விக்னேஷும் அருணும் உள்ளே நுழைந்த போது இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தன் வலது கையை உதறிக் கொண்டு சல்யூட் வைத்தார்."எவ்வளவு அடிச்சாலும் அந்த போட்டோகிராபர் உண்மைய சொல்ல மாட்டேங்குறான்! "என்றான்.
"இப்ப சொல்ல வைக்கலாம்.!தண்ணீர் தொட்டி எதாவது இங்க இருக்கா? "என்றான் விக்னேஷ்.
"ஸ்டேசனுக்கு பின்னாடி இருக்கு.அது எதுக்கு? "என்றார் பொன்ராஜ்.
"அருண்! அதை டிரிட்மெண்டுக்கு ரெடி பண்ணு! "என்றதும் அருண் தண்ணீர் தொட்டியை நோக்கி இரண்டு பொட்டலங்களுடன் நடந்தான்.
"இதுவரைக்கும் என்னதான் நடந்திருக்கு.!"
"பங்சனுக்கு வந்த செண்ட்ரல் மினிஸ்டரை மைதானத்துக்கு நடுவுலயே சுட்டு கொன்னுட்டாங்க.அந்த டைம்ல எடுத்த போட்டோவுல சுட்டது ஒரு பொண்ணுண்னு தெரியுது.அந்த பொண்ணை போஸ்ட் அடிச்சு ஒட்டி நாடெல்லாம் தேடியும் கண்டு பிடிக்க முடியலை.அந்த பொண்ணு தங்கியிருந்த பிளாட்டை கண்டு பிடிச்சாச்சு.அங்க ஒன்னும் கிடைக்கலை.அந்த பொண்ணு பேரு ஸ்வாதி.!"
"ஒரு பொண்ணு பைனாகுலர் பொருத்திய துப்பாக்கியில் சுடுறதுன்னா அதுக்கு ட்ரெய்னிங் எங்க எடுத்துருப்பா? "
"இப்ப பொண்ணுங்களும் கொலை பண்றாங்க போல! "
"அவளோட ரூம்ல இருந்துதானே சுட்ருக்கா? "
"ஆமா! அந்த கிரவுண்டுல பேசரத்துக்கு வருவாருன்னு தெரிஞ்சு மூணுமாசமா அந்த பிளாட்ல குடியிருந்து போட்டுத்தள்ளியிருக்கு அந்த பொண்ணு.பக்கத்து பிளாட்டுல கூட அதிகம் பேசறதில்லையாம்.!ஆமா இந்த போட்டோகாரனை எதுக்கு அடிக்க சொல்ரீங்க?"
"எல்லோரும் கூட்டத்தை போட்டோ எடுக்கும் போது இவன் எப்படி ஸ்வேதா நாலாவது மாடியிலிருந்து சுட்டதை போட்டோ எடுத்திருக்க முடியும்? அப்ப அங்கிருந்து சுடறது இவனுக்கு முன்னாடியேதெரிஞ்சிருக்கனும்.அந்த போட்டோ வெளியே வரணும்னு கொலையாளி விரும்பியிருக்கிறான்.! "
"எதுக்கு? "
"நம்மை குழப்ப.அதை இனிமேல்தான் கண்டு பிடிக்கனும்."
பொன்ராஜ் ரத்த காயத்தோடிருந்தவனை கூட்டி வந்தார்."ஏதேச்சையா ஒரு போட்டோ எடுத்தது தப்பா? அதுக்கு அடிப்பீங்களா? "என்றான் ஈனஸ்வரத்தில்.
"இதேதான் சொல்ரான்.!"என்றார் பொன்ராஜ்.
தொட்டியருகே அழைத்து வந்த விக்னேஷ் தன் ஷு லேஸை உருவி அவன் கையையும், காலையும் கட்டினான்.அருணோடு சேர்த்து தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தவன் திமிறி எழுந்தவனை நெஞ்சில் கால் வைத்து மிதித்தான்."ஏங்க! செத்துரப் போறான்? "என்ற பொன்ராஜை பார்த்து "பயப்படாதீங்க.இது லேட்டஸ்ட் டெக்னிக்.மூளை நீ சாகப் போறேன்னு சொல்லும்.தண்ணீரில் உள்ள எப்சம் உப்பு அவனை மூழ்க விடாது.நுரையீரலில் கால்வாசி தண்ணீரில் மூழ்கி செத்த உணர்வு வந்து விடும்.எதுக்கு அடிச்சுகிட்டு.கையெல்லாம் வலிக்கும்.!"என்றான்.இரண்டு நிமிட மூச்சு திணறலில் உண்மையை கக்கினான்."ஆமா! எனக்கு தெரியும்.எனக்கு பணம் கொடுத்து அந்த போட்டோவை எடுக்க சொல்லி போலீஸ்கிட்ட கொடுக்க சொன்னாங்க! "
"சொன்னது யாரு? "
"அவனோட போன் காண்டாக்ட் மட்டும்தான்.நெம்பர் மட்டும்தான் இருக்கு."
அவன் கொடுத்த நெம்பருக்கு டயல் செய்த போது சுவிட்ச் ஆப் என்றது.
"இப்ப என்ன பண்றது "?
"அந்த நெம்பர் அட்ரஸ் புரூப், கடைசியா வேலை செய்த டவரை கண்டு பிடிச்சு சொல்லுங்க.!நாங்க ஸ்வேதா பிளாட்டுக்கு போறோம்.!"
அவர்கள் ஸ்வேதா இருந்த அப்பார்ட்மெண்டுக்கு கிளம்பினார்கள். ஸ்வேதாவின் பிளாட்டை திறந்த போது பக்கத்து பிளாட்டிலிருந்து எட்டி பார்த்த ஒரு பெண் "நீங்க போலீசா? "என்றாள்.
"அதுல என்ன டவுட்டு? "என்றான் அருண்.
"தொப்பை இல்லாம இருக்கீங்க? அதான் டவுட்டா இருக்கு! "
"பிட்டா இருந்தா போலீஸ் இல்லையா? என்னம்மா நியாயம் இது? ஆமா உம் பேரு என்ன? "என்றான் அருண்.
"தம்பி நாம விசாரணைக்கு வந்திருக்கோம்.பொண்ணு பாக்க இல்லை."என்றான் விக்னேஷ்.
"இதுவும் விசாரணைதான்.!சொல்லும்மா! "
"எம்பேரு ஜெயா! "
"யார் பேச்சையும் கேட்கமாட்டியே! ஆமா இந்தாக்காவோட பேசி பழகியிருக்கியா? "
"ம்ஹிம்! அதிகம் பேச மாட்டாங்க.சின்ன ஸ்மைலோட சரி! "
"அங்கென்ன பேச்சு? உள்ள வா ஜெயா? "என்றகுரலில் காணாமல் போனாள்.
இருவரும் உள்ளே நுழைந்த போது சொற்ப சாமான்களுடன் காட்சியளித்தது அந்த அறை.பெண்களுக்கான எல்லா ஆடைகளும் தொங்கி கொண்டிருந்தன.அருண் உதட்டை பிதுக்கினான்."எல்லாமே அவுட் ஆப் பேசனா இருக்கு பாஸ்.ரசனையில்லாத பொண்ணு போல.லேட்டஸ்ட் பாஷனா எதுவும் இல்லை.!"
பைல் செய்யப்பட்டிருந்த மளிகை லிஸ்டை பார்த்து கொண்டிருந்தான்.டேபிளின் மீதிருந்த இரண்டு ஸ்மைலி பந்துகளை பார்த்து "இது எதுக்கு ரெண்டு பந்து? கைல எதுவும் பிரச்சனையா பொண்ணுக்கு? நமக்குத்தானே ரேகை தேயும்? "என்றவனை "சரி வா போலாம்! "என்றான் விக்னேஷ்.
கதவை பூட்டும்போது அந்த ஜெயா எட்டி பார்த்து "மாவரைக்கனும்.உளுந்து இல்லை.கடை வரைக்கும் டிராப் பண்ண முடியுமா? "
"நீங்க சொன்னா சொர்க்கத்துக்கே டிராப் பண்ணுவோமே! "என்று வாயெல்லாம் பல்லான அருணை விக்னேஷின் "வீட்ல அப்பளம் இருக்கா? "என்ற குரல் கட்டையை போட்டது."இருக்கு "
"ஒரு அப்பளக்கட்டை தண்ணியில ஊற வைச்சு மாவுல போட்டு அரை.அப்பளத்தை உளுந்துலதான் செய்யராங்க! "
"இது புதுசா இருக்கே! "என்றவள் உள்ளே மறைய தலைகுனிந்த அருண் "பொறாமை! "என்றான்.
அவர்கள் ஜீப்பிற்கு வந்த போது போன் அடித்தது.மறு முனையில் பொன்ராஜ் சொன்ன அட்ரஸை குறித்து கொண்டு "இங்க வண்டியை விடு! "என்றான் விக்னேஷ்.
"அங்க யார் பாஸ் இருக்கா? "
"ஸ்வேதா! " "ஸ்வேதாவா! என்ன பாஸ் சொல்ரீங்க? "
"அவ சுட்டப்ப எடுத்த போட்டோவை நல்லா பாரு! அவளுக்கு ஆறு விரல் இருக்கு! "
"சரி! அதை வைச்சு எப்படி பிடிப்பீங்க? "
"விளக்கமா சொல்ரேன் கேளு.செண்ட்ரல் மினிஸ்டர் தேர்தல் பிரசாரத்துக்கு இங்க வரப்போறார்னு நல்லா தெரிஞ்சிருக்கு.அவரை போட்டுத்தள்ள பிளான் பண்ணித்தான் அந்த கிரவுண்ட்டுக்கு எதிரே உள்ள அப்பார்ட்மெண்டுல பிளாட்டை வாடகைக்கு எடுத்து மூணு மாசமா தங்கியிருக்கா ஸ்வேதா! "
"மீட்டிங் வேற பக்கம் நடந்திருந்தா மினிஸ்டர் தப்பிச்சிருப்பாருல்ல? "
"நல்ல கேள்வி! பொன்ராஜ் கொடுத்த அட்ரஸை பாரு.அந்த டவரும் இன்னோரு கிரவுண்டுக்கு பக்கத்துலதான் இருக்கு.!அது நாலு மாடி அபார்ட்மெண்ட்! "
"அப்ப அங்கே பேசினாலும் கொன்ருப்பாங்க! "
"ஆமா! இந்த ஊர்ல இருக்கிற பெரிய மீட்டிங் பிளேஷ் இது இரண்டும்தான்.இரண்டு இடத்துலயுமே கொலையாளிகள் தயாரா இருந்திருக்கனும்."
"அப்ப அந்த இன்னோரு கொலைகாரி யாரு? "
"அதுவும் ஸ்வேதாதான்.!"
"என்ன பாஸ் குழப்புரீங்க? "
"குழப்பலை.முதல்ல ஒரு உண்மைய சொல்ரேன்.ஸ்வேதா ஒரு பொண்ணே கிடையாது.ஆண்.!"
"என்ன பாஸ் சொல்ரீங்க? "
"ஆமா! ரெண்டு பிளாட்டுலயும் ஒரே ஆள் தங்கியிருக்கான்.ஒன்னுல ஆணாவும், இன்னொன்னுல பொண்ணாவும்.!பொண்ணா கொலை பண்ணி போட்டோவை போலீசுக்கு கிடைக்க வைச்சுட்டு அவன் ஆணாக மாறி இந்த பிளாட்டுல இருப்பான்.மந்திரி இந்த கிரவுண்டுக்கு வந்திருந்தா ஆணா கொலை பண்ணிட்டு பெண்ணா அந்த பிளாட்டுல ஸ்டே பண்ணியிருப்பான்.!"
"பயங்கர ஐடியாவா இருக்கே! பொண்ணுன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க? "
"மளிகை லிஸ்டுல கேர்ப்ரீ, விஸ்பர்னு மூணு நாள் சமாச்சாரம் எதையுமே காணோம்.நீ வேற அவுட் ஆப் பேசன்னு சொன்னியா? அந்த பந்து மாருக்கு வைச்சிருப்பானோன்னு டவுட்டு! "
அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியிடம் பேப்பரிலிருந்த ஸ்வேதாவின் போட்டோவிற்கு தாடி, மீசை வரைந்து காட்டிய போது "அட நம்ம கிருஷ்ணமூர்த்தி! நாலாவது ப்ளோர்ல மூணாவது பிளாட்! "என்றார்.
"நம்மகிட்ட துப்பாக்கி இல்லை.எப்படி சமாளிக்கிறது? "என்றான் அருண்.
"பாத்துக்கலாம்! "
அவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் பிளாட்கதவை திறந்த போது துப்பாக்கியோடு கதவை திறந்தவன் "கைய மேல தூக்குங்க! "என்றான்.
கையை நெஞ்சுவரை தூக்கிய விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தியின் துப்பாக்கி ஏந்திய கையை பற்றி வானத்திற்கு உயர்த்தி பிடித்தான்.சீலிங்கில் ஒரு தோட்டா வெடித்து சிதறியது.வீழ்த்தப்பட்டவனின் கையிலிருந்த ஆறாவது விரலை அருண் பார்த்தான்.