"இளவரசே.!இனி ரதம் ஒட வழியில்லை.!
ரதத்திலிருந்து இறங்கினான் தேவவிரதன்.சந்தனுவிற்கும்,கங்கைக்கும் பிறந்த கங்கையின் மைந்தன்.காங்கேயன் என்றழைக்கப்படும் தேவவிரதன்.!சுற்றிலும் இருந்த பரதவ குடிசைகளை பார்வையிட்டான்.எங்கெங்கும் மீன் நாற்றம்.இடம்,பொருள்,மனிதர்கள் மீதெல்லாம் மீன் வாசனை.சட யோகம் பயின்ற விரதன் தனமூசசடக்கி் உறுதியான கால்களால் பூமியை உழுதான்.அரசகுமாரனை அடையாளம் கண்ட பரதவர்களில் ஒருவன் தொழுதான்."பரதவர் தலைவன் தனராஜன் வீடெது.?"அவன் விரல் நீண்ட திசையில் இருந்த மாளிகை நோக்கி நடந்தான்.கம்பீரமாய் கட்டழகோடு நடந்தவனை கைகூப்பியவர்களை கண் அசைவில் நகர்த்தினான்.மாளிகையின் அண்மையில் மீன் நாற்றம் குறைந்து பரிமளகந்தம் வீசுவதில் வியப்பானான் விரதன்.பாராளும் வேந்தனின் பத்தினி பரதவர் தெருவில்.?என்னே விதியின் விளையாட்டு.!நீண்ட பெருமூச்சை விட்டு அந்த வாசனையை அனுபவித்த போது தனராஜன் வாசலில் வந்து வரவேற்றான்.உள்ளே நுழைந்தவனுக்கு செம்பில் தண்ணீர் வழங்கினாள் சத்யவதி.!தனராஜனின் மகள்.சந்தனுவின் மனதில் காதல் விளக்கேற்றிய அகல்.!
உபசாரம் முடிந்ததும் தெரிந்த விசயத்தை எப்படி பேசுவதென நிலவிய மவுனத்தை உடைத்தான் விரதன்.
"என் தந்தை சாந்தனு இரண்டு நாட்களாக இயல்பாக இல்லை.!காரணம் நீர் அறிவீர்.!"
"என் மகளின் மீதான மோகம் உறக்கம் கெடுக்கிறதென அறிவேன் நான்.!"
"உன் மகளின் பரிமளகந்தம் எப்போதும் தன்னருகே இருக்க வேண்டுமென்பது தந்தையின் ஆசை.!படகோட்டும் உன் மகளைக் கண்டார்.மோகம் கொண்டார்.பட்டத்து மகிஷியாக பரதவப் பெண் வர வேண்டும் என்ற விருப்பத்தின் குறுக்கே வந்து பெண் தர மறுத்தவன் நீ.!"
"உன் தந்தையின் விருப்பத்திற்கு தடையாக வந்தவன் நானல்ல நீ.!"
"என்ன சொல்கிறாய்.?"
"யுவராஜானாக நீ இருக்க என் பெண்ணின் வாரிசுகள் எவ்வாறு அரியணை ஏற இயலும்."!உமது வாரிசுகள் அரசுரிமை விட்டுத்தர மறுத்து பின்னாளில் பிரச்சனை செய்யலாம் என்றே மறுத்தேன்.!"
"உமது பிரச்சனையை நான் தீர்ப்பேன்.!"
"எவ்விதம்.?"
"எமது கேள்விக்கு பதில் சொல்லும் காலஇடைவெளியில் அதற்கான உபாயம் தோன்றும்.!"
"கேளும் உன்கேள்வியை.?"
"உமது மகளின் மேனியில் எப்படி பரிமளகந்த வாசனை வீசுகிறது.?"
"அது ஒரு கதை.!"
"சொல்லும் கேட்போம்.!"
"பராசரன் முற்றும் உணர்ந்த முனிவன். குறித்த முகூர்த்தத்தில் ஒரு பெண்ணை கூடினால் ஞானம் நிறைந்த மகனை பெறலாம் என்பதரிந்து வீட்டிற்கு விரைந்தான் மனைவியைகூட.!குறுக்கிட்ட ஆற்றை என் மகள் ஒட்டிய படகின் துணை கொண்டு கடந்தான்.நெருங்கிய முகூர்த்தத்தை தவறவிட விரும்பாதவன் என் மகளைக் கூடி ஒரு மகனைப் பெற்றான்.செய்த பாவத்தின் பரிகாரமாக மச்சகந்தியான என் மகளை பரிமளகந்தியாக மாற்றி மீண்டும் கன்னியாக்கினான்.அந்த மகனின் பெயர் வியாசன்.இந்த வரலாறை அப்பாவும் அறிவார்.!"
"நல்லது! என் தகப்பனாருக்கும் இதே போன்ற ஒரு வரலாறு உண்டு.அலைகடலேன ஒடி அமைதி நாடி கரை ஒதுங்கினாள் என் அன்னை.கங்கை எனும் மங்கை.கண்டவுடன் காதல் கொண்டான் சாந்தனு.என் செயலை தடுத்தால் உனை பிரிவேன் என என் அன்னை கங்காதேவி சாந்தனுவிற்கு நிபந்தனை விதித்து மணந்தாள்.அடுத்தடுத்து பிறந்த ஏழு குழந்தைகளை பிரசவித்து நதிதீரத்தில் மூழ்கடித்து கொன்றாள்.தடுக்கும் வழியின்றி தடுமாறினான் வேந்தன்.!எட்டாவதாக பிறந்த என்னை கொல்ல முற்பட்ட போது தடுத்தான்.உறுதிமொழியைமீறிமனைவியை பிரிந்தான்.தகப்பனின் ஆசைகளை நிறைவேற்ற உறுதிவாங்கி எனை விட்டு பிரிந்தாள்.சாஸ்திர விரோதமாய் தந்தைக்கு பெண் கேட்டு வந்த முதல் மகன் நான்.!"
"அனைத்தும் அறிவேன்.!என் பேரன்கள் அரசாளும் வழி.?"
"இதோ இந்த கணத்தில் சத்தியம் செய்கிறேன்.உடலாலும்.,மனதாலும் எந்த பெண்ணையும் தீண்ட மாட்டேன்.சாகும்வரை மணம் செய்யாமல் நைஸ்டீக பிரம்மச்சாரியாய் ஒரு வேளை உணவு உண்பேன்.என் புலன்களை அடக்க அந்த ஒரு வேளை உணவையும் உப்பின்றி உண்பேன்.!"
வெளியே இடிஇடித்து அசிரீரி ஒலித்தது.
"வாழ்க்கையின் நோக்கம் வாரிசு.அதை மறுதளித்து முனிகளும்,ரிஷிகளும் செய்யாத சபதத்தை,சத்தியத்தை செய்ததால் இன்று முதல் பீஷ்மன்.(பயங்கர சபதம் செய்தவன்.)என்றழைக்கப்படுவாய்.!"
தனராஜனின் முகத்தில் சம்மதமும்,மகிழ்ச்சியும் நிலவ வெளிவந்த விரதனை பரதவர்கள் "பீஷ்ம.!பீஷ்ம."என வாழ்த்த பரதவர் சேரி விட்டு கிளம்பினான் பீஷ்மன்.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::அரண்மனையில் அனலில் மாட்டிய புழுவென துடித்தான் சாந்தனு.மகனுக்கு பெண் கேட்டு தந்தை போவது உலகவழக்கம்.இங்கோ தலைகீழாக தந்தைக்கு பெண் கேட்டு மகன் போயிருக்கிறான்.உலகம் தன்னை பழிக்குமோ என்ற கவலையில் நடுங்கினான் சாந்தனு.பரிமளவாசம் வீசும் பெண் மீதான ஆசை.!மோகம்.!தன்னை எப்படியெல்லாம் சீரழிக்கிறது.?
தொலைவில் தெரிந்த புழுதிபடலம் காங்கேயனின் வருகையை அறிவித்தது.
வந்து நின்ற கங்கையின்் மைந்தனை கண் கொண்டு காணவும் வெட்கமாக இருந்தது.!
"தந்தையே.!உம் அருகில் பரிமளவாசம் எப்போதும் மணக்கும்.!"
"எப்படி மகனே நடக்கும்.!உனை காரணமாக காட்டி மறுத்தானே தனராஜன்.?"
தான் செய்த சபதமெனும் இடியை தந்தையின் தலையில் இறக்கினான் பீஷ்மன்.!
கலங்கினான் வேந்தன்.தன் ஆசை தன் மகனின் வாழ்வை அழித்ததை எண்ணி குமுறினான்.!
"கலங்க வேண்டாம் தந்தையே.!என் அன்னைக்கு சத்தியம் செய்திருக்கிறேன்.உமது மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சியென்று.!"
"மகனே.!உனக்கொரு வரம் தருகிறேன்.!நீ எப்போது விரும்புகிறாயோ அப்போது மரணிப்பாய்.!"
வரத்தோடு கிளம்பினான் பீஷ்மன்.தேரோட்டியை விலக்கி விட்டு பீஷ்மன் ரதத்தை கிளப்பினான்.கிளம்பிய புழுதி புயல் விரைவில் அடங்கியது.சாந்தனுவின் உள்ளத்து குற்றப்புயல் நிலை கொண்டு சுழலத் தொடங்கியது.!
:::::::::::::::::::::::::::::::::::::
கங்கைகரையில் நின்றான் பீஷ்மன்.
"அம்மா.!"என்ற பீஷ்மனின் அலறல் கங்கை என்ற மங்கையை கொண்டு வந்தது.மகனை ஆரத்தழுவ ஒடி வந்தவளை ஆணையிட்டு தடுத்தான் பீஷ்மன்.!அதிர்ந்தாள் அன்னை.!
"உனை தழுவ எனக்கு உரிமையில்லையா.?"
"பெண் என்பதால் உரிமையற்றுப் போகிறது தாயே.!"
தன் தந்தைக்காக தான் செய்த சத்தியத்தையும்,தந்தை தந்த வரத்தையும் விளக்கினான் பீஷ்மன்.!
"அய்யோ.!ஏமாந்து விட்டாய் மகனே.!"என்று அழுது புலம்பினாள் தாய்.புரியாமல் பார்த்த பீஷ்மனை பார்த்து
"நீ அஷ்டவசுக்களில் ஒருவன்.!உன் மனைவியின் பேச்சை கேட்டு உன் சகோதரர்கள் எழுவரின் துணையோடு வசிஸ்டரின் காமதேனுவை திருடினாய்.!பெண்ணின் பேச்சை கேட்டதால் பெண்ணின் ஸ்பரிசம் இல்லாமல் போகட்டும் என்ற சாபத்தை பெற்றாய்.!உனக்கு உதவிய எழுவரும் பூமியில் பிறந்து கொல்லப்படும் சாபத்தை பெற்றார்கள்.என் மகவாய் அவதரித்து மரணித்தார்கள்.!உனை கொன்று சாபவிமோசனம் தரும் நேரத்தில் சாந்தனு அதை கெடுத்தான்.நீ குறுகிய காலம் வாழ்ந்து மடிந்து சொர்க்கம் போக இடையூறாக ஒரு வரத்தை கொடுத்தான்.!"
"அம்மா.!அனைத்தும் விதியின் விளையாட்டு.!அதில் உருளும் ஒரு பகடை நான்.!"
இருவரின் கண்ணிலிருந்தும் வெப்பமான உப்புநீர்கோடு ஒன்று உற்பத்தியானது.!
"அம்மா.!எனக்கு ஒரு ஆசை.!"
"சொல் மகனே.!நிறைவேற்றுகிறேன்.!"
"என் வாழ்வின் கடைசி நாளில் உன் மடியில் தலைவைத்து உன் அரவணைப்பில் சாகவிரும்புகிறேன்.!"
"எந்த தாயும் கனவிலும் விரும்பாத ஒன்றை கேட்கிறாயே.?"
"நீங்கள் என் அருகில் இருந்தால் மரணமும் இன்பமே.!"
"வருவேன் மகனே.!எந்த தாயும் விரும்பாத ஒன்றை செய்ய விதி வழி செய்கிறது.சொந்த மகனின் மரணத்தை பார்க்கும் துர்பாக்கியம் பெற்றவள் நான்.!"
கண்ணீரோடு கங்கை நதியில் மறைந்தாள்.பீஷ்மன் நிர்சலனமற்ற மனதோடு ரதத்தில் ஏறினான்.அஸ்தினாபுரம் வெகுதூரத்தில் இருந்தது பீஷ்மனின் மரணத்தை போல்.!
ரதம் காலம் என்னும் பாதையில் ஒட ஆரம்பித்தது.!
ஞாயிறு, 29 நவம்பர், 2015
பீஷ்ம சபதம்.!
திடுக்.!
கணேஷ் உள்ளே நுழைந்த போது நிமிர்ந்து பார்த்த ராம்நாத் "உக்காருப்பா! என்னாச்சு.!ஏதாவது தெரிஞ்சுதா.?"
"ஒரே குழப்பமா இருக்கு.!"
"இதுல என்ன குழப்பம்.!எம் பையனை ஆறு மாசமா காணாம்.கண்டு புடிக்க சொல்லி சொன்னா இப்ப வேட்டிய அவுத்து காட்டுர.!"
"பையனுக்கு கெட்ட பழக்கம் ஏதாவது.?"
"பழம்யா அவன்.!நான் சரக்கடிச்சுட்டு பாத்ரூம் போனாக்கூட அத யூஸ் பண்ண மாட்டான்.!"
"ஆனா லேடீஸ யூஸ் பண்ணுவானோ? "
"என்னப்பா சொல்ர.?"
"பக்கத்து பங்களாகாரர் டெய்லி நைட்டு ஒரு பொண்ணு பால்கனில நிக்குரதா சொல்ராரே.?"
"ஏதாவது லவ் மேட்டர்ல இழுத்துட்டு ஒடிருப்பானா.?இத்தன கோடியும் அவனுக்குத்தானே.?"
"ரூமை செக் பண்ண கட்டிலுக்கு கீழ பொண்ணுங்க டிரஸ்ஸ மறைச்சு வச்சுருக்கான்.!"
"பொம்பள சவகாசம் வேறயா.?என்னை மாதிரியே இருக்கான்.அம்மா இல்லைன்னு ஆஸ்டல்ல வளர்த்தேன்.!மீனாட்சி இதெல்லாம் பாக்க கூடாதுன்னு முன்னாடியே போயிட்டியா.?"
"அவனை யாரும் கடத்துல.!பொண்ணுகூடவும் ஒடலை.!"
"அப்ப எங்க இருக்கான்.?"
"ஒரு அதிர்ச்சிக்கு தயாரா இருந்தா சொல்ரேன்.!"
"அதை சொன்னாதான் பீஸே தருவேன்.டென்சன் பண்ணாம சொல்லுப்பா.!"
"ரூம்ல பொண்ணுங்க டிரஸ்,காஸ்மேட்டிக் அயிட்டம் இருந்துச்சு.ஆனால் காண்டம் எதுவும் கிடைக்கலை.வாட்ச்மேனுக்கு தெரியாம எந்த பொண்ணும் உள்ள வர முடியாது.ஒரே ஒத்துமைதான் நெருடுச்சு.!பையனோட டிரஸ் சைசும்,பொண்ணோட டிரஸ் சைசும் ஒரே சைஸ்.!"
"பொம்பளைங்க டிரஸ்ஸ எதுக்குய்யா போடனும்.?செலவுக்கு நிறய பணம் கொடுத்தேனே?என்னன்னு தெளிவா சொல்லுப்பா.!"
"பையன் பேர் என்ன.?"
"குமாரு.!"
"அவன் இப்ப குமாரி ஆயிட்டான்.!டைரில பாம்பே ஹாஸ்பிடல் அட்ரஸும்,போன் நம்பரும் எழுதி வைச்சிருக்கான்.போய் அடையாளம் பார்த்து மகனையோ,மகளையோ கூட்டி வாங்க.!"
"அடக்கடவுளே.!இனி மாப்பிள்ளை தேடனுமா.?""என்று சாய்ந்தவரை "செக்கை ஆபிசுக்கு அனுப்புங்க.!நான் கிளம்பரேன்.!"
கணேஷ் அட்ரஸ் கொடுத்துவிட்டு கிளம்பினான்.#சிகை பட போஸ்டர் தூண்டுதலில்.!
வெள்ளி, 27 நவம்பர், 2015
துரத்தும் மரணம்.!
அவர்கள் நூறு பேர் மரங்களின் நிழலில் உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களின் ஒய்வு நேரம் அது.கைகளும்,கழுத்துகளும் இரும்புச் சங்கிலியாலும்,கயிறுகளாலும் கட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பி ஒட முடியாது.கொஞ்ச தூரத்திலிருந்த சாரட் வண்டியில் அவர்களை கைதியாக பிடித்திருந்த வாசிம்கான் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தான்.பாதுகாப்புக்கு வந்த அவனது வீரர்கள் கையில் சவுக்குடன் குதிரைகளின் மீது ஒய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.எங்கிருந்தோ வந்த ஒரு ராஜாளி சாரட்டின் மீதிருந்த கொடியை மூன்றுமுறை சுற்றிவிட்டு உட்கார்ந்தது.அதை கூட்டத்திலிருந்த ராணா பார்த்தான்.அருகிலிருந்த ராஜ் திலக்கை தட்டியவன் "இப்போது நாம் விடுவிக்கப்படலாம்.!இல்லை கிளம்ப அவசரப்படுத்தப் படலாம்.!"
"எப்படி சொல்கிறாய்? "
"அந்த ராஜாளி ஒரு ஒலையை கொண்டு வந்திருக்கிறது.அவனது நாட்டில் அடிமைகள் அதிகரித்தால் விலை குறைந்து விடும்.ஆகவே நம்மை விடுவித்து விடுவார்கள். நாம் எப்படியோ இங்கு வாழப் பழகுவோம்.அடிமைகளின் விலை ஏறும்போது நம்மை பிடிப்பார்கள்.!"
"அது சரி.!அந்த ராஜாளி எப்படி சரியாக ஒலையை கொண்டு வந்து சேர்க்கிறது.?"
"அந்த கொடி எங்கு பறக்கிறதோ அங்கு தரையிரங்கும்படி அதை பழக்கியிருப்பார்கள்.!"
"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.?"
"நம்மிடம் குதிரையை விற்கும் அரபுவியாபாரி அடிமைகளையும் விற்கிறான்.அவனிடமிருந்து தெரிந்து கொண்ட விசயம் இது.!"
"அப்படியானால் அவர்களின் பாஷை உனக்கு தெரியும்.?"
"தெரியும்.!ஆனால் வெளிக்காட்டாததால் ஒரு விசயம் தெரிய வந்திருக்கிறது."
"உலூக்கான் என்ற அடிமை வியாபாரிக்கும் இவனுக்கும் சண்டை இருக்கிறது.அவனுடைய தம்பி புதிதாக அடிமை வியாபாரத்திற்கு வந்திருக்கிறான்.அதனால் இவன் உலூக்கான் மீது கோபத்தில் இருக்கிறான்.!"
அதே நேரம் ஒலையை படித்த வாசிம்கான் அடிமைகளின் விலை கன்னோசியில் குறைவதால் அடிமைகளை விடுவிக்க முடிவு செய்தான்.உடனடியாக நெருப்பு மூட்டப்பட்டது.அவனது அடிமை சின்னமான நங்கூரம் நெருப்பில் காட்டப்பட்டு அனைவரின் நெஞ்சிலும் பொறிக்கப்பட்டு பச்சிலை கசக்கி விடப்பட்டது.
"அருமை நண்பர்களே.!உங்களையெல்லாம் விடுவிக்க முடிவு செய்து விட்டேன்.நீங்கள் இங்கேயே உங்கள் வாழ்க்கையை துவக்கலாம்.உங்கள் நாட்டிற்கு திரும்ப செல்ல முயன்றால் மறுபடியும் யாரிடமாவது அடிமையாக பிடிபட்டு விடுவீர்கள்.!அப்போது இந்த அடிமை சின்னம் உங்களை காப்பாற்றும்.!திரும்பவும் உங்களை சந்திக்கும் போது எனக்கு விருந்து தருவீர்களா.?"
துபாஸினால் மொழி பெயர்க்கப்பட்ட அவனது கேள்விக்கு அவர்கள் சந்தோஷமாக "தருவோம்.!தருவோம்.!"என்றபோது வாசிம் "பிடிபடும்போது உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று சொன்ன அந்த வீரன் எங்கே.?"
ராணா முன்னாடி வந்தான்."தங்களின் கருணை மனம் எனக்கு தெரியவில்லை.!ஆகவே உளறி விட்டேன்.தங்களுக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன்.!"
"அடிமையான நீ எனக்கு என்ன தர முடியும்.?"
"உங்களுக்கு தெரியாமல் ஒளித்து வைத்த ஒரு மோதிரம்.!"
இடுப்பு மடிப்பிலிருந்து மோதிரத்தை எடுத்தவன் அதை இரண்டாக உடைத்து்்பாதியை வாசிமிடம் கொடுத்தான்.
"இதன் மீதி பாதியை கொண்டுவரும் நபர் உங்களுக்கு வேண்டியதை தருவார்.நான்தான் அவர்களை அனுப்பினேன் என்று சொன்னால் போதுமானது.உங்களின் பெரிய மனதிற்கு எங்களின் பரிசு.!"
முட்டாள் என்று நினைத்த வாசிம் அவர்களை விடுவித்துவிட்டு தன் வீரர்களுடன் கிளம்பினான்.
ராணா தன் வீரர்களை கட்டுக்களிலிருந்து விடுவித்துவிட்டு "இந்துஸ்தானத்தை அடையும் குறுக்கு வழி எனக்கு தெரியும்.!அதன் வழியே நாம் செல்வோம்.அதற்கு முன் ஆயுதங்கள் வேண்டும்.!"
அவர்கள் மரக்கிளைகளை வெட்டி வில்,அம்புகளையும்,ஈட்டிகளையும் தயார் செய்து கொண்டு நடக்க ஆரம்பித்தனர்."நமக்கு குதிரைகள் இருந்தால் பரவாயில்லை.!சீக்கிரம் இந்துஸ்தானத்தை அடைந்து விடலாம்.!"என்ற ராஜ்திலக்கை பார்த்து புன்னகைத்த ராணா "அதற்க்குத்தான் ஏற்பாடு செய்கிறேன்.!"தூரத்தில் எழுந்த புழுதிபுயலை பார்த்த ராணா "யாரோ இந்த வழியாக வருகிறார்கள்.அவர்களை வீழ்த்தினால் குதிரைகள் நமக்கு கிடைக்கும்.!"
அனைவரும் பதுங்கி பாறைகளில் மறைந்தார்கள்.சாரட்டின் மண்டையோட்டுக் கொடியை பார்த்தவுடன் ராணாவின் கண்களில் வெளிச்சம் ."வருபவன் உலூக்கானின் தம்பி.!தன் அடிமைகளுடன் வருகிறான்.!"
அவர்கள் மணலில் கயிற்றை புதைத்துவிட்டு பாறைகளின் ஒரம் பதுங்கினார்கள்.கடக்க முற்பட்ட குதிரைகள் திடிரென குறுக்கிட்ட கயிறுகளால் நிலை தடுமாறி கவிழ்ந்தன.சிறிது நேர தாக்குதலிலேயே உலூக்கான் வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டான்.பிடிபட்ட அடிமைகளை தன்னுடன் சேர்த்துக் கொண்ட ராணா உலூக்கானின் வீரர்களை நெருங்கி கட்டுகளை அவிழ்த்தான்.உடைந்த மோதிரத்தின் பாதியை அவர்களிடம் கொடுத்து விட்டு ஒரு ஓலையை எழுத ஆரம்பித்தான்.!
"அன்புள்ள உலூக்கான்.உம்முடனான தொழில் போட்டியில் என்னுடைய எஜமான் வாசிம்கான் உன் தம்பியை கொல்ல எங்களை அனுப்பினார்.வேறு வழியின்றி அவரைக் கொல்ல வேண்டியதாகி விட்டது.நாங்களும் தப்பிச் செல்கிறோம்.உமக்கு சந்தேகமென்றால் உமது வீரர்களை கேட்டால் வாசிமின் அடிமை சின்னம் எங்களின் நெஞ்சில் இருந்ததை சொல்வார்கள்.!நான் கொடத்த மோதிரத்தின் பாதியை வாசிமிடம் காட்டினால் அவரே உண்மையை ஒப்புக் கொள்வார் இப்படிக்கு அவரின் அடிமை வீரன் ராணா."
இதை எழுதி கையொப்பமிட்டவன் அதை வீரர்களிடம் கொடுத்து உலூக்கானிடம் கொடுங்கள் என்று சொல்லி விடுவித்தான்.
அவர்கள் குதிரையில் கிளம்பிய பிறகு மீதமுள்ள குதிரைகளில் தன் ஆட்களை ஏற்றிக் கொண்டு ராணா கிளம்பினான்.கன்னோசியை நோக்கி மரணத்தின் தூதுவர்கள் போய் கொண்டிருந்தார்கள்.தன் குடும்பத்தை அழித்த வாசிம்கானை கொல்ல செய்த ஏற்பாடுகளை நினைத்து சிரித்துக் கொண்டான் ராணா.!
சனி, 21 நவம்பர், 2015
அத்தியாயம்4
பாம்பை கடிக்க வைத்து அது சாவதை ரசித்தான் கார்கோடன்."உன்னைவிட என் உடம்பிலும்,மனதிலும் விசம் அதிகம்.!"என்றபடிகையிலிருந்த கடிவாய் ரத்தத்தை துடைத்துக் கொண்டு திரும்பியவனுக்கு தகவல் காத்திருந்தது.வந்து நின்ற ஒற்றன் "வாள் பிடுங்கப்பட்டு விட்டது மன்னா.!போதாதாற்கு இளவரசியையும் கடத்தி சென்று விட்டார்கள்.! "என்றதும் தன் நீண்ட நகத்தை அவன் முகத்தில் வீசினான்.கன்னத்தில் இரத்தகோடு விழவாயில் நுரைதள்ள விழுந்தவனை தாண்டி நடந்தவன்"அமைச்சரே.!எனக்கான எமன் வந்து விட்டான்.வீர விளையாட்டில் பங்கு பெற வந்தவர்களை இந்த மனிதவேட்டைக்கு களம் இறக்குங்கள்.வெல்பவனுக்கு கஜானா முழுவதும் சொந்தம்.என் மகள் என்னிடம் சேதாரமின்றி வர வேண்டும்.உடனே அறிவியுங்கள்.!"
அடுத்த சிலமணி நேரங்களில் மைதானம் காலியானது.காட்டிற்குள் ஒரு மனித வேட்டை துவங்கியது.!
அத்தியாயம் 1
அவர்கள் ரத்னபுரி கோட்டையை அடைந்த போது மழை தூறத் தொடங்கி இடியும்,மின்னலும் குமுறத் தொடங்கின."ஆரம்பமே அமர்க்களம்.!"என்றான் கரிகாலன்.வீரன் .பயமறியான்.
ஆமோதிப்பாய் தலையசைத்தவன் சென்னி.கரிகாலனின் அண்ணன்.இருவருக்கும் தந்தை கருணாகரன்.தற்காப்புகலை நிபுணன்.பயிற்சியாளன்.மூவருமே ரத்னபுரியில் நடைபெறும் வீர விளையாட்டு போட்டியில் பங்கெடுக்க வந்தவர்கள்.கோட்டை முகப்பில் குதிரையை நிறுத்திவிட்டு இறங்கியவர்களை வரவேற்று முகமன் கூறிய ஒரு வீரன் கோட்டை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல்லில் சொருகியிருந்த ஒரு வாளை காட்டி "அந்த வாளை பிடுங்க முயற்சி செய்துவிட்டு உள்ளே வாருங்கள்.!"என்றான்.
"இதென்ன புதுப் பழக்கம்.?"
"இதுதான் இங்கு வழக்கம்.!"
பாறையில் புதையூண்டிருந்த வாளை பிடுங்க முயன்ற கருணாகரனும்,சென்னியும் முயற்சியில் தோற்றார்கள்.கடைசியாக கரிகாலன் வாளை பிடுங்க நெருங்கிய போது எங்கிருந்தோ பளிச்சிட்ட மின்னல் வாளின் கைப்பிடியில் பாய்ந்து அதை செந்தணழாக்கியது.பின் வாங்கிய கரிகாலனை பார்த்து"இதுவரை இது போல் நடந்ததில்லை.!நீ காலையில் வந்து பிடுங்கி காட்ட வேண்டும்.!"
ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டு தங்களுக்கென ஒதுக்கிய சத்திரத்தில் உணவருந்தினார்கள்.கரிகாலன் உறங்கத் தொடங்கினான்.கருணாகரன் யோசனையில் இருந்தான்."அந்த வாள் சாதாரண வாள் அல்ல.!"
"எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.!"
கேட்டுக் கொண்டிருந்த சத்திரத்தின் உரிமையாளன் அவர்களை தனியாக அழைத்தான்."அந்த வாள் பாறையையும் வெட்டும் சக்தி படைத்தது.இப்போதைய மன்னன் கார்கோடன் முன்னாள் மன்னனும்,தன் மாமாவுமாகிய மார்த்தாண்டனை சூழ்ச்சியாக கொல்லும் போது அவர் கடைசி தருணத்தில் விட்டெரிந்த கத்தி அது.அதை அவரது வாரிசால் மட்டுமே பிடுங்க முடியும்.அதை பிடுங்குபவனால் மட்டுமே கார்கோடகனை கொல்லவும் முடியும்.!"
"கொல்லப்பட்ட மன்னரின் வாரிசு.?"
"தன் தங்கையை கொன்ற கார்கோடகன் அவர்களின் வாரிசை கொல்ல முயற்சி செய்தான்.ஆனால் விசுவாசி ஒருவனால் இளவரசன் கடத்தப்பட்டான்.அவனை கண்டு பிடிக்கவே இந்த வீர விளையாட்டுபோட்டி.!நீங்கள் வாளை பிடுங்கியிருந்தால் மரணம் பரிசளிக்கப்பட்டிருக்கும்.!"
"இளவரசருக்கு ஏதாவது அடையாளம்.!?"
"இருக்கிறது .நடுமுதுகில் ஒரு நட்சத்திர மச்சம்.!"
இருவரும் படுக்கையை விரிக்கும்போது புரண்டு படுத்த கரிகாலனின் முதுகில் இருந்தது நட்சத்திர மச்சம்.!
அத்தியாயம் 3
வாளின் கனத்திலேயே வித்தியாசத்தை கண்டுவிட்டான் கருணாகரன்."இது நம்முடையதல்ல.!எங்கே கிடைத்தது இது.?"
"நேற்று கோட்டை முகப்பிலிருந்த கத்திதான் இது.!"
"ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டாய் மகனே.!"
தூரத்தில் கொம்பூதும் ஒசையை கேட்டவன் "ஆபத்து.!நாம் உடனடியாக தப்பியாக வேண்டும்.!"
அவர்கள் குதிரையில் ஏறி விரைய முற்பட்டு நாலாதிசையிலும் சுற்றி வளைக்கப்பட்டனர்.இனி தப்புவது சாத்தியமல்ல என்ற நிலையில் "விலகுங்கள் "என்ற பெண்குரல் அவர்களின் காதில் தேன் வார்த்தது.வந்தவள் பாம்புக்கடிபட்டவள்."என்ன வீரனே.!என் கொலுசில் மாட்டிய கழுத்து சங்கிலி வேண்டாமா.?"
கொத்தவால் "இளவரசி! நீங்கள் எங்கே இங்கு மாறுவேடத்தில் வந்தீர்கள்.?"என பதற,சங்கிலியை வாங்க குதிரையிலிருந்து இறங்கிய கரிகாலன் கட்டாரியை அவள் கழுத்தில் வைத்தான்.!
"நெருங்கினால் இவள் பிணமாவாள்.!"
"வீரனே.!நீ செய்வது தவறு.!"
"எங்களின் உயிருக்கு முன்னால் எதுவும் சரி."!
அவர்களின் ஆயுதங்கள் மூட்டை கட்டப்பட்டு தூர எரியப்பட்டன.பணயக்கைதியோடு அவர்கள் கிளம்பினார்கள்.
அத்தியாயம் 2
மறுநாள் கோட்டைக்கு வெளியே ஒதுக்கப்பட்ட மைதானத்தில்வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் கருணாகரனும்,சென்னியும்.வலிமையான வாள் வீச்சில் உடைந்த வாளை சோகமாகப் பார்த்த கருணாகரன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை "விடுதி அறையில் உள்ள வாளை எடுத்து வா.!"என்றான்.குதிரையில் கிளம்பிய கரிகாலனை வழிமரித்த பாம்பாட்டி ஒருவன் "பணம் கொடு.!இல்லையேல் பாம்பை கொத்த விடுவேன்! "என மல்லுக்கட்டினான்.பொறுமை இழந்த கரிகாலன் அவனை எட்டி மிதிக்க அவன் கையிலிருந்து நழுவிய பாம்பு ஒரு பெண்ணை கடித்தது.
"மூடனே.!வாயால் ரத்தத்தை உறிஞ்சி அந்த பெண்ணை காப்பாற்று.!"
"எனக்கு பல் இல்லையே.!"என்றான் பாம்பாட்டி பொக்கை வாயை காட்டி.வேறு வழியின்றி அந்த பெண்ணின் கால்களில் வாயை வைத்து விசத்தை வெளியேற்றி விட்டு அவள் தோழியிடம் "பார்த்து அழைத்துச் செல்! "என்று வெளியேறினான்.மழை இன்னும் தூறிக் கொண்டிருந்தது.அந்த கல்லும்,வாளும் அனாதையாய் மழையில் நனைந்து கொண்டிருந்தது.நேற்று பிடுங்காத இந்த வாளை இப்போது பிடுங்கி கொண்டு போனால் என்ன.?என்ற எண்ணத்துடன் விரைந்தவனை யாரும் கவனிக்கவில்லை.அவன் வாளை பிடுங்கிய போது பெரிய இடியோசை ஒன்று நீண்ட முழுக்கத்தை எழுப்பியது.வாளோடு குதிரையை கிளப்பிக் கொண்டு மைதானத்தை நோக்கி விரைந்தான்."நான் எதை பிடுங்குவது.?"என்ற வெளியூர் வியாபாரியின் கேள்விக்கு கோட்டையின் கொத்தவால் பார்த்த போது வெறும் கல்தான் இருந்தது.வாளைக் காணவில்லை.அவன் இடையிலிருந்த கொம்பை ஊத தொடங்கினான்.கோட்டைக்குள்ளிருந்த சிறுபடை ஆயுதங்களுடன் தயாரானது.