செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

கடவுள்.!

தன் முன் உட்கார்ந்திருந்த ஜெகனை குறுகுறுவென பார்த்தார் விஞ்ஞானி ஆத்மா.!இந்த முறை எந்த வில்லங்கத்தை வைத்திருக்கிறானோ கிழவன் என்ற பதைபதைப்பிலிருந்தான் ஜெகன்.இப்போது ஜெகனைபற்றி.!யாருமற்ற அனாதை.போதைக்கு அடிமையானவன்.உழைக்க விரும்பாத சோம்பேறி.ஆய்வக சுண்டெலிகளுக்குபிறகு மனிதனுக்கான சோதனைக்கு தன் உடலை கொடுத்து போதை வளர்ப்பவன்.!

"கடவுளைபற்றி என்ன நினைக்கிறாய்.?"
எப்போதும் மாத்திரை,ஊசி என்று போடும் கிழவன் திடிரென கடவுளைப்பற்றிப் பேசியது ஜெகனுக்கு வித்தியாசமாக இருந்தது.
"செத்த பின்னாடிதானே அவர பாக்க முடியும்.?"

"நோ பையா.!உயிரோடு இருக்கும்போதே கடவுளை பார்க்கும் கருவியை கண்டு பிடித்துள்ளேன்."

"தியானம்,யோகா பண்ணித்தான் அவர பார்க்க முடியும்னு சொல்ராங்க.!
"ஆம்.!நீண்ட கால தேடலான யோகா,தவம்,எல்லாத்தையும் சுருக்கி விட்டேன்.!"
மேஜையின் மீதிருந்த புத்தகத்தை எடுத்தவர் அதன் நடுப்பக்கத்திலுள்ள இரண்டு பேப்பர்களின் நுனியை பிடித்துக் கொண்டு "இரண்டுக்கும் நடுவே எவ்வளவு இடைவெளியிருக்கும்.?"என்றார்.
"அரை அடி இருக்கும்.!
"குட்.!ரெண்டு பேப்பரையும் ஒண்ணா சேர்த்தா நடுவில் இடைவெளி காணாம போயி பேப்பர் ஒன்னா இருக்குமா.?"
"ஆமாம்.!"
"பக்கத்துக்கு இடையிலான தூரத்தை குறைத்தமாதிரி கடவுளை காண்பதற்கான நேரத்தை குறைத்திருக்கிறேன்.!என்னுடைய கடவுளைக் கண்டறியும் கருவி ரெண்டு மணி நேரத்தில் கடவுளை காட்டிவிடும்.!"
"கடவுளை பார்த்து என்ன பயன்.?"
"E-mc2 சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடிச்ச பின்னாடி ஐன்ஸ்டின் இதை நான் கண்டு பிடிச்சேன்னா யாரு ஒளிய வச்சான்னு கேட்டாரு.நிச்சயமா கடவுள்தான் ஒளித்து வைத்திருப்பார்.அந்த மாதிரி ஒளிய வைத்ததையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.நாம எப்ப,எப்படி சாகப் போறோம்னு தெரிஞ்சுக்கலாம்,வரம்,சாபம் உண்மையான்னு தெரிஞ்சுக்கலாம்.!"
ஜெகனின் மனசு கிழவனும் டோப்பு போட்டுவிட்டு உளறுகிறானோ என்று நினைத்தது.

அவனுடைய நினைப்பை பொய்யாக்கும் வகையில் ஆத்மா அந்த பெட்டியை எடுத்து மேஜைமீது வைத்தார்.ஹேல்மெட்,வாக்மேன் போன்றதெல்லாம் இணைத்து வினோதமாக இருந்தது அந்த பெட்டி.!
"இப்போது கடவுளைப்பார்க்க போகிறாய்.!"
ஹேல்மெட் தலையில் மாட்டப்பட்டு ஹேட்செட் காதில் மாட்டப்பட்டது.
"கண்களை மூடு."!
ஜெகன் கண்களை மூடியதும் சிவப்பு நிறம் பரவி கருப்பானது.எண்ணங்கள் அற்ற ஸ்தூலமானான்.ஏகாந்த அமைதி நிலவி முதுகெலும்பிலிருந்து எதுவோ உருண்டு நெற்றியில் நின்றது.
"இதுதான் குண்டலினி."என்றது ஆத்மாவின் குரல்.நீண்ட கரும் பயணத்தின் முடிவில் ஒரு பேரொலி விட்டு விட்டு தெரிந்தது."அதுதான் கடவுள்.கடவுளை நாம் இருவரும் பார்த்து விட்டோம்.!நாளை பேசப் போகிறோம்.!"
ஜெகனை இயந்திரத்திடமிருந்து அகற்றியவர் ,கொஞ்சம் பணத்தை கொடுத்து நாளைக்கு வா என்று அனுப்பினார்.!தான் கஞ்சா அடித்ததன் குளறுபடிகள் என்று நினைத்தபடி டோப்பு விற்கும் வியாபாரியை தேடி ஜெகன் கிளம்பி விட்டான்.!

இரண்டு மணி நேர ஆராய்ச்சியில் கடவுளுடன் பேசும் வழியை கண்டறிந்த ஆத்மா ஹேல்மெட்டையும்,ஹேட் செட்டையும் மாட்டிக்கொண்டு தியானத்தின் வழியே பயணமானார்.!
பிரமாண்ட பேரொளியை கடைசியில் கண்டவர் "நீங்கதான் கடவுளா.!செத்த பின்னாடிதான் உங்களை பாக்க முடியும்னு சொல்ராங்க.!உண்மையா.?"என்றார்.
"உண்மைதான்! நீ கூட செத்து போய்தான் இங்கு வந்திருக்கிறாய்.!"
"என்ன சொல்ரீங்க.?"ஆத்மாவிற்கு வியர்த்தது.!
"நீ தியான பகுதியில் சஞ்சாரம் செய்யும்போதே இறந்து விட்டாய்.!சந்தேகம்னா பார்.!"
கடவுள் மறைய மேஜையின் மீது இன்னொரு ஆத்மா ஹேல்மெட் மாட்டிய நிலையில் செத்துக் கிடந்தார்.!

1 கருத்து: