வியாழன், 14 ஜூலை, 2016

பலிபீடம்

“இந்த இடம் உனக்கெப்படிப்பா தெரியும்? “என்றான் கிழவன்.
“எங்கப்பாவும் தாத்தாவும் இங்கதான் ஒளிஞ்சு வாழ்ந்தாங்களாம்.அதிகாரிகள் பிடிச்சுட்டு போய் அடிமையாக்கி வீட்டு வேலை செய்ய வைச்சே கொன்னுட்டாங்க! உயிரோடு இருந்தப்ப இந்த இடத்தை பத்தி சொல்லியிருக்காங்க! “

“ஒளிந்து வாழலாம்.ஆனா உணவு இல்லாமல் எப்படி வாழ்வது? அதுக்கு இங்கே வழி இல்லையே? “என்றான் மோகன்.
“ரொம்ப குளிருது! நெருப்பாவது பத்த வைக்கலாம்! “என்று லைட்டரை எடுத்த ரவியை பாய்ந்து தடுத்தான் கிழவன்.
“வேணாம்! புகை வெளியே போய் நம் இருப்பிடத்தை காட்டி கொடுத்து விடும்! வேற எதாவது பேசுவோம்!குளிர் தெரியாது “என்றான் கிழவன்.

அவர்கள் நால்வரும் நகரத்திலிருந்து தப்பி ஒடி வந்திருந்தார்கள்.அருணின் வழிகாட்டுதலில் இந்த குகையில் அடைக்கலமாகியிருந்தார்கள்.எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகள் அவர்களை தேடி வரலாம் என்பதையும் அறிந்திருந்தார்கள்.

“பெரிசு! நம்மள ஏன் துரத்துராங்கன்னு ஒரு ப்ளாஷ்பேக் சொல்லேன்! “என்றான் ரவி.

“சொல்கிறேன் “என்று பெருமூச்சு விட்டான் கிழவன்.
“இதெல்லாம் 2070ல் ஆரம்பிச்சுது.ஜீன்ஸ்னு ஒரு டைட்டான டிரஸ்ஸை போட்டும் ரசாயன உணவுகளை சாப்பிட்டும் விந்தனுக்களின் எண்ணிக்கை குறைந்துஆண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மலடாகி கொண்டிருந்தார்கள்.மக்கள்தொகை குறைந்ததால் ஒரு விஞ்ஞானி “இருபால் உயிரி “ன்னு ஒரு கான்செப்டை கண்டு பிடிச்சான்.உதாரணத்துக்கு மண்புழுவில் ஆண்புழு, பெண் புழுன்னு தனித்தனியா கிடையாது.ஒரே புழு ஆணாகவும் பெண்ணாகவும் மாறி குட்டி போடும்.ஆண்துணை தேவையேயில்லை! இன்னொரு ஸ்பெசாலிட்டி என்னன்னா மண்புழுவை ரெண்டா வெட்டுனா தனித்தனி உயிராகி விடும்.இதே மாதிரி உலகத்துல 50உயிரினம் இருக்கு.இந்த டெக்னாலாஜியும், குளோனிங்கும் ஒன்னு சேர்ந்துருச்சு.பொண்ணுங்க எல்லாம் அவங்களை மாதிரியே குளோனிங் குழந்தைகளை பெத்துக்க ஆரம்பிச்சாங்க! ஆண்கள் துணையே தேவைப்படலை.அம்மாவுக்கு ராதா 1,மகளுக்கு ராதா 2,பேத்திக்கு ராதா 3ன்னு பேர் வைச்சுகிட்டாங்க! எல்லோரும் பெண்குழந்தைகளா பெத்துகிட்டாங்க! ஆண்களிடம் திருமணம்கிற பேர்ல அடிமையா இருக்க விரும்பாம லெஸ்பியனா மாறிட்டாங்க! தேவையில்லாத ஆண்களை அடிமையாக்கிட்டாங்க! ஆட்சி அதிகாரமெல்லாம் அவங்க கைக்கு போயிருச்சு.இப்ப கடைசியா உலகத்துல மிஞ்சியிருக்கிற ஆம்பளைக நாம நாலு பேருதான் “

“அப்ப முன்னாடி நம்ம மூலமாத்தான் அவங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு?”

“ஆமா! செக்ஸ்ன்னு ஒன்ன பண்ணினா குழந்தை பொறக்குமாம்.எங்கப்பா சொல்லுவாரு! நானும் கேள்விப்பட்டதோட சரி! அனுபவிச்சதில்லை! “

“இதெல்லாம் எப்படி தெரியும் பெரிசு! “என்றான் ரவி!
“கொஞ்ச நாள் லைப்ரரில வேல செஞ்சேன்.அங்க படிச்சேன்! “
“நான் அருங்காட்சியகத்துல கூட்டி பெருக்கிட்டு இருந்தேன்.வேல ஒழுங்கா செய்யலைன்னு எங்க அதிகாரியம்மா எட்டி உதைச்சதுல ஒரு பல்லு விழுந்துருச்சு! “என்றான் அருண்.
“நாலாவது தோசை கருகிருச்சுன்னு எங்க ஆபிசரம்மா அப்புன அப்புல வலது காது லைட்டா கேட்க மாட்டேங்குது! “என்றான் மோகன்.

“வேடிக்கையை பாரு! தசரதன்னு ஒரு ராஜா அறுபதாயிரம்பொண்ணுகளை கல்யாணம் பண்ணியிருக்கான்! “என்றான் கிழவன்.

“முத பொண்டாட்டி ஓங்கி அப்பியிருந்தா அடுத்த கல்யாணத்த பண்ணியிருக்க மாட்டான்! “என்றான் அருண்.

“பெரிய வீரனா இருப்பானோ? “என்றான் மோகன்.

“எங்க ஆபிசரம்மா உத்து பார்த்தாவே எனக்கு ஒன்னுக்கு வந்துரும்.!குடிச்சுட்டு வந்துட்டா கொஞ்சுவா! தெளிவா இருந்தா பெல்டுலதான் பேசுவா! “என்றான் ரவி.!
அதே நேரம் வெளியே ஜீப் வரும் ஓசையும் மைக் சவுண்டும் கேட்டது.

“அடிமைகளே! ஒழுங்காக சரணடைந்து விடுங்கள்.!இல்லையென்றால் குகைக்கு பாம் வைத்து விடுவோம்! கூண்டோடு கைலாசம்.எப்படி வசதி! “

“சரணடைந்து விடலாம்! நமக்கு வேறு வழியில்லை! “என்றான் கிழவன்.
அவர்கள் கைகளை தூக்கியபடி தயக்கமாக வெளி வந்தார்கள்.வெளியே நின்றிருந்த யூனிபார்ம் அணிந்த பெண்களின் படை கிழவனை விட்டு விட்டு மற்ற மூவரையும் அடித்து துவைத்தது.

அடுத்த நாள் அவர்கள் அருங்காட்சியகத்தின் கம்பி உள்ள அறை ஒன்றினுள் அடைபட்டிருந்தார்கள்.வெளியே கூட்டம் கியூ கட்டி நின்றிருந்தது.
சில்லரைகளும், நோட்டுகளும் அவர்களின் மேல் எரியப்பட்டன.பாப்கார்னும் கூட விழுந்தது.”இன்னும் ரெண்டு நாளில் கொல்லப்படப் போகும் உலகின் கடைசி ஆண்கள் இவர்கள்தான்! “என்றவாறு ஒருத்தி “ஸ்மைல் பிளிஸ்! “என்றாள்.
“சிரிங்கப்பா! கடைசி போட்டோவுலயாவது வீரமா சிரிச்ச மாதிரி போஸ் கொடுப்போம்! “என்றான் கிழவன்.
“இதென்ன மூஞ்சில முடியெல்லாம் இருக்கு? “என்றாள் ஒருத்தி!

“அதுக்கு பேரு தாடி “என்றாள் இன்னொருத்தி.

“நல்லவேளை நமக்கெல்லாம் அந்த கருமம் வராது! “என்றாள் ஒருவள்.

“உயிரே போகப் போகுது! மசுரப்பத்தி பேசராளுக! “என்றான் வெறுப்போடு கிழவன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு பலி பீடம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.ஸ்பீக்கரில் குரல் கசிந்தது.
“தப்பி சென்ற குற்றத்திற்காகவும், இந்த பூமியில் ஆண்களுக்கான தேவை முடிந்து விட்டதாலும் இந்த அரசாங்கம் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது! “

“ஒரு நிமிடம்! “என்றான் அருண்.

“அருங்காட்சியகத்தில் வேலை செய்த இரண்டு பெண்கள் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள்.அதற்கு காரணம் நான்! “என்றான் அருண்.

“இந்த வேலைய எப்படா பார்த்த?”என்றான் கிழவன்.

“சும்மா அடிச்சு விடுரதுதான்.அவங்களுக்குள்ளியே குழப்பம் வந்து துரோகின்னு அந்த பொண்ணுகளை விசாரிப்பாங்க! அது முடியற வரை உசுரோட இருக்கலாமே! “
“தப்பான காயை மூவ் பண்ணிட்ட! “என்றான் கிழவன்.

சிறிது நேர அமைதிக்கு பிறகு ஸ்பீக்கரில் குரல் கசிந்தது.

“அரிதான இனமாக மாறிவிட்ட உங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்திருப்பதால் மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.!”

“எப்படி? பிளான் ஒர்க் அவுட் ஆயிருச்சு! “என்றான் அருண்.

ஸ்பீக்கரில் மேலும் குரல் கசிந்தது.
“எங்கள் இனத்து பெண்களின் கற்பு மேல் அபாண்டமாக பழி சுமத்தியதற்காகவும், விஞ்ஞானிகளுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும் குற்றவாளிகளின் ஆண் உறுப்பை வெட்டி நீக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது! “

“ஏதோ ஒரு பத்து நிமிசம் பாத்ரூமில் ஆசுவாசம் பண்ணிட்டிருந்தேன்.அதுக்கும் ஆப்பு வைச்சாச்சா? இதுக்கு பேசாம செத்திருக்கலாம்!நீ சொன்ன பொய்யுக்கு எங்களுதை ஏண்டா வெட்டனும்? ஒரு லாஜிக் வேணாம் “என்றான் கிழவன்.
அவர்கள் பலி பீடம் நோக்கி பேண்டை அவிழ்த்தபடி நடந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக