வெள்ளி, 3 ஜூலை, 2015

வரலாறும், சில விடை தெரியாத கேள்விகளும் !

நதிகளும், வரலாறும் நேராக பயணிப்பதில்லை என்று ஒரு பழமொழி இருக்கிறது. நதிகளின் அடி ஆழத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. மூழ்கிப் போன பொக்கிசங்கள் அங்கே காணக்கிடைக்கலாம். ஆட்கொல்லி முதலைகளும் அங்கே மறைந்திருக்கலாம். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நிர்ச் சலனமற்ற நதியாகவே அது காணக் கிடைக்கும்.வரலாறும் அது போலவே '

நமக்கு நன்றாக தெரிந்தது தான் மாமன்னர் அசோகனின் கதை. தன் சொந்த சகோதரர்களை கொன்று அரியணை ஏறிய அசோகர் கலிங்கத்துடன் ஏற்பட்ட போரில் மனம் திருந்தி புத்த மதத்தைத் தழுவினார் என்பது காலம் காலமாக சொல்லப்படும் கதை!தன் வெற்றிகளையும், 'நற்பணிகளையும் பாலி மொழியில் எல்லா கல்வெட்டுகளிலும் பதிவு செய்த அசோகர் தன் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த கலிங்கப் போரில் தன்னை எதிர்த்து மோதிய கலிங்க மன்னனின் பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் தவிர்க்கும் மர்மம் என்ன? இராஜராஜா சோழன் கடாரம் (இன்றைய தாய்லாந்த்) என்ற இடத்தை வென்றதால் கடாரம் கொண்டான் என்று சிறப்பிக்கப்பட்டான். அது போன்ற எந்த பட்டமும் அசோகர் சூடிக் கொள்ளவில்லை. இதுவரை கிடைத்த தொல்லியல் ஆய்வு முடிவுகள் கலிங்க மன்னனின் பெயரை கண்டறிய முடியவில்லை!

தற்செயலாகவோ , திட்டமிட்டோ மறைக்கப்பட்ட விசயத்தை நாம் கற்பனை செய்யும் உரிமை பெற்றவர்களாக மாறியோசித்தால்...
| .கலிங்கத்து அரசனாக ஒரு பெண் இருந்திருந்தால்?
ஒரு பெண்ணுடன் போரிட்டவன் என்ற இழி சொல்லை மாற்ற வேண்டி பெயரை அசோகர் மறைத்திருக்கும் வாய்ப்பு உண்டு.
2. பதின்ம வயது பாலகன் அதன் அரசனாக இருந்திருந்தாலும் மேலே சொன்ன காரணம் பொருந்தும்.
3. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு குழுவொன்று கலிங்கத்தை ஆட்சி செய்திருந்தால்?
எண்ணிக்கையையும், கற்பனையையும் அதிகரித்து எழுதிக் கொண்டே போகலாம் '
இத்தகைய மர்மங்களே வரலாறை சுவராஸ்யமாக்குகின்றன'

இன்னும் விடை தெரியாத சில மர்மங்கள் விரைவில் தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக