இருளில் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தவளை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன்.பணம்,நகை அவனது நோக்கம் இல்லை.குடித்திருந்த சரக்கு பெண்ணை தேட வைத்த போதுதான் அவளைப் பார்த்தான்."இந்தா! நில்லு.!"என்று அவளின் தோளை பிடித்தவனை தட்டி விட்டு விட்டு ஓட ஆரம்பித்தாள்.குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு போய் மேட்டரை முடித்தவன் அவள் அழுவாள் என்று எதிர்பார்த்து ஏமாந்தான்."என் வாழ்க்கையே போச்சுன்னு அழுவாம இருக்கே.?"என்றான் குழப்பமாய்."நான் ஏன் அழுவனும்.?இனி நீதான் அழுவனும்.!"
"நான் எதுக்கு அழனும்.?"என்றான் குழப்பமாய்.
"எய்ட்ஸ் வந்தா அழுவாம சிரிப்பியா.?"
"என்னடி சொல்ர.?"
"ஆமாய்யா.!நான் தப்பான தொழில் பண்ணி இந்த வியாதி வந்துருச்சு.அதான் ஜி.ஹேச்சுல மருந்து வாங்கிட்டு வருவேன்.அப்படி இன்னைக்கு வரும்போது பாய்ஞ்சிட்டே.!"
"மொதல்லயே சொல்லலாம்ல.!"
"சொல்லியிருந்தா வேறோரு குடும்ப பொண்ண நாசம் பண்ணியிருப்பாய்.சரி நான் கிளம்பரேன்.மறுபடியும் ஆஸ்பத்திரில பார்க்கலாம்.!"
அவள் இருட்டில் மறைய அவன் போதை இறங்கி சிலையாக நின்று கொண்டிருந்தான்.
இருளில் நடந்தவள் கண்களை துடைத்து கொண்டாள்."நீ ரேப் பண்ணிட்டு ஜாலியா சுத்திட்டு சந்தோஷமா இருப்பாய்.நான் மட்டும் அழுதுட்டு வேற கல்யாணம் பண்ண முடியாம போலீஸ்,கோர்ட்டுன்னு அலையனுமா.?இனி ஒவ்வொரு நாளும் சாவை நினைத்து பயந்துகிட்டே நீ வாழனும்டா.!"
காலிங் பெல்லின் ஓசைக்கு கதவை திறந்த அம்மாவிடம் "கீழ விழுந்து உடம்பெல்லாம் மண்ணாயிருச்சு.!நான் குளிக்கனும்.!"என்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக