“தமிழில் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லைங்க தம்பி! வித்தியாசமான சப்ஜெக்ட்! நீங்க பண்ணிணா நல்லாருக்கும்! “என்றார் கதாசிரியரும், டைரக்டருமான மார்த்தாண்டம்.
“வர்ர டைரக்டரெல்லாம் இதேதான் சொல்ரீங்க.ஆனா பழைய மாவை அரைக்கிறீங்க! பேஸ்புக்ல கழுவி ஊத்தராங்க! “என்றான் குமார்.தமிழ் திரையுலகின் முண்ணனி ஹிரோவாக வளர்ந்து வரும் நடிகன்.
அடிபட்ட பார்வை பார்த்த மார்த்தாண்டம் “என்னோட கதை சைக்கோ மாதிரி தம்பி! எப்படி அந்நியன்ல டிஸ்ஆர்டர் பர்சனாலிட்டியை யூஸ் பண்ணாங்களோ அதே மாதிரி இதுல நெக்ரோ மேனியாக்குன்னு ஒரு விசயத்தை யூஸ் பண்ணியிருக்கேன்.!
“நெக்ரோமேனியாக்குன்னா என்னன்னே? “
“செத்த பிணத்துடன் செக்ஸ் வைச்சிக்கர பழக்கத்துக்கு பேரு.!நம்ம கதை வில்லன் இந்த கேட்டகிரி.ப்ளாஷ்பேக் கேட்டா மிரண்டுருவீங்க! “
“சொல்லுங்கண்ணே! கேப்போம்! “
“ஒரு கிராமம் தம்பி! அந்த ஊருல கன்னி கழியாம விபத்துலயோ, நோயிலியோ செத்துப்போற பொண்ணுக சொர்க்கத்துக்கு போக முடியாதுன்னு ஒரு நம்பிக்கை.அதனால வெட்டியானை விட்டு அந்த செத்த உடம்போட செக்ஸ் வைச்சுக்க சொல்லி அப்புறம் புதைப்பாங்க! மின் மயானம் வந்ததால அவனுக்கு வேலை இல்லாம போகுது.பொழப்பு தேடி சிட்டிக்குள்ள வர்ரவனுக்கு அந்த எதிர்ப்பே இல்லாத, சத்தமே இல்லாத செக்ஸ் தேவைப்படுது.பொண்ணுங்களை கொன்னுட்டு செக்ஸ் வைச்சிக்கிறான்.அவனை போலீஸான நீங்க கண்டு பிடிக்கரீங்க! “
“அண்ணே! ப்ளாஷ்பேக்லயே அசத்திட்டீங்க! சிகப்பு ரோஜாக்கள் மாதிரி இருக்குண்ணே! இந்த படத்தை நாம பண்ரோம்! “
“இன்னொரு விசயம்.இதில் உங்களுக்கு டபுள் ரோல்.ஹீரோ வில்லன் ரெண்டுமே நீங்கதான்! ஒரு லவ் ஸ்டோரியும், க்ரைம் ஸ்டோரியும் சேர்ந்தே வரும்.ராஜேஷ்குமார் நாவல் மாதிரி! “
“பிரமாதம்னே! இதை பண்ணலாம்னே! “
“அப்புறம் இன்னொரு புதுமை தம்பி.படத்துக்கு ரெண்டு பேரு! கடைசியா கமல் நடிச்ச உல்லாச பறவைகள்கிற படத்துக்குத்தான் டபுள் டைட்டில் வைச்சாங்க! அதுக்கப்புறம் நம்ம படத்துக்குத்தான்! “
“வித்தியாசமா பண்ரீங்கண்ணே! நாளைக்கு காண்ட்ரேக்ட் சைன் பண்ணிக்கலாம்ணே! சம்பளத்தை மேனேஜர்கிட்ட பேசிக்குங்கண்ணே! “
கும்பிட்டு விட்டு கிளம்பிய குமாரை வழியனுப்பி விட்டு மேனேஜரிடம் மூன்று கோடி ரூபாய்க்கு சம்பளம் பேசி முடித்து விட்டு கிளம்பினார்.மாலையில் காண்ட்ராக்ட் ரெடி பண்ணிக் கொண்டிருந்த போது போன் அடித்தது.குமாரின் மனேஜர்தான் லைனில் இருந்தார்.
“சொல்லுங்க! என்ன விசயம்? “என்றார் மார்த்தாண்டம்.
“குமார் அண்ணன் இன்னும் ஒரு சி சேர்த்து கேட்கிறாருங்க! “
“இதென்னங்க நியாயம்? “
“அண்ணனோட மார்க்கெட் உங்களுக்கே தெரியும்! டபுள் ரோல்னா நிறைய டைம் ஆகும்.வில்லன் வேசத்துக்கு வேற ஆள் போட்டாலும் சம்பளம் கொடுக்கத்தானே செய்வீங்க? அதைத்தான் அண்ணன் கேட்குறாரு! “
“இது தப்புங்க! முதல் டபுள் ரோல் படம்னு அவருக்குத்தாங்க பெருமை! “
“நாலு கோடின்னா படம் பண்ணலாங்க! இல்லைன்னா ஏவி எம் வெயிட்டிங்ல இருக்கு! “
“சரி! வாங்கிக்கலாம்! “
கோபத்துடன் போனை வைத்தவர் “என்னாச்சு சார்? “என்ற அசிஸ்டெண்டை நிமிர்ந்து பார்த்தார்.
“குமாருக்கு இன்னும் ஒரு கோடி வேணுமாம்! “
“முதல்ல வர்ர குதிரைங்க அவரு! கொடுக்கலாம் தப்பில்லை! “
“ஆனா இந்த சம்பளம் அதிகம்! ஸ்கிரிப்டை கொடு! “
வாங்கிக் கொண்டு அறையை தாழிட்டவர் விடிய விடிய எழுதிக் கொண்டிருந்தார்.மறுநாள் அட்வான்ஸ் கொடுத்து விட்டு ஷுட்டிங்கை ஆரம்பித்தார்.மூன்று மாதங்களுக்கு பிறகு குமாரின் “மவுன கொலை! “வெளியாகி ஓட ஆரம்பித்தது.அதில் ஆண்டி ஹீரோவாக குமார் கலக்கியிருந்தான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு குமாரின் மற்றோரு படமான “ஒற்றை ரோஜா “விற்கு விளம்பரம் வந்திருந்தது.முற்றிலும் காதல்கதை என்றது விளம்பரம்.
“என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? “என்றான் போனில் குமாரின் மேனேஜர்.
“ஆமாய்யா! உங்காளு நடிச்சது ஒரு படமில்லைய்யா! ரெண்டு படம்.சொன்ன கதையை தனித்தனி கதையா மாத்திட்டேன்! காண்ட்ராக்ட்ல தெளிவா சின்ன எழுத்துல எழுதியிருப்பேன் பாரு! “
“இதெல்லாம் தப்புங்க! “
“இதை நான் சொல்லனும்! தகுதிக்கு மேல சம்பளம் கேட்டா இதுதான் நடக்கும்.உங்காளு ஹீரோன்ற திமிரை காட்டுனான்.நான் கதாசிரியர்கிற திமிரை காட்டிட்டேன்.எல்லாமே சட்டப்படிதான் பண்ணியிருக்கேன்.போனை வை! அடுத்த படத்து கதையை யோசிக்கனும்! “
மார்த்தாண்டம் போனை வைத்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.