செவ்வாய், 3 ஜனவரி, 2017

பாசம்

தினேஷ் வேலையில் ஆழ்ந்திருந்த போது போன் மணி அடித்தது.எடுத்து "ஹலோ! "என்றவன் எதிர்முனையில் கேட்ட ஸ்வேதாவின் குரலில் எரிச்சலானான்.""நீ கேட்ட டைவர்ஸுக்குத்தான் ஒத்துகிட்டேனே? இன்னும் எதுக்கு போன் பண்ணி இம்சை பண்ற? "என்றான்.
"நடிக்காதடா! டைவர்ஸுக்கு ஒத்துக்கற மாதிரி நடிச்சுட்டு எம்புள்ளைய எதுக்கு கடத்திட்டு போன? "என்றாள் ஸ்வேதா கோபமாய்.

"என்னடி சொல்ர? தேவிய காணோமா? "என்றான் அதிர்ச்சியாய்.

"அப்ப நீ அவளை ஸ்கூல்லருந்து கூட்டிட்டு போகலியா? "

"இல்லியே! என்னாச்சுடி அவளுக்கு! என்ன பண்ணித் தொலைஞ்ச? "

"ஸ்கூல்லருந்து அவளை காணோங்க! யாரோ கூட்டிட்டு போயிட்டாங்க! நீங்க கூட்டிட்டு போகலியா? "

"அவளுக்கு எதாவது ஆச்சு.செத்தடி நீ! இரு வீட்டுக்கு இப்பவே வர்ரேன்! "

தினேஷ் வண்டியில் கிளம்பும்போது தேவியின் குரல் காதில் கேட்டது."ஏம்ப்பா! எப்ப பார்த்தாலும் ரெண்டு பேரும் சண்டை போடுரீங்க! எனக்கு பிடிக்கவேயில்லை! "எங்கடா இருக்க என் கண்ணு! உனக்காகத்தானே அவளோட இம்சையை பொறுத்துக்கிட்டேன்.டைவர்ஸுக்கு கூட சம்மதிச்சேனே!

அவன் வீட்டிற்குள் நுழைந்த போது வக்கீல் உட்கார்ந்திருந்தார்."என்ன தினேஷ்! நீங்க எதுவும் டிராமா பண்ணலையே? "என்றவரை முறைத்தவன் "கிளம்பு! போலீஷ் ஸ்டேசன்ல கம்ளைண்ட் பண்ணலாம்! "என்றான்.அழுது கொண்டிருந்தவள் "சரி வாங்க! போலாம்! "என்று எழுந்தாள்."வெயிட் பண்ணுங்க! ரெண்டு நாள் பார்ப்போம்.அப்புறம் கம்ளைண்ட் கொடுக்கலாம்.முதல்ல நாம விசாரிச்சு கண்டு பிடிக்க டிரை பண்ணலாம்! "என்றார் வக்கீல்.

"எல்லாம் இவளால! பெண்ணுரிமை பேசி புள்ளைய தனியா விட்டுட்டு வேலைக்கு போறேன்னு! பாவம்டி அவ.ஸ்கூல் விட்டு வந்து தனியா டிவி பார்த்து கூட விளையாட யாரும் இல்லாம.!உனக்கு உம் படிப்பும் அதுல வந்த திறமையும் வேலையும்தான முக்கியம்.அதை வைச்சுகிட்டு இப்ப அழு! "

"எனக்கு இப்ப புரியுது.!'

"புரிஞ்சு என்ன பண்ண.தேவி இல்லையே! "

தினேஸிம் அவளும் தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பித்தனர்.வக்கீல் அங்கிருந்து கிளம்பினார்.

அவர் தன் வீட்டையடைந்து காலிங்பெல்லை அடித்த போது அவரது மனைவி கதவை திறந்தாள்.உள்ளே நுழைந்த போது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த தேவி ஓடி வந்து "என்னாச்சு அங்கிள்? "என்றாள்.

"இப்பத்தான் உன்னைப்பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க! இன்னும் ஒருநாள்ல தங்களோட தப்பையெல்லாம் உணர்ந்து திருந்திருவாங்க.!"

"நீங்க ஏன் அங்கிள் என்னோட அப்பா அம்மாவை பிரிச்சு வைக்காம சேர்த்து வைக்க டிரை பண்ரீங்க? "

"என்னோட அப்பா அம்மாவும் டைவர்ஸ் பண்ணிட்டு வெவ்வேறு ஆட்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை அனாதையாக்கிட்டாங்க.அம்மாவோ, அப்பாவோ இல்லாம வாழரது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும்.சாப்பிட்டியான்னு கேட்ககூட யாரும் இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ்ந்தேன்.அடிச்சு புடிச்சு படிச்சு வக்கீலாயிட்டேன்.அன்னைக்கு முடிவு பண்ணினேன்.டைவர்ஸ் வாங்கித்தந்து எந்த குழந்தையையும் அனாதையாக்கிவிடக்கூடாதுன்னு.!அதைத்தான் உன்னோட ஒத்துழைப்போடு செய்து கொண்டிருக்கிறேன்.எல்லாகுழந்தைகளும் அம்மாஅப்பா ஒன்னா சேர இதுக்கு ஒத்துழைப்பதுதான் ஆச்சரியம்.!"

"என்னோட உலகம் அவங்கதானே? "

"அவங்களோட உலகமும் நீதான்.நாளைக்கு நீ வீட்டுக்கு போயிரலாம்.!"என்ற போது போன் அடித்தது.மறுமுனையில் ஸ்வேதாவின் குரல் "மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் டைவர்ஸ் பேப்பரை கிழிச்சுருங்க சார்.!நாளைக்கு ஸ்டேசனுக்கு கம்ளைண்ட் கொடுக்க போகிறோம்.என் பொண்ணுதான் எனக்கு முக்கியம்! "என்றது.அவர் தேவியை நோக்கி கட்டைவிரலை உயர்த்தினார்.அவளது முகத்தில் நிரந்தரமான ஒரு புன்னகை உருவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக