ரெட்டி தன் வேலையில் மூழ்கியிருந்த போது போன் அடித்தது.எடுத்து "ஹலோ! "என்றவன் மறுமுனையில் கேட்ட "என்ன ரெட்டி சவுக்கியமா? "என்ற பரிச்சயமான குரலில் அதிர்ந்தான்.
"தலைவரே நீங்களா? எங்கிருந்து பேசரீங்க? "என்றான் பரவசமாக!
"இப்ப சொல்ல முடியாது.என்ன நடக்குது அங்கே? "
"நீங்க சொன்ன மாதிரிதான் நடக்குது தலைவரே! கட்சி தலைவராயிட்டான் தினேஷ்! அடுத்து சி எம் சேர்தான்! "
"வீட்டு வேலைக்கு வந்தவனுடைய வாழ்வை பார்த்தியா ரெட்டி? "
"அதுகூட சகிச்சுக்கலாம் தலைவரே.!அவன் சொல்லித்தான் எல்லாமே செஞ்சீங்கன்னு சொல்ரானுக! அதைத்தான் தாங்க முடியலை! "
"அது பாதி உண்மை.பாதி பொய்! "
"எப்படி தலைவரே! இவங்கிட்ட சிக்கினீங்க? "
"அது ஒரு கதை! நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி ஒரு தெலுங்கு நடிகையோட கொஞ்சநாள் லிவிங் டுகெதரா வாழ்ந்தேன்.ஒரு பொண்ணை பெத்துகொடுத்துட்டு பிரசவத்துல அவ செத்துட்டா! யாருக்கும் தெரியாம ரகசியமா அதை வளர்த்துட்டு வந்தேன்.அப்ப வீட்டு வேலைக்கு வந்த தினேஷ்கிட்ட குடிச்சுட்டு உளறிட்டேன்.என் பொண்ணை கஸ்டடியில் வைச்சுகிட்டு மிரட்ட ஆரம்பிச்சானுக.போதாததற்கு சுயநினைவு இல்லாத போது ஒரு பொண்ணோட என்னை நிர்வாணமா போட்டோ புடுச்சு வைச்சிட்டானுக.அதை காட்டித்தான் என்னை மிரட்டி அரசியலுக்கே கொண்டு வந்தானுக.பொண்ணுக்காகவும், இமேஜிக்காகவும் சொன்னதையெல்லாம் செய்தேன்.கடைசியா வெறுத்து போய் எனக்கு விடுதலையே கிடையாதான்னு கேட்டப்ப செத்தாத்தான் விடுதலைன்னு சொன்னான்.அப்பத்தான் சாக முடிவு பண்ணிணேன்.!"
"அதனாலதான் என் ஆஸ்பிட்டலுக்கு வந்தீங்களா?"
"ஆமா! நான் தப்பிச்சு ஓடிருவேன்கிற பயத்துல என் காலை வெட்ட சொன்னான் தினேஷ்.சுகர் அதிகம்னு சொல்லிடலாம்னு சொன்னான்.ஆனா நீ அதை எங்கிட்ட சொல்லிட்ட! "
"அப்புறம்தானே உங்க மாதிரியான மெழுகு சிலையை
உள்ளே கொண்டுவந்தேன்."
"அதுக்கு மாஸ்க் போட்டு எம்பாமிங் ஓட்டைய போட்டு காலை வெட்டி செத்துட்டதா நம்ப வைத்தாய்.நான் வேற வழியா தப்பிச்சு போலி பாஸ்போர்ட் வழியா என் பொண்ணை தேடி கண்டு பிடிச்சிட்டேன்."
"தினேஷ் சிஎம் ஆயிருவானா தலைவரே?
"அவன் நான் நின்ன தொகுதியில் நிற்க மாட்டான்.அவன் சாதிக்காரர்கள் அதிகமுள்ள தொகுதியில்தான் நிற்ப்பான்.சாதி பாசம் ஜெயிக்க வைக்கும்.அவன் ஜெயிக்கட்டும்."
"இங்க வேற சமாதிய தோண்டனும்னு பிரச்சனை பண்றாங்க.உள்ள இருப்பது மெழுகு சிலைன்னு தெரிஞ்சிராது.?"
"தெரியட்டும்.அப்ப தலைவர் எங்கேன்னு எவனாவது கேள்வி கேட்பானான்னு பார்ப்போம்.அவன் சிஎம் ஆன பிறகுதான் என் சம்மந்தப்பட்ட ஆதாரங்களை அழிப்பான்.அதற்குள் என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிருவேன்.எஸ்டேட்டில் மட்டும்தான் என் பொண்ணை கூட்டிட்டு வந்து காட்டுவானுக.இப்ப அரசியல் பிஸியில் இருந்ததால் என் பொண்ணோட பாதுகாப்பை குறைச்சுட்டானுக.கண்டுக்கவேயில்லை.அதனால் எம் பொண்ணை ஈஸியா மீட்டுட்டேன்.என் பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் மறுபடியும் வருவேன்.எனக்கு துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்க்க! "
"தமிழ்நாடு காத்திருக்கிறது தலைவரே "என்றான் ரெட்டி.
#இது அரசியல் கதையல்ல!
#இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக