திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இறவாத வரம்.!

"நாளைக்கு அப்பாவை பார்க்க அனுமதி கிடைத்திருக்கிறது."அம்மாவின் தகவல் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
அப்பா.!
பிறந்ததிலிருந்து நான் பார்க்காத இந்த நகரமே கொண்டாடும் அப்பா.!
வருடம் ஒருமுறை டி.வியில் உரையாற்றும் அப்பா.!
மூன்றாம் உலகப்போரில் தப்பிப் பிழைத்த பத்தாயிரம் மனிதர்களை கொண்டு கண்ணாடி சூழ்ந்த இந்த நகரத்தை நிர்மாணித்து வழிகாட்டும் அப்பா.!அவர் விஞ்ஞானிதான்.ஆனால் கடவுளுக்கு நிகராகத்தான் நகர மனிதர்கள் நினைத்தனர்.கருத்த சூரியனும்,அமில மழையும் எப்போதாவது கண்ணாடி கூரையை பொசுக்கிவிட்டு நகர்வார்கள்.!ப்ளூம் பாக்ஸ்கள் தீராத மின்சாரத்தை உற்பத்தி செய்து நகரத்தை வெளிச்சமாக்கின.!நான் அப்பாவைப்பற்றிய ஏராள கனவுகளுடன் தூங்கிப்போனேன்.!

காலையில் அப்பா இருக்கும் தலைமை செயலகத்திற்கு பயணப்பட்டோம்.அண்டர்கிரவுண்டின் பாதுகாப்பு மிகுந்த இருண்ட அறையில் செலுத்தப்பட்டோம்.!உற்பத்தியான மெல்லிய வெளிச்சத்தில் காற்றில் உற்பத்தியான அப்பா ஹல்லோகிராமின் த்ரிடீ டைமென்சனில் நடந்து வந்தார்.!"வெல்கம் மை பாய்.!இத்தனை நாள் உன்னை பார்க்காமல் இருந்ததற்கு மன்னி.!"என்றார்.அப்பாவின் கைகளை தொட முயன்றேன்."நான் பேசுவதை கேட்க முடியும்.ஆனால் என்னை தொட முடியாது.!அங்கே பார்."அப்பாவின் விரல் காட்டிய திசையில் ஒரு மனித மூளை ஏராள ஓயர்கள் இணைக்கப்பட்டு கம்யூட்டருடன் காணப்பட்டது."அதுதான் உண்மையான நான்.!இது விஞ்ஞானத்தின் விளையாட்டு"
"இறப்பில்லா பெரு வாழ்வு."என் உதடுகள் முணுமுணுத்த போது கண்களில் கண்ணீர் வழிந்தது."என் அறிவுக்கான சாபம்.மைபாய்.!"அப்பாவின் கைகள் என் கண்ணீரை துடைக்க முயன்று தோற்றன.!அப்பாவின்ஹல்லோகிராம் உருவிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வழிந்தது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக