ஆதி மனிதன் தன்னுடைய உணவுக்காக மிருகங்களை வேட்டையாடித் திரிந்த காலம். நெருப்பின் உபயோகம் அறியாமல் மாமிசத்தை பச்சையாக தின்று கொண்டிருந்தான். பசியடங்கிய பின் மீந்த மாமிசத்தை பாதுகாக்கத் தெரியாமல் வீணடித்துக் கொண்டிருந்த காலம் .
அவனை போன்றே மாமிசப் Uட்சிணியாகத் திரிந்த ஒரு ஓநாய் கூட்டம் தனியாக வேட்டையாடத் துணிபவனை இரையாக மாற்ற துடித்து வெற்றி கண்டிருந்தது. அந்த குழுவிலிருந்த சோம்பேறிகளான சில ஓநாய்கள் மனிதர்கள் வீசி எரியும் மீந்த உணவை உட்கொள்ள துவங்கின. அவனும் மூன்று வேளை உணவு உண்பதால் அவனை சார்ந்து இருந்தால் தானும் சிரமமில்லாமல் உணவு உண்ண முடியும் என்று கண்டு கொண்டன. தன்னை தொடர்ந்து வரும் ஓநாய்கூட்டத்தைப் பார்த்து முதலில் மனிதன் பயந்தாலும் தன்னை உணவுக்காகவே பின் தொடர்வதை அறிந்து ஆறுதல் அடைகிறான்.
அவனது வேட்டையில் பங்கு கொள்ளும் ஒநாய்கள், தங்கள் மோப்ப திறனாலும், ஆபத்தை முன்னறிவிக்கும் திறனாலும் மனிதனின் நெருங்கிய நண்பனாக மாறி பரிணாம வளர்ச்சியில் இன்றைய நாயாக உருவெடுத்திருக்க வேண்டும்."அட நாயே'. " என்று திட்டினால் கோபப்பட வேண்டாம். அடுத்தவன் உழைப்பின் மிச்சத்தை அனுபவிப்பவர்களுக்கு இந்த வசை சொல் பொருந்தும் தானே ?நாயின் நன்றி உணர்வு நீங்கள் போடும் ஓற்றை பிஸ்கெட்டில் அடங்கியுள்ளதென்பதும், அதன் பிறகு நீங்கள் பிஸ்கெட் போடாவிட்டாலும் என்றோ போட்ட ஓற்றை பிஸ்கெட்டிற்கு விசுவாசியாய் வாலை ஆட்டும் என்பதும் உண்மை தானே! ஆனால் பாழாய் போன மனிதன் உங்களிடம் பிஸ்கட் இருக்கும்வரைதான் விசுவாசமாய் இருப்பான் "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக