செவ்வாய், 7 மார்ச், 2023

அஷ்டவக்கிரன்17

"இது மாயான்னு சொன்னா நான் நம்புவேனா?" என்று சிரித்தான் வாசு. அவனது சிரிப்பை பார்த்த தம்பிக்கு குழப்பம் ஆரம்பித்தது.அவன் பரமேஸ்வரியை ஒருமுறை திரும்பி பார்த்தான். அவள் ஒன்றும் புரியாமல் உதட்டை பிதுக்கினாள். ஒருவேளை இவன் மாயாவை ஏற்கனவே போட்டோவிலோ இல்லை நேரிலோ பார்த்து தொலைந்திருப்பானோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது தன்னுடைய பதட்டத்தை வெளியே காட்டிகொள்ளாமல்" இது தான் மாயா. நம்பு" என்றான் சகஜமாக.

" இது மாயா இல்லை, ,என்றான் உறுதியான குரலில் வாசு.

நடப்பது என்னவென்று புரியாமல் சதாமும் குற்றாலமும் இருவரையும் மாறிமாறி பார்த்து கொண்டிருந்தனர். சதாமுக்கு பரமேஸ்வரியை ஏற்கனவே தெரியும் தம்பி அவளை மாயா என்று குறிப்பிட்டதும் காரணம் இன்றி காரியம் இல்லை என்று புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டான்.

" ஏம்பா அவரு தான் அந்த பொண்ணு தான் மாயான்னு சொல்றாரே. அப்புறம் என்ன?" என்றான் குற்றாலம்.

"இவ மாயா இல்லைன்னு எத வைச்சு சொல்ற?" என்றான் சதாம்.

"அதை நான் வெளியே சொல்லமுடியாது. அதை சொன்னா அதை வைச்சே இன்னொரு பொண்ணை ரெடி பண்ணிருவீங்க?"

"குழப்பாதே." என்றான் தம்பி. ஒருவேளை பரமேஸ்வரியின் முழு ஐடெண்டி வாசுவுக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

பரமேஸ்வரியின் காதில் மட்டும் விழும்படி மெதுவான குரலில் "இவனை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?" என்றான் தம்பி.

" இல்லை. இவனை இங்கேதான் முதல்முறையாகப் பார்க்கிறேன்" என்று பதில் சொன்னாள் அவள்.

" இவ தான் மாயா. இதுல உனக்கு என்ன சந்தேகம்?" என்றான் தம்பி கடுமையான குரலில்.

"இது மாயா இல்லை. நீ வேற பொண்ணை கொண்டுவந்து நிறுத்தி மாயா என்று பொய் சொல்லி என்னை ஏமாற்ற பார்க்கிறாய்"

தம்பி ஒருமுறை அவனை கூர்மையாகப் பார்த்தான். இவனுக்கு அந்த பெண்ணை பற்றி ஏதோ ஒரு விசயம் தெரிந்திருக்கிறது. அதை சொல்ல மறுக்கிறான். ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் என்று நினைத்தவன் "ஆல் ரைட். நீ புத்திசாலிதான். இது மாயா இல்லை என்பது உண்மைதான்."

"அப்படியென்றால் மாயா எங்கே?" என்றான் வாசு.

"என்னோட கஸ்டடியில்தான் இத்தனை நாளாக இருந்தாள். நீ ஜெயில்ல ருந்து ரிலீசான அன்று இரவு தான் அவள் என்னிடமிருந்து தப்பித்து போனாள்.அவளைத்தான் உனக்காக தேடிக்கொண்டிருக்கிறேன்."

"மாயாவை நேரில் பார்க்காமல் நான் உனக்காக எந்த வேலையும் செய்வதாக இல்லை" என்றான் வாசு.

"பைத்தியமாடா நீ? அந்த துரைபாண்டியன் உன்னை வசமாக சிக்க வைத்திருக்கிறான் என்பது இன்னுமா உனக்கு புரியவில்லை" என்றான் தம்பி கோபத்துடன்.

"நீ சொல்வது எனக்கு புரியவில்லை"

"நல்லா கேளு. நடந்ததை நான் மறைக்காம சொல்றேன். அந்த துரைபாண்டியன் என்கிட்டருந்து தப்பிக்க ஒரு கேம் செட் பண்ணியிருக்கான். அதுல நீவெறும் டீரிக்கர்தான்.அவன் ரெட் அண்ட்டாலோ போட்டுட்டான். நீ நினைப்பதுபோல் துரைபாண்டியன் இப்போது மனநல விடுதியில் இல்லை."

வாசு நிமிர்ந்து அவனை பார்த்தான்.

"அங்கே அவன் பெயரில் இருப்பது வேறு ஆள்.நான் கண்ணால் பார்த்து செக் பண்ணிட்டேன்" என்றான் சதாம்.

"இப்போது அவன் மகளையும் காணோம்.எங்கே போனாள்னு யாருக்கும் தெரியாது. ஆனா டிரக் டேஸ்ட்டராக உன்னை என்னிடம் சிக்கவைத்துவிட்டான். அப்பாவும் மகளும் எப்படியோ சேப்பாக தப்பித்துவிட்டார்கள். நீ பாவம் - வீணாக என்னிடம் மாட்டிகொண்டுவிட்டாய்.உனக்கு வேறுவழியில்லை. நான் சொன்னதை செய்து தானாகவேண்டும்"

"இவனிடம் கெஞ்சாதே தம்பி.கேவலமா இருக்கு. ரூம்ல அடைச்சுவைச்சு ரெண்டுநாள் சோறு தண்ணி போடாம வாயிலியே மிதிச்சா வழிக்கு வந்துருவானுக" என்றான் சதாம்.

"அவனுக்கு சூழ்நிலையை சொல்லிட்டேன். இனி அவன்தான் யோசிக்கனும். எப்படி யோசிச்சாலும் உயிரோட இருக்க ஒரே வழி என்னிடம் வேலை செய்வதுதான்." என்ற தம்பி தன் துப்பாக்கியை கையில் எடுத்தான்.

" நான் பத்து எண்ணுவேன். அதுக்குள்ள…."

" பழைய டெக்னிக். நீ என்னை எதுவும் பண்ணமாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்" என்றான் வாசு.

" நீ என்னை தப்பா நினைச்சுட்ட. நான் சுடுவேன்னு சொன்னது உன்னையல்ல.உன் நண்பனை" என்று துப்பாக்கியை குற்றாலத்தை நோக்கி திருப்பினான் அவன்.

"பொறு. அதுக்கு முன்னால ஒரு சின்ன மேஜிக் அதை பார்த்துட்டு ஆரம்பிக்கலாம்." என்ற வாசு "சதாம். மேட்ச் பாக்ஸ் கொடு" என்றான்.

" எதற்கு?" என்றான் சதாம் புரியாமல்.

"கொடு. சொல்கிறேன்." என்றான் வாசு.
சதாம் குழப்பத்துடன் தீப்பெட்டியை கொடுத்தான்.

வாசு அதை திறந்து பார்த்தான் ஒரே ஒரு தீக்குச்சி உள்ளே தூங்கிகொண்டு இருந்தது.

அதை கையில் எடுத்தவன் "வேற வழியில்லை. ரொம்ப கவனமாத்தான் இந்த மேஜிக்கை செய்யனும்" என்றவன் தக்கையில் சும்மா குச்சியை உரசினான்.

" என்ன பண்ணுற?" என்றான் தம்பி.

"நாம் வந்த காரை பத்த வைச்சிட்டேன். டவுட்டுன்னா எட்டி பாரேன்" என்றான் வாசு.

சதாம் அவசரமாக சன்னல் வழியாக எட்டி பார்த்தான்.அவனது கார் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

"நான் சம்மதிக்காமல் என்னை வேலை செய்ய வைக்க முடியாது" என்றான் வாசு.

தம்பி ரிவால்வரை வாசுவை நோக்கி திருப்பினான்.

"இப்போ ரியல் மேஜிக்" என்ற வாசு அந்த ஒற்றை தீக்குச்சியை பற்றவைத்து டேபிளில் எறிந்தான். ஏற்கனவே அங்கே தம்பி குடித்துவிட்டு வைத்திருந்த பிராந்தி விஸ்கி பாட்டில்கள் ஆல்கஹாலின் உதவியோடு பற்றி கொண்டன.

தம்பி, பரமேஸ்வரி, சதாம் மூவரும் நெருப்பை அணைத்து விட்டு பார்த்தபோது குற்றாலமும் வாசுவும் காணாமல் போயிருந்தனர்.

"தப்பிச்சு போயிட்டானுக .இப்ப மூணு பேரையும் தேடிபிடிக்கனும்" என்றான் சதாம்.

"மாயா, துரைபாண்டியன், வாசு, இவங்க மூணு பேர்ல யாராவது ஒருத்தராவது நமக்கு வேணும்" என்ற தம்பியின் கண்ணில்பட்டது அந்த செல்போன்.

" இது யாருது?"

"என்னுடையதில்லை. இது வாசுவுடையது"

"லோக்கேசனை சர்ச் பண்ணி பிடிச்சுருவோம்னு விட்டுட்டு போயிட்டான் போல " என்றான் தம்பி.

"அந்த கார் எப்படி எரிஞ்சுதுன்னு எனக்கு புரியலை" என்றான் தம்பி.

" எனக்கும்தான்" என்றான் சதாம்.

"இனி மேல ஓட முடியாது. நடந்தே போவோம்" என்றான் குற்றாலம். அவன் உடல் வேர்வை நதியில் நனைந்திருந்தது.

"அங்கே ஒரு பெட்டி கடை இருக்கு. போய் சோடா சாப்பிடலாம்." என்றான் வாசு..

"சாப்பிடலாம். முதல்ல அந்த கார் எப்படி எரிஞ்சுதுன்னு சொல்லு. ஒரே குழப்பமா இருக்கு"

"நான் குடிச்சவாட்டர் பாட்டிலை கிடைமட்டமா டாஷ்போர்டுல வைச்சுட்டு வந்தேன். அதுலருந்த நீர் குமிழி லென்சாக மாறிவிட்டது. அதற்கு முன்பாகவே கார்பிரெஸ்னரை சீட் மேல் லேசாக தெளித்து வைத்துவிட்டேன். அதிலிருந்த ஆல்கஹாலால் தீப்பிடித்துவிட்டது."

"இப்படி துப்பாக்கி முனையில் மிரட்டுவான்னு முதல்லயே உனக்கு தெரிஞ்சுதான் இப்படி செஞ்சியா?"

"இல்லை. அவனை இம்ப்ரஸ் பண்றதுக்காக அப்படி பண்ணி வைச்சேன். வெளியே நின்ன கார் உள்ளிருந்த கண்ணாடில ரிப்ளெக்ட் ஆகிகொண்டிருந்தது. புகை வருவதை பார்த்துட்டுத்தான் மேஜிக்னு ஆரம்பிச்சேன்"

"அந்த பொண்ணுமாயா இல்லைன்னு எதை வைச்சு சொல்கிறாய்?"

"துரை பாண்டியனோட பொண்ணை சின்ன வயசுலயே ஸ்கூல்லருந்து கடத்த டிரை பண்ணியிருக்காங்க. அதனால அப்பாவும் மகளும் ஒரு கோடுவோர்ட் வைச்சுகிட்டாங்க. அந்த கோட் வோர்டதான் கூகுள். இதை துரைபாண்டியனே பேச்சுவாக்குல என்கிட்ட சொல்லி இருக்காரு. கூகுள்னு சொன்னா அப்பா அனுப்புன ஆள்னு மாயா அடையாளம் கண்டுகொள்வாள். அதனால்தான் அந்த பாட்டை பாடினேன் ஆனால் அவள் முகத்துல எந்த ரியாக்சனும் இல்லை. அதான் டவுட்.அவள் முகத்துல ஒரு தழும்பு இருக்கும்னுதுரை சொல்லியிருந்தார் .அந்த தழும்பும் மிஸ்ஸிங்"

"பேச்சுவாக்குல சொன்னதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறாய். நீ பெரிய ஆளுப்பா"

"எங்கண்ணனை தூக்கிட்டு போனவன் முகம்கூட இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.அவனைத்தான் நான் தேடிட்டே இருக்கேன்"

"ஊமையனுக்கு மூக்கை சொரிஞ்ச மாதிரி பண்ணிட்ட. இனி இது சேப்பான இடமில்லை. நாம எங்கியாவது தலைமறைவாகனும். ஆமா உன்னோட செல்போன் எங்கே?"

"அங்கியே விட்டுட்டு வந்துட்டேன்"

"லோகேசனா?"

"இல்லை. அந்த செல்போன்  ஒரு டிராப். அதை வேணும்னு தான் விட்டுட்டு வந்தேன்."

"எதை வச்சு சொல்ற?"

" எனக்கே தெரியாது"

"அது சரி. இப்ப நாம எங்கே போவது?"

"சொல்றேன். முதல்ல நம்ம பசங்களுக்கு போன் போட்டு அப்ஸ்காண்ட் ஆக சொல்லு"

குற்றாலம் அனைவருக்கும் தகவல் சொல்லி முடித்ததும்" இப்பவாவது சொல்லுப்பா. எங்கே போறோம்?" என்றான்

"கிருஷ்ணாபுரம். என்னோட சொந்த ஊருக்கு" என்ற வாசு சிம்கார்டை உருவி எடுத்து கொண்டு செல்போனை தூர வீசினான்.

திங்கள், 27 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் 15

அஷ்டவக்கிரன் 15

டாக்டர் சம்பத்குமார் ஆள் அரவமற்ற காட்டு பகுதியில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.அவனுக்கு பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஜான் குரோவரின் ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் திட்டத்தை இந்தியாவில் இருக்கும் எவனோ ஒருவன் மோப்பம் பிடித்துவிட்டிருப்பதை அவனால் நம்பமுடியவில்லை. இந்த புது அவதார ரகசியம் ஜானுக்கும் தனக்கும் மட்டும்தான் தெரியும் என்று இதுவரை அவன் நினைத்து கொண்டிருந்தான். இப்போது முகம் தெரியாத மூன்றாவது நபர் ஒருவனுக்கும் அந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. அவன் அதை வைத்துக்கொண்டு இப்போது சம்பத்குமாரையே மிரட்ட தொடங்கிவிட்டான்.

சம்பத் தனது செல்போனை எடுத்து ஜான் குரோவரிடம் இந்த மிரட்டல் விவகாரத்தை சொல்லலாமா? என்று ஒரு நிமிடம் யோசித்தான். இந்த விசயம் தெரிந்தால் அவன் தன்னை கண்டபடி திட்டுவான். தன் மீதான அவனது நம்பகத்தன்மை குறைந்துவிடும். ஜான் இப்போது தன்னுடைய கவனத்தை பயோ வெப்பன் என்கிற உயிரியல் ஆயுதங்களின் பக்கம் திருப்பி இருக்கிறான். அதற்கு ஏராளமான பரிசோதனை எலிகள் தேவை. அவற்றை அவனால் அவனது நாட்டில் செய்ய முடியாது. அவ்வளவு கெடுபிடிகள், விதிகள் அவனது ஆய்வுக்கு தடையாக இருப்பதால் அவன் இந்தியாவை தேர்ந்தெடுத்து வைத்திருந்து சம்பத்தை தனது பிரதிநிதியாக வைத்து கொண்டு ஏராளமான பணத்தை அள்ளி இறைத்து கொண்டிருந்தான்.

கோடிகளில் நனைந்து கொண்டிருக்கும் ஜானை இந்த பிரச்சனையில் இழுத்து விடாமல்தானே இந்த விவகாரத்தை கவனித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு சம்பத் வந்துவிட்டிருந்தான்.அந்த பிளாக்மெயில் ஆசாமியின் குறிகண்டிப்பாக பணமாகத்தான் இருக்க வேண்டும் அதற்காக அவன் மீண்டும் தன்னை அழைப்பான் என்று சம்பத் எதிர்பார்த்தான்.

அவனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. டாக்டரிடம் தப்பாக ஏதோ ஒரு விசயம் இருப்பதை தெரிந்துகொண்ட மணிகண்டன் அடுத்த முறை போன் செய்தபோது சம்பத் நேராக விசயத்திற்கு வந்துவிட்டான்.

"உன்னோட வாயை மூட எவ்வளவு பணம் வேண்டும்?" என்றான் சம்பத்.

மணிகண்டனுக்கு அவனது பேச்சு ஆச்சரியமாக இருந்தது. என்ன விசயம் என்று அவனுக்கு சரியாக தெரியவில்லை. குத்து மதிப்பாக எதையோ கண்டுபிடித்து வைத்திருந்தான். அதற்கே இந்த டாக்டர் பதறி கொண்டு பணம் தர முன்வருகிறான் என்றால் விசயம் தான் நினைப்பதைவிட பெரிதாக இருந்திருக்கவேண்டும் என்று யூகித்தான்.

"நான் பணம் கேட்கவேயில்லையே ?" என்று இன்னொரு கொக்கியை வீசினான் அவன்.

சம்பத்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை..இவன் பணம் கேட்டு மிரட்டுவான் என்று பார்த்தால் இவன் பணமே வேண்டாம் என்று குழப்புகிறானே என்று அவனுக்கு தோன்றியது.

"பணம் வேணாம்னா வேறு என்னதான் வேணும்?"

"நேர்ல பார்க்கும்போது சொல்றேன். இன்னைக்கு சாயந்தரம் அஞ்சுமணிக்கு நான் சொல்கிற இடத்துக்கு வாங்க"

"எந்த இடம்னு சொல்லு, வர்ரேன்"

மணிகண்டன் இடத்தை சொன்னான்." இந்த இடத்துக்கு நீங்க மட்டும் தனியா வாங்க. வேறு மாதிரி யோசிச்சா நல்லா இருக்காது,"

"வேறுமாதிரின்னா?"

"நான் உங்களப்பாத்துட்டு ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வரலைன்னா என்னோட ப்ரண்ட் இந்த விவகாரத்த போலீஸ்சுக்கு கொண்டுபோயிருவான்"

"முட்டாள். அவனுக்கும் இந்த விசயம் தெரியுமா?"

" தெரியாது. ஆனால் சீல் வைச்ச கவரை அவனிடம் கொடுத்துட்டு வந்துருக்கேன். நான் வீட்டுக்கு போகலைன்னா அவன் போலீசுக்கு போயிருவான்"

"நீ நினைப்பதுபோல் எதுவும் நடக்காது. சீக்கிரமாக வா" என்றான் சம்பத்.

இப்போது அந்த முகம் தெரியாத மணிகண்டனுக்காகத்தான் அவன் காத்திருந்தான்

சம்பத் மணியை பார்த்தான். மணி 5.10.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வருகிற அறிகுறி தென்படவில்லை.சம்பத் கால்களை உதைத்துகொண்டான்.அவன் தன்னை ஆழம் பார்க்கிறானோவென்ற சந்தேகம் சம்பத்திற்கு வந்துவிட்டது.இன்னும் பத்து நிமிடம் பார்த்துவிட்டு கிளம்பிவிடலாம் என்ற முடிவிற்கு சம்பத் வந்துவிட்டிருந்தான்.

பத்து நிமிடமும் முழுதாக கழிந்தது. நம்மிடம் விளையாடுகிறான் போலும் என்று நினைத்த சம்பத் தன்னுடைய காரை கிளப்பினான்.

அவன் தன்னுடைய காரை மெயின்ரோட்டை நோக்கி விரட்டியபோது அவனது போன் அடித்தது.

யார் என்று பார்த்தான் அவன்.அவன் தான் அந்த பிளாக்மெயிலர்.

"ஹலோ '

"ஸாரி டாக்டர். என்னோட வண்டி பஞ்சராகிவிட்டது. நான் சொன்ன இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்னாடி வாங்க"

" ஏன் இப்படி அலைகழிக்கிறாய்?"

"எச்சரிக்கையாக இருக்கிறேன். உசுரு பணத்தைவிட பெருசு. காத்துகிட்டு இருக்கேன். சீக்கிரமா வாங்க"

செல்லை அணைத்து சீட்டில் போட்ட சம்பத் ஆக்சிலேட்டரை அழுத்தினான்.

ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே நின்றிருந்த மணிகண்டன் கைகளை நீட்டி தன்னை அடையாளப்படுத்தினான்.
மணிகண்டனைப் பற்றி சம்பத் நிறையவே கேள்விப்பட்டிருந்தான்

"நீயா?" என்றான் அதிர்ச்சியோடு.

" என்னைத் தவிர வேறு யார் இதையெல்லாம் செய்வாங்க" என்று சிரித்தான் மணிகண்டன்.

காரைவிட்டு கீழே இறங்கினான் சம்பத்.

"நான் என்ன கண்டுபிடிச்சிருக்கேன்னு நீங்க கேக்கவேயில்லையே?"

"அது அனாவசியம். உனக்கு என்ன வேணும் ? பணம் வேணாம்னா வேற என்ன வேணும்?"

"அது சும்மா சொன்னது. எலும்பு வேண்டாம்னு எந்த நாயாவது சொல்லுமா?"

"சரி. எவ்வளவு வேணும்?"

"பத்து லட்சம்"

"காலைல ஹாஸ்பிடல் வந்து வாங்கிக்க. முதல்ல உன் பைக்கோட டயரை மாத்து"

"நாளைக்கு பணம் வந்தவுடன் பைக்கையே மாத்திடறேன்"

"நான் கிளம்புறேன்" என்ற சம்பத் அங்கிருந்து கிளம்பினான். இவன் இத்தோடு இதை நிறுத்தபபோவதில்லை என்று அவனுக்கு தோன்றியது. அவனுக்கு பணத்தேவை ஏற்படும்போதெல்லாம் நம்மிடம்தான் வந்து நிற்க போகிறான். இதை இப்போதே தடுத்து நிறுத்தியாக வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவன்.

அவனுக்கு ஸ்டில்லடோ ரவியின் நினைவு வந்தது. ஸ்டில்ல டோஜெர்மன் மேக்கத்தி.
பளபளவென்றுமின்னும் அந்த கத்தியால்தான் அவன் பல பேரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறான்.

செல்போனில் இருந்த அவனது நெம்பருக்கு அழைத்தான் சம்பத்.

"உண்மையை சொல்லாதவரை தினமும் ஒரு விரலை கட் பண்ணுவேன். சரியா? இன்னைக்கு சுண்டு விரல் "என்ற ரவி எதிரே இருந்தவனின் சுண்டு விரலை வெட்டினான்.அவன் அலற துவங்கினான்.." இவனை ரூம்ல போட்டு பூட்டு. நாளைக்கு இன்னொரு விரலை வெட்டனும். சாப்பிட பிரியாணி சிக்கன்னு கொடுங்க" என்றான் எதிரே நின்றிருந்ததன் ஆட்களிடம்.

அடித்த போனை அப்போதுதான் கவனித்தவன்" சொல்லுங்க டாக்டர், "என்றான்.

"ஒரு ஆளை போடனும் ரவி"

"செஞ்சுரலாம். ஆளை பத்தி முழு டீடெய்ல் வாட்ச்அப் பண்ணுங்க"

"அனுப்புறேன். ஆனா இதுல நீயும் மாட்ட கூடாது. நானும் மாட்ட கூடாது. உன்னோட ஸ்டில்ல டோவை இதில் யூஸ் பண்ணாத. அந்தகத்தி உன்னோட சிக்னேச்சர். போலீஸ் ஈசியா உன்னை பிடிச்சுரும்"

"அப்ப வேற என்ன பண்றது?"

"துப்பாக்கி"

"ஓகே. செஞ்சிடலாம்"

என்ற ரவி வாட்ஸ்ப்பில் வந்த தகவல்களை பார்த்தான்.

அவன் யோசிக்க ஆரம்பித்தான்.மணிகண்டனை கடத்தி கொலை செய்தால் போலீஸ் விசாரணை வரும். அதை திசைதிருப்ப என்ன செய்யலாம்?

ஸ்பெர்லைட் கலவரம் அதற்கான ஆட்கள் தேவைப்படுவது அவனது நினைவிற்கு வந்தது.மணிகண்டனின் உடலை ஸ்பெர்லைட் கலவரத்தில் நுழைத்துவிட்டால்தான் மாட்டிகொள்ளமாட்டோம் என்று அவனுக்கு தோன்றியது.

ஸ்டில்ல டோரவி தனக்குள் சிரித்துகொண்டான். பணத்தை வாங்கியதும் எல்லா செலவையும் தானே செய்து ஒரு கல்யாணத்தை செய்துவிட வேண்டும் என்று நினைத்தான் மணிகண்டன்.

புதன், 15 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்12

Aஆப்ரேசன் அஷ்வக்கிரன்

அத்தியாயம் 11

பூபதி கருவறையில் இருந்த சாமியை பார்த்து கொண்டிருந்தான்.அவன் எப்போதும் வைக்கும் ஒரே பிராத்தனையை இப்போதும் வைத்தான்."சோமசுந்தரம் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்"சோமசுந்தரம் அவனுடைய மனைவியின் தம்பி. அவனைப் பற்றி நினைப்பதற்கு இப்போது பூபதி மட்டும்தான் இருந்தான். தன் அருகே இருந்தமங்கலத்தை பார்த்த பூபதி "போலாமா?" என்றான்.

"போலாம்பா!" என்றாள மங்களம்.

மங்களம் அவனது ஒரே மகள்.

"ஆமா. நீ என்ன வேண்டிகிட்ட சாமியிடம் "

" நான் வேண்டுவதற்கு நிறைய இருக்குப்பா. காணாம போன பெரிய அண்ணன் அருணாசலத்தை பற்றி. எப்பவாவது வந்துட்டு போற வாசுவை பத்தி. எந்த நினைப்பும் இல்லாம அருணாசலத்தோட நினைவுல சுயபுத்தி இல்லாத அம்மாவை பக்தி. வார்த்தையில் என்னை கொல்கிற என் மாமியாரை பற்றின்னு. நான் வேண்டுனா லிஸ்டு ரொம்ப பெருசா போகும்." என்று கசப்புடன் புன்னகைத்தாள் மங்களம்.

"கடவுள் ஏன் தான் நம்மை இப்படி சோதிக்கிறானோ தெரியலை. உன்னோட அண்ணன் கடைசியா எப்போ வந்தான்?"

"மூணு மாசம் முன்னாடி."

"என்ன வேலை செய்யறானாம்?"

"கேட்டேன் சொல்லலை"

" இந்த ஊர் தான் அவனை விரட்டிவிட்டுச்சு. சரி உட்காரு. போகலாம்." என்ற பூபதி தன்னுடைய TVS 50 ஐ கிளப்பினான். மங்களம் உட்கார்ந்ததும் வண்டி கிளம்ப ஆரம்பித்தது.

பூபதி நகராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்துகொண்டிருந்தான்.கிருஷ்ணாபுரத்தின் சாதிய தீண்டாமை அவனை அவனது குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருந்தது.

சின்ன வயதில் பூபதிக்கு சாதியென்றால் என்னவென்றே தெரியாது. மற்றவர்களிடம் அப்பா துண்டை இடுப்பில் கட்டியபடி பேசுவதும் சின்ன பசங்கள் எல்லாம் அப்பாவை பேர் சொல்லி வாடா போடா என்று கூப்பிடுவதும் அவனுக்கு கோபத்தை தந்தன. வேற வழியில்லை. கண்ணு. அவங்க உசந்த சாதி. நாம தாழ்ந்த சாதி. அடங்கித்தான் போகவேண்டும் என்ற அப்பாவின் அறிவுரையும் அவனுக்கு எரிச்சலை உருவாக்கின. அவன் யார் வீட்டிலும் நுழைந்ததில்லை யாரும் அவனை வீட்டின் உள்ளே கூப்பிடமாட்டார்கள். சில தெருக்களில் செருப்பு போட்டு நடக்க முடியாது. பதினைந்து வருடம் வரை பூபதி செருப்பை போட்டதில்லை.

வாடா போடா என்று அப்பாவை அழைக்கும் முதலாளிகள் அதை அப்படியே தங்கள் மகன்களிடம் சொல்லிகொடுத்துவாடா போடா என்று அழைக்கச் சொல்லி "நான் கூப்பிடுறதை பார்த்து அப்படியே கூப்பிட்டு பழகுறான்" என்று சொல்லி சிரிப்பார்கள்.பூபதியின் அப்பா அதை ஏற்றுகொண்டாலும் பூபதியால் அதை ஏற்க முடிந்ததில்லை. அவன் திரும்ப ஏண்டா என்று கேட்டுவிடுவான். அதனால் பூபதி மீது அவர்களுக்கு ஒரு கண்.

இதிலிருந்து விடுபட ஒரே வழி படிப்புதான் என்று முடிவு செய்த பூபதி படிக்க ஆரம்பித்தான். நன்றாக படிக்கும் பூபதியின் படிப்பை கெடுக்கவும் வேலைகள் நடந்தன. உடல்நிலை சரியில்லாத அம்மாவிற்கு பணம் வேண்டுமென்று முதலாளிகளின் வீட்டுவாசல்படியில் நின்றபோது " இவன் படிச்சு என்ன பண்ண போறான்? பணம் தர்றேன் பேசாம பண்ணையத்துக்கு அனுப்பேன்" போன்ற நிபந்தனைகள் விதிக்கபபட்டன. இவற்றையெல்லாம் மீறித்தான் அவனால் படிக்க முடிந்தது. அவனால் எல்லா முயற்சிகளும் செய்தும் பத்தாவது வரை படிக்கத்தான் அவனது குடும்ப சூழல் இடம் கொடுத்தது.

அப்போதுதான் ஊருக்குள் சிவப்பு கொடிகட்ட துவங்கியிருந்த கம்யூனிஸ்ட கட்சி அவனை ஈர்த்தது. கட்சியில் உறுப்பினரானான். ஏராளமான புத்தகங்களை படித்து அறிவை விரித்துகொண்டான்.தோழர்கள் அவனுக்கு பஞ்சாயத்தில் டிராக்டர் ஓட்டும் வேலையை வாங்கி தந்தனர். தன் சமூக மக்கள் அதிகமாக இங்கே வேலையில் இருப்பதை பூபதி பார்த்தான்.ஏன் வேறு எந்த சாதியினரும் சமூகத்தினரும் இந்த வேலைகளை செய்வதில்லை? காலம்காலமாக ஒரே சாதி மட்டும் ஏன் இந்த வேலையை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மெல்லமெல்ல கேள்விகள் கேட்க ஆரம்பித்து சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்தான். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக வளர ஆரம்பித்தவன் எல்லா பிரச்சனைகளிலும் தலையிட ஆரம்பித்தான். போராட்டம், மறியல் என்று சுற்ற ஆரம்பித்தான்.

இவனை என்ன செய்து தடுப்பது என்று யோசித்தவர்கள் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.பூபதியின் வாழ்க்கை திசைமாறியது. வந்த மனைவியின் பேச்சை கேட்டு பூபதி பொது வாழ்க்கைக்கு முற்றுபுள்ளிவைத்தான் அவனுக்கு முதலில் பிறந்தவன் அருணாசலம். அவனுக்கு பின்னால் பிறந்தவன் வாசு. கடைசியாக பிறந்தவள் மங்களம்.

அவனது மனைவி சரஸ்வதியின் தம்பி தான் சோமசுந்தரம். சொந்த மச்சினன்.பூபதியைவிட அதிகமாக சாதியால் பாதிக்கப்பட்டவன். ஒரு பிரச்சனையில் குடும்பத்தோடு ஊரைவிட்டே போனவன். அவன் எங்கிருக்கிறான் என்று இன்றுவரை பூபதிக்கு தெரியாது.

குடும்பம் நன்றாக போய்கொண்டிருந்தபோது தான் மூத்தமகன் அருணாசலம் திடிரென்று ஒருநாள் காணாமல் போனான்.அவனை யாரோ காரில் தூக்கி சென்றதாக அதை நேரில் பார்த்த வாசு கூறினான். போலீசில் கம்ளைண்ட் செய்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூத்தமகன் காணாமல்போன அதிர்ச்சியில பூபதியின் மனைவி சரஸ்வதிக்கு சித்தபிரமை ஏற்பட்டுவிட்டது.அண்ணனை கண்முன்னால் இழந்த சோகத்தில் வாசு அதிர்ச்சியில் மூழ்கினான். நள்ளிரவு தூக்கத்தில் திடிரென்று எழுந்து கொண்டு அண்ணன் வேணும் என்று அழ ஆரம்பித்துவிடுவான்.திடிர் திடிரென்று வீட்டைவிட்டு ஓடிவிடும் வாசு இரண்டு மூன்று நாட்கள் கழித்து திரும்ப வீட்டிற்கு வந்துவிடுவான். மனைவியை குணப்படுத்த பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தான் பூபதி. ஆனாலும் அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.

தன் மகன் உளவியலாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் அதை குணப்படுத்த என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.வாசு எப்படியோ அடித்து பிடித்து காலேஜ் வரை வந்துவிட்டான்.பூபதியை தீண்டிய அதே சாதிய பாகுபாடு அவனையும் தீண்ட தொடங்கியபோது இந்த ஊரே வேண்டாம் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டான்.அவ்வப்போது அவனது சொந்த சுபாவப்படி வருவான். போவான்.அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் எதுவும் தெரியாது.

மிச்சமிருப்பது மங்களம். அவளால் அதிகம் படிக்க முடியவில்லை. மனநலமற்ற தாயை வைத்து கொண்டு அவளே எல்லா வீட்டுவேலைகளையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவளால் பள்ளிகூடம் போக முடியவில்லை. ஆனால் எழுதப்படிக்க கற்றுகொண்டிருந்தாள்..அவளுக்கு சொந்தக்கார பையனான செல்வத்தையே கல்யாணம் செய்து வைத்துவிட்டான் பூபதி. அவன் டெர்லைட் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான். சரியான அம்மா கோண்டு.

அவனது அம்மா பார்வதி. பணத்தாசை பிடித்தவள். பூபதியின் வீட்டை எழுதி வாங்குவது அவளது திட்டம்.வாசுவுக்கும் அதில் சம்மதம் தான். ஆனால் காணாமல்போன மூத்தமகன் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் என்பதால் அந்த சொத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. வாசு மாதாமாதம் பார்வதிக்கு பணம் அனுப்பி கொண்டிருந்ததாலேயே அவள் மங்களத்திடம் கருணை காட்டிகொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. மூன்று மாதமாக வாசு பணம் அனுப்பவில்லை. திட்டுவதற்கு மருமகளும் இல்லை.அவள் வாசுவை தேடிக்கொண்டிருந்தாள். மருமகளை திட்ட கூடுதலாக ஒரு காரணம் பார்வதிக்கு இருந்தது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் பிள்ளை பெறாத மருமகளை வார்த்தை சாட்டையால் விளாசி கொண்டிருந்தாள் அவள். அவளது இம்சை கடவுளுக்கே பொறுக்காமல் மங்களம் கர்ப்பமாகிவிட்டாள். மூன்று மாதத்தில வளைகாப்பு முடிந்து அப்பாவின் வீட்டிற்கே வந்துவிட்டாள் மங்களம்.

தான் கர்ப்பமாக இருப்பதை வாசுவிடம் சொல்ல முயன்ற மங்களத்திற்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது. அவனது போன் எப்போதும் சுவிட்ச் ஆப் என்றே கூறிக்கொண்டிருந்தது. அவனாகவே அவளை தேடி வந்தால்தான் உண்டு. தன் தாயின் ஆட்டத்தை தட்டி கேக்காததன் கணவன் செல்வத்தின் மீது அவளுக்கு மெலிதான கோபம் உண்டு.

வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பூபதி "இன்னும் ஒரு ஏழு மாசம் நிம்மதியா இருக்கலாம்" என்றான்.

"அம்மாவை பாத்துக்க நான் வந்துட்டேன்னு சொல்றியாப்பா?"

"இல்லைம்மா. நியாயமா உங்கம்மாதான் உனக்கு எல்லா வேலையும் இப்ப செய்யனும். ஆனா நிலைமையை பாத்தியா? நீதான் உங்கம்மாவை பாத்துக்கனும். நான் உன்னோட மாமியார் வாயை சொன்னேன்"

"நான் இல்லாம எப்படிப்பா அம்மாவை பாத்துக்குற?"

"வீட்டுல வைச்சு பூட்டித்தான்.அதைவிடும்மா. அப்படியே பழகிருச்சு. வாரிசு வரப்போகுது. சந்தோஷமா இருப்போம்.எனக்கு இருக்குறது நீ மட்டும்தான் மா"

அவனுக்கு கண்ணீரால் பாதை மறைத்தது. மேல்துண்டால் துடைத்துகொண்டான்

"ஏம்பா. அழுதியா?"

"இல்லைம்மா. தூசி கண்ல விழுந்துருச்சு. ஆமா நாளைக்கு நீ செக்கப்புக்கு போகனுமா?"

"ஆமாப்பா"

"அந்த டாக்டர் பேரு என்னம்மா?"

"அவரு பேரு டாக்டர் சம்பத்குமார்"

டாக்டர் சம்பத்குமார் மங்களத்தின் கேஸ் பைலை தனியாக எடுத்து வைத்தான்.

"எட்டாவது கேஸ் சிக்கிருச்சு" என்றன அவனது உதடுகள்.

அஷ்டவக்கிரன்11

Aஆப்ரேசன் அஷ்வக்கிரன்

அத்தியாயம் 11

பூபதி கருவறையில் இருந்த சாமியை பார்த்து கொண்டிருந்தான்.அவன் எப்போதும் வைக்கும் ஒரே பிராத்தனையை இப்போதும் வைத்தான்."சோமசுந்தரம் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்"சோமசுந்தரம் அவனுடைய மனைவியின் தம்பி. அவனைப் பற்றி நினைப்பதற்கு இப்போது பூபதி மட்டும்தான் இருந்தான். தன் அருகே இருந்தமங்கலத்தை பார்த்த பூபதி "போலாமா?" என்றான்.

"போலாம்பா!" என்றாள மங்களம்.

மங்களம் அவனது ஒரே மகள்.

"ஆமா. நீ என்ன வேண்டிகிட்ட சாமியிடம் "

" நான் வேண்டுவதற்கு நிறைய இருக்குப்பா. காணாம போன பெரிய அண்ணன் அருணாசலத்தை பற்றி. எப்பவாவது வந்துட்டு போற வாசுவை பத்தி. எந்த நினைப்பும் இல்லாம அருணாசலத்தோட நினைவுல சுயபுத்தி இல்லாத அம்மாவை பக்தி. வார்த்தையில் என்னை கொல்கிற என் மாமியாரை பற்றின்னு. நான் வேண்டுனா லிஸ்டு ரொம்ப பெருசா போகும்." என்று கசப்புடன் புன்னகைத்தாள் மங்களம்.

"கடவுள் ஏன் தான் நம்மை இப்படி சோதிக்கிறானோ தெரியலை. உன்னோட அண்ணன் கடைசியா எப்போ வந்தான்?"

"மூணு மாசம் முன்னாடி."

"என்ன வேலை செய்யறானாம்?"

"கேட்டேன் சொல்லலை"

" இந்த ஊர் தான் அவனை விரட்டிவிட்டுச்சு. சரி உட்காரு. போகலாம்." என்ற பூபதி தன்னுடைய TVS 50 ஐ கிளப்பினான். மங்களம் உட்கார்ந்ததும் வண்டி கிளம்ப ஆரம்பித்தது.

பூபதி நகராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்துகொண்டிருந்தான்.கிருஷ்ணாபுரத்தின் சாதிய தீண்டாமை அவனை அவனது குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருந்தது.

சின்ன வயதில் பூபதிக்கு சாதியென்றால் என்னவென்றே தெரியாது. மற்றவர்களிடம் அப்பா துண்டை இடுப்பில் கட்டியபடி பேசுவதும் சின்ன பசங்கள் எல்லாம் அப்பாவை பேர் சொல்லி வாடா போடா என்று கூப்பிடுவதும் அவனுக்கு கோபத்தை தந்தன. வேற வழியில்லை. கண்ணு. அவங்க உசந்த சாதி. நாம தாழ்ந்த சாதி. அடங்கித்தான் போகவேண்டும் என்ற அப்பாவின் அறிவுரையும் அவனுக்கு எரிச்சலை உருவாக்கின. அவன் யார் வீட்டிலும் நுழைந்ததில்லை யாரும் அவனை வீட்டின் உள்ளே கூப்பிடமாட்டார்கள். சில தெருக்களில் செருப்பு போட்டு நடக்க முடியாது. பதினைந்து வருடம் வரை பூபதி செருப்பை போட்டதில்லை.

வாடா போடா என்று அப்பாவை அழைக்கும் முதலாளிகள் அதை அப்படியே தங்கள் மகன்களிடம் சொல்லிகொடுத்துவாடா போடா என்று அழைக்கச் சொல்லி "நான் கூப்பிடுறதை பார்த்து அப்படியே கூப்பிட்டு பழகுறான்" என்று சொல்லி சிரிப்பார்கள்.பூபதியின் அப்பா அதை ஏற்றுகொண்டாலும் பூபதியால் அதை ஏற்க முடிந்ததில்லை. அவன் திரும்ப ஏண்டா என்று கேட்டுவிடுவான். அதனால் பூபதி மீது அவர்களுக்கு ஒரு கண்.

இதிலிருந்து விடுபட ஒரே வழி படிப்புதான் என்று முடிவு செய்த பூபதி படிக்க ஆரம்பித்தான். நன்றாக படிக்கும் பூபதியின் படிப்பை கெடுக்கவும் வேலைகள் நடந்தன. உடல்நிலை சரியில்லாத அம்மாவிற்கு பணம் வேண்டுமென்று முதலாளிகளின் வீட்டுவாசல்படியில் நின்றபோது " இவன் படிச்சு என்ன பண்ண போறான்? பணம் தர்றேன் பேசாம பண்ணையத்துக்கு அனுப்பேன்" போன்ற நிபந்தனைகள் விதிக்கபபட்டன. இவற்றையெல்லாம் மீறித்தான் அவனால் படிக்க முடிந்தது. அவனால் எல்லா முயற்சிகளும் செய்தும் பத்தாவது வரை படிக்கத்தான் அவனது குடும்ப சூழல் இடம் கொடுத்தது.

அப்போதுதான் ஊருக்குள் சிவப்பு கொடிகட்ட துவங்கியிருந்த கம்யூனிஸ்ட கட்சி அவனை ஈர்த்தது. கட்சியில் உறுப்பினரானான். ஏராளமான புத்தகங்களை படித்து அறிவை விரித்துகொண்டான்.தோழர்கள் அவனுக்கு பஞ்சாயத்தில் டிராக்டர் ஓட்டும் வேலையை வாங்கி தந்தனர். தன் சமூக மக்கள் அதிகமாக இங்கே வேலையில் இருப்பதை பூபதி பார்த்தான்.ஏன் வேறு எந்த சாதியினரும் சமூகத்தினரும் இந்த வேலைகளை செய்வதில்லை? காலம்காலமாக ஒரே சாதி மட்டும் ஏன் இந்த வேலையை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மெல்லமெல்ல கேள்விகள் கேட்க ஆரம்பித்து சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்தான். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக வளர ஆரம்பித்தவன் எல்லா பிரச்சனைகளிலும் தலையிட ஆரம்பித்தான். போராட்டம், மறியல் என்று சுற்ற ஆரம்பித்தான்.

இவனை என்ன செய்து தடுப்பது என்று யோசித்தவர்கள் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.பூபதியின் வாழ்க்கை திசைமாறியது. வந்த மனைவியின் பேச்சை கேட்டு பூபதி பொது வாழ்க்கைக்கு முற்றுபுள்ளிவைத்தான் அவனுக்கு முதலில் பிறந்தவன் அருணாசலம். அவனுக்கு பின்னால் பிறந்தவன் வாசு. கடைசியாக பிறந்தவள் மங்களம்.

அவனது மனைவி சரஸ்வதியின் தம்பி தான் சோமசுந்தரம். சொந்த மச்சினன்.பூபதியைவிட அதிகமாக சாதியால் பாதிக்கப்பட்டவன். ஒரு பிரச்சனையில் குடும்பத்தோடு ஊரைவிட்டே போனவன். அவன் எங்கிருக்கிறான் என்று இன்றுவரை பூபதிக்கு தெரியாது.

குடும்பம் நன்றாக போய்கொண்டிருந்தபோது தான் மூத்தமகன் அருணாசலம் திடிரென்று ஒருநாள் காணாமல் போனான்.அவனை யாரோ காரில் தூக்கி சென்றதாக அதை நேரில் பார்த்த வாசு கூறினான். போலீசில் கம்ளைண்ட் செய்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூத்தமகன் காணாமல்போன அதிர்ச்சியில பூபதியின் மனைவி சரஸ்வதிக்கு சித்தபிரமை ஏற்பட்டுவிட்டது.அண்ணனை கண்முன்னால் இழந்த சோகத்தில் வாசு அதிர்ச்சியில் மூழ்கினான். நள்ளிரவு தூக்கத்தில் திடிரென்று எழுந்து கொண்டு அண்ணன் வேணும் என்று அழ ஆரம்பித்துவிடுவான்.திடிர் திடிரென்று வீட்டைவிட்டு ஓடிவிடும் வாசு இரண்டு மூன்று நாட்கள் கழித்து திரும்ப வீட்டிற்கு வந்துவிடுவான். மனைவியை குணப்படுத்த பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தான் பூபதி. ஆனாலும் அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.

தன் மகன் உளவியலாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் அதை குணப்படுத்த என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.வாசு எப்படியோ அடித்து பிடித்து காலேஜ் வரை வந்துவிட்டான்.பூபதியை தீண்டிய அதே சாதிய பாகுபாடு அவனையும் தீண்ட தொடங்கியபோது இந்த ஊரே வேண்டாம் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டான்.அவ்வப்போது அவனது சொந்த சுபாவப்படி வருவான். போவான்.அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் எதுவும் தெரியாது.

மிச்சமிருப்பது மங்களம். அவளால் அதிகம் படிக்க முடியவில்லை. மனநலமற்ற தாயை வைத்து கொண்டு அவளே எல்லா வீட்டுவேலைகளையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவளால் பள்ளிகூடம் போக முடியவில்லை. ஆனால் எழுதப்படிக்க கற்றுகொண்டிருந்தாள்..அவளுக்கு சொந்தக்கார பையனான செல்வத்தையே கல்யாணம் செய்து வைத்துவிட்டான் பூபதி. அவன் டெர்லைட் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான். சரியான அம்மா கோண்டு.

அவனது அம்மா பார்வதி. பணத்தாசை பிடித்தவள். பூபதியின் வீட்டை எழுதி வாங்குவது அவளது திட்டம்.வாசுவுக்கும் அதில் சம்மதம் தான். ஆனால் காணாமல்போன மூத்தமகன் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் என்பதால் அந்த சொத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. வாசு மாதாமாதம் பார்வதிக்கு பணம் அனுப்பி கொண்டிருந்ததாலேயே அவள் மங்களத்திடம் கருணை காட்டிகொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. மூன்று மாதமாக வாசு பணம் அனுப்பவில்லை. திட்டுவதற்கு மருமகளும் இல்லை.அவள் வாசுவை தேடிக்கொண்டிருந்தாள். மருமகளை திட்ட கூடுதலாக ஒரு காரணம் பார்வதிக்கு இருந்தது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் பிள்ளை பெறாத மருமகளை வார்த்தை சாட்டையால் விளாசி கொண்டிருந்தாள் அவள். அவளது இம்சை கடவுளுக்கே பொறுக்காமல் மங்களம் கர்ப்பமாகிவிட்டாள். மூன்று மாதத்தில வளைகாப்பு முடிந்து அப்பாவின் வீட்டிற்கே வந்துவிட்டாள் மங்களம்.

தான் கர்ப்பமாக இருப்பதை வாசுவிடம் சொல்ல முயன்ற மங்களத்திற்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது. அவனது போன் எப்போதும் சுவிட்ச் ஆப் என்றே கூறிக்கொண்டிருந்தது. அவனாகவே அவளை தேடி வந்தால்தான் உண்டு. தன் தாயின் ஆட்டத்தை தட்டி கேக்காததன் கணவன் செல்வத்தின் மீது அவளுக்கு மெலிதான கோபம் உண்டு.

வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பூபதி "இன்னும் ஒரு ஏழு மாசம் நிம்மதியா இருக்கலாம்" என்றான்.

"அம்மாவை பாத்துக்க நான் வந்துட்டேன்னு சொல்றியாப்பா?"

"இல்லைம்மா. நியாயமா உங்கம்மாதான் உனக்கு எல்லா வேலையும் இப்ப செய்யனும். ஆனா நிலைமையை பாத்தியா? நீதான் உங்கம்மாவை பாத்துக்கனும். நான் உன்னோட மாமியார் வாயை சொன்னேன்"

"நான் இல்லாம எப்படிப்பா அம்மாவை பாத்துக்குற?"

"வீட்டுல வைச்சு பூட்டித்தான்.அதைவிடும்மா. அப்படியே பழகிருச்சு. வாரிசு வரப்போகுது. சந்தோஷமா இருப்போம்.எனக்கு இருக்குறது நீ மட்டும்தான் மா"

அவனுக்கு கண்ணீரால் பாதை மறைத்தது. மேல்துண்டால் துடைத்துகொண்டான்

"ஏம்பா. அழுதியா?"

"இல்லைம்மா. தூசி கண்ல விழுந்துருச்சு. ஆமா நாளைக்கு நீ செக்கப்புக்கு போகனுமா?"

"ஆமாப்பா"

"அந்த டாக்டர் பேரு என்னம்மா?"

"அவரு பேரு டாக்டர் சம்பத்குமார்"

டாக்டர் சம்பத்குமார் மங்களத்தின் கேஸ் பைலை தனியாக எடுத்து வைத்தான்.

"எட்டாவது கேஸ் சிக்கிருச்சு" என்றன அவனது உதடுகள்.

திங்கள், 13 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்!

ஆபரேசன் அஷ்டவக்கிரன்.

அத்தியாயம் 10

டிரைவர் சொன்னதை கேட்டதும் சதாமின் நடுமுதுகில் வேர்த்தது.

"நீ சொல்வது உண்மையா?" என்றான் பதட்டத்துடன்.

