"காரணம் இன்றி காரியமில்லை.!இதுதான் கிரிமினாலாஜியின் அடிப்படை.இந்த காரணம்னு தமிழ்ல சொல்வதைத்தான் மோட்டிவ்னு இங்கிலீஸ்ல சொல்கிறோம்.எந்த கொலைக்கும் ஒரு காரணம் இருக்கும்.!அது அக்கியுஸ்டுக்கு மட்டுமே கொலை செய்யும்போது தெரியும்.!விசாரணையின் முடிவில் அந்தக் காரணம் எல்லோருக்குமே தெரிய வரும்.!"புரபஸர் சற்றே நிறுத்தினார்.
"எந்த மோட்டிவும் இல்லாமல் ஒரு கொலையை செய்ய முடியாதா புரபஸர்.!"இது நான்.கிரிமினாலாஜி மாணவன்.
எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"குட் கொஸ்டின்.!ஒரு கொலை.!ஒரு கொலைக்கு எந்த மோட்டிவும் இல்லை என்பதே ஒரு மோட்டிவாக மாறிவிடும் அல்லவா.!அந்த ஓரு கொலைக்கு மோட்டிவ் தெரியலைன்னாலும் அடுத்தடுத்த கொலைகளில் மோட்டிவ் இல்லை என்பது தெரிந்துவிடும்.!எவனோ ஒருவன் காரணமே இல்லாம கொலை பண்றான்னு கண்டு பிடித்து விடலாமே.!"
"அப்ப மோட்டிவை வைத்து கொலைகாரனை கண்டுபிடிக்க முடியுமா.?"
"அப்படியும் சொல்ல முடியாது.பதினேட்டாம் நூற்றாண்டில் ஜாக் தி ரிப்பர்னு ஒரு கொலைகாரன் ஐந்து விலைமாதர்களை கொலை செய்தான்.விலை மாதர்களை கொல்வது அவனது மோட்டிவாக இருந்தது.ஆயிரம் துப்பு கிடைத்தும் கொலையாளி இன்னைக்கு வரை பிடிபடவேயில்லை.ஜாக் தி ரிப்பர் யாருன்னு ஏகப்பட்ட அனுமானங்கள்.அவன் இங்கிலாந்து அரசகுடும்பத்தை சேர்ந்த மன நோயாளி என்பதுவரை பல யூகங்கள் இன்னைக்கு வரைக்கும் ஜாக் தி ரிப்பரை சாகாமல் வைத்திருக்கிறது.!"
"அவன் சீரியல் கில்லர்தானே புரபசர்.!"
"யெஸ்.!இதில் என்ன காமெடின்னா தெருவுல போற எவனாவது அந்தகாலகட்டத்துல ஒரு விலை மாதை கொன்றிருந்தாலும் அது ரிப்பரின் கணக்கில்தான் சேரூம்.!இதே மாதிரிதான் ஜோடியாக் கில்லர் தான் செய்த கொலைகளைப்பற்றி போலிசுக்கு சங்கேத வார்த்தைகளில் கடிதம் எழுதினான்.ஏழு பேத்துல ஒருவனாக அவன் மேலும் சந்தேகம்.அவனை தூக்கில் போட்ட பின் கொலையும் நடக்கலை.கடிதமும் வரலை.அதே போல் சன் ஆப் சாம்.இவங்க ரெண்டு பேத்துக்கும் மோட்டிவே கிடையாது.சன் ஆப் சாம் காதில் குரல் கேட்டால் கொலை செய்யும் இயல்பு கொண்டவன்.!"
"நம்ம காலேஜ் கேம்பஸ்குள்ள இந்த ரெண்டு மாசத்துல ரெண்டு கொலை நடந்துருக்கே புரபஸர்.!அதுக்கு என்ன மோட்டிவ் இருந்திருக்க முடியும்.?"
"போலீஸ் விசாரிக்கிற கேஸைபத்தி பேசக்கூடாது பையா.!லீவ் இட்.!கிளாஸ் இத்தோடு முடிகிறது.!"
புரபஸர் கிளம்பி விட்டார்.எனக்கு சைக்கோ கொலைகாரர்கள்,சீரியல் கில்லர்கள் மீது ஒருவிதமான போதையிருந்தது.மோட்டிவ் இல்லாத ஒரு கொலை.!நாமே செய்தால் என்ன.?நான் கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆள்.இந்த சப்ஜெக்ட் என்னை திரில்லான ஒரு விசயத்தை செய்ய தூண்டிக் கொண்டிருந்தது.யாரை கொல்வது.?மோட்டிவ் இல்லாத கொலை சாத்தியமில்லை என்று சொன்ன புரபஸர்.!சரியான தேர்வுதான்.!ஏற்கனவே இரண்டு கொலைகளை யாரோ செய்திருக்கிறார்கள்.அந்த எக்ஸின் கணக்கிலேயே நான் செய்த கொலையும் சேர்ந்துவிடும் என்பது திருப்தியாக இருந்தது.!இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்துவிரிந்த காலேஜ் கேம்பஸ் மற்றோரு கொலைக்கு காத்திருந்தது.மறுநாள் புரபஸரும் நானும் அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாக இருந்தோம்."தனியாக பேசனும்னு சொன்னியே! அது என்னன்னு சொல்லுப்பா.?"
"மோட்டிவ் இல்லாம ஒரு கொலையை செய்ய முடியாதா சார்.!"
"அதான் சொன்னேனே.!மோட்டிவ் இல்லாததே ஒரு மோட்டிவாக மாறிவிடும்னு.!"
"எனக்கு இந்த சப்ஜெக்டெல்லாம் படிச்சு ஒரு கொலை செய்தால் என்னன்னு ஓரு எண்ணம் வந்திருச்சு புரபஸர்.!என் ஆசைக்கு ஒரு தடவை செத்துப்போயிருங்களேன்.!
"நான் கத்தியை உருவினேன்.
"மூணு வருசம் படிக்கிற உனக்கே கொலை செய்ய ஆசை வந்தா முப்பது வருசமா இதையே பாடமா நடத்துற எனக்கு கொலை பண்ற வெறி இருக்காதா.?"
"என்ன சொல்ரீங்க புரபஸர்.!"
"மெண்டல் ஆஸ்பிட்டல் டாக்டர்க பாதிபேரு மெண்டல் மாதிரியே இருப்பாங்க.!அதே மாதிரிதான் நானும்.!இப்போது நான் முழுக்கொலைகாரனை உள்ளே ஒளிய வைச்சிருக்கேன்.கேம்பஸ்ல செத்த இரண்டு பேத்தையும் நான்தான் கொன்னேன்.இப்ப மூணாவதா உன்னையும் கொல்லப் போகிறேன்.!"
நான் இதை எதிர்பார்க்கவில்லை.கையிலிருந்த கத்தி நழுவியது.நான் ஒட முற்பட்டபோது புரபஸரின் பெல்ட் என் கழத்தை சுற்றி நெரித்தது."மோடிவ் இல்லாத மூணாவது கொலை.!ஒவ்வொரு கொலையும் ஒவ்வோரு விதம்."!புரபஸர் காதருகே முணுமுணுத்ததை கடைசியாகக் கேட்டேன்.!
திங்கள், 14 செப்டம்பர், 2015
கொலைகள் பலவிதம்.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக