ஞாயிறு, 29 ஜனவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்


"அஷ்டவக்ரா ( சமஸ்கிருதம் : अष्टावक्रः , IAST : Aṣṭāvakraḥ ) அல்லது Ushtaavukruhu இந்து மதத்தில் ஒரு மரியாதைக்குரிய வேத முனிவர் . அவரது பெயரின் அர்த்தம் "எட்டு குறைபாடுகள்", அவர் பிறந்த எட்டு உடல் குறைபாடுகளை பிரதிபலிக்கிறது. அவரது தாய்வழி தாத்தா வேத முனிவர் ஆருணி , அவரது பெற்றோர் இருவரும் அருணியின் பள்ளியில் வேத மாணவர்கள். அஷ்டவக்ரர் படித்து,!w முனிவராகவும், இந்து இதிஹாச இதிகாசங்கள் மற்றும் புராணங்களின் புகழ்பெற்ற பாத்திரமாகவும் ஆனார்"




வாஷிங்டன்Dc.

அமெரிக்காவின் இன்றைய தலைநகரம்.அமெரிக்கவிடுதலைக்கு முன்பாக Distric of columbia என்று அழைக்கப்பட்ட மாகாணம் அமெரிக்காவின் முதல் அதிபரான!!!!! ஜார்ஜ்வாஷிங்டனுக்கு மரியாதை தரும் விதமாக வாஷிங்டன்என்று பெயரிடப்பட்டது.அந்தவாஷிங்டனில் ஒரு அதிகாலை.rrrrr,&யில் இந்த கதை ஆரம்பமாகிறது.

drfdefinitely! 
Tzooo
நீங்கள் ஜான் கிரேவரை டிவி , பத்திரிக்கை என்று ஏதொவொன்றில் உலtfகின் டாப் 5 மில்லியனர்களில் ஒருவனாக பார்த்திருப்பீர்கள். போர்ப்ஸ் பத்திரிக்கை வருடாவருடம் வெளியிடும் டாப் டென் மில்லியனர்களில் முதல் ஐந்து இடங்களில் மாறிமாறி இடம்பிடிப்பவன். சில வருடங்கள் நெம்பர் ஒன்னாகவும் இருந்திருக்கிறான். கம்யூட்டர் வித்தகனாக தன்னுடைய தொழிலை ஆரம்பித்த கிரேவர் போட்டிக்கு ஆள் இல்லாமல் மோனோ பாலியாக பணத்தை குவித்து நெம்பர் ஒன் மில்லியனர் ஆனதும் அவனது கிரேவர் பவுண்டேசன் உலகம் முழுக்க இருக்கும் அறக்கட்டளைகளுக்கு பணத்தை வாரி இறைப்பதும் பழைய கதை. ஏழைகளுக்கு உதவுவது எல்லாம் மேற்பூச்சு தான். ஜெனடிக் இன்ஜினியரிங், குளோனிங், பயோ வெப்பன்ஸ், ஸ்டெம் செல் ஆய்வு என்று சட்டத்திற்குட்பட்ட சட்டத்திற்குட்படாத செயல்களில் ஈடுபடும் லேபுகளுக்குddwrryrdrrfrrr மறைமுகமாக பணத்தை கொடுத்து கொண்டிருந்தான்.

கம்யூட்டரில் அவனுக்கு போதுமான பணம் கிடைத்தாலும் கிரேவர் போதுமென்று ஓய்வதாக இல்லை. தன் இடத்தை தக்கவைத்து கொள்ள வேண்டுமானால் முன்பைவிட அதிகமாக ஓடவேண்டும் என்று அவனுக்கு தெரியும். அப்படி ஓட மெடிக்கல் இண்டஸ்டிரீஸ்தான் தன்னுடைய ஓடுகளம் என்று அவன் முன்பே முடிவு செய்து வைத்திருந்தான். வெவ்வேறு பினாமி பெயர்களில் உலகத்தரமான லேபுகள்அவனுக்காக செயல்பட்டு கொண்டிருந்தன.

சைனாவில் ரகசியமாக செயல்பட்டு கொண்டிருந்த அவனது லேப் கடந்த பத்தாண்டுகளாக புது விதவைரங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருந்தது. கிரேவரிடம் ஒரு ரகசிய திட்டம் இருந்தது. உலகத்தையே ஒரு பெண்ட மிக்கிற்குள ஆழ்த்துவது அதன் மூலம் பணம் சம்பாதிப்பது. 700 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த பூமி கிரகத்தில ஒரு நோயை பரப்பி அதற்கு தடுப்புமருந்தை நூறு ரூபாய்க்கு விற்றாலும் வரும் தொகை எங்கோ போய்விடும். சாதாரணமாக கிரேவர் குனிந்து தன்னுடைய ஷிவை கட்டும் நேரத்திற்குள் அவனது கணக்கில2850 ரிங்கிட்டுகள் ஏறி இருக்கும். அப்படி இருந்தும் அவனது பண வெறி அடங்கவில்லை. அவனது கனவை நிறைவேற்றுவதில் அவனது லேப்கள் தொடர்ந்து தோற்று கொண்டிருந்தன.

அவனது லேப்கள் உருவாக்கி இபோலா, நிபா, ஜிகா, சார்ஸ், போன்றவைரஸ்கள் அவன் எதிர்பார்த்ததை போல் பெண்ட மிக்கை உருவாக்காமல் எண்டமிக், எபிட மிக் என்ற இரண்டு வகைகளில் அடங்கி காணாமல்போனதில் அவனுக்கு ஏமாற்றம்தான். ஆனால் அதிர்ஷ்ட தேவதைஅவனை 2000 ம் ஆண்டில் கட்டி அணைத்தாள்.

சைனா லேபிலிருந்து எதிர்பாராமல் கசிந்தடி வைரஸ் அவனது கனவை நிறைவேற்றியது. எதிர்பாராமல் வைரஸ் கசிந்துவிட்டதால் அவனுக்கு மாற்று மருந்தை கண்டுபிடிக்க ஆறு மாதமாகிவிட்டது. அந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட மனித மரணங்கள் தன்னுடைய தடுப்புமருந்தை என்ன விலை கொடுத்தாவது வாங்க வைக்கும் என்று அவனுக்கு தெரியும். உயிர் பயத்தை காசாக்குவது எப்படி என்று அன்று தான் ஜான் அனுபவபூர்வமாக தெரிந்துகொண்டான். குவிந்த பணத்தை எண்ணமுடியாமல் அவனது பணம் எண்ணும் இயந்திரங்கள் திக்கி திணறி ஜாமாயின.

அதே பணம் அவனுக்கு வேறுவிதமான பிரச்சனையை கொண்டுவந்தது. ஏராளமான வரி கட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோதுதான் ஜான் சிந்தித்தான். தொழில் துவங்கதான் கஷ்டப்பட்டபோது உதவி செய்யாத அரசாங்கம் சம்பாதிக்கும்போது சாக்குபையோடு பங்கு கேட்டுவருவதா? என்று யோசித்தவன் தன்னுடைய மனைவி மரியாவை விவகாரத்து செய்துவிட்டு சொத்தில கணிசமான பாகத்தை கைமாற்றினான். விவாகரத்து என்பது வெறும் கண்துடைப்பு வேலை என்று அவனுக்கும் தெரியும். அரசுக்கும் தெரியும். அவனது கைகள் எவ்வளவு தூரம் நீளும் என்று அனைவருக்கும் தெரியும்

இவ்வளவு பணத்தை சம்பாதித்தபின்பு ஜான் கிரேவருக்கு மரணபயம் வந்துவிட்டது. இவ்வளவு பணத்தை சம்பாதித்து எவனுக்கோ கொடுத்துவிட்டு சாவதா? தன் மகன் தன்னைப்போல் திறமைசாலியாக இல்லாதுபோனால் என்னாவது? ஜாக்கிசானின் மகனைப்போல் ஊதாரியாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனை அரிக்க ஆரம்பித்துவிட்டது.இன்னும் சில பத்தாண்டுகளில் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் மூலம் மனிதனின் வாழ்நாள் நீடிக்கப்படலாம். அது வெல்லாம் கிரேவருக்கு போதாது. அவனது உள்ளத்தினஉள்ளத்தில ரகசியமாக ஒரு ஆசை ஒளிந்திருந்தது.அது சாகாவரம்.

அதற்கு இப்போதைய தொழில்நுட்பங்கள் ஒத்துழைக்காது. அதற்கு ஒரு மாற்றுவழியை அவன் கண்டுபிடித்து வைத்திருந்தான்.

இன்று செப்டம்பர் 20.அவன் தன் முன்னாள் காதலி அன்னாவை சந்திக்கும் நாள். வருடத்திற்கு ஒரு நாள் அன்னாவோடு தான் இருப்பேன் அதில் தலையிடக்கூடாது என்று திருமணத்திற்கு முன்பே அவன் மரியாவிடம் ஒப்பந்தம் செய்திருந்தான். அதேபோல் அன்னாவும் அவள் கணவனிடம் ஒப்பந்தம் செய்திருந்தாள். ஜானுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டாலும் இருவரும் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள். செப்டம்பர் 20 ன் முக்கியத்துவம் அவளுக்கு தெரியும். அதனால் அவள் நேற்றே அம்மா வீட்டிற்கு கிளம்பிவிட்டிருநதாள்.

ஜான் காலை கடன்களை முடித்துவிட்டு குளித்து உடைமாற்றி கிளம்பினான். காரை கிளப்பியபோது ஓடிவந்தபாடிகார்டுகளை தேவையில்லை என்று கையை காட்டினான்.

காரை உச்ச வேகத்தில் செலுத்தி அவன் அன்ன்னாவின் மாளிகையை நெருங்கினான்.அதுவும் அவன் பரிசாக கொடுத்ததுதான்.அவன் காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது காத்திருந்த அன்னா அவனை அணைத்துகொண்டாள்.

"காலேஜ்ல பாத்த மாதிரியே இருக்க " என்று சிரித்தான் ஜான்.

"நீ மாறிட்ட "

"ஆமா. முடி கொஞ்சம் கொட்டிருச்சு.நட டைமில்லை"

"நான் அதை சொல்லலை. உன் கேரக்டரை சொன்னேன்"

"அனுபவம்"

"தப்பு. பணம். அது தரும் திமிர்."

"அது தரும் தைரியத்தை மனிதர்கள் தருவதில்லையே? ஆமா மைக் எங்கே?"

"வழக்கம்போல் பசங்களுடன் தங்கச்சி வீட்டுக்கு போயிட்டார்"

"இந்த ஒப்பந்தத்தை பத்தி அவர் என்ன நினைப்பார்?,

"மரியா என்ன நினைக்கிறாளோ அதையேதான்"

"ஆனா நாம நிஜமா அப்படி இல்லை. எனக்கு உன்னை பிடிக்கும். இந்த உகைத்துல நான் உன்னை மட்டும்தான் நம்புறேன். நீ என்னுடைய மறைமுக வணிக கூட்டாளி என்பது உலகிற்கு தெரியாது. உலகம் நம்மை பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்லை."

"மீ டூ. என்ன சாப்பிடுற? காபி? டீ?"

"காபி. சாப்பிட ஏதாவது ரெடி பண்ணு. நான் கான்பரன்ஸ் ஹால்ல இருக்கேன்"

"திறந்து தான் இருக்கு.போ.வர்றேன்"

ஜான்கான்பரன்ஸ் ஹாலில் நுழைந்து காலியான ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.

அவனுக்கு எதிரே இருந்த கம்யூட்டரை இயக்கி உயிர்பெறவைத்தான்

லைவில் சில பேர் திரையில் தோன்ற ஆரம்பித்தனர். அவர்கள் ஜானால் ஆதாயம் அடைந்த வர்கள்.அவர்களால் ஜானும் ஆதாயம் அடைந்திருக்கிறான்

"ஹேய். ஹவ் ஆர் யூ?" என்றான் ஜான்.

"பைன். உன்னுடைய T வைரஸ் இன்னும் கல்லாவை நிரப்பி கொண்டிருக்கிறது. 2015 ல் உலகம் ஒரு பெண்ட மிக்கிற்கு தயாராக வேண்டும்னு நீ பேசியபோது உன்னை முட்டாள் என்று நினைத்தேன். அப்பபுரியலை இப்ப புரியுது" என்றார். திரையில் ஒருவர்.

"அடுத்தது. என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறாய் ஜான், ?" என்றார் இன்னொருவர்.

"சொல்கிறேன்." என்றான் ஜான்.

அன்னா கொண்டுவந்த காபி கோப்பையை எடுத்து கொண்ட ஜான் "கதவை பூட்டிவிட்டு போ அன்னா" என்றான்.

அவள் வெளியேறியதும் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டது.

"ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்"

"கேள்"

"1940 லிருந்து இன்றுவரை உலகம் பல மடங்கு வேகத்துல முன்னேறி போயிட்டிருக்கு.உலகம் தோணினதுலருந்து இவ்வளவு வேகமா வளர்ச்சி நடந்ததேயில்லை.ஆதி மனிதனுக்கு சக்கரத்தையும் தீயையும் கண்டு பிடிக்கவே சில நூற்றாண்டுகள் பிடித்தது.ஆனால் 18, 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தொழில்நுட்பம் வேகமா வளர ஆரம்பித்து விட்டது.காரணம் என்னன்னு தெரியுமா? "

"1947ல்ல ராஸ்வேல்ல நடந்த பறக்கும் தட்டு விபத்துல தப்பி பிழைத்த ஏலியன்களை நம்ம கவர்மெண்ட் சிறை பிடித்ததாகவும் அவர்களோடு ஐசனோவர் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டுதான் இன்றைய தொழில்நுட்பங்களை பெற்றார்னு ஒரு தியரி இருக்கே? "

"ஏரியா 51.அதை இன்னுமா நம்புறீங்க? அது ஒரு கான்ஸ்பயரி தியரி.அங்கே பப்ளிக் போக முயற்சி பண்ணியும் அது முடியலை.அது ராணுவ கேந்திரம்னுதான் நான் நினைக்கிறேன்.செவ்வாய் கிரகத்திலும் 24 மணிநேரம்தான்.பூமி மாதிரி.அதனால மனிதனோட பூர்வீகம் செவ்வாய் கிரகமா இருக்கலாம்னு கூட ஒரு தியரி இருக்கு.எல்லாமே காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.நம்புகிறவர்கள் நம்பட்டும்.உண்மை கற்பனையை விட பயங்கரமாக இருக்கும்! "

"அப்ப இந்த வளர்ச்சி எப்படி சாத்தியம்.?"

"நிறைய பொருள்கள்தான் காரணம்.ஆதிமனிதனிடம் பொருள்கள் அதிகம் இல்லை.18 ம் நூற்றாண்டில் நிறைய பொருள்கள் இருந்தன.அவற்றை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து புது பொருள்களைஉருவாக்க முடிந்தது.உதாரணமாக செல்போன்.அதில் எத்தனை பர்பஸ்கள் ஒளிந்திருக்கின்றனவென்று பாருங்கள்.காலண்டர்,டைம்,ஸ்டாப் வாட்ச்,போன்,பிங்கர் பிரிண்ட்,பேஸ்லாக்னு பல கருவிகளின் வேலையை ஒரே கருவி குறைத்து விட்டது.இந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் மனிதனின் மூளை சுருங்க ஆரம்பித்திருக்கிறது! விளைவு அல்சைமர்.இதுக்கு முன்னாடி இந்த வியாதி இருந்திருக்கலாம்.நாம இப்பத்தான் கவனிக்க ஆரம்பிச்சிருக்கோம்.!"

"உங்க தியரி வித்தியாசமா இருக்கு! "

"மனுச மூளை தன்னோட பத்து சதவீதத்தை பயன்படுத்திதான் இத்தனை கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது.அதே மூளை நூறு சதவீதம் வேலை செய்தால் என்னாகும்? "

"என்னாகும்? "

"புதிதாக ஒரு மனித இனம் உருவாகும்.சூப்பர் பவர் ஹியூமன்! குரங்கிலிருந்து மனுசன் பொறந்தான்.மனுசனிலிருந்து Sph பிறக்க போகிறான்."

"நம்மைவிட அறிவுள்ளவன் நம்மை அழித்து விடுவான்! "

"குடும்பம்,அன்பு,பாசம்,காதல்னு அவனை கட்டி போட நிறைய விசயங்கள் இருக்கின்றன.எமோசன் பொதுவானது! "

"இதுக்கு மெடிக்கல் கவுன்சில் அனுமதி தருமா? குளோனிங்கே தடை செய்யப்பட்டிருக்கிறதே? "

"நான் அதை இங்கே செய்யவில்லை.நிறைய பிரச்சனை வரும்.அதனால் இந்தியாவை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.சிக்கல் என்னன்னா அந்த அறிவுஜீவி குழந்தைக்கு உடல் ஒத்துழைப்பதில்லை.ஊனமாக பிறந்து இறந்து விடுகின்றன.என் மருந்தின் தரத்தை கூட்டி கொண்டிருக்கிறேன்."

"எடிசனுக்கு காது கேக்காது.ஸ்டீபன் ஹாப்கிங்ஸ்க்கு உடல் ஒத்துழைக்காது.அப்படி குறையோடு இருந்து விட்டு போகட்டுமே? "

"நோ.!எனக்கு குறையில்லாத மேதாவி குழந்தை வேணும்.இதுவரை ஆறு குழந்தைகள் பிறந்து செத்திருக்கின்றன.ஏழாவது குழந்தை கர்ப்பத்தில் இருக்கிறது.சொற்ப குறைகளையும் நிவர்த்தி செய்து விட்டால் எட்டாவது குழந்தை Sphஆக பிறந்து விடும்.புது மனிதன்.புது இனத்தின் முதல் குழந்தை."

"இந்த ஆபரேசனுக்கு என்ன பெயர்? "

"ஆப்ரேசன் அஷ்டவக்ரன்.இந்திய தொன்மங்களில் உள்ள ஒரு ஞானியின் பெயர். "

"இதோட நோக்கம்? "

"சாகாவரத்திற்கான வேலைகளை துரிதப்படுத்துவது.!ஐம்பதாண்டு தொழில்நுட்ப வளர்ச்சியை ஐந்தாண்டுகளில் கொண்டு வருவது.இவர்களுக்கு எதையும் கற்றுதர வேண்டியதில்லை.தானாகவே எல்லாவற்றையும் கற்று கொள்வார்கள்.ஒரு Sph பத்து மனித மூளைகளுக்கு சமம்.!"

அறையில் மவுனம் நிலவியது.

"டன்! "என்றார்கள் ஒருமித்த குரலில் அவர்கள்.!

அவர்களின் திட்டத்தை குலைக்க சாதாரண பிக்பாக்கெட் திருடன் ஒருவனால் முடியும் என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை! 











செவ்வாய், 17 ஜனவரி, 2023

ரகசிய தீவு86

ரகசிய தீவு

அத்தியாயம் 86

உண்மை வெளிப்படும் தருணம்

சந்திரவதனா தயாநிதியின் மகள் என்ற உண்மை தெரிந்த இரண்டே நபர்கள் மதிமாறனும் செங்கோடனும் மட்டும் தான். இந்த உண்மையை வெளியே சொல்லி விடக் கூடாது என்ற ஓரே காரணத்துக்காகத்தான் மதி மாறன் செங்கோட்னையே சிறையில் வைத்து கொன்றான். அந்த ரகசியம் தெரிந்த ஓரே ஆள் இப்போதைக்கு மதிமாறன் மட்டும் தான். தனக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இப்போது எப்படி தயாநிதிக்கு தெரிய வந்தது என்ற குழப்பத்தில் பேயறைந்தது போல் நின்றான் மதி மாறன் .

அவனது திகைப்பை புரிந்து கொண்டு விட்ட தயாநிதி " என்ன மதி மாறா ? உனக்கு மட்டுமே தெரிந்த உண்மை இப்போது எனக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கிறாயா?" என்றான் தயாநிதி .

அவனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றான் மதிமாறன்.

"இந்த உண்மை எனக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கிறாயா? இந்த உண்மையை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது ஓரு மது புட்டி என்று சொன்னால் அது விசித்திரமாக இருக்கும். யாரும் அதை நம்பக்கூட மாட்டார்கள்" என்ற தயாநிதி தன் இடுப்பில் இருந்த காலிமதுப் புட்டியை கையில் எடுத்தான்.

அவனுக்கு அருகே நின்ற நீலன் அந்த மது புட்டியை அடையாளம் கண்டு கொண்டு விட்டான். அது சிறைச்சாலையில் அவனிடமிருந்து காணாமல் போன அதே மது புட்டி.கல்லறைதீவில் அவனது உயிரை காப்பாற்றிய அதே மதுபுட்டி.

"இது என்னுடையது. இது எப்படி உங்களுக்கு கிடைத்தது?" என்றான் வியப்புடன் நீலன்.ரகசிய திவில் தான் தொலைத்த மதுபுட்டி இத்தனை காத தூரம் தாண்டி மலை நாட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தது என்ற ஆச்சரியம் அவனது குரலில் கலந்திருந்தது.

"இது உன்னுடையதா? அப்படியானால் செங்கோடன் உன்னிடமிருந்து தான் இந்த புட்டியை எடுத்திருக்க வேண்டும். கடலில் பயணம் செய்யும் உனக்கு தெரியாதா இது ஒரு தகவல் தெரிவிக்கும் சாதனம் என்று " என்றான் தயாநிதி

"கடல் பயணத்தில் உயிர் அபாயமான நேரங்களில் தங்களின் கடைசி விருப்பத்தை எழுதி அந்த கடிதங்களைஇப்படியான காலி புட்டிகளில் அடைத்து கடலில் வீசி விடுவோம். அது கடலில் மிதந்து கரை சேர்ந்து விடும். அப்படி கரை சேரசில மாதங்கள் கூட ஆகிவிடும். அதை கண்டெடுப்பவர்கள் அதில் உள்ள விலாசத்தில் அந்த புட்டியை ஒப்படைத்து கணிசமான பொருளை பரிசாக பெறுவார்கள். ஒருவனது கடைசி ஆசை என்பதால் சிலர் பணம் பெற மறுப்பதும் உண்டு" என்றான் நீலன்.

"சரியாகச் சொன்னாய். இது செங்கோடனின் கடைசி செய்தியை தாங்கி வந்த மதுபுட்டி. இது என் கைக்கு வந்து மூன்று நாட்களாகிறது. இதை கண்டெடுத்த ஓரு மீனவன் என்னிடம் இதை ஒப்படைத்தான். அவனுக்கு கை நிறைய பொருள் கொடுத்து அனுப்பி வைத்தேன். அதில் இருந்த கடிதம் துணியில் இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. செங்கோடன் தன் ரத்தத்தால் அந்த கடிதத்தை எழுதியிருக்கிறான். அதை படிக்கிறேன் கேள்" என்ற தயாநிதி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துணிச்சுருளை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

"அன்புள்ள தயாநிதிக்கு ! என்னை உங்களுக்கு தெரியாது. எனக்கும் உங்களை தெரியாது. நான் ஒரு கலை கூத்தாடி. ஊர் ஊராக சென்று வித்தை காட்டி வயிறு வளர்ப்பவன் . நான் அனாதையாக கடலில் மிதந்து வந்த ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்து வளர்த்து வந்தேன். அந்த குழந்தைக்கு சந்திரவதனா என்று பெயரிட்டேன்.அந்த குழந்தையின் கழுத்தில் இருந்த ஆபரணத்தை அடகுவைத்து அவ்வப்போது ஏற்படும் கஷ்டங்களை சமாளித்து வந்தேன். ரகசிய தீவிற்கு சென்ற என் குழுவினரை சந்திரவதனாவின் மீதான ஆசையால் கைது செய்தான்மதிமாறன். என் குழுவை மீட்க நான் அந்த நகையை அவனிடம் வேறு வழியின்றி ஓப்படைத்தேன். அப்போதுதான் சந்திரவதனா உங்கள் மகள் என்ற உண்மையை மதிமாறன் வெளிப்படுத்தினான். அவளை மணந்து தன் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள நினைத்தான். இந்த உண்மையை நான் வெளியே சொல்லாது இருக்க என் நாவை அறுத்து விட்டான். விரைவில் என்னையும் கொன்று விடுவான். என் மகள் சந்திரவதனா வை எப்படியாவது அவனிடமிருந்து காப்பாற்றுங்கள். மன்னித்து விடுங்கள். அவள் உங்கள் மகள் என்பதை மறந்து விட்டேன். அவளது அன்பிற்காக, பாசத்திற்காக என் வாழ்விற்கு பொருள் தந்ததற்காக அவளது வளர்ப்பு தந்தை உயிரை விட்டு விட்டான் என்பதை அவளிடம் கூறுங்கள். சந்திரவதனாவின் அடையாளம் அவளது உதட்டின் இடதுபுறம் இருக்கும் மச்சமாகும். உங்கள் மகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். என்னுடைய பாசத்தையும் சேர்த்து இரட்டிப்பாக அவள் மீது பாசத்தை பொழியுங்கள்"

அன்புடன்

தயாநிதி .

இந்த கடிதத்தை கண்டெடுப்பவர்கள் மலை நாட்டின் அரச பிரமுகர் தயாநிதியிடம் இதை ஒப்படைத்தால் தக்க சன்மானம் கிடைக்கும்.

கடிதத்தை படித்து முடித்தான் தயாநிதி . அவன் படிப்பதை கேட்டு கொண்டிருந்த மதிமாறன் திகைத்து நின்றான். இப்படி ஒரு வழியில் உண்மை வெளிவரும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை.

"இந்த மதிமாறன் அழைத்து வந்த பெண்ணிற்கு கடிதத்தில் குறிப்பிட்ட மச்சம் இல்லை. போதாதற்கு இந்த சிறுவன் வேறு அவள் சந்திரவதனா இல்லை என்று உரத்த குரலில் கூறி என் கண்ணை திறந்து விட்டான். அரசியல் அனுபவம் மிக்க என்னால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது.ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொண்டேன். இந்த கடிதம் என் கைக்கு கிடைத்த மறுகணமே உளவாளிகள் இருவரை ரகசிய தீவிற்கு கிளம்பிய கப்பலில் அனுப்பி வைத்துவிட்டேன். அவர்கள் இருவரும் தான் நேற்று இரவு என்னை சந்திக்க வந்தார்கள். இதுவரை கலகக்காரனாக சிகப்பு முகமூடி என்ற பெயரில் மறைந்திருந்த பார்த்திபன் புரட்சியின் மூலம் ரகசிய தீவின் அதிகாரத்தை கைப்பற்றியதும் அந்த முகமூடியை அகற்றிவிட்டான். இனி இது தேவைப்படாது என்பதால் தன்னுடைய உண்மையான அடையாளமான மலையமானின் இளைய மகன் என்ற அடையாளத்தை வெளிப்படையாக உலகிற்கு அறிவித்துவிட்டான்.

மலையமானின் ஆசைதன் மகன்களில் ஒருவனுக்கு என் மகளை மனைவியாக்குவது. அது விதியின் வழியே நடந்து முடிந்து விட்டது. அதைப் பார்த்து மகிழத்தான் என் நண்பன் இல்லை. அது ஓன்று தான் என்னுடைய வருத்தம். இந்த மதுபுட்டி உண்மையை வெளி கொண்டு வரும் என்பதை மதிமாறன் எதிர்பார்க்கவில்லை. இந்த மதுபுட்டி சரியான நேரத்தில் என் கையில் கிடைத்தது. இல்லையென்றால் இந்த வஞ்சகன் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பியிருப்பேன்" என்றான் தயாநிதி

"உண்மை கதிரவனை போன்றது. கருமேகங்கள் சில மணி நேரங்கள் அதை மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக அதை மறைத்து விட முடியாது" என்றான் நீலன்.
மாளிகையின் உ ள்ளே இருந்து காவலர்களால் அழைத்து வரப்பட்டாள் ரத்னாவதி .

"அப்பா! இங்கே என்ன நடக்கிறது? " என்றாள் அவள் குழப்பத்துடன் .

"இங்கே என்ன நடந்தது என்று உன் கணவனை கேள். விளக்கமாக சொல்வான். இவர்கள் இருவரையும் ஓரே அறையில் அடைத்து விடாதீர்கள். சிறையை நாசம் செய்து விடுவார்கள். தனி தனி சிறைகளில் அடையுங்கள்" என்று உத்தரவிட்டான் தயாநிதி .

" என்ன நடந்தது? " என்றாள் கிசுகிசுப்பான குரலில் ரத்னாவதி மதிமாறனிடம்.

"உண்மை தெரிந்து விட்டது" என்றான் மதி மாறன் .

இருவரும் அங்கிருந்து சிறைசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

"ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. அந்த மார்க்கதரிசியின் தங்கம் ?"

" என் கப்பலில் ப்த்திரமாக இருக்கிறது" என்றான் நீலன்.

"அவனும் ஓரு அரச துரோகி தான். உனக்கு தந்தது போல் அவனுக்கும் அரசின் சாசனம் ஓன்று தரப்பட்டது. காரணம் ஒன்று தான் .வணிக போட்டி .மலை நாட்டு கப்பல்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். அதே நேரம் வள நாட்டின் கப்பல்களையும் கொள்ளையடிக்க வேண்டும். இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டவன் தான் மார்க்கதரிசி.கொள்ளை பொருட்களைப் பார்த்ததும் அவன் மனம் மாறி விட்டது. எங்களுக்கு துரோகம் செய்ய துணிந்து கொள்ளை பொருட்களுடன் மாயமாகி விட்டான்.

அவனது கொள்ளை பொருட்களை கண்டுபிடிக்கத்தான் உன்னை நியமித்தேன். அந்த அரச சாசனம் களவு போய்விடக் கூடாது என்பதால் தான் அதை உன் தலையில் பச்சை குத்த வைத்தேன். கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்து விட்டாய். அதற்கு என் பாராட்டுகள் உனக்குரிய பங்கு உன்னை வந்து சேரும் " என்றான் தயாநிதி .

"அந்த துரோகியும் இன்னொரு துரோகியால் தான் மாண்டான். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது. நிரம்பவும் மகிழ்ச்சி எனக்கு " என்றான் நீலன்.

"ஆதித்தா! உன்னுடைய உதவி இல்லாவிட்டால் பார்த்திபன் போரில் வென்றிருக்க மாட்டான். அவனுக்கு உதவி செய்ததற்கு என்னுடைய நன்றி" என்றான் தயாநிதி .

"அது என் கடமை நண்பரே!" என்றான் ஆதித்தன்.

" என் மகளைக் காண என் மனம் துடியாக துடிக்கிறது. நாளையே கடல் பயணம் மேற்கொள்ள நினைக்கிறேன். ஆனால் நீங்கள் வெகுவாக களைத்திருக்கிறீர்கள். இரண்டு நாட்கள் இங்கேயே தங்கி இருங்கள். மூன்றாம் நாள் நாம் அனைவரும் ரகசிய தீவிற்கு கிளம்புகிறோம்."

" நாங்களும் அங்கே வந்து தான் தீர வேண்டும். பைராகியின் சேகரிப்புகள் அடங்கிய கழுகு படகை மோகினி தீவிலேயே விட்டு விட்டு வந்து விட்டோம். அதை எடுக்க நானும், பைராகியும் வந்து தான் தீர வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"நானும் வில்லவனை பார்க்க துடிப்பாக இருக்கிறேன்" என்றான் ஆதி.

"கவலைப்படாதே தம்பி. நாம் விரைவில் அவர்களை சந்திப்போம்" என்றான் நீலன்.

இரண்டு நாட்களில் உலகத்தின் அத்தனை உல்லாசங்களையும் நண்பர்களுக்குஅறிமுகம் செய்தான் தயாநிதி .

இரண்டு நாட்களும் மதுவருந்தாமல் இருந்த நீலனை ஆச்சரியமாக பார்த்தனர் அனைவரும் .

"அந்த பாழாய் போன பழக்கத்தை நான் நிரந்தரமாக விட்டு விட்டேன்" என்று சிரித்தான் நீலன்.

மூன்றாம் நாள் காலை தயாநிதியின் தலைமையில் முத்தழகி மலை நாட்டிலிருந்து கிளம்பியது. அங்கே ஒரு புதிய விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.

முற்றும்.

திங்கள், 16 ஜனவரி, 2023

ரகசிய தீவு 84

ரகசிய தீவு

அத்தியாயம் 84.

மகளும், மருமகனும்

இத்தனை வருடங்களாக யாரை தேடித் திரிந்தானோ பெரு முயற்சி செய்தானோ அந்த மகளை மதிமாறன் கண்டுபிடித்து விட்டதாகவும் அதற்கு ஆதாரம் இதோ என்று தயாநிதியின் குடும்ப ஆபரணத்தை அவன் காட்டியதையும் பார்த்த தயாநிதி வியப்பில் வாயடைத்து போய் கல்லாக நின்றான். அவனது வாயில் எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. மகிழ்ச்சியில் வாயில் வார்த்தைகள் எதுவும் வராமல் திக்குமுக்காடிய தயாநிதி ஒருவாறு தன்னை சுய நினைவுக்கு மீட்டுக் கொண்டு பேசத் தொடங்கினான்.

"மதிமாறா! நீ என்ன கூறுகிறாய்? இத்தனை வருடங்களாக நான் தேடிக் கொண்டிருந்த என் மகளை நீ கண்டுபிடித்து விட்டாயா? இதை என்னால் நம்பவே முடியவில்லையே? எங்கே என் மகள்? அவளை காண வேண்டும் என்று என் கண்கள் தவியாக தவிக்கின்றன" என்றான் மகிழ்ச்சி பெருக்குடன் தயாநிதி .

"அவளை உங்களிடம் காட்டுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் இன்று அவள் வேறு ஒருவருக்கு மனைவியாகி விட்டாள் "

" என்ன சொல்கிறாய் மதி மாறா ? அவளுக்கு திருமணமாகி விட்டதா?" என்றான் அதிர்ச்சியுடன் தயாநிதி .

"ஆமாம்" என்ற மதிமாறன் "சந்திரவதனா! உள்ளே வா.! உன் தந்தை உன்னை காண ஆவலுடன் காத்திருக்கிறார். " என்றான்.

அடுத்த நிமிடம் உள்ளே நுழைந்தாள் ரத்னாவதி .அவளைப் பார்த்ததும் தயாநிதியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

"இது என் மகள்?"

"ஆம். நான் உங்கள் மகள் .அதை தெரிந்து கொள்ளாமலேயே இத்தனை நாட்களாக என் நாட்களை வீணடித்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் தந்தையே " என்ற ரத்னாவதியை கட்டி கொண்டான் தயாநிதி .

"கடவுள் கருணை மிக்கவன். என் காலம் முடியும் முன்பாகவே உன்னை எனக்கு அடையாளம் காட்டினானே. அதற்கு நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்"

"நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது கடவுளுக்கல்ல. இவருக்குத்தான். கலை கூத்தாடிகளின் குழுவில் இருந்த என்னை அடையாளம் கண்டு கொண்டவர் இவர்தான் " என்றாள் ரத்னாவதி .

"நன்றி மதி மாறா நன்றி.உன் உதவியை என் உயிர் உள்ளவரை மறக்கவே மாட்டேன்" என்று தழுதழுத்தான் தயாநிதி .

"நீங்கள் என்னிடம் ஒப்படைத்த இரண்டு வேலைகளில் ஓன்றை முடித்துவிட்டேன். இன்னொரு வேலையில் நான் தோற்றுவிட்டேன், " என்றான் மதி மாறன் தலை குனிந்தபடி.

"நீ என்ன சொல்கிறாய்? எனக்கு எதுவும் புரியவில்லையே?" என்றான் தயாநிதி குழப்பத்துடன் .

"நீங்கள் கொடுத்த முதல் வேலை உங்கள் மகளை கண்டுபிடிப்பது. அதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டேன். இன்னொரு வேலை ரகசிய தீவை உங்களின் சார்பாக நிர்வகிப்பது. அதில் நான் தோற்றுவிட்டேன். சிகப்பு முகமூடி எனக்கெதிரான போரில் சதி செய்து வென்று விட்டான். நான் போரில் சாகும் வரை போரிட்டிருப்பேன். அப்படி இறந்து போயிருந்தால் உங்கள் மகளை உங்களிடம் ஓப்படைத்திருக்க முடியாது. உங்கள் மகளை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஓரே ஆசையில் போரில் தோற்று ஓடி வந்திருக்கிறேன்"

"வருந்தாதே! நீ எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய். ரகசிய தீவு கையை விட்டு போய் விட்டதே என்று கவலைப்படாதே! மலைநாட்டு அரசரிடம் பேசி அதை மீண்டும் கைப்பற்ற ஏற்பாடு செய்கிறேன். ஆமாம். என் மகளுக்கு திருமணமாகி விட்டதாக சொன்னாயே? எங்கே அவளது கணவன் ? "

"இதற்கு சந்திரவதனா தான் பதில் கூற வேண்டும்"

"மகளே! நீ சொல் எங்கே உன் கணவன் ? "

"அவர் இங்கே தான் இருக்கிறார். " என்றாள் வெட்கப் புன்னகையுடன் ரத்னாவதி,

" யார்?"

"கலை கூத்தாடி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த என்னை காதலித்து மணந்து கொண்ட பெரிய மனதிற்கு சொந்தக்காரர் இவர்தான் " என்று மதிமாறனை கை காட்டினாள் ரத்னாவதி

"மதி மாறா ! நீயா என் மகளின் கணவன் ? "

"மாப்பிள்ளை என்று அழையுங்கள் மாமா. என் மனம் அதில் தான் மகிழும்." என்றான் மதி மாறன் .

" நல்லது. நடக்க வேண்டியவைகள் நல்ல முறையில் தான் நடந்தேறி இருக்கின்றன. எல்லாம் கடவுளின் செயல்"

"சிகப்பு முகமூடியிடம் தோற்றதும் கடவுளின் செயல்தானா ?"

"இல்லையென்றால் என் மகள் கிடைத்திருப்பாளா?"

"நல்ல விசயம்தான். ஆனால் அந்த சிகப்பு முகமூடிக்கு பக்க துணையாக இருப்பது யார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டிர்கள்"

"யார் அவனுக்கு உதவி செய்வது?"

"கள் வர்புரத்தின் பிரசித்தி பெற்ற கள்வன் ஆதித்தன்" என்றான் மதி மாறன் . தயாநிதியின் புருவங்கள் முடிச்சிட்டன.
"அவன் எப்படி அங்கே ?"

"அதுதான் புரியவில்லை."

"அநீதிக்கு எதிரான அவதாரம் அவன்"

"என்னை அயோக்கியன் என்கிறீர்களா?"

"நான் அப்படி சொல்லவில்லையே?"

"சிகப்பு முகமூடி, அவனுக்கு துணையாக ஆதித்தன், நீலன், பைராகி .இந்தமும் மூர்த்திகள் கள் தான் தோல்விக்கு காரணம். என்னை குற்றவாளியாக்க இப்போது இங்கே பின் தொடர்ந்து வருகிறார்கள்"

"வரட்டும். அவர்களை நான் பார்த்து கொள்கிறேன். நெடும்பயணத்தில் இருவரும் களைத் திருப்பீர்கள். போய் ஓய்வு எடுங்கள். பிறகு சந்திப்போம்," என்றான் தயாநிதி .

" மற்றோரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்து விட்டேன். அந்த மார்க்கதரிசியின் தங்கப் புதையல் அகப்பட்டு விட்டது. அது இப்போது நீலனின் கப்பலில் இருக்கிறது."

" என்ன சொல்கிறாய் நீ?"

"நான் சொல்வது உண்மை. அந்த புதையலை எடுக்கும் பொருட்டு தான் இந்த போரையே நடத்தியிருக்கிறார்கள். நீங்கள் எனக்கு உதவ கொடுத்தனுப்பிய ஆயுதங்களை அந்த நீலன் சிகப்பு முகமூடியிடம் கொடுத்து விட்டான். விசாரித்தால் என் கப்பல் களவு போய்விட்டது. அதை திருடியவன் தான் சிவப்பு முகமூடியிடம் அவற்றை கொடுத்தான் என்று விதவிதமாக கதை அளப்பான். அதை நம்பி விடாதீர்கள்" என்றான் மதி மாறன் .

"அவனைப் பற்றி நீ சொல்லும் எதையும் என்னால் நம்ப முடியவில்லை. அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை"

"பணம் குணத்தை மாற்றும் ஆற்றல் கொண்டது"

" உண்மைதான். நீங்கள் இருவரும் ஓய்வெடுங்கள். நடக்கப் போவதை நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் தயாநிதி .

"யார் அங்கே ? என் மகளையும், மருமகனையும் தனி அறைக்கு அழைத்து செல்லுங்கள்" என்று உத்தரவிட்டான் தயாநிதி .

தனி அறையில் நுழைந்ததும் அதன் கதவை தாழிட்டான்மதிமாறன்

அதன் பிறகு ரத்னாவதியை கட்டி தழுவிய மதிமாறன் "அந்த முட்டாள்கிழவன் உன்னை தன் மகள் என்று நம்பி விட்டான்"

"ஆம். நாம் போட்ட திட்டம் கனகச்சிதமாக நடந்தேறி வருகிறது " என்று சிரித்தாள் ரத்னாவ தி.

" எல்லாம் உன்னுடைய திறமை தான்" என்று அவளை பாராட்டினான் மதி மாறன் .

அன்று இரவு இருவருடனும் உரையாடிக் கொண்டிருந் தான் தயாநிதி . அப்போது வந்து நின்ற வாயிற் காவலன் முகமன் கூறியதுடன் இரண்டு பேர் அவனைக் காண வந்திருப்பதாகவும் கூறினான்.

அதைக் கேட்டதும் தயாநிதியின் முகம் மாறியது.

"நாம் நாளை காலை சந்திப்போம்" என்ற தயாநிதி விருட்டென்று அங்கிருந்து கிளம்பினான்.மதிமாறனின் முகத்தில் சந்தேகத்தின் சாயைபடர்ந்தது. அவன் மறைந்து நின்று பார்த்த போது வந்து நின்ற இருவருடன் தயாநிதி தனி அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.

எதுவும் புரியாமல் கையை பிசைந்த மதிமாறன் தன்னுடைய அறைக்கு திரும்பினான்.

"என்னாயிற்று? ஏன் இப்படி குழப்பமாக இருக்கிறீர்கள்?" என்றாள் ரத்னாவதி .

"யாரோ இருவர் அந்த கிழவனைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களில் ஓருவன் தோளில் நங்கூர பச்சை குத்தியிருக்கிறான். அனேகமாக அவன் ஒரு கடலோடியாக இருக்கலாம்"

" இருந்து விட்டுப் போகட்டுமே? அதனால் என்ன? சொந்த மகளையும் மருமகனையும் சந்தேகிக்க துணிவாரா அவர்? நிம்மதியாக தூங்குங்கள்" என்றாள் ரத்னாவதி .

மறுநாள் காலையில் சூரியன் உதித்துக் கொண்டிருந்தது. தயாநிதி ரத்னா வதியுடனும், மதிமானுடனும் பேசிக் கொண்டிருந்தான். அப்போது மாளிகைக்குள் பிரவேசித்தனர் நிலனும் ஆதித்தனும். அவனுக்கு பின்னால் வந்தான்ஆதி. முந்தைய தினம் இரவே நீலனின் கப்பல் முத்தழகி மலை நாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தது. தயாநிதியை காண அதிகாலையிலேயே மூவரும் அவனது மாளிகைக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்கள் வருவதை தூரத்திலேயே பார்த்து விட்ட ரத்னாவதி இவர்கள் தன்னுடைய பழைய வாழ்க்கையை வெளியே சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் மாளிகையின் உள்ளே ஓளிந்து கொள்ள நடந்தாள்.

"சந்திரவதனா ? எங்கே செல்கிறாய்?" என்றான் தயாநிதி .

ரத்னாவதியை அடையாளம் கண்டு கொண்டு விட்ட ஆதி " இவளா சந்திரவதனா ? இதென்ன பித்தலாட்டம்?" என்றான் உரத்த குரலில்.

அவனது குரல் காதில் விழுந்ததும் தயாநிதி திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.

வெள்ளி, 6 ஜனவரி, 2023

ரகசியதீவு 83

ரகசிய தீவு

அத்தியாயம் 83

சூழ்ச்சி வலை

நீலனின் முத்தழகி கப்பல் மலை பாலத்தை நெருங்கி கொண்டிருந்தது. நீலன் தன்னுடைய கப்பலின் வேகத்தை வெகுவாக குறைத்து விட்டிருந்தான். பாலத்தின் மீது கப்பலின் கொடிமரம் மோதி உடைந்து கப்பலின் மீது விழுந்தால் கப்பல் கடலில் மூழ்கி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக நீலன் வேகத்தை குறைத்து விட்டிருந்தான். மலை பாலத்திற்கு இருபதடி தொலைவு இருக்கும் போதே நங்கூரத்தை பாய்ச்சி கப்பலைநிலை நிறுத்தி விட்டான் நீலன்.

அவன் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்படுவதை கவனித்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் . "அந்த முட்டாள்கிழவன் வழி தெரியாமல் வகையாக மாட்டிக் கொண்டு விட்டான். கிறுக்கு தனமாக நங்கூரத்தை பாய்ச்சி கப்பலையும் நிலை நிறுத்தி விட்டான். இப்போது மலை பாலத்தை கடந்து செல்ல வழியில்லாமல் திருதிருவென்று விழித்து கொண்டிருக்கிறான். இது தான் சரியான நேரம். நாம் அவன் மீது தாக்குதல் நடத்த " என்று சந்தோஷ மிகுதியில் கூவினான் நஞ்சுண்டன்.

"அவனது திறமையை நீதவறாக கணித்து விட்டாய். அவன் காரணம் இல்லாமல் இந்த வழியாக கப்பலை செலுத்தி வந்திருக்க மாட்டான். இப்படி வழி தெரியாமல் திகைத்து நிற்பது அவனது சுபாவம் அல்ல" என்றான் தர்மபாலன்.

"யானைக்கும் அடி சறுக்கும் என்ற முதுமொழி தமிழில் இருப்பதை மறந்து விட்டாயா? எதிரியின் பலவீனமான தருணத்தில் அவனை வீழ்த்துவது தான் நல்லது " என்றான் நஞ்சுண்டன் .

"எனக்கென்னவோ அவன் மனதில் ஏதோ ஒரு திட்டம் வைத்துக் கொண்டு தான் நம்மை இங்கே அழைத்து வந்திருப்பானோ என்று என் மனதிற்கு தோன்றுகிறது."

" அவனது எந்த திட்டமும் என்னிடம் பலிக்காது. நான் இப்போது நம் கப்பலை வேகமாக செலுத்தி பாலத்தை தாண்டி சென்று திருப்பி கப்பலை நிறுத்தப் போகிறேன். முத்தழகிக்கு நேர் எதிராக நம் கப்பல் மறித்து நிற்க போகிறது.கொடிமரம் தடுப்பதால் அவனால் பாலத்தை தாண்டி முன்னேற முடியாது. இருக்கும் ஒரே வழி வந்த வழியாகவே அவன் திரும்ப செல்வது தான். அவன் தன் கப்பலின் நங்கூரத்தை எடுத்தால் தான் கப்பலை நகர்த்தவே முடியும். அப்படி அவன் நங்கூர சங்கிலியில் கையை வைத்தவுடன் நாம் நம் தாக்குதலை தொடங்கி விட வேண்டும்" என்ற நஞ்சுண்டன் கப்பல் முன்னேறி செல்ல உத்தரவிட்டான்.

அவனது கப்பல் முத்தழகியை நெருங்கிய போது கொடிமரத்தில் கட்டப்பட்டிருந்த தர்மபாலன் நீலனை பார்த்து கத்தினான். "நீலா! நீ இவனை பற்றி எச்சரித்தது உண்மைதான். இந்த துரோகி என் ஆட்களை எப்படியோ பேசி சரிகட்டி அவன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டான். என்னையும் கைதியாக்கி விட்டான். என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும்" என்றான் வஞ்சகமான குரலோடு.

"நன்றாக நடிக்கிறாய் நண்பா. நீ கடலோடியாக வந்ததற்கு பதிலாக நாடகத்தில் நடிக்கப் போயிருக்கலாம்" என்றான் நீலன் எரிச்சலுடன் .

தர்மபாலனின் கப்பல் முத்தழகியை தாண்டி சென்று பாலத்தை கடந்தது.வெற்றிகரமாக பாலத்தை தாண்டிய கப்பல் நேர் எதிராக திரும்பி நின்றது. அதை பார்த்ததும் நீலனின் முகம் மலர்ந்தது.

"பைராகி .எல்லாம் தயாரா?" என்றான் அவன்.

"தயார்" என்ற பைராகி கருணாகரன் பரிசாக கொடுத்த ஒற்றை பீரங்கியை மேல் தளத்திற்கு ஆதியின் உதவியோடு உருட்டி வந்தான்.

" எல்லா பாகங்களையும் சரியாகப் பொருத்தி விட்டேன். தாக்குதல் நடத்த தயாராக உள்ளது இந்த ஆயுதம்" என்றான் பைராகி .

"இதுவெல்லாம் உன் நண்பனின் யோசனை தான். இப்போது இங்கே ஒரு வாண வேடிக்கை நடக்கப் போகிறது. கண்டு களிக்க தயாராக இரு" என்று ஆதித்தனின் முதுகில் தட்டினான் நீலன். 

பைராகி பீரங்கியின் கோணத்தை சரிபார்த்து விட்டு வெடிமருந்தை நிரப்ப ஆரம்பித்தான். ஆதி ஒரு இரும்பு குண்டை அதன் குழாய்களுக்குள் செலுத்தினான்.

ஆதித்தனுக்கு நீலனும், பைராகியும் சேர்ந்து வகுத்த திட்டம் புரிய ஆரம்பித்தது.

வெடிமருந்து திரியை பற்ற வைத்தான் பைராகி . வெடிமருந்தின் விளைவால் சீறிக் கொண்டு கிளம்பிய இரும்பு குண்டு மலை பாலத்தின் நடுப்பகுதியை தகர்த்தது. இரும்பு குண்டோடு தகர்ந்த பாறை துண்டும் சேர்ந்து விசையோடு தர்மபாலனின் கப்பல் மேல் விழுந்தது.

பீரங்கி வெடித்ததால் ஏற்பட்ட பின் விளைவை நங்கூரம் பாய்ச்சியதால் கப்பல் தாங்கி கொண்டது. ஆயுதத்தின் கோணத்தை மாற்றிய பைராகி அடுத்தடுத்த குண்டுகளை வெடித்தான். ஆகாயத்தில் வெடித்து கிளம்பிய உலோக குண்டு புவி ஈர்ப்பு விசையோடு வேகம் பெற்று கப்பலின் மீது விழுந்து அதை சின்னாபின்னமாக்கியது. என்ன நடக்கிறது என்று தெரியும் முன்பாகவே தர்மபாலனின் கப்பலில் ஓட்டை விழுந்து தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது. கப்பல் மூழ்க ஆரம்பித்ததை பார்த்ததர்மபாலன்" முட்டாளே! அவன் திட்டம் போட்டுத் தான் நம்மை இங்கே அழைத்து வந்திருக்கிறான். இதுவொரு சூழ்ச்சி வலை. என்னை எப்படியாவது கட்டுகளிலிருந்து விடுதலை செய்" என்று கதற ஆரம்பித்தான்.

"அதற்கு எனக்கு நேரம் இல்லை நண்பா. என்னை நானே காப்பாற்றி கொள்கிறேன். என்னை மன்னித்து விடு" என்ற நஞ்சுண்டன் கடலில் குதித்தான்.

"முட்டாள் .நான் சொல்வதை கேள்" என்று அலற ஆரம்பித்தான் தர்மபாலன்.

அவனை விடுவிக்க யாரும் முன்வரவில்லை. நஞ்சுண்டனை பின்பற்றி எல்லோரும் கடலில் குதிக்க ஆரம்பித்தனர்.

"அவர்கள் மிகப் பெரிய தவறை செய்து விட்டார்கள்" என்ற நீலன் விசம சிரிப்பு சிரித்தான்.

"முட்டாள்களே! இந்த கடல் பகுதியில் நிறைய சுறா மீன்கள் இருக்கின்றன. வீணாக அவற்றுக்கு பலியாகப் போகிறீர்கள்" என்று கத்திய தர்மபாலன் தன்னை விடுவித்து கொள்ள முடியாமல் அலறியபடி கப்பலோடு ஜல சமாதியடைந்தான்.

கடலில் நீந்த துவங்கிய வர்களை சுறா மீன்கள் சுற்றி வளைக்க துவங்கின.

"நஞ்சுண்டா ! அவற்றிடம் உன் சாமர்த்தியத்தை காட்டி தப்பி பிழைத்து கொள்" என்றான் நீலன்.

"என்னை காப்பாற்று. இல்லை கொன்று விடு. இப்படி மீன்களுக்கு இரையாக்கி விடாதே!" என்று கதற துவங்கினான் நஞ்சுண்டன் .

" உன் துரோகத்தின் பரிசைத்தான் இப்போது கடவுள் கொடுத்திருக்கிறார். வேண்டாம் என்று சொல்லாமல் மனமுவந்து பெற்று கொள்" என்றான் நீலன்.

நஞ்சுண்டனை சுறா ஓன்று கவ்வி கொண்டு நீரில் மூழ்கியது. சில நிமிடங்களில் தர்மபாலனின் கப்பல் இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கி மறைந்தது. ஒருவரும் உயிர் பிழைக்க வழியில்லாமல் சுறா மீன்கள் தங்கள் வேட்டையை நடத்தி முடித்தன.

நங்கூரத்தை மேலே ஏற்ற உத்தரவிட்ட நீலன் பாலத்தில் குண்டுகளால் ஏற்பட்ட இடைவெளியின் வழியே கப்பலின் கொடி மரத்தை நுழைத்து மறுபுறம் கப்பலோடு வெளியேறினான்.

"அப்பாடா! எல்லா பிரச்சனைகளும் முடிந்தன. இனி நம்மை பின் தொடர்ந்து வர யாரும் இல்லை. இனி நிம்மதியாக பயணம் செய்யலாம்" என்றான் நீலன் மகிழ்ச்சியுடன் .

" இப்படி ஓரு யோசனை இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்றான் ஆதித்தன்.

" எல்லாம் பைராகியின் யோசனை தான். புவியியல் அமைப்பை விளக்கி கூறியவுடன் இப்படி ஒரு ஆலோசனையை சொன்னவன் அவன்தான். உன்னிடம் அதை கூற மறந்து விட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடு நண்பா " என்றான் நீலன்.

"நான் வேறு யோசனை வைத்திருந்தேன்"

" என்ன யோசனை? "

"பாலத்தில் இரண்டடி கொடிமரம் தான் முட்டுகிறது. அதே இரண்டு அடிக்கு கப்பலின் மீது கனத்தை அதிகரித்து நீரில் மூழ்க வைத்து மறுபுறம் வெளியேறி விடலாம் என்று நினைத்தேன்"

"அதுவும் நல்ல யோசனைதான். இந்த ஆயுதம் மட்டும் இல்லாவிட்டால் நானும் உன் போல் தான் யோசித்திருப்பேன்" என்றான் பைராகி .

"என்னை தவிர எல்லோரும் புத்திசாலிகள் தான் போலும் " என்று இருவரையும் அணைத்து கொண்டு சிரித்தான் நீலன்.

அதே நேரம் மதிமாறன்மலை நாட்டை சென்றடைந்திருந்தான்.

தன் மாளிகைக்குள் நுழைந்த மதி மாறனை வியப்புடன் பார்த்தான் தயாநிதி

"யாரது?மதி மாறனா? ரகசிய தீவிலிருந்து எப்போது வந்தாய்?" என்றான் தயாநிதி .

"இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக கெட்ட சேதி ஒன்றும், நல்ல செய்தி ஓன்றும் கொண்டு வந்திருக்கிறேன். முதலில் எதை கூறட்டும்?"

"நல்ல செய்தியை முதலில் கூறு"

" தொலைந்து போன உங்கள் மகள் திரும்ப கிடைத்து விட்டாள். அவள் உங்கள் மகள் என்பதற்கான ஆதாரம் இதோ " என்ற மதிமாறன் தயாநிதியின் பரம்பரை நகையை காட்டினான்.

" என்ன?" என்று சந்தோசத்தில் திக்குமுக்காடினான் தயாநிதி .

ரகசியதீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 82

வழி இல்லாத வழி

நீலன் நஞ்சுண்டனைப் பற்றி எச்சரித்து சொன்ன வார்த்தைகளிலிருந்து புதிதாக ஒரு வழியை கண்டுபிடித்து விட்டிருந்தான் தர்மபாலன்.

நஞ்சுண்டனை கடல் கொள்ளையர் தலைவனாக்கி தன்னை பணயக் கைதியாக மாற்றிக் கொண்டு நீலனின் கப்பலின் மேல் தாக்குதல் நடத்தி மார்க்கதரிசியின் புதையலை அடைய திட்டமிட்டிருந்தது அவனுடைய குள்ள நரிமூளை.

அவனது திட்டத்தை கேட்ட பூபதியும், நஞ்சுண்டனும் உண்மையாகவே வியந்து தான் போயினர்.

"இது ஒரு அற்புதமான திட்டம். இது எப்படி உன்னுடைய மூளையில் உதித்தது என்று தான் எனக்கு தெரியவில்லை" என்றான் பூபதி.

"இது என்னுடைய திட்டமல்ல. அந்த முட்டாள்கிழவன் எனக்கு தற்செயலாக அவன் வாயின் மூலமாக சொல்லிய திட்டம். தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழியை கேட்டிருக்கிறேன். இன்று தான் அதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இப்படி ஒரு திடீர் திருப்பத்தை அவன் சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டான். இனி தான் ஆட்டம் ஆரம்பம். வள நாட்டின் கொடியை இறக்கிவிட்டு கடல் கொள்ளையர்களின் மண்டையோட்டு கொடியை ஏற்றுங்கள்" என்று தன்னுடைய ஆட்களுக்கு உத் தரவிட்டான். சில நிமிடங்களில் வள நாட்டின் கொடி இறக்கப்பட்டு மண்டையோட்டு கொடி ஏற்றப்பட்டது.

"குறைந்த கப்பலின் வேகத்தை மீண்டும் அதிகரியுங்கள். அந்த முட்டாள்கிழவனை நாம் எப்படியாவது பிடித்ததாக வேண்டும்" என்றான் நஞ்சுண்டன்.

"இந்நேரம் அந்த கிழவன் மண்டையோட்டு கொடி ஏற்றப்பட்டதை கவனித்திருப்பான். அவன் உடனே இங்கே என்ன நடந்தது என்று தன்னுடைய தொலை நோக்கியில் கவனிக்க தொடங்கியிருப்பான். என்னை உடனே கப்பலின் கொடி மரத்தில் சும்மா வேனும் கட்டி வையுங்கள்" என்றான் தர்மபாலன்.

அவனது பேச்சு உடனே செயலாக்கப்பட்டது.

அவன் சொன்னது போலவே நீலன் அந்த கொடி மாற்றத்தை கவனித்து விட்டிருந்தான். அவன் தன்னுடைய தொலை நோக்கியில் பார்த்த போது தர்மபாலன் கொடி மரத்தில் கட்டப்பட்டிருந்த காட்சியை பார்த்தான்.

"அந்த துரோகியை நம்ப வேண்டாம் என்று அந்த தர்மபாலனிடம் படித்து படித்து சொன்னேன். அவன் என்னுடைய அதிதி. எனக்கு பாதகமாக நடக்க மாட்டான் என்று அவனுடைய சுயரூபம் தெரியாமல் சிறு பிள்ளை போல் கூறினான். இப்போது நான் கூறியது போலவே நடந்து விட்டது. அந்த துரோகி தர்மபாலனை தன் பிடிக்குள் கொண்டு வந்து விட்டான்"

அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன் "தர்மபாலனை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்து விட்டான் சரிதான். ஆனால் கப்பலில் உள்ள மற்றவர்கள் அவனது ஆக்ரமிப்பிற்கு எதிராக எதையும் செய்தது போல் தெரியவில்லையே?" என்றான்.

" பயல் பேசுவதில் கில்லாடி. பேசி பேசியே மற்றவர்களின் மண்டையை கழுவியிருப்பான். அவர்களையும் தன்னுடைய கூட்டாளிகளாக மாற்றி இருப்பான்.புதையலில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆட்களை தன் பக்கம் இழுத்திருப்பான். பாம்புக்கு வாயில் விசம் . இவனுக்கு பேச்சில் விசம் "

"எனக்கென்னவோ இது திட்டமிட்ட நாடகமாக தெரிகிறது. இதில் ஏதோ சதி வேலை இருப்பதாக சந்தேகிக்கிறேன்."

"நீ நினைப்பது போலவும் இருக்கலாம்"

"நாம் அவர்களை முந்தி செல்லாவிட்டால் அவர்களிடம் அகப்பட நேரும்."

"அவர்களை முந்திசெல்வது நமக்கு சாத்தியமில்லை"

"அவர்களை விட நாம் முன்னால் தானே இருக்கிறோம்? பிறகு ஏன் சாத்தியமில்லை என்று சொல்கிறாய்?"

"ஆதித்தா! நீ தரையில் வல்லவனாக இருக்கலாம். இங்கே கடலில் உனக்கு அனுபவம் போதாது. இதை நீ ஒப்புக் கொள்வாய் என்று நினைக்கிறேன்"

"நிச்சயமாக இதை நான் ஒப்புக் கொள்வேன். ஒரு மனிதன் எல்லா இடங்களிலும் வல்லவனாக இருப்பது அசாத்தியம். இங்கே நீ தான் அனுபவம் மிக்கவன். நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?"

"ஓரு விசயத்தை நீ கவனிக்க மறந்து விட்டாய். நம் கப்பல் கனமான பொருட்களை சுமந்து செல்வதால் அதன் வேகம் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால் எதிரியின் கப்பலில் எந்த சுமையும் இல்லை. அதனால் அவனது கப்பலின் வேகமும் கூடுதலாக இருக்கும். அதனால் மெதுவாக செல்லும் நம்முடைய கப்பலை தர்மபாலனால் சீக்கிரமாகவே எட்டிப் பிடித்து விட முடியும். நம் பொக்கிசங்களை கொள்ளையடித்து விட்டு நம்மையும் கொன்று விட்டு நம் கப்பலையும் மூழ்கடித்துவிடுவார்கள். பிறகு எப்போதோ அடிக்கும் புயல் மழையில் நம்முடைய கப்பலும் நாமும் நீரில் மூழ்கி அழிந்து விட்டோமென்று வதந்தியை பரப்பி விடுவார்கள். உலகம் அதையும் நம்பி விடும். எதிரிகள் பொக்கிசத்தோடு காணாமல் போய் விடுவார்கள். இது தான் அவர்களின் திட்டமாக இருக்க வேண்டும்"

"நீ சொல்வது போல் நடக்க வே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த திட்டத்தை தகர்க்க வேறு வழி இல்லையா?" என்றான் ஆதித்தன்.

"ஓரே ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதுவும் நாம் பயணிக்க முடியாத வழியாக இருக்கிறது. அங்கே தான் நாம் தப்பும் வழியும் இருக்கிறது"

"ஓரே வழிதான் இருக்கிறது. அதுவும் பயணிக்க முடியாத வழி என்கிறாய். பிறகு அங்கே ஏன் செல்ல வேண்டும்?" என்றான் ஆதித்தன் குழப்பத்துடன் .

"நாம் தப்பிக்க வேண்டும். அதே நேரம் எதிரிகளையும் ஒழிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க இதை விட சிறந்த வழி ஓன்றுமில்லை" என்ற நீலன்" நான் சொல்வதை விட நீயே நடப்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்" என்றபடி சுக்கானை திருப்பி கப்பலின் திசையை மாற்றினான்.

" கப்பலின் திசையை மாற்றுகிறாய். இப்போது நாம் எங்கே போகிறோம்?" என்றான் ஆதித்தன்.

"மண்டையோட்டு கணவாய்க்கு " என்று பதில் தந்தான் நீலன்.

நீலனின் முத்தழகி கப்பல் திடிரென்று தன்னுடைய திசையை மாற்றுவதை கவனித்தான் நஞ்சுண்டன் .

" அவன் தன்னுடைய கப்பலின் திசையை திடிரென்று மாற்றுகிறான். ஏன் என்று புரியவில்லை" என்றான் நஞ்சுண்டன் .

" அவன் போகும் திசையை வைத்து அவன் எங்கே போகிறான் என்று உன்னால் கணிக்க முடியவில்லையா?"

"நான் அவனோடு அந்த கப்பலில் பயணித்திருக்கிறேன். அவன் ஒரு முறை கூட திசை மாறி சென்றதில்லை. அவன் சென்ற திசையில் நான் இதுவரை பயணித்ததில்லை" என்றான் நஞ்சுண்டன் குழப்பத்தோடு.

" அவன் செல்வது மண்டையோட்டு கணவாய்க்கு. அவன் செய்வது முட்டாள்தனமான செயல். கிறுக்கன் கூட இப்படியான செயலில் ஈடுபட மாட்டான் "

"நீலன் கிறுக்கன் அல்லவே!"

"ஆம். அதுதான் என்னை குழப்புகிறது. அவன் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் அங்கே கப்பலை கொண்டு செல்கிறான்"

"மண்டையோட்டு கணவாய் .இதுவரை நான் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே?"

"அது கடல் நடுவே இருக்கும் இரண்டு தீவுகளின் மலைப் பகுதிகள் இணைந்த பாலம் போன்ற பகுதி. அந்த பாலமும் அதன் கீழ் உள்ள மலை பகுதியும் ஓரு மனிதனின் மண்டையொட்டை போலவே காட்சியளிக்கும். அதனால் தான் அந்த இடத்திற்கு அப்படி ஒரு பெயர். அதன் வழியாக நம் கப்பலால் பயணிக்க முடியும். ஆனால் நீலனின் கப்பலால் பயணிக்க முடியாது."

"ஏன்?"

"நம் கப்பலின் கொடிமரம் கணவாய் பாலத்தின் கீழே எளிதாக நுழைந்து மறுபுறம் வந்துவிடும். ஆனால் நீலனின் கொடிமரம் பாலத்தினை விட உயரம். அவன் அதில் தன் கப்பலை நுழைத்தால் கொடிமரம் பாலத்தில் மோதி உடைந்து கம்பலின் மீதே விழுந்துவிடும். அந்த முட்டாள் அதைத்தான் செய்ய விரும்புகிறான் போல தெரிகிறது"

"நம் கையில் புதையல் அகப்படாமல் இருக்க அதை ஜல சமாதியாக்க நினைக்கிறானோ?"

" இருக்கலாம். அந்த கிறுக்கன் அதையும் செய்யக் கூடியவன் தான் "

"அப்படியானால் அவன் கப்பலை நாம் முந்தி சென்று பிடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்து தொலைப் பான் "

தர்மபாலனின் கப்பல் வேகம் பிடித்தது.

"அவர்கள் நம்மை விரட்டி வருகிறார்கள்" என்றான் ஆதித்தன்.

"வரட்டும் " என்றான் நீலன் அமைதியாக . " கப்பலின் வேகத்தை குறையுங்கள்" என்று ஆணையிட்ட நீலன் ஆதித்தனைப் பார்த்து

"அதோ பார் .அதுதான் மண்டையோட்டு கணவாய் " என்றான் .

அவன் காட்டியதிசையில் பார்த்தான் ஆதித்தன். இரண்டு தீவுகளுக்கு நடுவே பாலம் போல் இரண்டு மலைபகுதிகள் இயற்கையாகவே இணைந்திருந்தன. பாலத்தின் நடுவே இருந்த வெற்றிடம் மனித மண்டையோடு போல் காட்சியளித்தது. அதை பார்த்தவுடனேயே ஆதித்தனுக்கு நீலனின் கப்பலால் அதை கடக்க முடியாது என்பது புரிந்து விட்டது.

"நீ சொன்ன கடக்க முடியாத வழி இதுதானா ?"

"ஆமாம். கப்பலின் கொடி மரத்தின் உயரம் பாலத்தின் மேல் பாகத்தை விட உயரம். இதில் கொடிமரம் தட்டும் என்பதால் ஒரு முறை வந்த வழியே திரும்பி சென்றிருக்கிறேன். எனக்கு தடை கல்லாக இருந்ததை வெற்றி படிக்கட்டாக மாற்ற போகிறேன்."

" கப்பலின் கொடி மரத்தின் மேல் பாகத்தை வெட்டி அதன் உயரத்தை குறைக்க போகிறாயா?"

"அது என் மனைவியின் கைகளை வெட்டுவதற்கு சமம். என் உயிரே போனாலும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன், " என்றான் நீலன்.

நீலனின் திட்டம் என்னவென்று புரியாமல் திகைத்தான் ஆதித்தன்.

தர்மபாலனின் கப்பல் முத்தழகியை எட்டி பிடித்தது.

திங்கள், 2 ஜனவரி, 2023

ரகசிய தீவு

Aரகசிய தீவு

அத்தியாயம் 81
அரச சாசனம்

கல்லறைதீவில்பட்டினி கிடந்து இறந்து விடுவான் என்று நினைத்த நஞ்சுண்டன் இப்போது உயிரோடு கப்பலின் மேல் தளத்தில் நிற்பதோடு இல்லாமல் தன்னை பார்த்து அலட்சியமாக சிரித்து கையை ஆட்டியது கண்டு உருகிய உலோகத்தின் கொதிநிலைக்கு போனான் நீலன்.

"இந்த சாத்தான் இப்போது மீண்டும் உயிர்தெழுந்து வந்து விட்டது. மலைநாட்டை சென்றடையும் வரை கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு இந்த பொக்கிசங்களை பாதுகாக்க வேண்டும் போலிருக்கிறதே?" என்று அவன் மனம் யோசித்தது.

நீலன் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை பார்த்த ஆதித்தன்" என்னாயிற்று நண்பா! ஏன் திடிரென்று உன் முகம் கவலையில் ஆழ்ந்து விட்டது. புதிதாக ஏதாவது பிரச்சனை ஆரம்பமாகிவிட்டதா?" என்றான்.

"ஆம். அந்த சண்டாளன் நஞ்சுண்டன் கல்லறைதீவிலிருந்து எப்படியோ உயிரோடு தப்பி வந்து விட்டான். அவன் இப்போது தர்மபாலனின் கப்பலில் இருப்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக நஞ்சுண்டன்தீவை விட்டு வெளியேறி தர்மபாலனின் கப்பலில் தஞ்சமடைந்திருக்க முடியாது"

"ஒருவேளை தர்மபாலன் அவனை தீவிலிருந்து மீட்டிருப்பானோ? நஞ்சுண்டனுடன் இருந்தவர்கள் தர்மபாலனின் ஆட்களாக இருப்பார்களோ?"

"அப்படித்தான் இருக்க வேண்டும். நான் அவர்களை கருணாகரனின் ஆட்கள் என்று தவறாக நினைத்து விட்டேன் போலிருக்கிறது."

"அப்படியானால் இந்த கப்பலில் மார்க்கதரிசியின் பொக்கிசங்கள் வருவது அவனுக்கு தெரியும் என்று சொல்"

" அவனுக்கு தெரியாவிட்டாலும் நஞ்சுண்டன் அந்த உண்மையை சொல்லியிருப்பான். அதனால் தான் அவன் நம்மை பின் தொடர்ந்து வந்திருக்கிறான். மோகினி தீவில் எதையும் செய்யாமல் நாம் கிளம்புவதற்காக காத்து கிடந்திருக்கிறான். கடல் அவனது களம் என்பதால் நம்மை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். நாம் இக்கட்டில் சிக்கும் நேரத்தில் நம் மீது தாக்குதல் நடத்தி புதையலை கைப்பற்ற நினைக்கிறான்"

"அப்படியானால் நாம் அவனோடு ஓரு ஓப்பந்தம் செய்து கொண்டால் என்ன?"

" என்ன ஒப்பந்தம்?"

"புதையலின் சிறு பகுதியை அவனுக்கு கொடுத்து அவனை நம்மை பின் தொடராமல் இருக்கச் செய்தால் என்ன?"

" அவன் ருசி கண்ட பூனையாகி விடுவான். முழு பொக்கிசத்தையும் கைப்பற்ற அவனது பேராசை அவனை தூண்டி விட்டு விடும். எங்கப்பன்கு திருக்குள் இல்லை என்று நாமே சொன்னது போலாகி விடும்"

"இப்போது என்ன தான் செய்வது?"

"அவனை எச்சரிக்க போகிறேன். பயல் நம் பக்கம் வராமல் ஓடி விடுவான்"

"உன்னை பார்த்து பயப்படுவான் என்றா நினைக்கிறாய்?"

"என்னைப் பார்த்து பயப்பட மாட்டான். ஆனால் மலை நாட்டின் அரசன் தந்திருக்கும் அரச சாசனத்திற்கு அவன் பயந்து தான் தீர வேண்டும்"

"அரச சாசனமா?அப்படி ஒன்று உன்னிடம் இருக்கிறதா? நீ ரகசிய தீவில் சேட்டை செய்து சிறைக்கு சென்ற போது வீரர்கள் உன்னை முழுதாக சோதனையிட்டார்களே? அந்த சாசனம் உன்னிடம் இருந்தால் அதை அப்போதே அவர்கள் கைப்பற்றியிருக்க வேண்டுமே?" என்றான் ஆச்சரியத்துடன் ஆதித்தன்.

அவனது வியப்பை அமைதியாக பார்த்த நீலன்" உன்னிடம் குறுவாள் இருக்கிறதா?" என்றான்.
"எதற்காக இப்போது சம்மந்தமில்லாமல் குறுவாளை கேட்கிறாய்?"

" எல்லாம் காரணமாகத் தான். கப்பலின் வேகத்தை குறையுங்கள்" என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டுவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.

அவனது உத்தரவை அவனது ஆட்கள் நிறைவேற்ற துவங்கினர்.

முத்தழகியின் வேகம் குறையத் தொடங்கியது.

முத்தழகியின் தோற்றம் கண்ணுக்கு பெரிதாக தெரிவதை பார்த்ததர்மபாலன் அதன் வேகம் குறைவதை கண்டு கொண்டான். நீலன் எதற்காக திடிரென்று தன்னுடைய கப்பலின் வேகத்தை குறைக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை.

அவன் தன்னிடம் ஏதோ பேச விரும்பித்தான் தன்னுடைய கப்பலின்வேகத்தை குறைக்கிறான் என்பதை கண்டு கொண்டவன் அமைதியாக இருந்தான்.

அவனது கப்பல் முத்தழகியை நெருங்கி கொண்டிருந்தது. கப்பலின் மேல் தளத்தில் திடிரென்று தோன்றினான் நீலன்.

"வணக்கம் தர்மபாலா ! நலமாக இருக்கிறாயா?" என்றான் நீலன்.

"நான் நலமாக இருக்கிறேன் நரனே! நீ எப்படி இருக்கிறாய்?"

"நான் நலமாகத் தான் இருக்கிறேன். உன்னுடைய நலன் தான் கேள்வி குறியாகப் போகிறது "

" என்ன சொல்கிறாய் நீ?"

" நஞ்சுண்டன் என்னும் துரோகி உன்னுடைய கப்பலில் இருப்பான் போல் தெரிகிறதே? அவனை நம்பி விடாதே! என் முதுகில் குத்தி விட்டு என் கப்பலை திருடிச் சென்றவன் அவன். எப்போது வேண்டுமானாலும் உன் முதுகில் குத்தி விட்டு உன் கப்பலையும் களவாடி விடுவான். உன் நல்லதற்காக சொல்கிறேன். அவனை என்னிடம் ஒப்படைத்துவிடு"

"நான் அவனிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறேன். அவனது ஜம்பம் என்னிடம் பலிக்காது. அவன் என்னுடைய அதிதி அவனை உன்னிடம் ஒப்படைக்க முடியாது" என்றான் தர்மபாலன்..

" உன் புதை குழியில் நீயே மண்ணை அள்ளி போட்டு கொள்ளும் போது நான் என்ன சொல்ல முடியும்? மோகினி தீவில் உனக்கு எந்த வணிக பேரமும்படியவில்லை போலிருக்கிறதே?"

"ஆம். அங்கே என் கப்பலுக்கு சரியான வணிக கூட்டாளி கிடைக்கவில்லை"

"எதற்காக பொய் பேசுகிறாய்? மார்க்கதரிசியின் புதையல் என்னிடம் இருப்பதை தெரிந்து கொண்டு தானே் நீ என்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறாய்?"

"ஆமாம். அவை வளநாட்டிற்கு சொந்தமானவை. அவற்றை அடைவதுதான் என்னுடைய லட்சியம்."

" உன் லட்சியம் நிறைவேற ஆழ்ந்த வாழ்த்துகள். அவற்றை கைப்பற்ற நீ என் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் வம்பை விலைக்கு வாங்குகிறாய் என்று அர்த்தம் "

" நீ என்ன சொல்கிறாய்?"

"நான் மலை நாட்டின் கடல் காவலன்.மலை நாட்டின் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு தரும் பொறுப்பு என்னுடையது. அதற்காக மன்னர் எனக்கு ஒரு அரச சாசனம் தந்திருக்கிறார். "

"என்னை திசை திருப்ப பொய் சொல்கிறாய். எங்கே அந்த அரச சாசனத்தை காட்டு பார்ப்போம்"

"இதோ காட்டுகிறேன்" என்ற நீலன் தன்னுடைய தலை பாகையை அவிழ்த்தான். சற்று நேரத்திற்கு முன்பாக ஆதித்தனின் குறுவாளால் மொட்டையடிக்கப்பட்ட அவனது தலை வெய்யிலில் பளபளத்தது. கப்பலில் பதுங்கி கிடந்த நஞ்சுண்டன் இவர்களின் உரையாடலை ஒட்டு கேட்டு கொண்டிருந்தான்.

நீலனின் அருகில் நின்ற ஆதித்தன் அப்போதுதான் தலைபாகை இல்லாத நீலனின் தலையை பார்த்தான். அதில் ஏதோ பச்சை குத்தப்பட்டிருந்தது.

தர்மபாலனை பார்த்து சிரித்த நீலன்" உன் தொலைநோக்கி மூலமாக என் தலையில் எழுதியிருப்பதை படித்து பார்" என்றான்.

தர்மபாலன் தொலைநோக்கி மூலம் அவன் தலையில் உள்ளதை சத்தமாக படிக்க ஆரம்பித்தான்.

"மலை நாட்டு கப்பல்களின் பாதுகாவலனாக மலை நாடு இந்த நீலனை நியமிக்கிறது.இவன் மீதோ இவன் கப்பல் மீதோ தாக்குதல் நடத்துபவர்களை மலைநாடு தண்டிக்கும் என்று எச்சரித்து தரப்படும் பாதுகாப்பு சாசனம் இது. இதை மதிக்காதவர்களின் உயிர் பறிக்கப்படும்

இப்படிக்கு
மலைநாட்டு அரசனின் அரச முத்திரையோடு கூடிய கையெழுத்து இருந்தது.

நஞ்சுண்டனுக்கு நீலனின் தலைபாகை ரகசியம் இப்போது தான் புரிந்தது. கல்லறைதீவில் தான் தலைபாகையை எடுத்தோமே தவிர அவனது தலையை சோதனை செய்யாமல் விட்டு விட்டோமே என்று அவன் வருந்தினான்.

ஆதித்தனுக்கு என் தலை உனக்குத்தான் என்று ஆதியைப் பார்த்து ஏன் நீலன் சொன்னான் என்பது இப்போது தான் புரிந்தது.

"என்னை பின் தொடர்வது மரணத்தை தொடர்வதற்கு சமம். உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் அப்படியே திரும்ப சென்றுவிடு" என்றான் நீலன் தர்மபாலனை பார்த்து.

தர்மபாலனின் தலை தொங்கியது. "இனி உன் வழியில் குறுக்கிட மாட்டேன்" என்றான் ஈனஸ்வர மான குரலில்.

நீலன்" கப்பலின் வேகத்தை கூட்டுங்கள் போய் வருகிறேன் தர்மபாலா " என்றான்.முத்தழகி வேகம் பிடித்தது. அதை பார்த்து கொண்டிருந்த தர்மபாலனின் உதடுகளில் விசமபுன்னகை ஓன்று பூத்தது.

" தலையில் எழுதப்பட்ட அரச சாசனத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்," என்றான் ஆதித்தன் ஆச்சரியத்துடன் .

"ஓலை, செப்பு தகடு இவற்றை எளிதில் களவாடிவிடலாம். ஆனால் என் தலையை அவ்வளவு எளிதாக களவாட முடியாதல்லவா?" என்று சிரித்தான் நீலன்.

அங்கே

தர்மபாலனின் கப்பலில் .

"இனி என்ன செய்வது? கண் முன்னே பொக்கிசங்கள் போவதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதானா?" என்றான் நஞ்சுண்டன் எரிச்சலுடன்

"நாம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும். நீலன் அற்புதமான ஆலோசனை ஓன்றை எனக்கு தன்னையறியாமலேயே கொடுத்து சென்றிருக்கிறான். அதை பின்பற்ற வேண்டியது தான் "

'அவன் கூறிய ஆலோசனையா? அப்படி அவன் எதுவும் கூறியது போல் தெரியவில்லையே?"

"உன்னை பற்றி அவன் கூறியது தான் அந்த ஆலோசனை ?"

"என்னை அவன் துரோகி என்றல்லவா வசை பாடினான்?"

"அதை உண்மையாக்கி விட்டால்?"

"எனக்கு புரியவில்லை."

"புரியும்படியாக சொல்கிறேன். நீ எனக்கு துரோகம் செய்து இந்த கப்பலை கைப்பற்றி விட்டாய். நீ தான் இந்த நொடியிலிறந்து இந்த கப்பலின் மாலுமி.என்னை கப்பலின் கொடி மரத்தில் கட்டி வைத்துவிடு. கடற் கொள்ளையர்களின் மண்டையோட்டு கொடியை ஏற்றி விட்டு வளநாட்டின் கொடியை இறக்கி வையுங்கள். நீலனை நீ ஏமாற்றி கப்பலை களவாடியது போல் என்னையும் ஏமாற்றி கப்பலை உன்னுடையதாக்கி கொண்டு விட்டாய். நான் தாக்குதல் நடத்தினால் சிக்கல். உனக்கு அந்த சிக்கல் இல்லை. உன்னை யாரும் அடையாளம் காண முடியாது. அடையாளமோ சாட்சியோ சொல்ல நாம் யாரையும் விட்டு வைக்க போவதில்லை" என்றான் தர்மபாலன் விகார சிரிப்புடன்.

நஞ்சுண்டணிடமிருந்து நயவஞ்சக புன்னகை பூத்தது.

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 80

இரண்டாவது நரன்

தனக்கு முன்பாக மலை நாட்டுக்கு செல்ல மதிமாறன் முனைப்பு காட்டுவான் என்று தெரியாத ஆதித்தன் தன்னுடைய சிறிய படகான கழுகில் மோகினி தீவிற்கு விரைந்து வந்து கொண்டிருந்தான்.

அவனது வரவிற்காக துறைமுகத்தில் தர்மபாலனும், தீவினுள் நீலன் உட்பட நண்பர்கள் குழுவும் காத்து கொண்டிருந்தது.தர்மபாலன் ஆதித்தனைமடக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தான்.முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகம் என்பது போல் தனக்கும் கடலில் தான் பலம் அதிகம் என்று தர்மபாலன் நினைத்தான். அதே போல் கடலில் அனுபவம் பெற்ற நீலன் எதிர் தரப்பில் இருப்பதை அவன் மறந்துவிட்டிருந்தான்.

ஆதித்தன் வெகு விரைவிலேயே மோகினி தீவிற்கு வந்து சேர்ந்து விட்டான். எதிரியின் வருகையை பார்த்து தர்மபாலன் மகிழ்ச்சி அடைவது இதுவே முதல் முறை. ஆதித்தன் விரைவாக திரும்பி வந்து விட்டதால் இனி முத்தழகி நீண்ட நேரம் இங்கே நிற்காது. சீக்கிரமாகவே இங்கிருந்து கிளம்பி விடும் என்று தனக்குக்தானே ஆறுதல் கூறிக் கொண்டான் அவன்.

முத்தழகியில் இருந்த பொக்கிசங்களுக்கு பலத்த காவல் போட்டிருந்தான் யவனன். கப்பலில் இருந்து யாரும் இறங்கவோ ஏறவோ அவன் அனுமதி மறுத்துவிட்டிருந்தான். அதனால் வேறு வழியின்றி தர்மபாலன் நாய் எலும்பு துண்டை பார்ப்பது போல் அந்த கப்பலை பார்த்து கொண்டிருந்தான்.

அந்த காத்திருப்பு ஆதித்தனின் வருகையால் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என்று அவன் நம்பினான். ஆதித்தன் திரும்பி வந்துவிட்டதை பார்த்த நண்பர்கள் குழு மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியது.

அவனை கட்டி தழுவி தோழர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள். ஆதியை அங்கே பார்த்த ஆதித்தன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

"இந்த சிறுவன் எப்படி இங்கே வந்தான்? இவனைத் தானே நஞ்சுண்டன் கடத்தி சென்றான்?" என்றான் ஆதித்தன் கேள்விகுறியோடு.

" நான் அவனிடமிருந்து தப்பி வந்து விட்டேன்" என்ற ஆதி நடந்த விசயங்களை விவரித்தான்.

"அந்த பாவியை நான் கல்லறைதீவில் உயிரோடு சமாதி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அவன் உயிரோடு தப்பி பிழைக்க வேண்டுமானால் அவனுடன் இருக்கும் மூவரை கொன்று தின்றால் தான் முடியும். எனக்கு போட்டியாக இன்னொரு நரனை உருவாக்க வழி செய்து விட்டு வந்திருக்கிறேன்" என்றான் நீலன் பெருமிதமாக .

"இந்த சிறுவனை வில்லவனும் அவனது மனைவியும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவன் இங்கே இருக்கும் விசயம் அவர்களுக்கு தெரியாது"

ஆதியின் முகத்தில் ஏக்கம் படர்ந்தது.

"கவலைப்படாதே தம்பி. நான் ரகசிய தீவிற்கு திரும்ப வரும் போது உன் பெற்றோர்களை நீ சந்திக்கலாம். நீ என் உயிரை காப்பாற்றி இருக்கிறாய். அதை உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன். அதற்கு பிரதியுபகாரமாக உன்னை என் வாரிசாக்குவதென்று முடிவு செய்திருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்னிடம் தொழில் கற்றுக் கொள்ள உனக்கு விருப்பமா?" என்றான் நீலன்.

"எனக்கு விருப்பம் தான் . கடலை முழுதாக அறிய எனக்கு ஆசையாக இருக்கிறது" என்றான் ஆதி.

'அதற்கென்ன ?முழுதாக தெரிந்து கொண்டால் போயிற்று .ஓன்றை மட்டும் நினைவில் வைத்து கொள். நான் இறந்தால் என் கப்பலும், என் தலையும் உனக்குத்தான் "

"தலையா?அதை வைத்து என்ன செய்வது?" என்றான் ஆதித்தன்.

" எல்லாம் காரணமாகத் தான் சொல்கிறேன். தலையில்லாத உடலாகத் தான் என்னை புதைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கடைசி ஆசை." என்றான் நீலன் இலக்கில்லாமல் பார்த்தபடி.

அவனது புதிர் பேச்சு அங்கிருந்த வர்களை குழப்பியது.

சிறிது நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது.

சூழ்நிலையை கல கலப்பாக்க விரும்பிய யவனன் "ஆதித்தா! உனக்கொரு விசயம் தெரியுமா? நீலன் மதுவருந்துவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டான். யவன நாட்டிலிருந்து வந்த மதுவை கூட அவன் குடிக்க மறுத்து விட்டான்"

" உண்மையாகவா?" என்றான் ஆதித்தன் வியப்புடன்.

"ஆமாம். அந்த சைத்தானை நான் விட்டு விட்டேன். அதனால் நான் இழந்தவைகள் அதிகம்."

"கண்கெட்ட சூரிய வழிபாடு என்பது போல் வயதான காலத்தில் திருந்தியிருக்கிறாய். பரவாயில்லை. இப்போதாவது திருந்தி னாயே?"

உரையாடலை கவனித்து கொண்டிருந்த பைராகி"நாம் எதிர்பார்த்து காத்திருந்த ஆதித்தனும் வந்து விட்டான். நாம் இங்கிருந்து கிளம்பலாமே?" என்றான்.

அதற்குள்ளாக வா? இன்னும் சில நாட்கள் இங்கே தங்கிவிட்டு போகலாமே?" என்றான் மகேந்திரன்.

"மன்னித்து கொள் மகேந்திரா! விலை உயர்ந்த பொருட்களை கப்பலில் வைத்து கொண்டு இங்கே தாமதிப்பது சரியல்ல. நாங்கள் சீக்கிரமாக மலை நாட்டிற்கு சென்று இந்த பொக்கிசங்களை ஒப்படைக்க வேண்டும்" என்றான் நீலன்.

அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு விட்ட மகேந்திரனும் யவனனும் அவர்கள் கிளம்ப சம்மதித்தனர்.

இருவரிடமும் ப்ரியாவிடை பெற்றுக் கொண்டு நண்பர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்கள் துறைமுகத்திற்கு வந்து சேரும் வரை வழித்துணையாக யவனன் வந்தான்.

அவர்கள் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததை தொலைநோக்கி மூலம் பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டன் உற்சாகமானான்.

"தர்மபாலா .! இங்கே வந்து பார். இரைகிளம்பி விட்டது. நாம் அதை பின் தொடரும் நேரம் நெருங்கி விட்டது" என்று கூவினான் அவன்.

தர்மபாலன் விரைந்து வந்து நஞ்சுண்டனிடம் இருந்த தொலைநோக்கி கண்ணாடியை பிடுங்கினான். அதில் கண்ணை வைத்து பார்த்தவன் சந்தோசத்தில் மூழ்கினான்.

நீலனின் கண்களில் தொலைநோக்கியின் எதிரொளி பட்டதை உணர்ந்தவன் கப்பலை கவனித்தான். அது தர்மபாலனுடையது என்று கண்டு கொண்டவன்" இந்த கப்பல் எதை இறக்க அல்லது ஏற்றி செல்ல இங்கே காத்திருக்கிறது?" என்றான் யவனனிடம்.

"அப்படி எந்த வணிக நடவடிக்கைகளிலும் இந்த கப்பல் ஈடுபட்டது போல் தெரியவில்லை. நீங்கள் இங்கே வந்த அன்றுதான் இந்த கப்பலும் இங்கே வந்தது. "

"இது வளநாட்டு மாலுமி தர்மபாலனுக்கு சொந்தமானது. அவன் பொக்கிசங்களை கைப்பற்ற எங்களை பின்தொடர்ந்து வருவது போல் தோன்றுகிறது இப்போது கூட அவன் எங்கள் நடவடிக்கைகளை தொலைநோக்கி மூலம் கண்காணித்து கொண்டிருக்கிறான். என்று நீலன் தன்னுடைய சந்தேகத்தை கூறினான்.

"நான் வேண்டுமானால் அவனை விசாரணை செய்து அவனது பயணத்தை தாமதப்படுத்தவா?" என்றான் யவனன் பரபரப்புடன்

"வேண்டாம் நண்பா! நான் அவனைப் பார்த்து கொள்கிறேன்" என்றான் நீலன்.

யவனனிடம் விடை பெற்றுக் கொண்டு நண்பர்கள் கிளம்பினார்கள்.

அவர்கள் கப்பலுக்கு வந்து சேர்ந்ததும் நங்கூரம் உயர்த்தப்பட்டு கப்பல் அங்கிருந்து கிளம்பியது. ஹேர்குலஸ் கப்பலை இரண்டு முறை வட்டமிட்டு விட்டு யவனனின் தோள்களில் அமர்ந்தது. யவனன் கரையில் கண்ணீர் மல்க நின்றபடி போய் வாருங்கள் நண்பர்களே என்று கையை ஆட்டினான். 

கப்பல் மோகினி தீவிலிருந்து கிளம்பியது.தர்மபாலனின் கப்பலும் அங்கிருந்து கிளம்பியது.

தன் அறைக்கு போய் விட்டு கப்பலின் மேல் தளத்திற்கு வந்த நீலன் தன்னை தர்மபாலனின் கப்பல் பின்தொடர்கிறதா என்று பார்க்க தொலைநோக்கியை எடுத்து கண்ணில் பொருத்தினான்.

அந்த கப்பலில் இருந்தும் யாரோ தன்னை தொலை நோக்கியில் பார்ப்பதை நீலன்கண்டான். அவனைப் பார்த்து நட்புடன் கை அசைத்தான். அவனும் தொலைநோக்கியை கீழே இறக்கிவிட்டு கையை அசைத்தான். அவன் நஞ்சுண்டன் .

அவனைப் பார்த்ததும் இடி விழுந்த நாகம் போலானான் நீலன். "இவன் எப்படி உயிரோடு இங்கே வந்தான்?" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.இன்னொரு நரன் எப்படி உருவானான் என்பது புரியாமல் குழம்பினான் அவன்.