செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

தவற விடக்கூடாத லூஸி.!

சமீபத்தில் பார்த்த லூசி திரைப்படம் பலமான அதிர்வை என்னுள் ஏற்படுத்தியது.
மனிதன் தன் மூளையின் மொத்த திறனில் பத்து சதவீதத்தை பயன்படுத்தியே இன்றைய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறான்.தன் மூளையில் இருபது சதவீதத்தை பயன்படுத்தி வரும் இன்னொரு உயிரினம் டால்பின்.
மனிதன் தன் மூளையின் மொத்த நூறு சதவீதத்தை பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்ற விபரீத கற்பனையே லூசி திரைப்படம்.

தைபேயில் படிக்கும் ஸ்கார்லேட் ஜாக்சன் தன் போதை பொருள் கடத்தும் நண்பனின் வற்புறுத்தலால் விபரீத மருந்தடங்கிய பெட்டியை ஒரு போதை கும்பலிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள்.அந்த மருந்தை லூசியின் உடலில் செலுத்துகிறது அந்தக் கும்பல்.அதன் விளைவாக லூசியின் மூளை அதீதமாக சிந்திக்கிறது.எல்லா விசயங்களையும் அவளால் சீக்கிரம் கற்றுக்கொள்ள முடிகிறது.உடலையும்,மனதையும் கட்டுப்படுத்தும் சக்தி பெறும் லூசி அந்தக்கும்பலை எப்படி அழிக்கிறாள்.அவளதுமூளை நூறு சதவீதத்தில் வேலை செய்யும்போது அவளுக்கு என்ன நடக்கிறது என்பதையும் ஆக்ஸன் கலந்து அதகளமாய் சொல்லியிருக்கிறார்கள்.தமிழ் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறாள் இந்த லூஸி.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக