அவள் அந்த அலுவலகத்தில் பத்து வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறாள்.நேர்மையான கடும் உழைப்பாளி.!சமீப காலமாக கம்பெனி ரகசியங்கள் வெளியாகி நட்டத்தை கணக்காக காட்டுகின்றது.முதலாளிக்கோ முக்கியமான ஆட்கள் யாரோ எதிர் கம்பெனிக்கு உளவு சொல்வதாக சந்தேகம்.அவருக்கு வரும் அனாமதேய போன்கால் தன்னை ஒரு உளவுத்துறை அதிகாரியாக அறிமுகம் செய்து கொள்கிறது.ஹீரோயின்தான் அந்த கருப்பு ஆடு என்றும்.,தீவிரவாத அமைப்புகளுக்கு அவள் உதவுவதாகவும் அந்த போலீஸ் நபர் குற்றம்சாட்டுகிறார்.அவளுடைய பாங்க் பாலன்ஸில் ஏராள பணம் இருப்பது அவருடைய சந்தேகத்தை அதிகரிக்கிறது.போலீஸ் நபரோ போன் வழியே அவளை துன்புறுத்தும்படி முதலாளிக்கு உத்தரவிடுகிறார்.விளைவுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக கூறுகிறார்.அவளை அவளுடன் பணி புரிபவர்களே துரோகி என்று சொல்லி உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் துன்புறுத்துகின்றனர்.அவளோ எதுவும் புரியாமல் சித்ரவதை அனுபவிக்கிறாள்.அவளது அத்தனை துன்பங்களையும் போன்கால் மூலமாகவே அதிகரிக்கிறான் போலீஸ்.
கடைசியாக அவளிடம் பேசும் போலீஸ்காரன் தான் போலீஸ் அல்லவென்றும்.,ஏழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவனென்றும்,அந்த வழக்கில் கம்பெனியின் நலனுக்காகவும்,உடன் பணியாற்றும் நண்பர்களுக்காகவும் பொய் சொல்லும் ஹீரோயினின் சாட்சியே தண்டனைக்கான முக்கிய காரணமாகிறது.தண்டிக்கப்பட்ட நிரபராதி தன்னை போலவே அவளும் தண்டிக்கப்பட வேண்டுமென விரும்புகிறான்.யாருக்காக பொய் சாட்சி சொன்னாளோ அவர்களே எதிரியாக மாற வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்துகிறான்.அதற்கான திட்டங்களே வாட்ச்மேன் மூலம் ரகசியத்தை திருடுவது,பேங்கில் பணம் போடுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம்.!கடைசிவரை தன் முகத்தை காட்டாமலே தான் நினைத்தவிதமாகவெல்லாம் அவளது நண்பர்கள் மூலம் தண்டித்து விட்டு உண்மையை சொல்லிவிட்டு காணாமல் போகிறான்.பிசிக்கல்,மென்டல் டார்ச்சர்கள் அடங்கிய கதை இது.!
சனி, 4 ஜூலை, 2015
நிழலோடு ஒரு யுத்தம்.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக