பீட்டாவில் ஒருநாள்!
"யோவ்! என்னய்யா நாய வளர்ந்துன.!தின்னுட்டு கழிஞ்சுட்டே இருக்கு.!"
"நாயின்னு சொல்லாதீங்க அது பேரு ஜிம்மி.!"
"இன்னையோட 15நாள் முடிஞ்சுது கூட்டிட்டு போ.!"
"இன்னைக்கு ஜிம்மிய கூட்டிட்டு போக நான் வரலைன்னா என்ன பண்ணுவீங்க.?"
"ஊசி போட்டு கொன்ருவோம்.!அதுக்கு கோர்ட் பர்மிசன் கொடுத்திருக்கு.!"
"நம்ம ஜிம்மி ஏதாச்சும் தொந்தரவு பண்ணுச்சா.?"
"தின்னுட்டு,தின்னுட்டு கழியுது.நைட்டு ஒரே ஊளைசத்தம். தூங்க முடியல.!இதுக்கே ஒரு ஆளு வேணும்.!"
"தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க.!"
பீட்டாவிலிருந்து வெளியே வந்தவன் பத்தடி தூரத்தில் நின்றவனை பார்த்து சிரித்து விட்டு நாயை கை மாற்றினான்."பேரு டைகர்னு சொல்லு.!"என்றான்.நாயை வாங்கியவன் மறுபடியும் பீட்டாவினுள் புதிதாக நுழைந்து "இது தெருவில் திரிஞ்சது.!பாத்துக்குங்க.!பாத்துக்குவீங்கன்னு சொன்னாங்க"என்றான்.
"பாத்துக்குவோம்.இதை பாத்த மாதிரியே இருக்கே !இது பேரு ஜிம்மிதானே.!"
"தெரியலீங்க.!நான் டைகர்னு பேரு வச்சிருக்கேன்.!"
"இந்த நாய இப்பதான அனுப்பினோம்.?"
"ரெண்டு நாயும் டுவின்ஸா இருக்குமோ.?மனுசன் மட்டும்தான் டுவின்ஸா இருக்கனுமா? "
"அப்படி சொல்லலை!15 நாளில் நாயத்தேடி யாரும் வரலைன்னா ஊசி போட்டு கொன்ருவோம்.!பாத்துக்குங்க.!"
"அப்ப சாகரவரைக்கும் எந்த மிருகத்தையும் பாத்துக்க மாட்டிங்களா.?"
"நாங்க பிச்சைதான் எடுக்கனும்.!"
.அப்ளிகேசனை பில் பண்ணி நாயை உள்ளே கொண்டு போய் விட்டு விட்டு திரும்பிய போது வேறோருவன் கையில் வட்டக்கூடையுடன் நின்றிருந்தான்.
"என்னப்பா இது? "
"பாம்புங்க.!ராஜநாகம்.!"
"அது கூலிங்கான இடத்துலதான் வாழும்.ஏசிலதான் வைக்கனும்.இங்க ஏசி வசதி இல்லையே.!"
"ஏங்க இல்லை.?உங்க ஆபிஸ்ரூம் புல்லா ஏசிதானே.?அங்க வைச்சி பாத்துக்குங்க.மனுசன விட மிருகங்கள்தானே உங்களுக்கு முக்கியம்.!" .என்றவன் ஆபிஸ் டேபிளில் பாம்பை விட்டான்.
"யோவ்.!என்னய்யா பண்ரே.!"
"பேரு ருத்ரன்.தினக்கி ஒரு லிட்டர் பாலும் 5முட்டையும் சாப்பிடுவாரு.அப்ளிகேஷனை பில் பண்ணிக்குங்க.அவசரப்பட்டு கைல பிடிச்சிராதீங்க.!பல்லு இன்னும் புடுங்கலை.!"
அவன் சிரித்தபடி வெளியேறினான்.#இப்படி சாவடிக்கனும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக