"அஞ்சு லட்சம்! அஞ்சே கண்டீசன்தான்! ஆனா யாராலயும் முடியலையே? "என்றான் சிவா.
"அப்படி என்ன படம்டா அது? "என்றான் ராஜ்.
"பேய்படம் ஒன்னு எடுத்திருக்காங்க! அஞ்சு கண்டீசன் போட்ருக்காங்க.அஞ்சு லட்சம் பரிசாம்! "
"பாடாவதி படத்தை எடுத்துட்டு ஒட வைக்க என்னென்னமோ பண்ரீங்க! இதே மாதிரிதான் ஈவிள்டெட் படத்துக்கும் சொன்னாங்க! அந்த ஐந்து கண்டீசனை சொல்லு! கேப்போம்!"
"படத்தை தனியாத்தான் பார்க்கனும்.அதுவும் செகண்ட் ஷோ! கண்ணை மூடி தூங்க கூடாது! இமைக்கலாம்.அங்கிருக்கிற கேமரா உன்னை வாட்ச் பண்ணும். எது நடந்தாலும் டைரக்டருக்கு பொறுப்பில்லைன்னு எழுதி கொடுக்கனும்.அதே மாதிரி உனக்கு எது நடந்தாலும் பொறுப்பில்லைன்னு எழுதி கொடுக்கனும்! "
"இதையெல்லாம் பண்ணிணா பணம் கொடுப்பாங்களா? "
"கதைய சொன்னாத்தான் பணம் தருவாங்க! என் லேப்டாப்பில் கூட அந்த படம் இருக்கு! பாரேன்! "
லேப்டாப்பில் படம் பார்த்தவன் "பயங்கர மொக்கையா இருக்கே? "என்றான்.
"மியூசிக்கில்தான் பயமுறுத்தரானுக! "
"ஒருவேளை உள்ளே பேய் வேஷத்துல ஆள வைச்சு பயமுறுத்துவாங்களோ? "
"சேச்சே! அதெல்லாம் எதுவும் இல்லப்பா! இதுவரைக்கும் படம் பார்த்த நாலு பேரு பாதியில வெளில வந்துட்டாங்க! .நீயெல்லாம் மூஞ்சில துண்டை போட்டுட்டு தூங்கரவன்.உனக்கெதுக்கு இது? "என்றான்.
நான் தூங்கும்போது கண்ணத் தொறந்துட்டுதான்டா இருப்பேன்.அதை பார்த்து நீ பயப்படாம இருக்கனும்னுதான் மூஞ்சில துண்ட போட்டுட்டு தூங்கரேன் என்று நினைத்துக் கொண்டவன் கிளம்பினான்.
"பாருப்பா! இண்டர்வெல் கிடையாது.தூங்கீர கூடாது.கண்ணை இமைக்கலாம்.கதைய சொல்லனும் சரியா? "என்றார் டைரக்டர்.
"இதென்ன பேய்படம்! கண்ணு இமைக்காமயே முழு படமும் பார்ப்பேன்! "என்றவன் தூங்கிக் கொண்டே ஐந்து லட்சத்தை வாங்க தயாரானான
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக