய ஆட்களை நிறுத்தி வைத்திருக்கிறான். காய் பழமாகும் வரை காத்திருப்பதா இல்லை தடி கொண்டு அடித்து அதை பழமாக்குவதா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். இங்கே நம்மால் அந்த புதையலை தொடக்கூட ஏன் மனதால் நினைத்து கூட பார்க்க முடியாது. இதே ஆதித்தன் நம் கைப் பிடியில் பணயக் கைதியாகப் பிடிபட்டிருந்தால் அவனை மீட்க நீலன் கதறிக் கொண்டு வந்திருப்பான். அவனை மீட்க மார்க்கதரிசியின் பொக்கிசங்களையும் இழக்க அவன் துணிந்திருப்பான். மார்க்கதரிசியின் புதையல் என்னும் பெரிய மீனைப் பிடிக்க ஆதித்தன் என்ற சிறு மண்புழு நமக்குத் தேவை. நான் சொன்னதை பற்றி சற்று யோசித்து பாருங்கள்" என்றான்.வினயத்துடன் உதவியாளன்.

"நல்ல யோசனைதான். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அந்த ஆதித்தனை சாதாரணமாக எண்ணி விடாதே! அவனை பிடிக்க நினைப்பது வெறி கொண்ட வேங்கையின் வாயில் விரலை நுழைப்பது போன்றது. அவ்வளவு ஆபத்தானவன் அந்த ஆதித்தன்"

"ஓரு தனி மனிதனை பார்த்து நீங்கள் இப்படி பயப்படுவது எனக்கு வியப்பை தருகிறது."

"இவனிடம் மோதியவர்கள் இருந்ததை இழந்திருக்கிறார்கள். இழந்தவை என்னவென்று நினைக்கிறாய்? ராஜ்ஜியங்கள், அரசுகள். அத்தனையையும் அவன் தனி மனிதனாக நிர்மூலம் செய்திருக்கிறான். அதனால் தான் அவன் மீது கை வைக்க யோசனையாக இருக்கிறது. அவனை பணயக் கைதியாக்கலாம் என்று நினைத்து நாம் அவனிடம் பணயக் கைதியாக மாட்டிக் கொண்டு விட்டால் என்னாவது என்று யோசித்து பார்" என்றான் தர்மபாலன்.

"நான் நினைப்பதுபோல் அவன் சாதாரண ஆள் இல்லை போலிருக்கிறதே?"

"ஆம். அதனால் இந்த பேச்சை, இந்த யோசனையை இத்தோடு விட்டு விடுவோம்.கொக்கு மீனுக்காக காத்திருப்பதைப் போல் நாம் இந்த கப்பல் கிளம்பும் வரை காத்திருப்போம். அதுதான் நமக்கு நல்லது." என்றான் தர்மபாலன்.

அவர்கள் காத்திருக்க துவங்கினார்கள்.

மோகினி தீவில் விருந்து அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாற வைக்கப்பட்டிருந்தன.

யவனன் ஒரு மதுuட்டியை எடுத்து நீலனிடம் நீட்டினான். " இதை குடித்து பார்.என்னுடைய நாட்டிலிருந்து வந்த மதுபானம் இது. சொர்க்கத்திற்கே உன்னை அழைத்து செல்லும் "

யவனன் நீட்டிய புட்டியை கை நீட்டி தடுத்தான் நீலன்." நான்குடிப்பதை விட்டு விட்டேன் நண்பனே! நண்பர்களோடு பழைய விசயங்களை பேசுவதை விட பெரிய சொர்க்கம் வேறு இருக்கிறதா என்ன?"

"நன்றாகச் சொன்னாய். ஆதித்தனும் வந்து விட்டால் நம் பேச்சு கச்சேரி சூடு பிடித்து விடும்" என்றான் பைராகி .

"ஆதித்தன் வந்து விட்டால் நீங்கள் எல்லோரும் என்னை விட்டு போய் விடுவீர்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்றான் மகேந்திரன்.

"பைராகியை இங்கேயே வைத்து கொண்டு விடலாம் என்று தானே நினைக்கிறாய்?"

"ஆமாம். சரியாகச் சொன்னாய். இப்படி ஒரு திறமைசாலியை விட்டு விட நான் விரும்பவில்லை."

"உலகிற்கே ஒளி தரும் ஆதவனை உன் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்து அழகு பார்க்க நினைப்பது நியாயமா? பைராகி யாருக்கும் சொந்தமான வனல்ல. அவனது கண்டுபிடிப்புகளும், சிந்தனைகளும் உலகுக்கே பொது வானவை. அவனை அவன் போக்கிலேயே விட்டு விடுவது தான் நல்லது " என்றான் நீலன்.

" என்னுடைய தவறு எனக்கு புரிந்து விட்டது நண்பா. என்னை மன்னித்து விடு. உங்களின் நட்பு கிடைத்ததே என்னுடைய பாக்கியம் ஃ

"இன்னும் சில நாட்களில் ஆதித்தன் இங்கே வந்து சேர்ந்து விடுவான். பிறகு நாம் மலை நாட்டிற்கு பயணமாக வேண்டியதுதான்." என்றான் நீலன்.

"அங்கே ரகசிய தீவில் என்ன தான் நடந்திருக்கும், அந்த பார்த்திபன் போரில் வென்றிருப்பானா?"

"ஆதித்தன் அவனுடன் இருக்கும் வரை அவனை தோல்வி அண்டாது. என்னுடைய கவலையெல்லாம் ஒன்றை பற்றித்தான் "

" எதைப் பற்றி "

"அந்த ஆயுதங்கள் .அவை நவீனமானவை.பேரழிவை தரக் கூடியவை. அதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றால் எந்த பலனும் இல்லை. அவற்றைத்தான் நான் பார்த்திபனிடம் கொடுத்து விட்டு வந்தேன். அவற்றை வைத்து யுத்தத்தை ஜெயிப்பது கடினம்தான்."

"அந்த ஆயுதங்கள் பயனற்றவை என்று எதை வைத்து கூறுகிறாய்?"

நீலன் அந்த ஆயுதங்களில்இருந்த குறைபாட்டை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்து கூறினான்.

"நம் நண்பன் திறமைசாலி. அந்த ஆயுதங்களை எப்படி கையாளுவதென்பது அவனுக்கு தெரியும்" என்று புன்னகைத்தான் பைராகி .

"குறைபாடுள்ள அந்த ஆயுதங்களை அவனால் எப்படி பயன்படுத்த முடியும்?"

"நெருப்பில் காய்ச்சினால் உலோகம் விரிவடையும் என்ற அறிவியல் உண்மை ஆதித்தனுக்கு தெரியும். அந்த ஆயுதத்தின் உலோக குண்டுகளை நெருப்பில் காய்ச்சி பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஊகம்."

" இதற்க்குத் தான் பைராகி தேவை என்பது " என்றான் மகேந்திரன்.

நண்பர்கள் சுவையான உணவுகளை உண்ட படி சுவாராஸ்யமாக உரையாடி கொண்டிருந்தனர்.

அதே நேரம் சிறு கப்பலில் ரகசிய தீவிலிருந்து வெவ்வேறு திசைகளில் வெளியேறி கொண்டிருந்தனர் ஆதித்தனும், மதிமாறனும்.

மதிமாறன் தன்னுடைய மாலுமியை துரிதப்படுத்தி கொண்டிருந்தான்.

" கப்பலை வேகமாக செலுத்துங்கள். ஆதித்தன் மலைநாட்டை அடையும் முன்பாக நாம் அங்கே சென்று தயாநிதியை சந்தித்தாக வேண்டும்" என்றான் மதி மாறன் . அவனது பரபரப்பை உள்ளுர ரசித்தபடி நின்று கொண்டிருந்தாள் ரத்னாவதி . திட்டப் படி எல்லாம் நடந்து முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி நிலவியது அவளது முகத்தில்

அவன் அருகே நின்றிருந்த ரத்னா வதியை அணைத்து கொண்ட மதிமாறன் " நீ தான் என்னுடைய துருப்பு சீட்டு ரத்னா அந்த கிழவன் தயாநிதி உன்னை மகள் என்று நம்பி விட்டாள் போதும். ஆதித்தனால் எதுவும் செய்ய முடியாது"

"தவறு. தயாநிதியும், ஆதித்தனும் உங்களை தீண்டாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் என் கழுத்தில் தாலி கட்டி என்னுடைய கணவராக மாற வேண்டும். அப்போதுதான் தயாநிதியின் மருமகனாக நீங்கள் மாற முடியும் "

"சரியாக சொன்னால். மலைநாட்டை சென்றடைந்தவுடன் முதலில் நம் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு நாம் தயாநிதியின் வீட்டிற்கு செல்கிறோம். அங்கே நான் இந்த ஆபரணத்தை அவனிடம் ஒப்படைப்பேன். இந்த ஆபரணம் உன்னிடம் கிடைத்ததாக பொய் கூறுவேன். சந்திரவதனாவின் பெயரில் நீ அவளது வாழ்க்கை சரிதத்தை உன்னுடையதாக கூறு. அந்த கிழவன் நம்பி விடுவான். சிறு வயதில் தொலைந்து போன மகள் திரும்ப கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவளை நான் திருமணம் செய்து கொண்ட நன்றி உணர்ச்சியில் நான் சொல்வது அனைத்தையும் அவன் அப்படியே நம்பி விடுவான். அவன் நம்பும்படியாக நான் கதை சொல்வேன். நான் அவனுக்கு மருமகனாகி விட்டதால் அவன் ரகசிய தீவின் மீது எனக்காகவும் உனக்காகவும் படையெடுக்க உதவி செய்வான். நாம் தற்காலிகமாக இப்போது தோற்றிருக்கலாம். ஆனால் நிரந்தர வெற்றி நம்முடையது. நாம் தயாநிதியின் ரத்த சொந்தமாக மாறிய பின் அந்த ஆதித்தனால் நம்மை எதுவும் செய்ய முடியாது. சிகப்பு முகமூடிக்கு உதவி செய்ததன் மூலம் ஆதித்தனைதேசதுரோகியாக சித்தரித்து அவன் கதையை இங்கேயே முடித்து விடுவேன். நீலன் படாதபாடு பட்டு கொண்டு வந்த மார்க்கதரிசியின் பொக்கிசமும் எனக்கே கிடைத்துவிடும். அதிர்ஷ்ட சக்கரம் இப்போது என் பக்கமாக சுழல்கிறது" என்று கொக்கரித்தான்மதிமாறன்.

தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டும் மதி மாறனைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் மோகினி தீவை நோக்கி கழுகில் விரைந்து கொண்டிருந்தான் ஆதித்தன்.

மோகினி தீவின் துறைமுகத்தில் அவனுக்காக காத்து கொண்டிருந்தான் தர்மபாலன்

பைராகி, நீலன் உட்பட நண்பர்கள் குழுவும் ஆதித்தனின் வருகைக்காக காத்து கிடந்தது.

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 78

இரண்டு கப்பல்கள்

தனக்கு எதிராக களத்தில் இத்தனை குழப்பங்கள் நேரும் என்பதையோ தான் போரில் தோற்று ஓடி வருவோம் என்பதையோ மதிமாறன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதை விடவும் மிகப் பெரிய இடியை தந்தது ரத்னாவதியின் சிறைச்சாலைக்கு செல்வோமா என்ற வினோத பேச்சு.

தன்னுடைய பலவீனமான நேரத்தை பயன்படுத்தி கொண்டு தன்னை பழி வாங்க நினைக்கிறாளோ ரத்னாவதி என்ற அவநம்பிக்கையான எண்ணம் அவனுக்குள் எழுந்தது. அதே நேரம் தயாநிதியின் மகளாக அவளை நடிக்க வைப்பதன் மூலம் அவன் அடையப் போகும் சகாயங்களை அவள் மறந்திருக்க மாட்டாள் என்றும் அவனுக்கு தோன்றியது. நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இரண்டு எதிரெதிர் உணர்ச்சிகளுக்கு நடுவே திண்டாடிக் கொண்டிருந்தான் அவன்.

" என்ன அன்பரே ! சிறைசாலைக்கு செல்வோம் என்று சொன்னதும் பயந்து விட்டீர்களா?" என்றாள் ரத்னாவதி மென்மையான சிரிப்புடன்.

"நான் ஏன் பயப்பட வேண்டும்? அங்கே தான் யாருமே இல்லையே?" என்றான் மதி மாறன் தன்னுடைய அவநம்பிக்கையை மறைத்து கொண்டவனாக.

"அங்கே இருந்த கைதிகளை நான் தான் விடுவிக்க சொன்னேன். ஏன் என்று தெரியுமா?"

"நம் படைபலத்தை பெருக்க "

"அது உங்களுக்கு தெரிந்த காரணம். எனக்கு தெரிந்த காரணம் இன்னொன்று இருக்கிறது"

" என்னவென்று சொல். உன்னுடைய புதிர் பேச்சு எனக்கு விளங்கவில்லை" என்றான் மதி மாறன் குழப்பத்துடன் .

"அந்த சிறைச்சாலையில் அடைபட்டிருந்த நீலன் அங்கிருந்து எப்படி தப்பிச் சென்றான் என்று உங்களுக்கு தெரியுமா?"

" அவன் எப்படி தப்பிச் சென்றான் என்று எனக்கு தெரியாது. நீதான் அவன் சுரங்க வழி ஏதாவதொன்றில் தப்பி சென்றிருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தாய்."

"ஆம். அந்த வழியை நான் கண்டுபிடித்து விட்டேன். அந்த வழியில் தான் நாம் இருவரும் இப்போது இந்த தீவிலிருந்து தப்பி செல்ல போகிறோம்"

மதிமாறனின் இருதயம் அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டு ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.

" என்ன சொல்கிறாய் ரத்னாவதி? நீ சொல்வது உண்மையா? " என்ற மதிமாறனின் வார்த்தைகளில் வியப்பு மண்டி கிடந்தது.

"இன்னமும் என் மீது சந்தேகமா அன்பரே.? கட்டிட வரைபடங்களை பார்த்து நான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விசயம்தான் அந்த ரகசிய வழி. அந்த சிறைச்சாலை தான் ரகசிய வழியின் தலைவாசல் .அங்கிருந்து புறப்படும் சுரங்கப்பாதை வெவ்வேறு பாதைகளாக பிரிகிறது. அவை நாட்டின் வெவ்வேறு இடங்களில் முடிவடைகிறது. அரண்மனையில் சுரங்கம் இருப்பது தான் வழக்கம். ஆனால் அந்த வழக்கத்திற்கு விரோதமாக இங்கே சிறைச்சாலையிலிருந்து சுரங்கம் ஆரம்பமாகிறது. எதிரிகளை ஏமாற்ற இப்படி ஒரு மாற்றத்தை இங்கே நமக்கு முன்னால் இருந்தவர்கள் செய்திருக்கலாம். அதில் ஒரு வழி கடலுக்கு அருகே சென்று முடிகிறது. அந்த வழியில் தான் நாம் பயணிக்க போகிறோம்"

"நாம் அந்த வழியில் கடலை சென்றடைந்து விடலாம். ஆனால் கப்பல் இல்லாமல் இந்த தீவிலிருந்து எப்படி வெளியேற முடியும்? நாம் போரில் தோற்ற செய்தி இப்போது தீவு முழுக்க பரவி இருக்கும். யார் நமக்கு கப்பலை தந்து உதவுவார்கள்?"

"நான் நேற்று இரவே ஒரு கப்பலை விலைக்கு வாங்கி கடலோரத்தில் யாரும் கவனிக்காத இடத்தில் அதை நிறுத்தி வைத்திருக்கிறேன். அதற்கு நம் ஆட்களையும் காவல் வைத்து விட்டேன். மிகத் திறமையான ஒரு மாலுமியையும் அதில் வேலை செய்ய நியமித்தி ருக்கிறேன். மாளிகையில் இருந்த சொற்ப பொக்கிசங்களையும் கப்பலுக்கு கொண்டு சென்று விட்டேன்."

" நல்லது செய்தாய் ரத்னாவதி . பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். அவர்கள் உன் செயல்திறம் அறியாதவர்கள்.வா உடனே இங்கிருந்து கிளம்புவோம்" என்றான் மதி மாறன் .

இருவரும் அங்கிருந்து சிறைச்சாலைக்கு பயணமாகினர். காலியாக இருந்த சிறைசாலையில் அவர்களை தடுக்க யாருமே இல்லை. சிறை கூடத்திற்குள் சென்ற ரத்னாவதி சிறிது நேரதடுமாற்றத்திற்கு பிறகு ரகசிய வழியின் தலைவாயிலைக் கண்டு பிடித்து விட்டாள்.

இருவரும் ஆளுக்கொரு தீவட்டியை தயார் செய்து கொண்டு அந்த சுரங்க வழியில் பயணிக்க தொடங்கினர்.

அவர்களுக்காக ஒரு கப்பல் காத்திருந்தது.

அங்கே போர் களத்தில் !

மதிமாறன் கண்காணாது மறைந்து விட்டதால் வழி நடத்த தலைவன் இல்லாத படை தடுமாற ஆரம்பித்தது. புதிய தளபதிகள் இருவரும் முன் அனுபவம் இல்லாமல் குழப்பமடைய ஆரம்பித்தனர்.

மெல்ல மெல்ல பார்த்திபனின் கை ஓங்க ஆரம்பித்தது. சற்று நேரத்திலேயே மதிமாறனின் படைகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய ஆரம்பித்தன. மிகவும் குறுகிய நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்து விட்டது. நிலவரம் தங்களுக்கு சாதகமாக மாறுவதை கவனித்து கொண்டிருந்த பார்த்திபன் மகிழ்ச்சியில் ஆதித்தனை கட்டி கொண்டான்.

"நாம் வென்று விட்டோம் நண்பா." என்றான் சந்தோசமிகுதியில் பார்த்திபன்.

"இனி தான் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனிமேல் நீ பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உன்னுடைய ஓவ்வொரு முடிவிலும், அறிவிப்பிலும் ஆயிரக்கணக்கான மக்களின் தலைவிதி கலந்திருக்கிறது என்பதை மறந்துவிடாதே!" என்று அவனது பொறுப்புகளையும், கடமையையும் நினைவுபடுத்தி எச்சரித்தான் ஆதித்தன்.

" உன் அறிவுரையை மறக்கவே மாட்டேன் நண்பா. எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்"

"ஆமாம். படைகளை நிர்கதியாக விட்டு சென்ற மதிமாறன் எங்கே தான் போயிருப்பான்?"

"நிச்சயம் நம்முடைய அதிகாரத்திற்கு வந்து விட்ட இந்த தீவில் இருக்க விரும்ப மாட்டான் "

"உண்மை. அவன் தன் தவறை மறைத்து நியாயப்படுத்த தயாநிதியை சந்திக்க கிளம்பியிருக்க வேண்டும். அவனுக்கு முன்னால் நான் தயாநிதியை சந்தித்தாக வேண்டும். அப்போதுதான் உன் பதவி நீடிக்கும். நான் வாக்கு கொடுத்த படி உன்னை போரில் வெல்ல வைத்து விட்டேன். இத்தோடு என் வேலை முடிந்தது. நான் இங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது."

" என்ன சொல்கிறாய் நண்பா! என்னிடம் எதுவும் இல்லாத போது என்னுடன் இருந்தாய். இன்று எல்லாமும் இருக்கும் போது என்னை விட்டு போகிறேன் என்று சொல்கிறாயே? இது நியாயமா?"

"கஷ்டத்தில் இருக்கும் போது உதவுகிறவன் தானே நண்பன். நான் உன் நண்பன் பார்த்தி பா.உ ன் பிரச்சனையை நான் தீர்த்து வைத்து விட்டேன். இனி இங்கே எனக்கு வேலையில்லை. எல்லாவற்றையும் பொறுப்புடன் பார்த்து கொள். நான் இங்கிருந்து கிளம்புகிறேன்"

"உன்னை பிரிய எனக்கு மனமில்லை நண்பா. ஆனால் வேறு வழியில்லை. இறைவன் விரும்பினால் சூழ்நிலைகள் சம்மதித்தால் நாம் விரைவில் சந்திப்போம். ஆமாம் இங்கிருந்து மோகினி தீவிற்கு எப்படி பயணமாகப் போகிறாய்?"

" என்னுடைய கழுகில்தான்."

"அதை இயக்க ஆட்கள் தேவையா?"

"இல்லை. வேண்டாம். நான் பார்த்து கொள்கிறேன்"

ஆதித்தன் பார்த்திபனிடமிருந்து விடைபெற்று கொண்டு கிளம்பினான். கலை கூத்தாடிகள் அவனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

" என்னுடைய பொம்மலாட்டகலை ஒரு போருக்கு பயன்பட முடியும் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால் உங்களின் மதியுகம் அதை சாத்தியமாக்கிவிட்டது. என் கலை மீதான பெருமிதம் நான் சாகும் வரை என்னை விட்டு போகாது" என்று கைகூப்பி நெக்குருகினான் சாத்தன்.

" எதை எப்படி எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நண்பா கலையின் கற்று கொண்டதன் பெருமை இருக்கிறது" என்ற ஆதித்தன் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று கிளம்பினான்.

தீவின் வெவ்வேறு திசைகளிலிருந்து இரண்டு படகுகள் கிளம்பின. ஓன்றில் மதிமாறனும், ரத்னாவதியும் இருந்தனர். அவர்களின் இலக்கு மலைநாடு. மற்றொரு கப்பலில் இருந்தவன் ஆதித்தன். அவனது இலக்கு மோகினி தீவு.

தர்மபாலன் மோகினி தீவின் துறைமுகத்தில் காத்திருந்தான். அவன் சிந்தனையில் மூழ்கி கிடப்பதை பார்த்த அவனது உதவியாளன் தன் தொண்டையை செருமினான்.

அவனது சத்தம் கேட்டு நிமிர்ந்த தர்மபாலன்" என்ன?" என்றான்.

"நாம் ஏன் மோகினி தீவிற்குள் செல்லாமல் இங்கே காத்து கொண்டிருக்கிறோம்?" என்றான் அவன்.

"நீலனின் வருகைக்காக காத்திருக்கிறோம்"

"ஆதித்தன் வராமல் நீலன் இங்கிருந்து கிளம்ப மாட்டான் "

"அது எனக்குதெரியும் "

"ஆதித்தனை நாம் பணயக் கைதியாக பிடித்து வைத்து கொண்டு நீலனை பொக்கிசங்களை ஒப்படைக்க சொல்லி மிரட்டினால் என்ன?"

தர்மபாலனின்புருவங்கள் முடிச்சிட்டன.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

ரகசியதீவு77

Aரகசிய தீவு

அத்தியாயம் 77

ஆபத்தோடு பயணிப்பவன்

"ஆதித்தன் நம்மைதிசை திருப்ப நினைக்கிறான். போரில் கவனம் செலுத்தாமல் நம் கவனத்தை நீலன் மீது செலுத்துவதற்காக அவன் வேண்டுமென்றே பொய் சொல்லி இருக்கலாம் இல்லையா?" என்றான் மதி மாறன் .

" இருக்கலாம். அவன் சொல்வது உண்மையா பொய்யா என்பதை அறிய ஒரே வழிதான் இருக்கிறது. நீலனின் கப்பலான முத்தழகி மோகினி தீவில் நிலை கொண்டு நின்றிருந்தால் அவன் ஆதித்தனின் வருகைக்காக காத்து கொண்டிருந்தால் ஆதித்தன் கூறியது அனைத்தும் உண்மை என்று எடுத்து கொள்ளலாம்." என்றாள் ரத்னாவதி

" ஆனால் அதை தெரிந்து கொள்ள நமக்கு எந்த வழியும் இல்லை. ஒற்றர் படை முதல் கொண்டு அனைவரையும் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து விட்டேன். அனைவரும் போரில் கலந்து தயாராக இங்கே இருக்கிறார்கள். அயலகத்தில் நடக்கும் எதையும் நாம் அறிய எந்த வாய்ப்பும் இல்லை." என்றான் மதி மாறன் பரிதாபமாக .

" பாதகமில்லை. இப்போது நம் முழு கவனத்தையும் யுத்தத்தில் செலுத்துவோம். வெற்றி கடினம்தான். ஆனால் அடைய முடியாததில்லை. நம் கவனம் வெற்றியின் மீது இருக்கட்டும். இந்த யுத்தத்தில் நம்முடைய முழு கவனமும் ஆதித்தனின் மீது தான் இருக்க வேண்டும். இந்த யுத்தத்தின் முடிவில் அவன் கொல்லப்பட வேண்டும்"

"பார்த்திபன் ? "

"எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கி விடும். ஆதித்தனின் கதையை முடித்து விட்டாலே இவ்வளவு பெரிய வீரனையே சாய்த்து விட்டார்களே என்று மனச்சோர்வில் சோர்ந்து விடுவான் பார்த்திபன். அதன் பிறகு அவனை வீழ்த்துவது எளிது"

"ஆதித்தன் மோகினி தீவிற்கு சென்று சேரா விட்டால் நீலன் மலைநாட்டை நோக்கி கிளம்பி விடுவான். மலைநாடு செல்லும் நீலன் அங்கே தயாநிதியை சந்தித்து விட்டால் நம்முடைய நாடகம் அம்பலமாகி விடும்"

"உண்மைதான். ஆனால் நாம் இப்போது அவனைப் பற்றி கவலைப்பட போவதில்லை"

"ஏன் அப்படி சொல்கிறாய்?"

" காரணம் இருக்கிறது. நீலன் ஆபத்தை தன் கப்பலில் சுமந்து செல்கிறான். அவன் கப்பலில் இருக்கும் மார்க்கதரிசியின் தங்கம் தான் அவனது முதல் எதிரி .அந்த பொக்கிசம் அந்த கப்பலில் இருக்கும் வரை ஆபத்து அவனை விரட்டிக் கொண்டே தான் இருக்கும். மார்க்கதரிசியின் தங்கம் ரகசிய தீவிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு நீலனின் கப்பலில் பயணமாவது இவ்வளவு நேரத்தில் கடல் பிராந்தியம் முழுவதும் தீயாகப் பரவி இருக்கும். அந்த தங்கத்தை கைப்பற்ற கடல் கொள்ளையர்கள் முயற்சி செய்யலாம் .அந்த புதையல் கைக்கு கிடைத்து விட்டால் பல தலைமுறைகள் உட்கார்ந்து கொண்டே தின்னலாம். அந்த அரிய வாய்ப்பை யாரும் தவற விடமாட்டார்கள். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இந்நேரம் அவனது கப்பலை யாரோ ஒரு கடல் கொள்ளையன் பின் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். நீலன் மோகினி தீ வை விட்டு கிளம்பிய மறுகணமே ஆபத்து அவனை பின் தொடர ஆரம்பித்து விடும். அவனும் அவன் கப்பலும் அதிலிருக்கும் புதையலும் மலை நாட்டிற்கு சென்று சேர்வது குதிரைக்கு கொம்பு முளைத்த கதை தான் " என்றாள் ரத்னாவதி நிதானமாக ..

ரத்னாவதியின் பேச்சை கேட்ட மதிமாறன் அயர்ந்து போய் நின்றான். "அற்புதம் ரத்னா வதி! அற்புதம்" என்ற மதிமாறன் சந்தோசமிகுதியில் அவளை கட்டியணைத்து கொண்டான்.

"என்னை படுக்கையறையில் பயன்படுத்தி கொள்ள தெரிந்த உங்களுக்கு அரசியல் களத்தில் பயன்படுத்தி கொள்ளதெரியவில்லையே?" என்றாள் அவள்.

"தவறுதான். என்னை மன்னித்து விடு. இனி எதை செய்வதாக இருந்தாலும் உன்னை கேட்டு விட்டே செய்கிறேன் என் கண்ணே" என்றான் மதி மாறன் .

மறுநாள் காலை!

பிசாசு பள்ளத்தில் மதிமாறனின் படைகள் அணிவகுத்து நின்றிருந்தன.மதிமாறனின் படையில் சொற்பமான பீரங்கிகளே இடம் பிடித்திருந்தன. அவனுக்கு எதிரே இருந்த பார்த்திபனின் படையில் அதிகமான பீரங்கிகள் அணிவகுத்து நின்றிருந்தன. அவனது பிரதானமான பொம்மை படை உண்மையான வீரர்களுக்கு நடுவே ஓளிந்திருந்தது.

சங்கு ஓன்றை ஊதி போரை தொடங்கி வைத்தான் ஆதித்தன். நெருப்பில் காய்ச்சப்பட்ட இரும்பு குண்டுகள் பீரங்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்தன. அவை கீழே விழுந்து வீரர்களுக்கு நடுவே ஓடி பலத்த சேதத்தை விளைவித்தன. குண்டின் நெருப்பு தணலால் நிறைய வீரர்கள் தீக்காயம் பட ஆரம்பித்தனர்.

ஆதித்தன் குதிரையில் தாவி ஏறி எதிரிகளை நோக்கி பாய்ந்தான்.அவனது வாள் காற்றில் நாலாபுறமும் சுழன்றது. அவனது குதிரை விரைந்த திசையில் எல்லாம் பலத்த சேதம் விளைய ஆரம்பித்தது.

பார்த்திபன் தன்னுடைய உண்டி வில் படையினருக்கு உத்தரவு கொடுத்தான். அவர்கள் உண்டி வில்லில் தங்க நாணயங்களை வைத்து வானத்தை நோக்கி வீசினர். திடிரென்று களத்தில் தங்க நாணயமழை பொழிய ஆரம்பித்தது.

பார்த்திபனிடம் சொற்பமாக இருந்த நாணயங்கள் அவற்றின் குணத்தை காட்ட ஆரம்பித்தன. திடிரென்று தங்க மழை பொழிவதை கண்ட மதிமாறனின் வீரர்கள் யுத்தத்தை மறந்து அவற்றை பொறுக்க ஆரம்பித்தனர்.

அதை கண்ட மதிமாறன் அதிர்ச்சியடைந்தான். "முட்டாள்களே! சண்டை செய்யுங்கள். அவற்றை விட அதிக காசுகளை நான் தருகிறேன்" என்று கதற ஆரம்பித்தான்.

அவனுடைய பேச்சை கேட்கத்தான் ஆட்கள் இல்லை. நடந்த சம்பவங்களை கவனித்து கொண்டிருந்தார்கள் சிறையில் இருந்து போர் கைதிகளாக மாறியவர்கள். அவர்களுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. அவர்கள் படையிலிருந்து பிரிந்து பார்த்திபனிடம் சேர்ந்து கொண்டனர்.

இப்படி ஒரு திருப்பத்தை பார்த்திபனும், ஆதித்தனும் எதிர்பார்க்கவேயில்லை. இந்த சம்பவம் மதி மாறனை நிலை குலைய செய்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படையின் ஒரு பிரிவு எதிரிகளுடன் இணைந்து கொண்டதில் மதிமாறனின் மடைகளிடம் குழப்பம் அதிகரித்தது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.

கூச்சல் குழப்பம் அதிகரித்து கொண்டே போனது. புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு தளபதிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆலோசனை கேட்க மதி மாறனை தேட ஆரம்பித்தனர்.

மதிமாறன் தன்னுடைய மன உறுதியை இழந்திருந்தான். எல்லாமே தனக்கு எதிராக நடக்க ஆரம்பித்து விட்டதால் அவன் பயந்து விட்டான். போர் களம் என்பது அவனுக்கு புது அனுபவம். முன் பின்னாக அவன் போரில் பங்கெடுத்தவனும் அல்லன்.

இவர்களிடம் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் சிறையிலேயே கழித்து விட வேண்டியது தான் என்று நினைத்தவன் இப்போதைக்கு உயிரை காப்பாற்றி கொண்டு விடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டான். கூச்சலும், குழப்பமும் அதிகமாக இருந்த தருணத்தில் தன் படைகளை நட்டாற்றில் விட்டு விட்டு குதிரையை திருப்பிக் கொண்டு மாளிகையை நோக்கி கிளம்பி விட்டான்.

மதி மாறனை களத்தில் காணாததால் படையின் ஊக்கம் குறைய ஆரம்பித்தது. வழி நடத்த தலைவன் இல்லாத படை போர் புரியும் திறனை இழந்து எதிரியிடம் சரணடைய ஆரம்பித்தது.

குறுகிய நேரத்திலேயே யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது.பார்த்திபனும், ஆதித்தனும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்கும் மகிழ்ச்சி பிரவாகம் பெருக ஆரம்பித்தது.

தன்னுடைய மாளிகையை நோக்கி மின்னல் வேகத்தில் குதிரையை செலுத்தி கொண்டிருந்தான்மதிமாறன். இங்கிருந்து எப்படியாவது தப்பி ஓடிவிட வேண்டும். நீலனுக்கு முன்பாக மலைநாட்டை அடைந்து தயாநிதியிடம் ரத்னாவதியை அவனது மகளாக சித்தரிக்க வேண்டும்.

மருமகனாகி விட்ட தனக்காக தயாநிதி உதவி செய்து தான் தீர வேண்டும். எப்படியும் மலைநாட்டு அரசனிடம் பேசி படை உதவி பெற்று தருவான் தயாநிதி . அதை வைத்து மீண்டும் ரகசிய தீ வை தன்னுடைய ஆளுகைக்கு கொண்டு வந்து விடலாம் என்று திட்டமிட்டது அவனது கோழை மனது.

குதிரையிலிருந்து இறங்கி வந்தவனை பார்த்த ரத்னா வதி "என்னாயிற்று? " என்றாள்.

"நமக்கு பின்னடைவு. சிறை கைதிகள் எதிரிகளுடன் இணைந்து கொண்டு விட்டார்கள். அந்த கலக தலைவன் பொற்காசுகளை விண்ணில் வீசி நம் ஆட்களை வளைத்து விட்டான். நான் வேறு வழியின்றி உயிர்  தப்பி ஓடி வந்து விட்டேன். நான் உடனடியாக இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். எதிரிகள் துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முன்பாக நாம் கிளம்பியாக வேண்டும்"

"அதற்கு நீங்கள் முதலில் சிறைக்கு செல்ல வேண்டும்" என்றாள் ரத்னாவதி .

" என்ன உளறுகிறாய்?" என்றான் திடுக்கிட லோடு மதிமாறன்.

"உளறவில்லை. உண்மையை சொல்கிறேன்" என்ற ரத்னாவதியின் உதடுகளில் ஓரு விசமப் புன்னகை பூத்தது.

" எதிரிகள் உன்னையும் விலைக்கு வாங்கி விட்டார்களா?" என்றான் மதிமாறன் அதிர்ச்சியுடன் .

ரகசிய தீவு 76

Aரகசிய தீவு

அத்தியாயம் 76

தூதன்

பார்த்திபனும், மதிமாறனும் போருக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் துவங்கிய போது பொழுது பளபளவென்று விடிந்திருந்தது.சாத்தனும் அவனிடம் பயிற்சி பெற்ற ஆட்களும் பொம்மை படையை தயார் செய்திருந்தனர். அந்த பொம்மைபடைகளை உள்ளே நிறுத்தி வெளியே உண்மையான வீரர்களை நிறுத்தி விட்டால் உள்ளே நிற்கும் போலி பொம்மைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டன. பெட்டிகளில் இருந்த பீரங்கிகள் ஓன்றிணைக்கப்பட்டு மாட்டு வண்டி சக்கரங்களில் இணைக்கப்பட்டன. அவற்றில் இருந்த வெடிபொருட்களை பயன்படுத்தி ஒரு குண்டை வெடிக்க செய்தான் ஆதித்தன். வெடிமருந்தின் விசையால் 60 அடி தூரத்திற்கு மேல் பயணிக்க வேண்டிய உலோக குண்டு பத்தடி தூரத்திலேயே வேகம் குறைந்து கீழே விழுவதை ஆதித்தனும், பார்த்திபனும் கவலையுடன் பார்த்தனர்.

'இந்த ஆயுதங்கள் தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கும் என்று கூறினாயே? ஆனால் இங்கே நிஜம் தலைகீழாக இருக்கிறதே? பத்தடி தூரத்திற்கு மட்டுமே அந்த உலோக குண்டு பயணிக்கிறது. அதை வைத்து கொண்டு நாம் தாக்குதல் நடத்த முடியாது. எதிரிகளின் இலக்கு அந்த பத்தடிக்குள் இருந்தால் மட்டுமே நாம் தாக்குதல் நடத்துவது சாத்தியம். இந்த கருவியால் நமக்கு எந்த பயனும் இல்லை" என்று ஏமாற்றத்தில் பொறிந்து தள்ளினான் பார்த்திபன். "எதற்காக இப்படி பதட்டம் கொள்கிறாய் பார்த்திபா! நமக்கு பாதகமாக எது நடந்தாலும் அதில் ஏதாவது ஓன்று நமக்கு சாதகமாக இருக்கும். அதை வைத்து நாம் பிரச்சனையை சமாளிக்க கற்று கொள்ள வேண்டும்" என்றான் அமைதியாக ஆதித்தன்

"இதில் நமக்கு சாதகமாக என்ன அம்சம் இருக்கிறதென்று நீ நினைக்கிறாய்?" என்றான் பார்த்திபன் படபடப்புடன். ஆதித்தன் சொல்வது அவனுக்கு புரிந்தாலும் இந்த தருணத்தில் அவனது அறிவுரை பயனற்றது என்று அவன் கருதினான்.

" இதில் நமக்கு இருக்கும் பாதகமான அம்சம் பீரங்கி குழாயை விட அதன் உள்ளே செலுத்தும் குண்டின் சுற்றளவு குறைவாக இருப்பது தான். அதை எப்படி சரி செய்ய முடியும் என்று யோசி.அந்த குறையை நீக்கிவிட்டால் இது பேரழிவை தரும் ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை"

"அந்த குறையை எப்படி நீக்குவது என்று எனக்கு தெரியவில்லை. உனக்கு தெரிந்தால் கூறு. தெரிந்து கொள்கிறேன்."

"அந்த வழியை நான் கண்டுபிடித்து விட்டேன்.குண்டின் சுற்றளவை அதிகரிக்க ஒரே வழிதான் இருக்கிறது. அது இரும்பாலான உலோக குண்டை நெருப்பில் காய்ச்சி பயன்படுத்துவது தான். குண்டை நெருப்பில் காய்ச்சினால் என்னாகும் என்று தானே யோசிக்கிறாய்?"

"ஆம். குண்டை நெருப்பில் காய்ச்சினால் என்னாகும்?"

"இரும்பு குண்டு வெப்பத்தால் விரிவடையும். அப்போது பீரங்கி குழாயில் குண்டு சரியாகப் பொருந்தி கொள்ளும். அப்போது இது பேரழிவான ஆயுதமாக மாறிவிடும்."

"ஆஹா. அற்புதம். இந்த மாதிரியான யோசனைகள் உனக்கு எப்படி தோன்றுகின்றன.?" என்றான் வியப்புடன் பார்த்திபன்.

" எல்லாம் என் நண்பன் பைராகியின் சகவாசம் .நடமாடும் அறிவுக் கருவூலம் அவன். அவன் கதிரவன். அவனிடமிருந்து கடன் பெற்று ஒளிரும் இரு நிலவுகள் நானும் என் சகோதரனும்"

"நீ சொன்னபடியே செய்கிறேன். இப்போது இந்த போரில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு முழுதாக வந்து விட்டது" என்றான் மகிழ்ச்சியுடன் பார்த்திபன்.

"பொறு. நாம் போருக்கு தயாராகிவிட்டோம். ஆனால் எதிரியான மதிமாறன் போருக்கு தயாராகி விட்டானா என்று நமக்கு தெரியாது. நாம் அவன் மீது போர் தொடுக்கப் போவதை அவனுக்கு அறிவிக்க வேண்டும்"

"தூதனுப்ப வேண்டும் என்கிறாயா?"

"ஆம். கடைசியாக நிலைமையை விளக்கி சொல்லி மதிமாறனிடம் பேசிப் பார்ப்போம். அவன் மனம் திருந்தினால் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் நிகழாது. அவன் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்தால் போரைத் தவிர வேறு வழியில்லை"

" அவனிடம் தூதாக போகப் போவது?"

" வேறு யார் ? நான் தான் " என்று சிரித்தான் ஆதித்தன்.

" இப்படி ஆபத்தான காரியங்களில் வலியச் சென்று இறங்குகிறாயே? உனக்கு அச்சமாக இல்லையா?"

" இருக்கத்தான் செய்கிறது. யாரும் செய்ய மறுப்பதை செய்பவன் தானே தீரன்? எனக்கு ஆபத்தோடு விளையாடுவது பிடித்திருக்கிறது" என்ற ஆதித்தன் அருகில் இருந்த குதிரையில் தாவி ஏறினான்.

"நல்ல செய்தியோடு விரைவில் வந்து உன்னை சந்திக்கிறேன். போர் ஏற்பாடுகளை நிறுத்தி விடாதே" என்ற ஆதித்தன் குதிரையில் அங்கிருந்து கிளம்பினான்.

பலத்த காவல்களை தூதன் என்ற பதில் தூள் தூளாக்கியது. ஆதித்தன் மதி மாறனின் மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.

பார்த்திபனிடமிருந்து தூது வருவதான செய்தி காவலர்கள் மூலமாக மதி மாறனுக்கு வந்து சேர்ந்திருந்தது. அவன் ஆதித்தனின் வருகைக்காக தன் மாளிகையின் காத்திருந்தான். திரைமறைவில் இருவரின் பேச்சை கேட்கரத்னாவதி மறைந்து நின்றிருந்தாள்.

ஆதித்தன் மாளிகையின் உள்ளே நுழைந்தான். நாற்காலியில் இறுமாப்பாக அமர்ந்திருந்த மதிமாறன்" யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?" என்றான்.

"நான் பார்த்திபனிடமிருந்து தூது வந்திருக்கிறேன். என் பெயர் ஆதித்தன்"

"ஓ! தப்பி ஓடிய அந்த கள்வன் நீதானா? யார் அங்கே ? இவனை உடனே கைது செய்யுங்கள்"

சில காவலர்கள் உள்ளே ஓடி வந்தார்கள்.

"தூது வந்தவனை கைது செய்வது மரபல்ல. இதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்"

"தூதா? என்னிடமா? என் எதிரி அந்த பார்த்திபன். அவன் எதற்காக உன்னை தூதனுப்பி வைத்திருக்கிறான்? சரணடைய விரும்புகிறானா?" என்ற மதிமாறன் சாடையில் வீரர்களை திரும்பி போகச் சொன்னான்,

"இல்லை. போர் புரிய விரும்புகிறான்?"

"தூதன் என்பதால் உன்னை உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன். சமூக விரோதி அவன். கள்வன் நீ. இருவரும் சேர்ந்து என் மீது போர் தொடுக்கிறீர்களா? காரணம்?"

"உங்களின் கொடுங்கோல் ஆட்சி. அதிகமான வரி. ஏழைகள் விடும் கண்ணீர். இவை போதாதா உங்களை ஆட்சியிலிருந்து அகற்ற "

"என்னை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு என்ன செய்வதாக உத்தேசம்?"

"பார்த்திபன் இந்த தீவை நிர்வகிப்பான்"

"அதை பார்த்து கொண்டு மலைநாடு சும்மா இருக்கும் என்றா நினைக்கிறாய்?"

| "அது போரின் முடிவை பொறுத்தது. நீங்கள் வென்றாலும் தோற்றாலும் உங்கள் பெயரால் தான் ஆட்சி நடக்கும் "

"வென்றால் நானே ஆட்சி செய்வேன் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். தோற்றாலும் எப்படி நான் ஆட்சி செய்ய முடியும்?"

"உங்களை சிறையில் அடைத்து விட்டு உங்கள் பெயரில் பார்த்திபன் ஆட்சி நடத்துவான் "

"நல்ல திட்டம் தான். இது தயாநிதிக்கு தெரிந்தால் ?"

"பார்த்திபன் தான் மலையமானின் மகன் என்பது அதே தயாநிதிக்கு தெரிந்தால் ? " என்று புன்னகைத்தான் ஆதித்தன்.

"அந்த உண்மை உனக்கு எப்படி தெரியும்?" என்றான் இருண்ட முகத்துடன் மதி மாறன் .

"பார்த்திபனே என்னிடம் இதைப் பற்றி கூறினான்"

"உனக்கு தெரிந்த உண்மை தயாநிதிக்கு தெரியாதே?"

"அந்த உண்மையை சொல்லத் தானே நீலன் மலை நாட்டிற்கு தன் கப்பலில் விரைந்திருக்கிறான்"

" அவனுக்கு இந்த உண்மை?"

"நன்றாக தெரியும். அவன் இப்போது மோகினி தீவில் எனக்காக காத்து கொண்டிருக்கிறான். இருவரும் நேரில் சென்று தயாநிதியை சந்தித்து உண்மையை கூறினால் உன் கதை முடிந்துவிடும்"

"இந்த போரின் முடிவில் யாரும் இங்கிருந்து உயிரோடு போய் விட முடியாது. உண்மை தெரிந்த அனைவருக்கும் இந்த தீவிலேயே சமாதி கட்டுகிறேன். நான் போருக்கு தயார். நாளை காலை என்படைகள் பிசாசு சமவெளியில் உன் படைகளை சந்திக்கும். இனி உன்னிடம் பேச விசயமில்லை. நீ கிளம்பலாம்" என்றான் மதி மாறன் பதட்டத்துடன் .

ஆணிவேரையே அசைத்து விட்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பினான் ஆதித்தன்.

இருவரது உரையாடலையும் மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்த ரத்னா வதி வெளியே வந்தாள்.

"இவனுக்கு எல்லா ரகசியமும் தெரிந்திருக்கிறது. இவன் மட்டும் நீலனுடன் தயாநிதியை சந்தித்து விட்டால் நம் கதை முடிந்துவிடும்." என்றான் மதி மாறன் .

" இவனது பேச்சில் நமக்கு சாதகமாக ஒரு விசயம் உள்ளது."

"என்ன அது?"

"மோகினி தீவில் நீலன் இவனுக்காக காத்து கொண்டிருக்கிறான்.இவன் இல்லாமல் அவன் கிளம்ப மாட்டான், "என்றாள் ரத்னாவ தி.

"அவன் தனியாக தயாநிதியை சந்தித்தாலும் நமக்கு ஆபத்து தான் "

" அவன் ஆதித்தன் வராமல் மோகினி தீவிலிருந்து கிளம்ப மாட்டான். இங்கிருந்து ஆதித்தன் வெளியேறவே கூடாது.அப்படியே வெளியேறினாலும் ?"

" என்ன சொல்கிறாய் நீ?"

" அவன் உயிரோடு இருக்க கூடாது" என்ற ரத்னாவதியின் உதடுகளில் விசம சிரிப்பு இருந்தது.

மதிமாறன் திகைப்போடு அவளைப் பார்த்தான்.

புதன், 21 டிசம்பர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 75

புதிதாக ஒரு சிக்கல்

வள நாட்டின் நான்கு உளவாளிகள் ஓரே கப்பலில் மார்க்கதரிசியின் புதையலை நீலனிடமிருந்து மீட்க பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். தன்னை பின் தொடரும் அபாயத்தை பற்றி சிறிதும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் நீலன்.

மறுநாள் காலை .

சூரியன் கிழக்கே உதித்துக் கொண்டிருந்தான். கப்பலின் மேல் தளத்தில் துயில் களைந்து எழுந்து வந்த நீலன்நின்று கொண்டிருந்தான். அவன் பார்வை படும் தொலைவில் மங்கலாக தென்பட்டு கொண்டிருந்தது மோகினி தீவு.
அங்கே தான் பைராகி மகேந்திரனிடம் நீலனுக்கு பதிலாக பணயக் கைதியாக இருக்கிறான். அவனை எப்படியாவது மீட்டாக வேண்டும்.

மோகினி தீவிற்கு தேவையான உணவுப் பொருள்களை கொடுத்தால் தான் மகேந்திரன் பைராகியை விடுவிப்பான். அவசரமாக கிளம்பி வந்ததில் கப்பலில் போதுமான உணவுப் பொருள்களை ஏற்ற மறந்து விட்டிருந்தான் நீலன்.பொக்கிசங்களில் சிறு பகுதியை கொடுத்து பைராகியை மீட்க திட்டமிட்டிருந்தான் அவன். அதற்கு மகேந்திரன் சம்மதிப்பானா என்று தான் அவனுக்கு தெரியவில்லை. பைராகி போன்ற ஒரு அறிவாளிக் காக அவன் மொத்த பொக்கிசத்தையும் இழக்க தயாராக இருந்தான். அவனை மீட்ட பின்பு ஆதித்தனுக்காக அவன் காத்திருக்க வேண்டும். ஆதித்தன் மோகினி தீவிற்குள் நுழைந்து விட்டால் அடுத்த கணமே மூவரும் இங்கிருந்து கிளம்பி விடலாம்.

அவனது கப்பல் மோகினி தீவின் துறைமுகத்திற்குள் நுழைந்தது. நங்கூரத்தை பாய்ச்சி கப்பலைநிலை நிறுத்தினான் அவன். அவன் நங்கூரத்தை பாய்ச்சியதை பார்த்த யவனனின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. எப்படியோ நீலனை மீண்டும் மோகினி தீவிற்கு திரும்ப கொண்டு வந்து விட்டோம் என்ற திருப்தி அவனது மனதில் ஏற்பட்டது.

ஆதியை அழைத்து கொண்டு யவனனுடன் கப்பலிலிருந்து இறங்கினான் நீலன்.துறைமுகத்தில் யவனன் மீண்டும் கால் வைத்த செய்தி நெருப்பாக தீவு முழுக்க பரவ ஆரம்பித்தது. அவனை பார்த்து வணங்கியவர்களை பார்த்து தலையசைத்து மரியாதையை ஏற்றுக் கொண்டான் அவன். தன்னுடைய வீரர்களை அழைத்தவன் நீலனின் கப்பலை கவனமாக பார்த்து கொள்ளும் படி உத்தரவிட்டான். தன்னுடைய வீரர்களிடம் இரண்டு குதிரைகளை கடன் வாங்கி கொண்டவன் அதில் ஓன்றை நீலனிடம் கொடுத்தான்.

ஆதியும் நீலனும் அதில் ஏறிக் கொள்ள மகேந்திரனின் மாளிகையை நோக்கி அவர்களின் பயணம் தொடங்கியது.

வேறு ஏதோ வேலையில் மூழ்கியிருந்த மகேந்திரன் யவனனின் வருகையால் மகிழ்ச்சியடைந்தான். அவனை ஓடி வந்து கட்டியணைத்து கொண்டவன் "போன காரியம் ஜெயம்தானே?" என்றான்.

"இல்லை. நீலனை திரும்ப இங்கே அழைத்து வருவதே எனக்கு பெரும்பாடாகி விட்டது. அவனது கோமாளி தனம் எல்லை மீறி சென்று விட்டதால் எழுந்த சிக்கல். நாம் எதிர்பார்த்தபடி உணவு பொருள்களை இவன் கொண்டு வரவில்லை" என்று அருகில் இருந்த நீலனின் மீது புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பித்தான்.

"அதுவும் நல்லதுதான்.நாம் செய்த ஒப்பந்தபடி இவன் உணவு பொருள்களை கொடுத்தால் இவனது நண்பனை இவனிடம் திரும்ப ஒப்படைப்பதாக பேசினோம்.இவன் ஒப்பந்தபடி நடக்காததால் இவனிடம் நாம் பைராகியை ஒப்படைக்க தேவையில்லை" என்றான் மகேந்திரன்.

நீலனுக்கு கோபம் தலைக்கேறியது. "மகேந்திரா! உணவு பொருள்களுக்கு ஈடாக எவ்வளவு செல்வம் வேண்டுமோ கேள் .தருகிறேன். என் நண்பனை என்னிடம் ஒப்படைத்துவிடு"

"உன் நண்பனை நான் முதலில் சாதாரண ஆசாமி என்று தவறாக எடை போட்டு விட்டேன். அவன் இங்கே வந்த முதல் நாளிலிருந்து தன்னுடைய வேலையை துவக்கி விட்டான். வெவ்வேறு விதமாக மடக்கும் கட்டில், நாற்காலிகள் , அலமாரிகள் என்று மற்றவர்கள் கற்பனை செய்ய முடியாதவற்றையெல்லாம் அவன் செய்து குவிக்க தொடங்கி விட்டான். அப்படியான விசித்திரமான பொருட்களை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை. இரவு நேரத்தில் தன்னுடைய தொலைநோக்கி மூலமாக வானத்தை அதில் நகரும் கோள்களை அவன் கவனித்து கொண்டிருக்கிறான். எப்போது உறங்குகிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. புதிது புதிதாக எதை எதையோ செய்து கொண்டே இருக்கிறான். இவ்வளவு மதியுகம் கொண்ட மனிதனை இழக்க நான் தயாராயில்லை. உன்னுடைய அற்ப பொருள் அவனுடைய கால் தூசுக்கு இணையாகாது." என்றான் மகேந்திரன்.

"அது தான் என் நண்பனின் சிறப்பு. சிறிது நாட்கள் பழகிய நீயே அவனை விட முடியாது என்று சொல்லும் போது நீண்ட நாள் நண்பனான நான் மட்டும் அவனை உன்னிடம் விட்டு விடுவேன் என்று நினைத்தாயோ? " என்றான் நீலன்.

"அவன் தருவதாகச் சொல்வது மார்க்கதரிசியின் தங்க புதையல் அதை இழப்பது அவ்வளவு நல்லதல்ல " என்று எடுத்து கொடுத்தான் யவனன்.

"நீ முழு புதையலையே கையளித்தாலும் பைராகியை நான் உன்னிடம் ஒப்படைக்க மாட்டேன்"

"வேறு எதை கொடுத்தால் அவனை என்னிடம் ஒப்படைப்பாய்.?"

"எனத கொடுத்தாலும் அவனை திரும்ப உன்னிடம் தரமாட்டேன்"

"ஒப் பந்தப்படி உணவு பொருள்களை கொடுத்தாலுமா?"

"அவை எனக்கு இப்போது தேவைப்படவில்லை"

"வேறு எங்கிருந்து உணவு பொருட்கள் உனக்கு கிடைத்தது?"

"அதை உன்னிடம் சொல்ல முடியாது" என்றான் மகேந்திரன்.

"அதை நான் சொல்கிறேன்" என்றபடி அறைக்குள் நுழைந்தான் பைராகி .

"வா நண்பா! நீ எதற்காக இங்கே வந்தாய்?" என்றான் மகேந்திரன் அதிர்ச்சியுடன் .

" என் நீண்ட நாள் நண்பனை காண வந்தேன். வாநீலா. எப்போது வந்தாய்? எப்படி இருக்கிறாய்?" என்று நீலனை நலம் விசாரித்தான் பைராகி .

"நலம் தான் நண்பா. இங்கே நடப்பவற்றை?"

"நான் கேட்டு கொண்டு தான் இருந்தேன்.மகேந்திரா. அன்புக்குறியவனே! என் மீது கொண்ட அன்பால் நீ அநீதியின் பக்கம் நிற்கிறாய். வேண்டாம். தெரிந்தே தவறு செய்யாதே. நீலன் தர வேண்டிய உணவு பொருட்களை நான் எப்போதோ உனக்கு தந்து விட்டேன். உண்மையை மறைத்து வீணாக தவறு செய்யாதே" என்றான் பைராகி .
மகேந்திரன் தலை குனிந்து நின்றான்.

"என்னை மன்னித்து விடு நண்பா " என்றான் அவன்.

நீலனுக்கு எதுவும் புரியவில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் பைராகியால் எப்படி உணவு பொருள்களை மகேந்திரனுக்கு கொடுத்திருக்க முடியும்? வெகு வேகமாக விளையக்கூடிய தானிய வகைகளை கண்டுபிடித்து விட்டிருப்பானோ பைராகி? என்று விடை தெரியாத பல கேள்விகள் அவன் மனதில் அலை அலையாக எழ ஆரம்பித்தன.

" என்ன உணவு பொருள்களை நீ கொடுத்தாயா? எப்படி நண்பா ? " என்றான் நீலன் ஆச்சரியத்துடன் .

"அதற்கு உலக விசயம் தெரிந்திருக்க வேண்டும் நண்பா.மேற்குலக நாடுகளில் இப்போது ஒரு மலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் பெயர் துலிப் மலர்கள் இந்த மலர் செடிக்காக எவ்வளவு பணத்தையும், பொருளையும் கொட்டி கொடுக்க மேற்குலக சீமான்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு மலர் செடிக்காக ஓரு அரண்மனையே கை மாறி இருக்கிறதென்றால் பாரேன்.

என்னுடைய அதிர்ஷ்டம் அந்த மலர் செடிகளில் ஓன்றை நான் வளர்த்து வந்திருக்கிறேன். அதனுடைய அருமை எனக்கு தெரியவில்லை. இங்கிருந்து கழு கில் கிளம்பிய ஆதித்தன் அதிலிருந்த என் உடமை பொருள்களை துறைமுகத்திலேயே வைத்து விட்டு போய் விட்டான். இந்த பக்கம் உணவு பொருள்களை ஏற்றி வந்த மேற்குலக கப்பல் ஒன்று இளைப்பாற இங்கே வந்தது.

அதன் வெள்ளை மாலுமியின் கண்களில் நான் வளர்த்த அந்த மலர் செடிபட்டு விட்டது. அவன் நல்லவன். பொய் சொல்ல தெரியாதவன். இந்த செடியின் அருமையை அவன் தான் எடுத்து கூறினான். அந்த ஒரு மலர் செடிக்காக தன்னுடைய கப்பலில் இருக்கும் மொத்த உணவு பொருள்களையும் தருவதாகப் பேரம் பேசினான். நான் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டேன். அவன் கப்பலில் இருந்த உணவு பொருள்களை மகேந்திரனிடம் கொடுத்து விட்டு அந்த மலர் செடியை எடுத்து சென்று விட்டான். நாம் நன்றி சொல்வதாக இருந்தால் ஆதித்தனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அவன் தான் அந்த மலர் செடியை துறைமுகத்தில் இறக்கி வைத்தவன். உங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை நான் எப்போதே நிறைவேற்றி விட்டேன். உடனே கிளம்பி ரகசிய தீவிற்கு வரலாம் என்று தான் நினைத்தேன்.மகேந்திரன் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் அங்கே அனுப்ப மாட்டேன் என்று மறுத்து விட்டான்" என்றான் பைராகி .

"என்னை மன்னித்து விடு நீலா! பைராகியை பிரிய மனமில்லாமல் உன்னிடம் குதர்க்கமாக நடந்து கொண்டு விட்டேன்" என்றான் மகேந்திரன் வெட்கத்துடன் .

"நண்பர்களுக்குள் எதற்காக மன்னிப்பு . நீ எங்களில் ஒருவன்" என்று அவன் தோளைத் தட்டி சகஜ நிலைக்கு கொண்டு வந்தான் நீலன்.

நிலைமை சுமூகமாக முடிந்தது.

தர்மபாலனின் கப்பல் மோகினி தீவின் துறைமுகத்தை வந்தடைந்தது.

"கடல்தான் என் களம்.அங்கே அவனை கவனித்து கொள்கிறேன்" என்று பல்லை கடித்தான் தர்மபாலன்.

ரகசியதீவு

Aரகசிய தீவு

அத்தியாயம் 74

உளவாளிகளின் படை

தீவிற்குள் தீ வட்டியுடன் நுழைந்த தர்மபாலன் தன்னுடைய இரண்டு ஆட்கள் மயங்கி கிடப்பதை பார்த்தான். கை கால்கள் கட்டப்பட்டு கிடந்த நஞ்சுண்டனை அவன் அடையாளம் கண்டுகொண்டான். நீலனின் கப்பலில் அவன் துணை மாலுமியாக இருப்பதை அவன் பார்த்திருந்தான். நீலனுக்கு துரோகம் செய்து விட்டு முத்தழகி யோடு அவன் கடலில் காணாமல் போன கதையையும் அவன் மாலுமிகளின் வாய் வழியாக கதையாக கேட்டிருந்தான். தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ளத்தான் நீலன் அவனை கல்லறைதீவில் கொண்டு வந்து தள்ளியிருக்கிறான் என்று அவனுக்கு சட்டென்று புரிந்து விட்டது.

மயங்கி கிடந்த தன்னுடைய இரண்டு ஆட்களையும் கூட நீலன் அடையாளம் கண்டு கொண்டிருக்க கூடும் என்று அவன் நினைத்தான். ஒரு கிழவன் அடையாளம் காணுமளவிற்கு தன்னுடைய ஆட்கள் காரியமாற்றியிருப்பதை நினைத்து அவனுக்கு எரிச்சலாக இருந்தது. மயங்கி கிடந்த மூன்றாவது நபரை புரட்டி அவனது முகத்தை பார்த்த தர்மபாலனுக்கு பூபதியை அடையாளம் தெரிந்து விட்டது. இவனும் வள நாட்டின் உளவாளி தானே? இவன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்? நீலன் தன்னிச்சையாக இயங்கும் அளவிற்கு கருணாகரன் எப்படி அசட்டையாக இருக்கிறான் என்று அவனுக்கு விளங்கவில்லை.

அவன் முதலில் நஞ்சுண்டனின் கை, கால்களை அவிழ்த்து விட்டான். "சரியான நேரத்தில் என்னை காப்பாற்ற கடவுள் உங்களை அனுப்பி வைத்திருக்கிறார். உங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்" என்று கைகூப்பினான் நஞ்சுண்டன் .

" மறக்கவேண்டாம். முதலில் மயங்கி கிடக்கும் இவர்களை எழுப்ப உதவி செய்" என்ற தர்மபாலன் தன் இடுப்பில் இருந்த குடுவையை எடுத்து அதிலிருந்த நீரை அவர்களின் முகத்தில் தெளித்தான். சற்று நேரத்தில் மூன்று பேரும் மயக்கம் தெளிந்து எழுந்து கொண்டனர். மலை நாட்டின் நான்கு உளவாளிகள் ஒரு அணியாகவும் நஞ்சுண்டன் தனியாகவும் இருந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் உரையாடத் தொடங்கினர். ரகசிய தீவிலிருந்து கப்பல் கிளம்பியதிலிருந்து கல்லறைதீவு வரும் வரை நடந்த அத்தனை சம்பவங்களும் அவர்களது பேச்சில் இடம்பெற்றிருந்தது.

" கருணாகரன், நம்மூவர் . எல்லோரையும் ஏமாற்றி புதையலையும், கப்பலையும் திரும்ப கைப்பற்றி விட்டான் நீலன்.வயதான காலத்தில் அந்த கிழவனை அதிர்ஷ்ட தேவதை அள்ளி அணைக்க ஆயத்தமாகிவிட்டாள். இனி அவன் மலைநாட்டை நோக்கி பயணமாவதை யாராலும் தடுக்க முடியாது"

" அவன் மலை நாட்டிற்கு போவதாக யார் சொன்னது?" என்றான் நஞ்சுண்டன் .

"நீ என்ன சொல்கிறாய்! அவன் புதையலோடு மலைநாட்டை நோக்கித் தானே பயணமாவான்? தாமதம் செய்ய வேறு காரணம் எதுவுமில்லையே?"

" அவன் இப்போது பயணமாவது மோகினி தீவை நோக்கி. அங்கே மகேந்திரனின் பணயப் பொருளாக அவனது நண்பன் பைராகி இருக்கிறான். அவனுடைய இன்னொரு றண்பன் ஆதித்தன் இன்னமும் ரகசிய தீவில் தான் இருக்கிறான். அவன் மோகினி தீவை வந்தடையும் வரை நீலன் அங்கிருந்து கிளம்ப மாட்டான் "

"நீ சொல்வது உண்மையாக இருந்தால் அந்த புதையலை அடைய நமக்கு இன்னமும் பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது"

"நீலனின் எதிரி நான். என்னை உங்களுடன் சேர்த்து கொள்வதே புத்திசாலித்தனம்"

"உன்னை எங்களுடன் சேர்த்து கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆதாயம் இல்லாமல் நீ எதையும் செய்ய மாட்டாயே? அந்த புதையல் எங்கள் நாட்டின் சொத்து .அதிலிருந்து எந்த பங்கையும் எதிர்பார்த்து விடாதே"

"எனக்கு அந்த புதையலில் எந்த பங்கும் வேண்டாம். எனக்கு தேவை நீலனின் மரணம். அதற்கு பிறகு அவனது கப்பல் என்னை வந்தடைய வேண்டும்"

"இது நியாயமான வேண்டுகோள்.அந்த கப்பல் எங்களுக்கு தேவையில்லை. புதையலை மீட்டு வளநாட்டில் ஒப்படைத்த பிறகு அந்த கப்பல் உன்னுடையது " என்று உறுதி கூறினான் தர்மபாலன்.

"இனியும் நாம் இங்கே கால தாமதம் செய்ய வேண்டாம். நாம் கப்பலுக்கு திரும்பலாம். மீதியை அங்கே பேசிக் கொள்ளலாம்" என்றான் பூபதி.கருணாகரனுடன் சேர்ந்து புதையலில் பாதியை களவாட நினைத்த பூபதியின் எண்ணம் ஈடேறவில்லை. இப்படி பாதியில் இறந்து கருணாகரன் தன்னுடைய கனவை குலைப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த ஏமாற்றம் அவனது குரலில் எதிரொலித்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

முத்தழகி கப்பலின் மேல் தளத்தில் நின்றிருந்த ஆதி கல்லறைதீவை உற்று பார்த்து கொண்டிருந்தான். அவன் பின்புறம் வந்து நின்ற நீலன்" இருட்டில் அப்படி எதை பார்த்து கொண்டிருக்கிறாய் ஆதி?" என்றான்.

"அங்கே தொலைதூரத்தில் ஒரு சிறு தீப்பிழம்பு கல்லறை திவினுள் சென்று மறைந்ததை நான் பார்த்தேன். அது தீப்பந்தமாக இருக்கலாம்"

"அதற்கு வாய்ப்பே இல்லை தம்பி" என்றான் நீலன். 

அதே நேரம் கல்லறைதீவில் இருந்த ஐவரும் தீப்பந்தத்துடன் படகில் ஏறி அதனை இயக்கினர்.

"அதோ அங்கே பாருங்கள். அந்த வெளிச்சம் மீண்டும் தீவிற்கு வெளியே வருகிறது " என்று உற்சாகமாக கத்தினான் ஆதி.

பார்வை குறைபாடுள்ள நீலனின் கண்களுக்கு அந்த தீப்பந்த வெளிச்சம் தெரியவில்லை.

" என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லையே? தூக்க கலக்கத்தில் எதையாவது பார்த்து தீப்பந்தம் என்று நினைத்து விட்டாய் போலிருக்கிறது. இதோ இதைப் பார்" என்ற நீலன் தன் இடுப்பில் இருந்த ஒரு கண்ணாடி குடுவையை எடுத்தான். அந்த கண்ணாடி குடுவை முழுவதும் மின்மினி பூச்சிகளால் நிரப்பப்பட்டு ஓளி பந்தாக பிரகாசித்தது. இடுப்பில் மதுப் புட்டியை சொருகி வைத்து பழக்கப்பட்ட நீலன் தன்னுடைய உயிரை காப்பாற்றிய மது புட்டி தொலைந்து போன பின்பு இந்த புட்டியை அந்த இடத்தில் வைத்திருந்தான்.

"இருட்டான இடங்களில் இதை நான் பயன்படுத்துவது வாடிக்கை. இந்த பூச்சிகள் கடல் மட்டத்தில் பறந்து போனதைத்தான் நீதீப்பந்தமாக கற்பனை செய்திருப்பாய்" என்று தன்னுடைய பார்வை குறைபாட்டை மறைக்க ஒரு காரணத்தை கற்பிக்க தொடங்கினான் அவன்.

அவன் சொன்னதை ஆதியால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. குழப்பத்துடன் தலையை அசைத்தான் அவன்.

" நேரமாகிவிட்டது போய் தூங்கு. நாளை நாம் மோகினி தீவில் சில நண்பர்களை சந்திக்க போகிறோம்" என்று அவனை அனுப்பி வைத்தான் நீலன்.

ஆதி சொன்னது உண்மையா என்று பார்க்க நாலாபுறத்திலும் பார்வையை செலுத்தியவனுக்கு இருட்டு மட்டுமே பதிலாக கிடைத்தது. உதட்டை பிதுக்கி கொண்டு தலையை குலுக்கி கொண்டு தன்னுடைய அறையை நோக்கி நடந்தான் நீலன்.

அதே இரவு !

ரகசிய தீவில் தன்னுடைய மாளிகையில் முன்னும் பின்னுமாக நடை பயின்று கொண்டிருந்தான்மதிமாறன்.

தீவின் ஒரு புறத்தில் பார்த்திபன் போருக்கு தன்னுடைய படைகளை தயார் செய்து கொண்டிருந்தான். அந்த செய்தி நெருப்பாக பரவி மதிமாறனின் காதுகளில் விழுந்திருந்தது.

இரவு தொடங்கியதிலிருந்து கருணாகரனை ஆட்கள் வைத்து தேடிப் பார்த்து விட்டான். ஆள் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. துறைமுகத்தில் அவனை கடைசியாக பார்த்ததாக தகவல் மட்டும் வந்து சேர்ந்தது.

இனி கருணாகரனை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த மதிமாறன் தான் திறமைசாலிகள் என்று நினைத்த இருவரை தளபதிகளாக நியமித்திருந்தான். அவர்கள் இருவரும் தங்களால் முடிந்த அளவு படைகளை ஒன்றிணைத்து கொண்டிருந்தார்கள். அதுவரை சாதாரண போர் வீரர்களாக இருந்தவர்கள் தளபதிகளாக நியமிக்கபட்டவுடன் வழி நடத்தவும், உதவி செய்யவும் ஆட்கள் இல்லாமல் தட்டு தடுமாறிக் கொண்டிருந்தனர்.

அவர்களை விடவும் மோசமான நிலையில் இருந்தான்மதிமாறன் .இதுவரை உத்தரவிடுவது மட்டும் தான் அவனது வேலை. கருணாகரன் அதை செய்து முடிப்பான். இப்போது முன் அனுபவம் இல்லாதவர்களை பதவியில் அமர்த்தியதால் எல்லா காரியங்களும் தாமதமாக நடந்தேறி கொண்டிருந்தன.

சிறையில் இருந்தவர்களை தன்னுடைய படையில் சேர்த்ததன் மூலம் அவனது படைபலம் சற்று உயர்ந்திருந்தது மட்டும் தான் அவனுக்கு சாதகமாக இருந்தது.

கைதிகளை விடுதலை செய்ததன் மூலம் சிறைசாலை ஆட்களின்றி வெறிச்சோடி கிடந்தது. ரத்னாவதி விரும்பியதும் அதைத்தான். அவளது மனதில் மதிமாறனுக்கு தெரியாமல் ஒரு ரகசிய திட்டம் உருவாகத் தொடங்கி இருந்தது.. இது எதுவும் தெரியாமல் காரியமாற்றி கொண்டிருந்தான்மதிமாறன்

வெள்ளி, 16 டிசம்பர், 2022

ரகசிய தீவு73

ரகசிய தீவு

அத்தியாயம் 73

தனி தீவில் சதிகாரன்.

மதி மாறனை வீழ்த்தி விட்டு அரசு அதிகாரத்தை பார்த்திபன் கைப்பற்றினால் இழந்த அதிகாரத்தை மீட்க மலை நாடு ரகசிய தீவின் மீது படையெடுக்கும். கண் கொத்தி பாம்பாக ரகசிய தீவில் நடப்பவற்றை கவனித்து கொண்டிருக்கும் வள நாடும் கூட ரகசிய தீவை கைப்பற்ற நேரடியாக முயற்சி செய்ய கூடும். இல்லை பார்த்திபனுக்கு மலை நாட்டிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அவனை கைப்பாவையாக்கிதங்கள் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கலாம்.

எதிர்காலத்தில் நடக்க போகும் இந்த இரண்டையும் யூகித்த ஆதித்தன் இப்போது இருப்பது போல் மதிமாறனே இந்த தீவை ஆட்சி செய்வது போல் வெளி உலகிற்கு காட்டி விட்டால் இரண்டு நாடுகளும் அமைதியாகிவிடும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான். அதனால் அவனது மூளை வேறு விதமாக சிந்தித்தது.நடக்க இருக்கும் போரில் மதிமாறனை உயிரோடு சிறை பிடித்து விட்டால் அவனே ராஜ பிரதிநிதியாக இருப்பதைப் போல் வெளியே காட்டி விடலாம்.

வெளியுலக தொடர்புகளுக்கு அவனை பயன்படுத்தி கொண்டு நாட்டின் நிர்வாகத்தை பார்த்திபனே கவனித்து கொள்ள வேண்டியதுதான்.மதிமாறன் சிறையில் அடைபட்டு கிடப்பதுமலை நாட்டுக்கு தெரியாமல் பார்த்துகொண்டால் போதும். ஆதித்தன் தன்னுடைய மனதில் உதித்த திட்டத்தை பார்த்திபனிடம் விவரமாக எடுத்து கூறினான். அவனது யோசனையை கேட்ட பார்த்திபன் அயர்ந்து போய் நின்றான்.

இந்த கள்வன் இன்று நடக்கப் போகிறவைகளை மட்டுமல்லாது எதிர்காலத்தில் நடக்கப் போவதையும் சேர்த்தேசிந்திக்கிறான் என்று மனதில் வியப்புடன் நினைத்து கொண்டான்.

"நாம் மதி மாறனை சிறையில் வைத்திருப்பதும் அவனை பொம்மையாகப் பயன்படுத்துவதும் தயாநிதிக்கு தெரிந்து விட்டால் நம்முடைய நிலைமை என்னாவது?உண்மையை நீண்ட நாட்கள் மூடி வைக்க முடியாது நண்பா " என்றான் பார்த்திபன்.

"கவலைப்படாதே. ரகசிய தீவின் உரிமையாளரான தயாநிதி என்னுடைய நண்பன் நீலனுக்கு நெருங்கிய கூட்டாளி . நீலனின் வார்த்தைகளை அவன்தட்ட வேமாட்டான். அவன் மூலமாக மதிமாறனின் அட்டூழியங்களைப் பற்றியும் நீ அவனது நண்பன் மலையமானின் இளைய மகன் என்பதையும் அவனுக்கு எடுத்து கூறுவேன். தன் நண்பனின் மகன் நீ தான் என்பது தெரிந்தால் மலையமான் தன் முடிவை மாற்றிக் கொள்வான். இதுவரை உன்னை எதிரியாக நினைத்து கொண்டிருந்தவன் இப்போது வேறு மாதிரியாக நினைக் க ஆரம்பிப்பான்"

"அவரை நான் மாமா என்று தான் அழைத்து வந்திருக்கிறேன். அவரும் என்னை மாப்பிள்ளை என்று தான் அழைத்து வந்திருக்கிறார். நான் உயிரோடு இருப்பது தெரிந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். உங்களின் சந்திப்பு சுமூகமாக முடிந்து இந்த பிரச்சனை தீர்ந்துவிட்டால் எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் கவலை"

" நீ எதற்காக கவலைப்படுகிறாய்?"

"நான் சந்திரவதனாவை காதலித்து கொண்டிருக்கிறேன். அவளையே மணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறேன். என் மாமா தயாநிதியின் மகள் சிறு வயதிலேயே தொலைந்து விட்டாள். அவளை தேடிக் கண்டு பிடித்து எனக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால்? சந்திரவதனாவின் நிலை? எங்கள் காதலின் முடிவு?" என்றான் கலக்கத்துடன் பார்த்திபன்.

"அந்த தொலைந்து போன தயாநிதியின் பெண் இன்னும் கிடைக்க வில்லையா?"

"இல்லை. அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று கூட நிச்சயமாக தெரியவில்லை. அவள் இந்த பூமி பந்தின் ஏதொ வொரு மூலையில் உயிரோடு இருப்பதாக மாமா நம்புகிறார்.

"பிறகு அவளை நாம் எப்படித் தான் அடையாளம் கண்டு கொள்வது?"

"அவளது கழுத்தில் இருக்கும் ஒரு ஆபரணம். அது தயாநிதியின் பரம்பரை சொத்து .அதை வைத்து தான் அவளை அடையாளம் காண முடியும் "

"இது என்ன புது வகையான சிக்கல்? நான் முதலில் தயாநிதியினை என் நண்பனுடன் சேர்ந்து சந்தித்து உனக்கு வரப்போகும் முதல் அபாயத்தை நீக்குகிறேன். இந்த விசயத்தை பிறகு பார்த்து கொள்ளலாம்." என்றான் ஆதித்தன் V

"அதற்கும் வழியில்லை. நீலன் உங்களை விட்டு விட்டு முத்தழகி யோடு கிளம்பி விட்டான்.அவன் வெகுதூரம் சென்றிருப்பான். அவனை உங்களால் பிடிக்கவே முடியாது"

"அவனைப் பற்றி தப்பு கணக்கு போட்டு விட்டாய். அவன் மோகினி தீவிற்கு சென்று பைராகியை மகேந்திரனிடமிருந்து மீட்காமல் போக மாட்டான். என் நண்பன் பைராகியோடு ஒரு முறை பழகியவர்களால் அவ்வளவு எளிதில் பிரிய முடியாது. அங்கே நீலன் நான் வரும் வரை காத்திருப்பான். அந்த இடைவெளியில் நான் அங்கே சென்று விடுவேன்."

"அப்படியானால் இந்த போரில் நான் வென்று விட்டால் வழக்கம் போல் என்னிடம் சொல்லி கொள்ளாமல் கிளம்பி விடுவீர்களா?" என்றான் ஏக்கத்துடன் பார்த்திபன்.

"பிரிவு ஓன்று தான் என்றும் நிரந்தரமானது நண்பா! நாம் சேர்ந்து செயல்பட்ட இனிய நினைவுகள் என்றும் நம் நட்பை நினைவூட்டும் . செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்க இப்போது எதற்கு இந்த பேச்சு ? போ! போய் ஆக வேண்டிய காரியத்தை பார்.நாளைய யுத்தத்திற்கு நாம் தயாராக வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறாய்" என்ற பார்த்திபன் அங்கிருந்து கிளம்ப முற்பட்டான்.

அவனை தடுத்து நிறுத்திய ஆதித்தன் "உன்னிடம் கைவசம் எவ்வளவு பொற்காசுகள் இருக்கும் "

"எதற்காக கேட்கிறாய்? செலவிற்கு பணம் ஏதாவது தேவையா?" என்றான் பார்த்திபன்.

"இல்லை. என்னிடம் அதற்கு போதுமான ப்ணம் இருக்கிறது. உன்னிடம் மொத்தமாக எவ்வளவு இருக்கிறது?"

"எண்ண முடியாத அளவிற்கு ஏராளமாகவே இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து என் மக்கள் என் இயக்கத்திற்காக கொடுத்த நன்கொடை அது "

'அது மொத்தமும் எனக்கு வேண்டும் "

"அதை வைத்து என்ன செய்ய போகிறாய்?"

"அதுதான் இந்த யுத்தத்தின் துருப்பு சீட்டு" என்று புரிபடாமல் சிரித்தான் ஆதித்தன்..

அதை வைத்து இவன் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறான் என்று புரியாமல் நின்றான் பார்த்திபன்.

அதே இரவு.

இளந்தென்றல் காற்றும் முழு நிலாவின் ஓளியும் கல்லறை தீவை நிறைத்து கொண்டிருந்தன. அதை ரசிக்கும் மனநிலையில் நஞ்சுண்டன் இல்லை. அலைகளின் ஓவென்ற இரைச்சலுக்கு நடுவே கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தான் அவன்.நிலவின் வெளிச்சத்தில் ஆங்காங்கே நீலனால் வெட்டப்பட்ட மரங்கள் மொட்டையாக நின்றிருப்பது அவனது பார்வைக்கு கிடைத்தது.நீலன் எப்படி அந்த தீவிலிருந்து தப்பி வந்தான் என்று அவனுக்கு இப்போது புரிந்தது.

நீலன் கொண்டு வந்த மூவரும் தரையில் ஆழ்ந்த மயக்கத்தில் கிடந்தனர். அவர்களில் யாராவது ஒருவன் மயக்கம் தெளிந்து கண் விழித்து எழுந்தால் மட்டுமே தான் கை கால் கட்டுகளிலிருந்து விடுதலை பெற முடியும் என்று அவனுக்கு புரிந்தது.

நீலனுக்கு கைகொடுத்த அதிர்ஷ்டம் தனக்கும் கை கொடுத்தால் இங்கிருந்து உயிரோடு தப்பி சென்று விடலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு . நஞ்சுண்டனுக்கு இன்னும் வியப்பை தந்த விசயம் கருணாகரனின் மரணம் தான். அவன் தன்னுடைய உயிருக்கு காப்பானாக இருப்பான் என்று நினைத்தால் அவன் உயிரையே யாரோ காவு வாங்கி விட்டார்கள். அது நீலனாகத் தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.

நீலனுக்கு மாற்றாக தன்னை பயன்படுத்தி கொள்ளும் கருணாகரனின் திட்டம் எப்படியோ நீலனுக்கு தெரிந்திருக்க வேண்டும். கிழவன் கில்லாடித் தனமாக காரியத்தில் முந்தி கொண்டு கருணாகரனை கைலாயம் அனுப்பி வைத்துவிட்டான். இனி யாரும் தன்னை காப்பாற்ற முடியாது. மரணம் நிச்சயம் என்ற முடிவிற்கு வந்து விட்டிருந்தான் நஞ்சுண்டன் .

மயங்கி கிடக்கும் இந்த மூவர் யார் என்று தான் அவனுக்கு புரியவில்லை. ஆனால் நிச்சயம் தன்னைப் போலவே இவர்களும் நீலனுக்கு ஆகாதவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்தான் அவன்.

அதே நேரம் கடல் அலைகளில் துடுப்பு வலிக்கும் சத்தம் அவன் காதுகளில் விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த சத்தம் நின்றது. பிறகு யாரோ படகிலிருந்து குதித்து இறங்கும் சத்தம் கேட்டது. தீப்பந்த வெளிச்சம் ஒன்று சிறு புள்ளியாக கடல்புரத்தில் தெரிய ஆரம்பித்தது.நஞ்சுண்டன் மூச்சை இறுகப் பிடித்து கொண்டான்.

ஒரு கையில் தீப்பந்தத்தை ஏந்தி கொண்டு இன்னொரு கையில் வாளை ஏந்தியபடி தீவிற்குள் பிரவேசித்தான் தர்மபாலன்.இந்த தீவிற்குள் இந்த இருட்டில் வருவது யாராக இருக்கும் என்று குழம்பிக் கொண்டிருந்தான் நஞ்சுண்டன் .

ரகசிய தீவு

Zரகசிய தீவு

அத்தியாயம் 72

சகுனியும், சாணக்கியனும்

ஆதித்தனின் பெயரை கேட்டதும் சிறிது நேரம் அயர்ந்து நின்றான் மதி மாறன் . அவனை பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தான்மதிமாறன். அவன் கையில் எடுத்த எந்த காரியத்திலும் இதுவரை தோல்வியடைந்ததில்லை. அவன் காலடி வைத்த இடத்தில் எல்லாம் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவன் இங்கே காலடி எடுத்து வைத்திருக்கிறான்.

ஏற்கனவே பார்த்திபனுக்கு வளநாட்டின் உதவி கிடைத்திருக்கிறது. ஆயுதங்களும் போதுமான அளவு கையிருப்பு இருக்கின்றன. இவை போதாதென்று இவனுக்கு உதவி செய்ய எங்கிருந்தோ இந்த கள்வன் வேறு வந்து சேர்ந்து விட்டான். எந்த உதவியும் இல்லாமல் தான் தனித்து விடப்பட்டு இருப்பதாக மதிமாறனுக்கு தோன்றியது. அவனுக்கு இப்போது இருக்கும் ஒரே துணை ரத்னாவதி மட்டும் தான். வேறு வழியின்றி அவளுடைய ஆலோசனைகளை கேட்க தயாரானான் அவன்.

" ரத்னா வதி! நிலைமை நமக்கு சாதகமாக இல்லை. கலகத் தலைவனின் வலிமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நம் தரப்பு பலவீனமாக இருப்பது போல் தெரிகிறது. இப்போது நாம் என்ன செய்வது?" என்றான் மதி மாறன் ரத்னாவதியை பார்த்து.

அவளது இதழ்களில் ஒரு குறுநகை பூத்தது. இதுவரை அவளை பள்ளியறை பாவையாக நினைத்து காம களியாட்டங்களில் ஈடுபட்டு வந்த மதிமாறன் இப்போது அவளது மதியுகத்தை உணர்ந்து கொண்டு அவளிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு கீழே இறங்கி வந்து விட்டான்.

இவனை தன் கைப்பிடிக்குள் வைத்து கொண்டால் பொம்மலாட்டபொம்மை போல் அவனை இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கலாம் என்ற மகிழ்ச்சியில் விளைந்த புன்னகை அது.

"அந்த பார்த்திபனுக்கு நமக்கு நிகரான படை பலம் இருக்கிறதா?" என்று ஒரு கேள்வியை வீசினாள்.

"இது வரை அவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. நீலன் கொண்டு வந்த ஆயுதங்கள் அவனுக்கு கிடைத்த பின்பு கற்பனை செய்ய முடியாதபடி அவனது படைபலம் அதிகரித்திருக்கிறது. அவனுக்கு உதவியாக வந்து சேரும் வள நாட்டின் படைபலம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இப்போது கூட்டி கழித்துப் பார்த்தால் நாமும் நம் எதிரியும் சமபலத்தில் இருப்பதாகத் தான் தோன்றுகிறது."

"நம் படை வீரர்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்" என்றாள் நிதானமான குரலில் ரத்னாவதி .

"நம்மோடு இணைய யார் வருவார்கள்? அந்த ஆதித்தன். அவன் மிகப் பெரிய அபாயம் .தான் நிற்கும் பக்கத்தை வெற்றி பெறச் செய்யும் திறமை அவனிடம் உண்டு என்பது அவ ணிக்கே தெரியும். அவன் இப்போது பார்த்திபனின் பக்க துணையாக நிற்கிறான். பிறகு எப்படி தோற்க போகும் நம்மோடு போர் புரிய ஆட்கள் வருவார்கள்?" என்று கேள்விகுறியோடு நிறுத்தினான்மதிமாறன்.

"நீங்கள் சொல்வதும் சரிதான். பணத்திற்காக போர் புரிய கூலி ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நம்மை விட கூலி அதிகம் கிடைத்தால் எதிரிகளுடன் இணைந்து கொள்ளவும் தயங்க மாட்டார்கள். இப்போது நமக்கு ஒரே வழிதான் இருக்கிறது"

"என்ன அது?" என்றான் ஆவலுடன் மதி மாறன் .

"ஒரு மனிதனுக்கு பணம், செல்வம் இவற்றை விட மேலானது விடுதலை.அதற்காக எதை வேண்டுமானாலும் ஓரு மனிதன் செய்வான். அதை வைத்து தான் நாம் நம் படைக்கு ஆட்களை சேர்க்கப் போகிறோம்" என்று குறு நகை புரிந்தாள் ரத்னாவதி

அவளது பேச்சின் அர்த்தம் எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அவன். அவளது பேச்சு ஏதோ புதிர் போடுவது போல் அவனுக்கு தோன்றியது.

" ரத்னாவ தி. உன் பேச்சு எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. விடுதலை என்கிறாய். அதை வைத்து ஆட்களை சேர்ப்போம் என்கிறாய். உன் எண்ணத்தை சற்று தெளிவாகத்தான் சொல்வேன்"

" சொல்கிறேன். நம்மிடம் கூடுதல் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை நாம் கவனத்தில் கொள்ளாமல் தோளில் ஆட்டு குட்டியை போட்டு கொண்டு ஆட்டை தேடியது போல் வேறு எங்கோ ஆட்களை தேடிக் கொண்டி ருக்கிறோம்"

"நம்மிடம் எங்கே ஆட்கள் இருக்கிறார்கள்? எதற்காக இப்படி சிந்தை கலங்கிய வளைப் போல் பிதற்றிக் கொண்டிருக்கிறாய்?" என்றான் மதி மாறன் சற்று கோபத்தோடு.

"கோபம் வேண்டாம் கண்ணாளரே! நம் சிறையில் ஏராளமான ஆட்களை நாம் சிறை வைத்திருக்கிறோம். அவர்களுக்கு விடுதலையை பரிசளிப்பதாக பேரம் பேசுங்கள். குற்றங்களை மன்னிப்பதாக கூறுங்கள். பதிலுக்கு அவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை நமக்காக களத்தில் போரிடுவது. அவர்கள் உதவியால் நாம் வென்றால் நல்லது. களத்தில் அவர்கள் மாண்டு போனாலும் நல்லதுதான். வள நாட்டின் படை உதவியோ ஆதித்தனின் ஒத்தாசையோ எதிரிக்கு இருப்பது இவர்களுக்கு தெரியாது. இவர்கள் வெளி உலகைப் பார்த்தே பல வருடமாகி இருக்கும். இவர்களுக்கு விடுதலை மட்டும் தான் ஓரே குறிக்கோளாக இருக்கும்."

மதிமாறன் ரத்னாவதியின் ஆலோசனையை கேட்டு அதிர்ந்து போய் நின்றான். அவனது முகத்தில் மகிழ்ச்சி பரவியது. இப்படி ஒரு யோசனை அவளுக்கு மட்டும் எப்படி தோன்றியது என்று நினைத்து வியந்தவன் அவளை கட்டி தழுவி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

"உன்னை சாதாரண பெண்ணாக நினைத்து விட்டேன் ரத்னா. நீ சகுனியையும், சாணக்கியனையும் சம விகிதத்தில் கலந்து செய்த கலவை"

" எல்லாம் வாழ்க்கை தந்த அனுபவ பாடம் " என்று சிரித்தாள் ரத்னாவதி .

"இதோ "இப்போதே சிறைசாலைக்கு செல்கிறேன். என் நிபந்தனைக்கு ஒப்பு கொள்கிறவர்களை நான் படையில் சேர்க்கிறேன். என் நிபந்தனைக்கு ஒப்புகொள்ளாதவர்களை ...."

"கொன்று விடுங்கள். சிறையில் உண்ட உணவுக்கு கூட விசுவாசம் அற்றவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன்? அந்த உணவை ஓரு நாய் உண்டிருந்தால் கூட நமக்காக நன்றியோடு வாலையாவது ஆட்டியிருக்கும் "

"நீ சொல்வது உண்மை. சிறைவாசிகளின் உயிர் அவர்கள் எடுக்கும் முடிவில் இருக்கிறது" என்ற மதிமாறன் சிறைசாலையை நோக்கி கிளம்பினான்.

சிறைசாலையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அவனது நிபந்தனைக்கு கைதிகளிடையே ஏகபோக ஆதரவு நிலவியது. ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் தனது திட்டத்தை ஏற்று கொண்டதை நினைத்து மனம் மகிழ்ந்தான் அவன்.

சரியான சந்தர்ப்பத்தில் படையிலிருந்து தப்பி ஓட அவர்களில் சிலர் திட்டமிட்டிருந்தது பாவம் அவனுக்கு தெரியாது.

ரத்னாவதியின் திட்டம் சரியாக வேலை செய்து விட்டது என்று நினைத்த மதிமாறன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் ஆயுதங்களை கொடுத்து தன்னுடைய படையில் சேர்க்க உத்தரவிட்டான்.

அதே நேரம் பார்த்திபன் பதைபதைப்புடன் ஆதித்தனின் வருகைக்காக காத்திருந்தான். வள நாட்டின் ஒற்றனாக நடிக்க ஆதித்தன் கிளம்பி சென்றதில் பார்த்திபனுக்கு துளிக் கூட விருப்பம் இல்லை.

கண்டிப்பாக மதிமாறன் ஒற் றனை சிறையில் அடைக்கவோ சிரச்சேதம் செய்யவோ உத்தரவிடுவான். சிறையில் அடைக்கப்பட்டால் கூட ஆதித்தனை எப்படியாவது மீட்டு விடலாம். ஆனால் அவனது உயிர் பறிபோய்விட்டால்?

ஆதித்தனின் உயிரை பணயம் வைத்து அரசதிகாரத்தை பெற அவன் விரும்பவேயில்லை. அவனுக்கு கடைசியாக வந்த தகவல் ஆதித்தன் கைது செய்யப்பட்டு மதிமாறனின் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டான் என்பது தான். அதற்கு பிறகு என்ன நடந்ததென்று அவனுக்கு தெரியவில்லை.

சற்று தூரத்தில் சாத்தன் பார்த்திபனின் ஆட்களுக்கு மூன்று ஆட்கள் ஆட்டத்தை ஆட பயிற்சி தந்து கொண்டிருந்தான். மீதி ஆட்கள் பொம்மைகள் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அவற்றை பார்த்தபடி யோசனையில் மூழ்கி கிடந்த பார்த்திபன் தன் அருகே ஒரு புரவி வந்து நிற்பதை காண தவறி விட்டான். வந்து நின்ற குதிரையில் இருந்தவன் ஆதித்தன்.

குதிரையிலிருந்து குதித்து இறங்கிய ஆதித்தன் அவனது தோளில் தட்டினான். ஆதித்தனைப் பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது.

"ஆழ்ந்த யோசனையில் மூழ்கி விட்டாயோ?"

" எல்லாம் உன்னை நினைத்துத் தான் "

"கவலைப்ப்டாதே! எனக்கு எந்த ஆபத்தும் நேர வில்லை. பத்திரமாக திரும்பி வந்து விட்டேன்"

"போன காரியம்?"

"வெற்றிதான்.என் வரவு அவனுக்கு இனி தொந்தரவு தான் "

"மதி மாறனை வீழ்த்தி நாம் ரகசிய தீவை கைப்பற்றி விட்டால் மலைநாடு சும்மா இருக்கும் என்றா நினைக்கிறாய்?"

" இழந்த பகுதியை மீட்க கட்டாயம் படை எடுத்து வருவார்கள்."

"அப்போது என்ன செய்வது?"

"போர் நடக்கும். நாம் வெல்வோம்.மதிமாறன் மீண்டும் ஆளுநராவான்."

" என்ன சொல்கிறாய் நீ?"

"மதி மாறனை பொம்மையாக்கி பின்னால் இருந்து நீ அரசாட்சி செய். அவனை சிறையில் அடைத்து வை.மலை நாட்டிற்கு அனுப்பும் மாத கடிதங்களில் கையெழுத்திடுவது மட்டும் தான் அவன் செய்ய போகும் ஓரே வேலை"

" திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது"

"அதற்கு மதிமாறன் உயிரோடு பிடிபட வேண்டுமே?" என்றான் ஆதித்தன்.

திங்கள், 12 டிசம்பர், 2022

ரகசிய தீவு71

Aரகசிய தீவு

அத்தியாயம் 71

எதிரிக்கு எதிரி

விடியற்காலை .

சூரியன் மேகக்கூட்டத்தின் நடுவே மெல்ல எழுந்து கொண்டிருந்தான். அவனது கதிர்கள் சன்னல் வழியாக உறங்கி கொண்டிருந்த தர்மபாலனின் முகத்தில் விழுந்தன.வெளிச்சம் பட்டு கூச்சத்தில் கண்களை கசக்கியபடி எழுந்தான் தர்மபாலன்.அவன் சோம்பல் முறித்து கொண்டு கப்பலின் மேல் தளத்திற்கு வந்தான். கப்பல் முழுவதும் சோம்பல் குடிகொண்டிருந்தது. நள்ளிரவில் மது அருந்தி விட்டு படுத்தவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

கொட்டாவி விட்டபடி முத்தழகி நின்ற இடத்தை பார்த்த தர்மபாலன் திகைத்துப் போய் நின்றான்.முத்தழகி நின்ற இடம் வெறுமையாக இருந்ததை பார்த்ததர்மபாலன் இடி விழுந்த நாகம் போலானான்.

குடித்துவிட்டு படுத்துக் கொண்டிருந்த தன்னுடைய ஆட்களை உதைத்து எழுப்பியவன் "முட்டாள்களே!அங்கே பாருங்கள். நம் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அந்த நீலன் தன்னுடைய கப்பலை எடுத்து சென்று விட்டான். நாம் இன்னும் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறோம். உடனே கப்பலை கிளப்புங்கள். ஒடுங்கள் !" என்று அனைவரையும் விரட்ட தொடங்கினான்.

அவனது உத்தரவுக்கு இணங்க கப்பலின் நங்கூரம் மேலே இழுக்கப் பட்டது. பாய்மரம் இழுத்து கட்டப்பட்டது. உதவி மாலுமி கப்பலின் சுக்கானை சுறுசுறுப்பாக இயக்கத் தொடங்கினான். கப்பல் துறைமுகத்தில் இருந்து நகரத் தொடங்கியது. தொலைநோக்கியை எடுத்து முத்தழகி கப்பலை கண்காணிக்க தொடங்கினான் தர்மபாலன்.

முத்தழகியில் நடைபெறும் ஓவ்வொரு அசைவையும் வைத்த கண் எடுக்காமல் கண்காணிக்க தொடங்கினான் அவன்.

அதே நேரம் முத்தழகியில்.

சிறிய படகு ஓன்றை கடலில் இறக்க உத்தரவு பிறப்பித்திருந்தான். அவனது குறைபாடு மிக்க கண்களுக்கு கல்லறைதீவு தென்பட தொடங்கியிருந்தது. அவன் அங்கேயே இறந்து போயிருந்தால் அவன் இறந்த இடத்தில் இந்நேரத்திற்கு புல் முளைத்திருக்க வேண்டும். கடவுளின் அருளால் அவன் தப்பி பிழைத்து விட்டான். அங்கே தான் அவன் நஞ்சுண்டனின் கதையை முடித்துவிட திட்டமிட்டிருந்தான். கருணாகரனும் நன்சுண்டனும் குள்ள நரி தனமாக கூட்டணி போட்டு அவனை கவிழ்க்க திட்டமிட்டதை அவனால் நம்பவே முடியவில்லை.

கண்களை மூடினால் கழுத்திற்கு மேலே உள்ள தலை பறிபோய்விடும் அபாய நிலையிலேயே தன்னுடைய நாட்கள் நகர்ந்து கொண்டிருப்பதை அவன் வெறுத்தான் நல்ல வேளையாக அந்த சிறுவன் தெய்வம் போல் வந்து கருணாகரனிடமிருந்து தன்னை காப்பாற்றி விட்டான். மீதமுள்ள அவனது ஆட்கள் மூவரையும் சமாளித்தாக வேண்டும். இல்லையென்றால் நஞ்சுண்டனுடன் கல்லறை தீவிற்கு சென்றவுடன் அந்த மூவரும் கப்பலை கைப்பற்றி விடக் கூடும்.

பிறகு நீலன் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டியதுதான் என்று நினைத்தவன் நிலைமையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான். அவனையே பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தான் ஆதி.

" எதைப் பற்றி இவ்வளவு நேரம் யோசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"நான் நஞ்சுண்டனின் கதையை கல்லறைதீவில் முடித்துவிட தீர்மானம் செய்திருக்கிறேன். நான் அவனை அங்கே அழைத்து செல்லும் போது நீ பார்த்த அந்த மூன்று நபர்கள் இந்த கப்பலை கைப்பற்றி விடுவார்களோ என்று கவலையாக இருக்கிறது."

"எதற்காக கவலைப்படுகிறீர்கள்? அந்த மூன்று பேரையும் நஞ்சுண்டனுக்கு உதவியாக கல்லறைதீவிற்கே அனுப்பி வைத்துவிடுங்கள்" என்றான் ஆதி.

ஆதியை வியப்புடன் பார்த்தான் நீலன் இந்த யோசனை தனக்கு ஏன் தோன்றவில்லை என்று தன்னையே நொந்து கொண்டான் அவன்.

"நல்ல யோசனை.நீ அந்த மூன்று நபர்களை அடையாளம் காட்டு. அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான் நீலன்.

அதே நேரம் அறை கதவு தட்டப்பட்டது.

"யாரது?உள்ளே வாருங்கள்" என்றான் நீலன்.

உள்ளே நுழைந்தான் பூபதி.

"யாரப் பா நீ?" என்றான் நீலன்

"நான் கருணாகரனின் ஆள். காலையிலிருந்து அவனை தேடிக் கொண்டிருக்கிறேன். அவனை காணவில்லை. கப்பல் முழுக்க தேடிப் பார்த்து விட்டேன். ஆள் அகப்படவில்லை. எங்கே அவன்?" என்றான் பூபதி.

ஆதி நீலனுக்கு கண்ணால் சைகை காட்டினான். அந்த மூவரில் ஓருவன் இவன் தான் என்பதை புரிந்து கொண்ட நீலன்" அவனுக்கு நேற்று இரவிலிருந்து உடல் நிலை சரியில்லை. மருந்து கொடுத்து உள்ளே படுக்க வைத்திருக்கிறேன்" என்று உள் அறையை காட்டினான்.
"கருணாகரா! என்னாயிற்று உனக்கு? " என்றபடி அறை கதவை திறந்தான் பூபதி. அதே நேரம் இடியென ஒரு அடி அவன் தலையில் இறங்கியது. அப்படியே மயங்கி சரிந்தான் அவன். அவனை தூக்கி அறையின் மூலையில் போட்டான் நீலன்.

அறையிலிருந்து வெளியேறிய ஆதி" மீதமுள்ள இருவரையும் இங்கே அனுப்பி வைக்கிறேன். இதே உபச்சாரம் அவர்களுக்கும் நடந்தேறட்டும்" என்றான்.

கப்பலின் மேல் தளத்தில் இருவரையும் அடையாளம் கண்டு விட்ட ஆதி இருவரையும் தனித்தனியாக அணுகி கப்பல் தலைவர் உங்களை பார்க்க விரும்புகிறார் " என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

அறையில் தடியோடு தயாராக நின்று கொண்டிருந்தான் நீலன்.கதவை திறந்தவனின் தலையில் இடி இறங்கியது. இருவரையும் தாக்கி நினைவிழக்கச் செய்தான் நீலன்.

நான்காவது முறையாக கதவு தட்டப்பட்டது. ஆதி நான்கு பேரை ஞாபக மறதியாக மூன்று பேர் என்று சொல்லிவிட்டானோ என்று நினைத்த நீலன் கதவை திறந்துவிட்டு விட்டு நுழைந்தவனின் தலையில் தடியை இறக்கினான்.

அவனது தடியை வலியகரம் ஓன்று தடுத்து நிறுத்தியது.
அந்த கரங்கள் யவனனுக்கு சொந்தமானவை.

" வரவேற்பு பலமாக இருக்கிறதே நண்பா " என்றான் யவனன்.

" மன்னித்து விடு நண்பா. சில ஒற்றர்கள் நம் கப்பலில் ஊடுருவி விட்டார்கள். அவர்களை களையெடுத்து கொண்டிருந்தேன்"

"உனக்கு என்னுடைய உதவி ஏதாவது தேவைப்படுகிறதா?" என்றான் யவனன் புன்சிரிப்புடன்.

"ஆமாம். உள் அறையில் சில நண்பர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை சிறிய படகிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் நான் திரும்ப வரும் வரை இந்த கப்பலை நீ பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த சிறுவன் நம்பகமானவன்.இவன் உனக்கு உதவி செய்வான்."

"அந்த நஞ்சுண்டன்?"

" அவனுக்கு உன்னிடமிருந்து நிரந்தரமாக விடுதலை தரப் போகிறேன்" என்று கண்ணடித்தான் நீலன்.

மயங்கி கிடந்த இருவரும், நஞ்சுண்டனும் சிறிய படகில் இறக்கப்பட்டனர். முத்தழகியின் நங்கூரம் இறக்கப்பட்டது. நீலன் சிறிய படகின் துடுப்பை போட்டு அதை கல்லறைதீவை நோக்கி செலுத்தினான்.

நடப்பவற்றையெல்லாம் தொலைநோக்கி மூலமாக கவனித்து கொண்டிருந்தான் தர்மபாலன். நீலனின் நடவடிக்கைகள் அவனுக்கு புதிராக இருந்தன. கருணாகரன் எங்கே போய் தொலைந்தான் என்று மனதிற்குள் குமைந்தான் தர்மபாலன் கடலில் ஏதோ மிதந்து கொண்டிருப்பதை பார்த்தன அவன் கண்கள்.

அது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த கருணாகரனின் பிரேதம். அதைப் பார்த்த தர்மபாலன் அதிர்ச்சியின் உச்சிக்கு போனான். கருணாகரனை அந்த நீலன் தான் கொன்று கடலில் வீசியிருக்க வேண்டும் என்று நினைத்தான் அவன். இதற்கு கண்டிப்பாக பழி வாங்கியாக வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டான் அவன்.

தன்னை எதற்காக மீண்டும் கல்லறை தீவிற்கு திரும்ப கூட்டி வருகிறான் என்று நஞ்சுண்டனுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்தது. தன்னை பழிக்கு பழி வாங்க நினைக்கும் நீலனின் நோக்கம் அவனுக்கு புரிந்தது.கருணாகரன் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டான் என்பது தான் அவனுக்கு புரியவில்லை. ஓரு வேளை இருவரும் வேறு ஏதாவது உடன்படிக்கையில் சமாதானமாகி தன்னை நட்டாற்றில் விட்டு விட்டார்களோ என்று அவனுக்கு தோன்றியது.

படகில் தன்னுடன் வரும் மூவர் யார்? எதற்காக அவர்களை நீலன் இங்கே தூக்கி வருகிறான் என்று அவனுக்கு புரியவில்லை.

தீவில் அவனை இறக்கி விட்ட நீலன் மற்ற இருவரையும் வந்து தரையில் கிடத்தினான்.

" என்ன பார்க்கிறாய்? இவர்களும் உன் போன்ற துரோகிகள் தான். உனக்கு உதவி செய்ய கருணாகரன் உயிரோடு இல்லை. இவர்கள் அவனது ஆட்கள் .நீங்கள் நால்வரும் இங்கேயே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். நான் கட்டுமரம் செய்து தப்ப இங்கே மரங்கள் இருந்தன. அதிர்ஷ்டமும் என் பக்கம் இருந்தது. மரங்கள் பெரிதாகும்வரை எப்படியாவது உயிரை காப்பாற்றி கொண்டால் நீயும் என்னை போல் உயிரோடு தப்பி விடலாம். நான் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் தனிமையில் அவதிப்பட்டேன். ஆனால் நீ அதிர்ஷ்டகாரன். உன் பேச்சு துணைக்கு இந்த இருவர்அகப்பட்டிருக்கிறார்கள். உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உயிரோடு இருந்தால் மீண்டும் சந்திப்போம்" என்ற நீலன் அங்கிருந்து சிறிய படகில் தன்னுடைய கப்பலை நோக்கி கிளம்பினான்.

அதை தொலைநோக்கியில் பார்த்து கொண்டிருந்தான் தர்மபாலன். நீலன் தனக்கு ஆகாதவர்களை அங்கே இறக்கிவிட்டு விட்டான் என்பதை உணர்ந்தவன் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

"கப்பலை கல்லறைதீவை நோக்கி செலுத்து " என்று உத்தரவிட்டான் தர்மபாலன்.அவனது கப்பல் கல்லறை தீவை நோக்கி திரும்பியது.

ரகசிய தீவு70

Aரகசிய தீவு

அத்தியாயம் 70

எத்தனின் மரணம்

கருணாகரனின் வலதுகரமான பூபதி கப்பலை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தான். அங்கே நின்று கொண்டிருந்த ஏராளமான ஆட்களில் இருவரை மட்டும் அவன் எங்கோ பார்த்தது போல் உணர்ந்தான். அந்த முகங்கள் அவனுக்கு பரிச்சயமான முகங்களாக தோன்றின. எங்கே என்று தன்னுடைய மூளையை அவன் கசக்கி கொண்டான்.

அவர்கள் இருவரும் தர்மபாலனால் நீலனின் கப்பலுக்கு வேலை ஆட்களாக அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றர்கள். அவர்களுக்கும் பூபதியை நன்றாக தெரியும். அவர்களும் அதே குழப்பத்தில் தான் இருந்தனர்.கருணாகரன் தன்னுடைய அடையாளங்களை வெகு ரகசியமாக வைத்து கொண்டு வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வேடங்களில் செயல்பட்டு கொண்டிருந்ததால் அவனும் நாட்டின் ஒற்றன் என்பதை அவர்கள் அறிந்தி ருக்கவில்லை.

வள நாட்டின் ஓற்றர்களுக்கான பிரத்யேக சமிக்ஞையை அவர்களுக்கு காட்டி தன்னை வெளிகாட்டி கொண்டான் பூபதி. அவர்களின் பதில் சமிக்ஞையில் திருப்தியடைந்தவன் தனியான இடத்தில் அவர்களை அழைத்து சென்று பேச்சை துவக்கினான்.

"நீங்கள் வள நாட்டின் ஒற்றன் தானே?" என்றான் இருவரில் ஒருவன் பூபதியை பார்த்து.

"ஆம். உங்கள் இருவரையும் நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்."

" நாங்களும் உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாங்களும் வள நாட்டின் ஒற்றர்கள் தான் "

" நல்லது. இங்கே  எதற்காக வந்திருக்கிறீர்கள்?"

"கப்பல் தலைவன் தர்மபாலன் எங்களை இங்கே வேலையாட்களாக அனுப்பி வைத்திருக்கிறான்."

"நோக்கம் ?"

" கப்பலில் இருக்கும் புதையலுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் வள நாட்டிற்கு கொண்டு சேர்ப்பது "

" என்னுடைய நோக்கமும் அதேதான்.கருணாகரனின் லட்சியமும் அதே தான் "

" கருணாகரனும் வள நாட்டின் ஒற்றனா?"

"இது வரை நீ அறியாத செய்தியா அது "

"ஆம். இது புது செய்தி "

"நாளை காலை கப்பலில் கடும் பூசல் ஏற்படப் போகிறது. அதை நாம் பயன்படுத்திக் கொண்டு கப்பலை நம் வசப்படுத்த வேண்டும்"

" நாளை காலை பூசலா? யாருக்கு இடையில் ? எங்களுக்கு எதுவும் புரியவில்லை"

"புரியும் படியாகவே சொல்கிறேன். நாளை காலை நீலன் நஞ்சுண்டனை கொல்ல போகிறான். ஏனென்றால் கருணாகரனுக்கு நஞ்சுண்டன் தேவை.நீலனை கழற்றி விட்டு விட்டு அந்த இடத்தில் நஞ்சுண்டனை நியமிக்க அவன் விரும்புகிறான். அதனால் அவன் நஞ்சுண்டன் கொல்லப்படுவதை விரும்ப மாட்டான். அதை இடையிட்டு தடுப்பான். நீலனின் ஆட்கள் வேலை அனுபவம் இல்லாத புது ஆட்கள் . பணத்திற்காக ஆசைப்பட்டு வேலைக்கு வந்தவர். நம்முடைய மிரட்டலுக்கு எளிதில் பணிந்து விடுவார்கள். நீலனை கொன்று விட்டால் இந்த கப்பல் நம் வசம் வந்துவிடும்.கருணாகரனுக்கு உதவியாக நாம் காரியமாற்ற வேண்டும். நாளைய விடியல் நம்முடையதாக இருக்க வேண்டும்" என்றான் பூபதி.

"நிச்சயம். நீங்கள் நடப்பது நடக்கும் " என்றனர் இருவரும் .

" வாருங்கள். நாம் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியாதவர்களைப் போல் நடந்து கொள்வோம்" என்றான் பூபதி.

அவர்கள் இருளில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சதியில் ஈடுபட்டிருந்த மூவருக்கும் நான்காவதாக ஒரு நபர் அவற்றை கேட்டு கொண்டிருந்தது தெரியாது.

அந்த நான்காவது நபர் ஆதி.கருணாகரனின் கண்ணில் படாமல் மறைந்திருந்த ஆதி தான் மூவரும் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவன். அவனுக்கு நீலனின் பரிதாபமான முகம் நினைவுக் கு வந்தது.

தன்னிடம் அன்பு காட்டிய அந்த ஜீவன் நாளை கொல்லப்படபோகிறான் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை.

இந்த பாவி கருணாகரன் இன்னும் எத்தனை பேரை பலிகொள்ள போகிறானோ என்று குமுறியது அவனது உள்ளம்.

நள்ளிரவு .

கப்பலில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவரவர் கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். நிலவும் வானும் தங்களை ரசிப்பதற்கு யாரும் இல்லாமல் தங்கள் யவனத்தை வீணடித்து கொண்டிருந்தன.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கருணாகரனின் அறை கதவு தட்டப்பட்டது.யார் இந்த நேரத்தில் கதவை தட்டுவது என்ற யோசனையோடு கண்களை கசக்கியபடி எழுந்தான் கருணாகரன்" யார் அது?" என்றான் அவன்.

அவனது கேள்விக்கு எந்த பதிலும் வரவில்லை. அதற்கு பதிலாக கதவு மேலும் பலமாக தட்டப்பட்டது.
கருணாகரன் கடும் எரிச்சலுடன் கதவை திறந்தான். திறந்தவுடன் அவனது நெஞ்சில் ஓரு கத்தி மின்னலாக பாய்ந்தது. அதை கருணாகரன் எதிர்பார்க்கவில்லை. நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் கீழே விழுந்தான் அவன். சில நொடி தாமதத்திற்கு பிறகு தீப்பந்தத்துடன் உள்ளே நுழைந்தான் ஆதி. அவனது இன்னொரு கையில் வாள் ஒன்று மின்னியது.

"யார் நீ?" என்றான் கருணாகரன்தீனமான குரலில்.

"என்னை அடையாளம் தெரியவில்லையா? நீ அணைக்க மறந்த நெருப்பின் கடைசி துளி. உன்னை எரிக்க இப்போது வந்திருக்கிறது"

அவனுக்கு இப்போது அடையாளம் விளங்கியது.

"நீ அந்த காட்டுவாசிபயல் தானே?" என்றான் கருணாகரன் வலியோடு.

"ஆம். நீ கொன்றொழித்த இனத்தின் கடைசி மிச்சம் நான்.வாய் பேச முடியாதவனாக நடித்து இத்தனை நாள் என் உயிரை உன்னிடமிருந்து காப்பாற்றி கொண்டேன். அந்த பேசா மடந்தை நடிப்பெல்லாம் உனக்காகத்தான். செத்து ஓழி கயவனே" என்ற ஆதி அவனது நெஞ்சில் வாளைபாய்ச்சினான்.

"வேண்டாம். என்னை கொன்று விடாதே" என்ற கருணாகரனின் கடைசி குரல் காற்றில் கலந்தது.

கருணாகரனின் தலை சாய்ந்தது. எல்லோரையும் ஏமாற்றி கொண்டிருந்த எத்தனின் வாழ்வு ஓரு சிறுவனின் கையால் முடிவுக்கு வந்தது.

கருணாகரன் இறந்து போனதை உறுதி செய்து கொண்ட ஆதி வெளியே செல்ல திரும்பினான். வாயிற் படியில் கைகளை கட்டி கொண்டு நின்றான் நீலன்

ஆதி அவனைப் பார்த்து திடுக்கிட்டான் நீலனை இந்த இடத்தில் அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் வாய் பேச இயலாதவனாக நடிப்பதை மறந்து தன்னிச்சையாக "நீங்களா?" என்றான்.

"பயப்படாதே தம்பி. நள்ளிரவில் எனக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து பார்த்த போது உன்னை காணவில்லை. நீ அறையிலிருந்து வெளியேறுவதை கவனித்து உன்னை பின் தொடர்ந்து வந்தேன். இங்கே நடந்தவற்றை நான் கவனித்து கொண்டு தான் இருந்தேன்.இவன் உனக்கு எதிரியா?" என்றான் நீலன் நிதானமாக .

"ஆம். என் இனத்தை அழித்தவன். இவனைக் கொல்லத்தான் இத்தனை நாட்களாக நான் உயிர் பிழைத்து கிடந்தேன்.என் கடமை முடிந்தது "

" இவனை கொன்றதற்காக வருந்தாதே ! இவன் ஓன்றும் அவ்வளவு நல்லவன் கிடையாது. இவன் பூமியில் வாழத் தகுதி இல்லாதவன். எமனை ஏமாற்றி இத்தனை நாட்களாக உயிர் பிழைத்து கிடந்தவன். உன் கையால் இவனது உயிர்போகவேண்டும் என்பது தான் விதி. எனக்கு வந்த இடையூறை தீர்த்து விட்டாய்"

"நான் இவனை கொல்லாவிட்டால் இவன் உங்களை கொன்று விட்டிருப்பான். உங்கள்இடத்தில் நஞ்சுண்டனை நியமிக்க வேண்டும் என்பது இவனது திட்டம். நான் இவனை கொல்ல அந்த திட்டமும் ஒரு காரணம் "

" நல்லது செய்தாய். அறையில் அடைபட்டு கிடக்கும் அந்த நச்சுப் பாம்பை பிறகு கவனித்து கொள்வோம்.இவன் ஒழிந்தது நல்லது.இவனது உடலை பிடி. கடலில் வீசி விடலாம்."

"இவனது கூட்டாளிகள் இன்னும் மூவர் இருக்கிறார்கள். அவர்கள் இவனை தேடுவார்கள். அவர்களும் இவனுக்கு உடந்தையாக செயல்படுகிறவர்கள் தான் "

"அவர்களை உனக்கு அடையாளம் தெரியுமா?" என்றான் பரபரப்புடன் நீலன்.கரணம் தப்பினால் மரணம் என்பதைப் போல் தன் உயிரை பறிக்க எத்தனை பேர் கிளம்பியிருக்கி றார்கள் என்று அவனுக்கு அயர்ச்சியாக இருந்தது.

"அவர்களை எனக்கு அடையாளம் தெரியும். அவர்கள் வள நாட்டின் உளவாளிகளும் கூட " என்ற ஆதி தான் பார்த்த காட்சிகளை விவரித்தான்.

அவன் சொல்வதை கவனமாக கேட்டான் நீலன்.

"கடவுளாகப் பார்த்து உன்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறான். நீ மட்டும் இல்லையென்றால் காலையில் என் உயிர் பறி போயிருக்கும். அந்த சதிகாரர்களை எனக்கு அடையாளம் காட்டு. அவர்களை என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும் " என்றான் நீலன்.

"இப்போதாவது உன்னுடைய உண்மையான பெயரை சொல் " என்றான் நீலன்

"ஆதி "

" நல்லது. இவனை தூக்க எனக்கு ஒத்தாசை செய் இவன் உடலை கடலில் வீசி விடுவோம்" என்றான் நீலன்.ஆதி அவனுக்கு உதவி செய்தான். கருணாகரனின் உடலை தோளில் தூக்கி போட்டு கொண்ட நீலன்" உன் உடைகளில் இவனது ரத்தம் பட்டிருக்கிறது பார். போய் உடை மாற்றிக் கொண்டு உறங்கு. நான் விரைவில் வருகிறேன்" என்றான் நீலன்.

ஆதி நீலனின் அறைக்கு திரும்பினான்.

அடுத்த சில நிமிடங்களில் கருணாகரனின் உடல் கடலில் வீசப்பட்டது. பலரை ஏமாற்றிய எத்தனின் மரணம் பரிதாபகரமாக நிகழ்ந்து முடிந்தது.

" எல்லாம் கூடிவரும் நேரத்தில் அதிர்ஷ்டம் அவனை கைவிட்டுவிட்டது" என்று முணுமுணுத்தான் நீலன்.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

ரகசியதீவு69

Aரகசிய தீவு

அத்தியாயம் 69

நீலனுக்கு மாற்று

ஆதி நீலனின் கப்பலில் கண் விழித்தான். அவன் எங்கே இருக்கிறான் என்று அவனுக்கு தெரியவில்லை. கடைசியாக இரண்டு பேர் அவனை கடத்தி வந்தது மட்டும் அவனுக்கு நினைவிருந்தது. கடைசியாக அவனுக்கு தலையில் விழுந்த அடியால் அவனது தலை வலித்து கொண்டிருந்தது.

படுக்கையிலிருந்து எழுந்து கொண்ட ஆதி தன்னுடைய தலையை ஓரு முறை தடவிக் கொண்டான். அவன் இருந்த அறை மெதுவாக ஆடிக்கொண்டிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அது அவனுக்கு புதிதாக இருந்தது. அறை வெளிச்சமின்றி இருட்டாக இருந்தது. இது எந்த இடமாக இருக்கும் என்று நினைத்து குழம்பிய ஆதி அடிமேல் அடி வைத்து அறையை விட்டு வெளியே வந்தான்.

அறைக்கு வெளியே நீண்ட தாழ்வாரத்தில் நடந்தவன் கடைசியாக ஒரு ஏணிப்படியை வந்தடைந்தான். அதன் மேல் ஏறி மேலே வந்தான். கடல் அலைகளின் இரைச்சலும், சத்தமும் அவனுக்கு அச்சத்தை ஊட்டின.மேல் தளத்தில் ஆங்காங்கே தீப்பந்தங்கள் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. அடர்ந்த இருட்டின் நடுவே நட்சத்திரங்களும், நிலவும் ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே கண்ணில் பட்ட மனிதர்கள் இவனை பொருட்படுத்தாமல் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

கண்கள் வெளிச்சத்திற்கு பழக்கமான பின்புதான் ஆதிக்கு தான் இருப்பது கப்பல் என்று  புரிந்தது. தன்னை கடத்தி வந்தவர்கள் ஏதோ ஒரு கப்பலில் தன்னை அடிமையாக விற்று விட்டார்கள் என்று அவனுக்கு புரிந்தது.கும்மிருட்டு, உடல் நடுக்கும் குளிர். நடுக்கடல். இங்கிருந்து எப்படி தப்பி செல்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

யோசித்து கொண்டிருந்தவனின் தோளில் ஆதுரமாக விழுந்தது ஓருகை .ஆதி திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். அவனது பின்புறமாக நின்று கொண்டிருந்த நீலன் அவனைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.

"எழுந்து விட்டாயா தம்பி? உன் பெயரை நான் மறந்து விட்டேன். உன் மாமன் ஏதோ ஒரு பெயரை கூறினான். அந்த பெயர் என் நினைவில் நிற்கவில்லை.சரி போகட்டும். உன் பெயர் என்ன?" என்றான் நீலன்.

தன் எதிரே நிற்பவன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் திகைத்தான் ஆதி.தன்னை கடத்தி வந்தவர்கள் இவனுடைய கூட்டாளிகளாகக் கூட இருக்கலாம் என்று நினைத்தவன் இவனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

தன்னைப் பற்றிய எந்த விசயங்களையும் இவனிடம் சொல்ல கூடாது என்று நினைத்தவன் தான் நெடு நாட்களாக நடித்து வந்த வாய் பேச முடியாதவனாகவே இவனிடமும் நடித்து விட வேண்டியதுதான் என்று நினைத்தவன் அவனது கேள்விக்கு பதில் சொல்வது போல் "பே பே" என்றான்.

ஏற்கனவே வாய் பேச முடியாதவனாக பல ஆண்டுகள் நடித்த அவனது அனுபவம் இப்போது அவனுக்கு கைகொடுத்தது. அவனது அனுபவ நடிப்பில் ஏமாந்து விட்டான் நீலன்.அவனது பார்வையில் இரக்கமும், கருணையும் பொங்கி பிரவகித்தன.

"அந்த ஆண்டவன் கருணையே இல்லாதவன் தம்பி .உனது பேச்சு திறனை பறித்து கொண்டு விட்டானே ? இந்த மாதிரி நேரங்களில் தான் எனக்கு கடவுள் மீது கட்டு கடங்காத கோபம் ஏற்பட்டு விடுகிறது. அது கிடக்கட்டும். உனக்கு நல்லதாக ஒரு பெயரை வைத்தாக வேண்டும். பெயர் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய அடையாளம் அல்லவா? உனக்கு என்ன பெயர் வைப்பது என்று நான் யோசிக்கிறேன். இத்தனை வருடங்களாக ஒரு மனிதன் பெயர் இல்லாமல் இருந்திருக்க முடியுமா? நன்றாக யோசித்து பார்தம்பி . உன்னுடைய பழைய பெயர்றினைவுக் கு வரும்." என்றான் நீலன் பரிதாபம் நிறைந்த குரலில்.

அவன் கர்ண கொடுரமான ஏதாவது பெயரை வைத்து விடுவானோ என்று பயந்து போன ஆதி தன்னுடைய பெயரை முழுதாக உச்சரித்தான்.

"ஓ! உன் பெயர் ஆதியா? மிகவும் நல்ல பெயர் .இங்கே பார் ஆதி. இது என்னுடைய கப்பல். நான் இதன் தலைவன். உன் மாமன் உன்னை இங்கே வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறான். இந்த புது இடத்தை நினைத்து நீ பயப்பட வேண்டாம். பாதுகாப்பான இடத்தில் தான் நீ இருக்கிறாய். இங்கே இருப்பவர்களில் சரிபாதி பேர் உன்னை போல் புதியவர்கள். உன் பயமும் தயக்கமும் விலக வேண்டுமானால் நீ இந்த கப்பலை ஓரு முறை சுற்றி பார்க்க வேண்டும். போய் சுற்றி பார்த்து விட்டு வா" என்றான் நீலன்.

இனியும் இந்த கிழவன் நம்மை கேள்விகள் கேட்டு துன்புறுத்த மாட்டான் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஆதி கப்பலை சுற்றி பார்க்க அங்கிருந்து கிளம்பினான்.

அதே நேரம் கப்பலுக்கு வெளியே இருந்து சில கூச்சல்கள் கேட்க ஆரம்பித்தது. அதில் ஒரு குரல் கருணாகரனுடையது. இடுகாட்டிலிருந்த மார்க்கதரிசியின் புதையலை சிறு படகுகளில் ஏற்றி கொண்டு வந்திருந்தான் அவன். தனக்கு பழக்கமான குரலை கேட்டு கப்பலின் மேல் தளத்திலிருந்து தீவட்டியோடு எட்டி பார்த்தான் நீலன்.கருணாகரனை பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது.

"வந்து விட்டாயா நண்பா! இதோ கயிற்று ஏணியை மேலே அனுப்புகிறேன். ஒத்தாசைக்கு என் ஆட்களையும் அனுப்பி வைக்கிறேன்." என்று கத்திய நீலன் தன்னுடைய ஆட்களை அழைத்தான். அடுத்த சில மணி நேரங்களில் பெரும் போராட்டங்களுக்கு பிறகு அவனது கப்பலில் பொக்கிசங்கள் ஏற்றப்பட்டது. அவற்றை கப்பலின் மேல் தளத்தில் சமமான எடையில் இறக்கி வைத்தான் நீலன்.

" எப்படியோ பெரும்பாடுபட்டு புதையல்களை கப்பலுக்கு கொண்டு வந்து விட்டேன். இனியும் தாமதம் கூடாது. கப்பல் கிளம்பட்டும், " என்றான் கருணாகரன்

"நங்கூரத்தை வெளியே இழுங்கள்" என்று உத்தரவிட்டான் நீலன்.அவனது ஆணை நிறைவேற்றப்பட்டது. நீலன் சுக்கானை இயக்கத் தொடங்கினான். கப்பல் நகரத் தொடங்கியது.

"இப்போது கப்பல் வள நாட்டை நோக்கித் தானே போகிறது? " என்றான் கருணாகரன்.

"இல்லை. கப்பல் இறுதியாகத் தான் அங்கே செல்லும். முதலில் கப்பல் கல்லறை தீவிற்கு செல்லும். பிறகு மோகினி தீவிற்கு. அங்கே பணயக் கைதியாக இருக்கும் என் நண்பன் பைராகியை மீட்டாக வேண்டும். எனக்காக அவன் அங்கே பணயக் கைதியாக இருக்கிறான்"

"கல்லறைதீவில் எதற்காக கப்பலை நிறுத்துகிறாய்? அங்கே தான் யாரும் இல்லையே?"

"எனக்கு அங்கே தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது. அதை தீர்த்தாக வேண்டும்" என்றான் இறுகிய முகத்துடன் நீலன்.

"எனக்கு புதையலில் வர வேண்டிய பங்கை நீ மோகினி தீவில் கொடுத்தாக வேண்டும்" என்றான் நீலன் அமைதியாக .

கருணாகரனின் தலையில் இடி இறங்கியது. இப்படி நீலன் நடுவழியில் பங்கை கேட்டு குடைச்சல் கொடுப்பான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.

" மோகினி தீவிலேயே பங்கு வேண்டுமா?" என்றான் கருணாகரன் சந்தேகம் நிறைந்த குரலில்.

"ஆம். மோகினி தீவின் தலைவன் மகேந்திரனுக்கு அந்த புதையலின் பங்கை கொடுத்தால் தான் அவன் பைராகியை விடுவிப்பான். இந்த மொத்த புதையலின் மதிப்பை விட பைராகியின் மதிப்பு அதிகம் " என்றான் நீலன்.

" உன் விருப்பப் படியே நீ உன் பங்கை வாங்கி கொள்ளலாம்" என்றான் வேண்டா வெறுப்பாக அவன்.

கல்லறைதீவிலேயே நீலனின் கதையை முடித்துவிட வேண்டியதுதான் என்று நினைத்த கருணாகரன் நஞ்சுண்டன் எங்கே இருக்கிறான் என்று தேட ஆரம்பித்தான். நீலனின் கதையை முடித்துவிட்டு அந்த இடத்தில் நஞ்சுண்டனை நியமித்து விடலாம் என்று திட்டமிட்டான் அவன்.

கப்பலில் இருந்த ஒவ்வொரு அறையாக திறந்து நஞ்சுண்டனை தேட ஆரம்பித்தான் அவன். ஓரு அறையை திறந்த போது அதில் நஞ்சுண்டன் நாற்காலியில் கட்டப்பட்டு வாய் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதை பார்த்தான்.அப்பாடா!ஆள் அகப்பட்டு விட்டான் என்ற மகிழ்ச்சியில் அவனது கட்டுகளை அவிழ்க்க முயன்றான் கருணாகரன்.

"நில். அவனை தொடாதே" என்று எச்சரித்தது ஒரு குரல். அது யவனனுடையது. நஞ்சுண்டனை பாதுகாக்க அவனை நியமித்திருந்தான் நீலன்.அவன் அந்த அறையில் இருப்பதை கருணாகரன் கவனிக்கவில்லை.

"இங்கே நீலனை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. உடனே வெளியேறு" என்று அவனை எச்சரித்தான் யவனன்.

"நான் கப்பலை சுற்றி பார்க்க வந்தேன்.நான் இங்கு வந்ததை நீலனிடம் சொல்லி விடாதே" என்றவன் விரைவில் திரும்ப வருகிறேன் என்று கண்களால் சாடை காட்டி விட்டு வெளியேறினான்.

ஏமாற்றத்துடன் வெளியே வந்த கருணாகரனை பார்த்து விட்டான் ஆதி "கொலைகார பாவி. நீ இங்கேதான் இருக்கிறாயா?" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.

இருட்டில் மறைந்து கொண்டான் ஆதி.

ரகசியதீவு68

Aரகசிய தீவு

அத்தியாயம் 68

சிலந்தி வலை

வள நாட்டிலிருந்து ஓலையை கொண்டு வரும் ஒற்றனாக நடிக்க யார் யாரையோ தேர்ந்தெடுத்தாலும் அதில் சற்றும் நிறைவு கிடைக்கவில்லை பார்த்திபனுக்கு .தான் தேர்ந்தெடுக்கும் ஆசாமி ஏதாவது குளறுபடி செய்து விட்டால் என்ன செய்வது? தான் போட்டு வைத்திருக்கும் அத்தனை திட்டங்களும் பாழாகி விடுமே என்ற ஐயம் அவன் மனதை உறுத்தியது.

நீண்ட நெடுநேரமாக தகுதியான ஆளைத் தேர்ந்தெடுப்பதில் பார்த்திபன் சுணக்கம் காட்டுவதை கவனித்து கொண்டிருந்தான் ஆதித்தன்.

" என்ன நண்பா! வள நாட்டின் ஒற்றனாக நடிக்க உன்னிடம் தகுதியான ஆட்கள் இருக்கிறார்களா? இல்லையா?" எதற்கு இப்படி தயங்கி கொண்டிருக்கிறாய்?" என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டான் ஆதித்தன்.

இனி இவனிடம் மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்து கொண்ட பார்த்திபன் தன்னுடைய மனதில் இருக்கும் ஐயத்தை மனம் விட்டு வெளிப்படையாகவே கூறி விட்டான்.

"நீ சொல்வது சரிதான். இந்த வேடத்தில் நடிக்க போகும் ஆசாமி வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வள நாட்டின் செய்தியடங்கிய போலி ஓலை மதிமாறனிடம் கிடைத்தால் முதலில் அவன் இந்த ஒற்றனைக் கொல்ல உத்தரவிடுவான். இல்லை வளநாட்டிலிருந்து பார்த்திபனுக்கு உதவி செய்யும் அந்த செல்வாக்கு மிக்க ஆசாமியார் என்று தெரிந்து கொள்ள இந்த ஒற்றனை சித்ரவதை செய்வான். இந்த காரியத்தில் இறங்க கூடிய ஆசாமி உயிருக்கு துணிந்தவனாக உயிரே போனாலும் உண்மையை சொல்லாதவனாக இருக்க வேண்டும். உன் ஆட்கள் போர் களத்தில் உயிரை விட தயாராக இருக்கிறார்கள்.இந்த ஒற்று வேலையில் அவர்களுக்கு சாமர்த்தியம் போதாது "

"இப்போது நாம் என்ன செய்வது? நான் அந்த ஒற்றன் வேடத்தில் சென்றால் மதிமாறன் என்னை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடுவான். என் அண்ணனும் நானும் ஒரே தோற்றத்தில் இருப்பது இப்போது பெரும் இடையூறாக இருக்கிறது. எங்களின் உருவத்தை அவ்வளவு எளிதில் அவனால் மறந்து விட முடியாது. அவனுக்கு இருக்கும் ஒரே எதிரி நான் தான் அல்லவா?" என்றான் பார்த்திபன் என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்துடன் .

"இந்தபுரட்சி கூட்டத்தின் தலைவன் நீ! உன்னை இந்த வேலைக்கு அனுப்புவது பூனையிடம் பாலைவலியக் கொண்டு போய் கொடுப்பது போலாகும். நீ அவனிடம் சிறைபட்டுவிட்டால் இந்த புரட்சி பிசுபிசுத்து விடும். உனக்காக உன் உயிரை காப்பாற்றுவதற்காக உன் தோழர்கள் புரட்சியை கைவிடவும் தயாராகி விடுவார்கள்."

"இப்போது என்ன செய்வது? இந்த வேலைக்கு நாம் யாரை அனுப்புவது?"

"வேறு வழியில்லை. இந்த வேலைக்கு நான் தான் போயாக வேண்டும்." என்றான் ஆதித்தன் அமைதியாக .

"நீயா ? " என்றான் அதிர்ச்சியுடன் பார்த்திபன்.

"ஆம். நானே தான். இந்த ஒலை அவனது மன உறுதியை குலைக்கும். வள நாட்டிலிருந்து படை உதவி வருகிறதோ என்ற சந்தேகம் கலந்த பயம் அவனுக்கு உண்டாகும். அதை வலுப்படுத்தும் விதமாக நான் என் அடையாளத்தை வெளிப்படுத்த போகிறேன்.

நான் தான் கள்வர் புரத்து கள்வன் ஆதித்தன் என்பது அவனுக்கு தெரிந்தால் அவன் நிச்சயமாக நிலை குலைந்து விடுவான். அரசு அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு மக்கள் துன்பத்திற்கு உள்ளாகும் போதெல்லாம் அங்கே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நானும் என் அண்ணனும் வருவோம் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கேயும் அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் என்பது மதிமாறனுக்கு தெரிந்தால் போதும். அவன் தன்னுடைய மன உறுதியை முற்றாக இழந்து விடுவான். நாங்கள் இறங்கிய எந்த காரியத்திலும் தோற்றதில்லை என்பது எல்லோரும் அறிந்த விசயம். அந்த பயம் அவனது தைரியத்தை குலைத்து விடும்" என்றான் ஆதித்தன்.

"நீ போய்த்தான் தீர வேண்டுமா? என் நாட்டிற்கு விருந்தாளியாக வந்தவன் நீ. உன்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைக்கிறோமே என்று என் மனம் குமுறுகிறது" என்றான் ஆதித்தன்.

"என்னை பற்றி கவலைப்படாதே நண்பா.! எந்த இக்கட்டிலிருந்தும் மீண்டு வரும் வல்லமை எனக்கு இருக்கிறது.வெற்றியோடு திரும்பி வருகிறேன்! "என்ற ஆதித்தன் அவனிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினான்.

அவன் முதலில் சென்றது ஒரு மதுபான விடுதிக்கு . நாற்றம் அடிக்க கூடிய தரம் குறைந்த மதுபுட்டியொன்றை வாங்கி கொண்டவன் அதை உடைகளின் மேல் தெளித்து கொண்டு தன்னை ஒரு மது ப்ரியனாக வெளியே காட்டி கொண்டான்.

தன்னுடைய நடை, உடை, பாவனைகளை ஓரு நிஜ குடிகாரன் போல் மாற்றிக் கொண்டவன் அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்ததாக அவன் குறி வைத்தது மதிமாறனின் மாளிகையை .அவன் மாளிகையை நோக்கி போகும் போதே எதிரில் பாதுகாப்பு படை வீரர்கள் வருவதை பார்த்தான்.

தன் குதிரையை வேண்டுமென்றே அவர்கள் மீது மோத வைத்து ஒரு வம்பு சண்டையை தொடங்கி வைத்தான் ஆதித்தன். அங்கே நடந்த சிறுகைகலப்பில் தன்னிடம் இருந்த ஓலையை வேண்டுமென்றே கீழே நழுவ விட்டான். அவனது தந்திரம் வேலை செய்தது. அந்த ஓலையை எடுத்து படித்த வீரன் ஒருவன் வம்பு செய்து கொண்டிருப்பது ஓரு குடிகாரன் அல்லவள நாட்டின் ஒற்றன் என்பதை எளிதாக இனம் கண்டு கொண்டு விட்டான். அதன் பிறகு காரியங்கள் ஆதித்தன் விரும்பியபடியே நடக்க ஆரம்பித்தன.

வண்டியை தேடிக் கொண்டிருந்த காவலனிடம் தன்னுடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தி கொண்ட ஆதித்தன் தன் குதிரையை விரட்டி கொண்டு அங்கிருந்து மறைந்தான்.

தூக்கத்தை தொலைத்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்மதிமாறன்.

"நள்ளிரவில் தூங்காமல் எதைப் பற்றி யோசித்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள் ரத்னாவதி . தூக்கத்திலிருந்து திடிரென்று விழித்து எழுந்தவள் பக்கத்தில் படுத்திருந்த மதி மாறனை காணாமல் திடுக்கிட்டாள். அவன் எங்கே போயிருப்பான் என்று மாளிகை முழுக்கதேடிக் கொண்டிருந்தவள் அவன் முற்றத்தில் குட்டி போட்ட பூனையாக உலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

சத்தம் கேட்டு திரும்பி பார்த்த மதிமாறன் தன்னை அதட்டியது ரத்னாவதியின் குரல்தான் என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"ஓ! நீ தானா? நீ இன்னும் தூங்கவில்லையா?" என்றான் குரலில் வியப்பை காட்டி.

"ஓரு தீச்சொப்பனம் என் கனவை கலைத்து விட்டது. எழுந்து பார்த்தால் உங்களை காணவில்லை. மாளிகை முழுவதும் தேடி இங்கே கண்டடைந்தேன். ஏதாவது பிரச்சனையா? ஏன் இப்படி தூங்காமல் அலைந்து கொண்டி ருக்கிறீர்கள்?" என்றாள் பதட்டமான குரலில் அவள் .

"உனக்காவது கனவில்தான் தீயவை நடக்கின்றன. எனக்கு நிஜ வாழ்விலும் அல்லவா தீயவை நடக்கின்றன" என்றான் மதி மாறன் . அவன் குரலில் சோகமும், கவலையும் மண்டி கிடந்தன.

"எதற்காக இப்படி கலங்குகிறீர்கள்? அப்படி என்ன இப்போது நடந்து விட்டது"

" எது நடக்க கூடாது என்று நான் நினைத்தேனோ அது நடக்க போகிறது ரத்னாவதி .அந்த பார்த்திபனும் அவனது கலககும்பலும் நம்மை எதிர்த்து புரட்சி செய்ய போகிறார்கள். நமக்கு மலை நாட்டிலிருந்து வந்த ஆயுதங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். விட்ட குறை தொட்ட குறையாக வளநாடு வேறு அவர்களுக்கு உதவி செய்ய போகிறது "

"வள நாடு அவர்களுக்கு உதவி செய்ய போவது உங்களுக்கு எப்படி தெரியும்?"

"சற்று நேரத்திற்கு முன் வள நாட்டின் ஒற்றன் ஒருவன் பிடிபட்டு விட்டான். அவனிடம் இருந்து கிடைத்த ஓலை அதைத்தான் சொல்கிறது. நீ வேண்டுமானால் அதை படித்து பாரேன்" என்ற மதிமாறன் தான் ஆதித்தனிடமிருந்து கைபற்றிய ஓலையை அவளிடம் கொடுத்தான்.

அவள் அதை படித்து முடித்தாள். அதே நேரம் உள்ளே ஓடி வந்தான் ஒரு காவலன்.அவன் வண்டியை தேடி கொண்டிருந்த காவலன்.

" என்ன விசயம்? எதற்காக இப்படி ஓடி வருகிறாய்?" என்றான் மதி மாறன் .
"என்னை மன்னித்து விடுங்கள் பிரபு. அந்த ஒற்றன் எங்களிடமிருந்து தப்பி சென்று விட்டான்."

" என்ன சொல்கிறாய் நீ?"

"உண்மையைத்தான் சொல்கிறேன் பிரபு. நாம் நினைப்பதுபோல் அவன் ஒற்றன் இல்லை. கள்வர் புரத்தின் கள்வனாம். பெயர் ஆதித்தன் என்று கூறினான். "

மதிமாறன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

" ஒற்றனை விடவும் அவன் பல மடங்கு ஆபத்தானவன்" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.

"இரைகளை பிடித்து தின்ன வலை கட்டும் சிலந்தி முதலில் தன்னை வலையில் சிக்கிய பூச்சியாக காட்டி கொள்ளும்" என்றாள் ரத்னாவதி!

மதிமாறன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.

புதன், 7 டிசம்பர், 2022

ரகசிய தீவு 67

ரகசிய தீவு

அத்தியாயம் 67

அடுத்தடுத்த அச்சாணியம்

தனக்கு முன்பாக நின்றவனை ஒரு முறை ஏற இறங்க பார்த்தான்மதிமாறன் .வள நாட்டின் ஒற்றனுக்கு இங்கே என்ன வேலை? என்றது அவனது மனம். சிகப்பு முகமூடிக்கும் தனக்கும் இங்கே பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் எதிரி நாடான வளநாடு இந்த பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்து ஆதாயம் அடையப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

அதுவரை அவனை அறைகுறையாக தழுவிக் கொண்டிருந்த தூக்கம் இப்போது பறந்தோடி போயிருந்தது. தன் கையிலிருந்த ஓலையை பிரித்து அதில் இருந்ததை மனதிற்குள் படிக்க ஆரம்பித்தான் அவன்.

"அன்புள்ள பார்த்திபனுக்கு !

உன்னுடைய நலம் விரும்பி எழுதும் கடிதம். இந்த கடிதத்தை வழக்கமாக கொண்டு வரும் நபரே எடுத்து வருவான். மதிமாறனுக்கு வர வேண்டிய ஆயுதங்கள் உன் வசம் வரப் போவதாக போன கடிதத்தில் கூறி இருந்தாய். அதை கேட்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தன் கையை வைத்து தன் கண்ணையே குத்துவது போன்ற சந்தர்ப்பம் உனக்கு கிடைத்தி ருக்கிறது. அதை தவற விடக் கூடாது. அவர்களின் ஆயுதத்தை கொண்டே அவர்களை வீழ்த்த வேண்டும்.

உன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் வள நாட்டின் உதவி உண்டு. உன்னிடம் ஆயுதங்கள் வந்து சேர்ந்த பிறகு அவற்றை கையாள போதுமான ஆட்கள் இல்லையே என்று நீ கவலைப்பட வேண்டாம். வள நாட்டின் போர் வீரர்கள் மாறு வேடங்களில்வெவ்வேறு நாடுகளில் ஏற்கனவே காத்து கிடக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு நாட்டு கப்பல்களில் கடல் வணிகர்கள் என்ற போர்வையில் ரகசிய தீவிற்கு வந்து சேருவார்கள். அவர்களை உன் படையில் இணைத்து கொண்டு உன்னுடைய ஆட்களாக மாற்றி கொண்டு விடு.

அவர்கள் உனக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். இந்த போரில் கண்டிப்பாக நீ தான் வெற்றி பெறுவாய். அப்படி வெற்றி பெற்றால் வள நாட்டின் மீதான சுங்க வரிகளை நீக்க வேண்டும். அதற்கும் நீ ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டாய். இருந்தாலும் அதை நினைவூட்டுவது எனது கடமை.

இந்த கடிதம் உன் கைக்கு கிடைத்தவுடன் படித்து முடித்துவிட்டு அக்னிக்கு இரையாக்கி விடு. இது வேறு யாராவது கைக்கு கிடைத்தாலும் பாதகமில்லை. இதில் வள நாட்டின் அரச முத்திரை இல்லை. அதனால் இது ஒரு அனாமதேய கடிதமாகவே நினைக்கப்படும். இந்த ஆட்சி மாற்ற விவகாரத்தில் வளநாடு தலையிடுவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதால் அதற்கான எந்த ஆதாரங்களும் இதில் இல்லை.

வெற்றிக்கு பிறகு நாம் மீண்டும் சந்திப்போம்!

இப்படிக்கு

உன் நலம் விரும்பி.

இப்படியாக ஓலை முடிவடைந்திருந்தது.

மதிமாறனின் முகம் கன்றி சிவந்தது.

சிகப்பு முகமூடியின் பெயரை பார்த்திபன் என்று கடிதம் எழுதியவன் குறிப்பிட்டிருக்கிறான். அதுதான் அவனது உண்மையான பெயர் என்று மதிமாறன், கருணாகரன் ஆகிய இரண்டு பேருக்குத்தான் தெரியும். மூன்றாவதாக ஒரு நபர் அந்த பெயரை குறிப்பிட்டிருக்கிறான் என்றால் அவனுக்கு சிகப்பு முகமூடியை அடையாளம் தெரிந்தி ருக்கிறது.

வெற்றிக்கு பிறகு நாம் மீண்டும் சந்திப்போம் என்ற வரிகள் அவனை உறுத்தியது.

அப்படியானால் வள நாட்டை சார்ந்த தன்னை வெளிகாட்டி கொள்ள விரும்பாத நபரும் பார்த்திபனும் ஏற்கனவே ஒரு முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.

யார் அந்த மர்ம ஆசாமி .? எங்கே சந்தித்தார்கள்? என்ன பேசினார்கள்?

இந்த ஓலையை ஆதாரமாக வைத்து கொண்டு வளநாட்டின் மீது குற்றம் சுமத்தக் கூட முடியாது. இந்த கடிதத்தை எழுதியவன் புத்திசாலி. தன்னுடைய அடையாளத்தை அவன் தன்னுடைய எழுத்தில் மறந்தும் கூட வெளிக்காட்ட வே இல்லை.

"இந்த ஓலையை இவனிடமிருந்து தான் கைப்பற்றினீர்களா?"

"ஆமாம். தீவிற்கு புதிய வனாக இருக்கிறான். இதற்கு முன்பு இவனை இங்கே யாரும் பார்த்ததில்லை"

"இவனது ஊர், பெயர்?"

" எதுவும் தெரியவில்லை. எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுக்கிறான். பதில் சொல்லும் நிலையிலும் அவன் இல்லை."

"இவனது போதை தெளிந்தால் தான் இவனை விசாரிக்க முடியும்.இவனிடமிருந்து ஆயுதங்கள் எதையாவது கைப்பற்றினீர்களா?"

"ஆமாம். கைப்பற்றினோம். மதுக்கடையில் இவன் ஆயுதங்களை வைத்து தான் அழிக் சாட்டியம் செய்து கொண்டிருந்தான். நம் வீரர்கள் இவனை மடக்கி பிடித்த போது தப்பி செல்ல முயன்றான். நம் வீரர்கள் பெரும்பாடுபட்டு இவனை பிடித்தார்கள். அதன் பிறகு நம் வீரர்களின் பலத்தை பார்த்து பயந்து பெட்டி பாம்பாகி விட்டான். அவன் அருந்திய மதுவின் வீரியம் அதிகமானாதால் மயங்கி விட்டான்"

"இந்த மோதிரம்?"

"இவனுடைய மடியில் ஓளித்து வைத்திருந்தான். கையில் மோதிரத்தை போடாமல் ஏன் ஓளித்து வைத்திருக்கிறான் என்ற சந்தேகத்தில் தேடிய போது தான் இந்த ஓலை கிடைத்தது. இதை படித்து பார்த்த பின்புதான் இவன் ஒற்றன் என்று உறுதி செய்து கொண்டேன்"

"நல்ல காரியம் செய்தாய். இங்கே இவ்வளவு அமளி துமளி நடக்கிறது. எங்கே போய் தொலைந்தான் அந்த கருணாகரன் ? இந்த விசயங்களை அவனல்லவா கையாள வேண்டும்?"

"அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் தான் உறங்கி கொண்டிருந்த உங்களை எழுப்பினேன். என்னை மன்னித்து விடுங்கள்"

"சரி. பரவாயில்லை. இவனை இந்த ஒற்றனை சிறையில் அடைத்து வையுங்கள். அவனது போதை தெளியட்டும். பிறகு விசாரித்து உண்மைகளை அறிவோம்"

"உத்தரவு" என்ற வீரர்கள் ஒற்றனை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

"கவனம் . தப்பி சென்று விட போகிறான்"

" அவனால் நடக்க கூட முடியவில்லை பிரபு. அவன் எங்கே ஓடப்போகிறான்? இவ்வளவு காவலை மீறி?" அவர்கள் அவனை இழுத்து சென்றனர்.

முதலில் தீப்பிடித்து எரிந்த வில்லவனின் மாளிகையில் இறந்த உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது எதிரி நாட்டு உளவாளி புரட்சி காரனுக்கு உதவ ஓலையுடன் உள்ளே நுழைந்திருக்கிறான். தன்னை சுற்றி நடக்கும் எல்லா செயல்களும் அச்சாண்யமாகவே நடப்பதை நினைத்து குழம்பிக் கொண்டிருந்தான்மதிமாறன். அவனுக்கு ஒற்றனின் முகத்தை எங்கோ பார்த்தது போல் நினைவிருந்தது. எங்கே என்பது தான் உடனே அவனது நினைவுக் கு வரவில்லை. மண்டையை உடைத்து கொண்டு யோசிக்க தொடங்கினான் அவன்.

வெளியே மது அருந்தி மயங்கிய நிலையில் இருந்த ஒற்றனை இரண்டு பேர் தோளில் கை போட்டு இழுத்து சென்று கொண்டிருந்தனர்.

" பயல் எருமை மாட்டைப் போல் கனக்கிறான். பிரபு எளிதாக இவனை சிறையில் அடையுங்கள் என்று சொல்லிவிட்டார். இவனை சிறைக்கு கொண்டு செல்வதற்குள் நம் கதி அதோகதியாகிவிடும் போலிருக்கிறது."

" ஆமாம். நீ சொல்வது உண்மைதான். சுய நினைவு இல்லாமல் மயங்கிய நிலையில் இருக்கும் இவனை எப்படி குதிரையில் ஏற்றி செல்வது? வழியில் எங்காவது விழுந்து தொலைந்து விடுவானே? என் குதிரை சண்டித்தனம் செய்யக் கூடியது. என்னை தவிர வேறு யாரையும் ஏற அனுமதிக்காது"

"அதைத்தான் நானும் யோசிக்கிறேன். பேசாமல் நாம் இவனை வண்டியில் கொண்டு போய் விட்டால் என்ன?"

"நல்ல யோசனை. நாம் அதைத்தான் செய்தாக வேண்டும். நமக்கு வேறு வழியில்லை"

"அப்படியானால் நீ இவனை கவனமாகப் பார்த்து கொள். நான் போய் ஒரு வண்டியை ஏற்பாடு செய்து அழைத்து வருகிறேன்" என்றான் ஒருவன்..

" இவனை பார்த்து கொள்ள நான் ஒருவன் போதும். நீ போய் வண்டியை கொண்டு வா. நடக்கவும் திராணியற்ற இவன் எங்கே போய் விடப் போகிறான்?" என்றான் மற்றொருவன்.

"கவனமாக இரு. இதோ விரைவில் நான் வண்டியுடன் வருகிறேன்" என்றவன் வண்டியை தேடிக் கொண்டு கிளம்பினான்.

மற்றொருவனின் தோளின் மீது கையைப் போட்டிருந்த ஒற்றன் தன் முழு உடல் பலத்தையும் சேர்த்து அவன் மீது சாய்ந்தான். அவனை தாங்கி பிடித்தவன் அவனது உடல் பளுவை தாங்க முடியாமல் கீழே படுக்க வைத்தான்.

கீழே மண்ணில் ஒரு முறை புரண்டவன் நின்று கொண்டிருந்தவனின் இடுப்பில் இருந்த வாளை மின்னல் வேகத்தில் பறித்தான். அதே வேகத்தில் அவனுக்கு அருகே இருந்த குதிரையின் மீது தாவி ஏறியவன் அதன் விலாவில் உதைத்து அதை கிளப்பினான். அவனது மின்னல் வேக நடவடிக்கைகளை எதிர்பாராதவன் திகைத்து போய் நின்றான்.

அங்கே இருப்பவர்கள் அவனை தடுக்கும் முன்பாக அவன் யாரிடமும் அகப்படாமல் குதிரையோடு வெளியேறியிருந்தான்.

கண் இமைக்கும் நேரத்திற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது.

" வண்டியோடு நீ வந்தாக வேண்டும். இது அரச உத்தரவு .இதற்கு உடன்பட மறுத்தால் நீ தண்டனைக்குள்ளாவாய் " என்று ஒரு அப்பாவி வண்டிக்காரனை மிரட்டி கொண்டிருந்தான் இன்னொருவன்.

அவனது முதுகை தட்டியது ஒரு கை. அவன் திரும்பி பார்த்தான். " வண்டி தேவையில்லை நண்பனே! உன் குதிரையை எடுத்து கொண்டு விட்டேன். அந்த வண்டிகாரனை மிரட்டுவதை நிறுத்து. யாராவது உன் குதிரையை யார் களவாடியது என்று கேட்டால் கள்வர் பு ரத்தின் கள்வன் ஆதித்தன் களவாடிவிட்டான் என்று சொல்" என்ற ஆதித்தன் குதிரையை தட்டி விட்டான். அசுவ சாஸ்திரம் கற்று வைத்திருந்த ஆதித்தனின் கட்டளைக்கு கீழ்படிந்து விரைந்தது புரவி .

காவலன் வாயை பிளந்தபடி நின்று கொண்டிருந்தான்.