" என்னோட கண்ணால பார்த்தேன்.துரை பாண்டியனை கொல்ல வந்த கும்பலிடம் இருந்து இவங்க ரெண்டுபேர் தான் காப்பாத்துனாங்க. இரண்டுபேருமே காக்கி கலர் பேண்ட் போட்டுகிட்டு போலீஸ்னு சொல்லிட்டு இருந்ததை நானே பார்த்தேன்.அதுக்கு பிறகுதான் துரைபாண்டியன் போலீசில் சரணடைந்தான்.அவ்வளவுதான் எனக்கு தெரியும்" என்றான் டிரைவர்.

"அவனுக போட்டோவை எனக்கு வாட்ஸ்அப் பண்ணு" என்ற சதாம் காரில் ஏறிக்கொண்டான்.

வந்துசேர்ந்த இருவரின் போட்டோவையும் தன் ஆட்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்அப் குருப்பில் சுற்றலில் விட்டவன்" காரை எடு" என்றான்.

தம்பி தேடிக்கொண்டிருந்த சரக்கு கிடைத்துவிட்டது. ஆனால் அதை தயாரிப்பவர்கள் மீது அவனுக்கு போதுமான நம்பிக்கை இல்லை. போலீஸ் என்று டிரைவர் சொன்னதும் கொஞ்சம் உஷாராகி விட்டான்.

அவனுக்கு குற்றாலத்தை தெரியும். அவ்வப்போது பவுடர் வாங்க வருகிறவன். கையில் காசு இல்லாவிட்டால் கடனுக்கு சரக்கு வாங்கி போகிறவன் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து போனை எடுக்காமல் பிரசரை ஏற்றுகிறவன். இழுத்தடித்து எப்படியோ காசை கொடுத்து செட்டில செய்துவிடுவான்.அவனை போலீஸ் என்று டிரைவர் சொன்னதை அவனால் நம்பமுடியவில்லை.

குற்றாலத்தின் கூட இருந்தவன் அவ்வளவு நல்லவனாக தோன்றவில்லை.அவன் ஒருவேளை போலீசாக இருந்து குற்றாலத்தை இன்பார்மராக பயன்படுத்துகிறானோ என்றுகூட நினைத்தான் சதாம்.

நமக்கு எதற்கு வம்பு. ஏதாக இருந்தாலும் தம்பியே முடிவெடுக்கட்டும் என்று கடைசியாக நினைத்துகொண்டான்

அவன் தம்பியின் இடத்திற்குள் நுழைந்தபோது ஒருவனை கட்டிவைத்து முகத்தில் குத்திகொண்டிருந்த தம்பி ரத்தம் படிந்த கையை பைப் தண்ணீரில் கழுவிவிட்டு "சதாம். சாம்பிள் கொண்டுவந்துருக்கியா?" என்றான்.

"இதோ" என்ற சதாம் பவுடர் பாக்கெட்டை கொடுத்தான்.

"நம்ம கெமிஸ்டை கூப்பிடுங்கடா" என்றான் தம்பி.

கண்ணாடி அணிந்து பிரெஞ்சுபியர்ஸ் தாடியோடு எங்கிருந்தோ வந்தவன் பவுடர் பாக்கெட்டை வாங்கினான்.

"இதை டெஸ்ட் பண்ணு.. ஆஸ்திரேலியா சரக்கோடு ஓத்து போகுதான்னு பாரு" என்றான தம்பி.

அவன் தலையாட்டிவிட்டு இருட்டில் மறைந்தான்

"சொல்லு சதாம். இவனை எங்கே பிடித்தாய்?"

"எனக்கு தெரிஞ்ச பயதான். குற்றாலம்னு பேரு. அவனாதான் என்னை போன் பண்ணி கூப்பிட்டான்.அவன் கூட இன்னொருத்தன் இருந்தான். அவன்தான் பார்ட்டியாம்"

"அவனுக்கு இது எப்படி கிடைச்சதுன்னு தெரியுமா?"

"தெரியலை. முதல்ல அவன் கொடுத்தது ஓரிஜினலா இல்லையான்னு பார்ப்போம்"

"துரை பாண்டியன் இடத்தை இவன்பில் அப்பண்ணினால் பரவாயில்லை."

"இவன் கொஞ்சம் திமிரா இருக்கான்"

"இவனுக்கு எப்படி அந்த வித்தை தெரிந்தது? இங்கே அது தெரிஞ்ச ஒரே ஆள் அவன்தான்"

"தெரியலை. விசாரிக்கனும்"

உள்ளே வந்த கெமிஸ்ட் "தலைவரே. சரக்கு தரம்.துரையோட அதே ஸ்டேண்டர்டு." என்றான்.

"அப்பா. நிம்மதி" என்றான் தம்பி.

சதாமின் செல்போனில் வாட்ஸ்அப் நோட்டிபிகேசன் சத்தம் தொடாந்து வர ஆரம்பித்தது.

"என்னாச்சு சதாம்? போன்ல இத்தனை நோட்டிபிகேசன்?"

" ஒரு சின்ன பிரச்சனை"

" என்னன்னு சொல்லு"

" இந்த போட்டோவை பாருங்க. இவனுக ரெண்டுபேர் தான் சரக்கை என்னிடம் கொடுத்தது" என்ற சதாம் போனை தம்பியிடம் கொடுத்தான்.

"இதுல யாரு சரக்கு பார்ட்டி?"

சதாம் வாசுவின் படத்தை காட்டினான்.

தம்பி அதை ஜும் செய்து பார்த்தான்.

" இவன் பேரு?"

"வாசு"

" இந்த பேரை எங்கியே கேள்விப்பட்டு இருக்கேன்" என்ற தம்பி வாட்ஸ்அப் குரூப் சாட்டை பார்க்க ஆரம்பித்தான்.

"இவர்கள் இரண்டு பேரையும் நம் ஆளுக ஏற்கனவே பார்த்திருப்பதாக சொல்கிறார்களே?"

"துரை பாண்டியனை காப்பாற்றியது இவனுக தானாம். இவனுக ரெண்டுபேரும் போலீஸ்னு என்னோட டிரைவர் சொல்றான்."

"இவனை போலீஸ்னு நினைக்கலாம். ஆனா கூட இருக்கிற இந்த கோமாளியை எப்படி போலீஸ்னு நம்புறது?"
அவன் சுட்டிகாட்டியது குற்றாலத்தை.

"ஏதாவது அண்டர்கவர் ஆப்ரேசன் ல இருப்பாங்க போல. போலீஸ்ல தான் ஏகப்பட்டடிப்பார்ட்மண்ட் இருக்கே? அதுல ஏதுலயாவது வேலை பார்ப்பான் போல, இவனை எனக்கு கொஞ்ச நாளாத்தான் பழக்கம். அதுவும் பவுடர் வாங்க வரும்போது தான், "

" இரு. இப்ப கன்பார்ம் பண்றேன்" என்ற தம்பி ஜெயிலரை போனில் அழைத்தான்.

"சொல்லுங்க சார்"

"அந்த துரைபாண்டியனோட அசிஸ்டெண்ட். அவன் பேரு என்ன?"

"வாசு. அவன் நேத்தே ரிலீசாகி விட்டான். பேசிப் பார்த்தேன். ஒன்னும் கத்துக்கலைன்னு சொல்லிட்டான்"

"நீ முட்டாள்னு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய முட்டாள்னு தெரியாது. அவன் இப்ப எங்கிட்டவந்துட்டான். அவன் உங்க டிப்பார்ட்மெண்டுதானே?"

" என்னங்க சொல்றீங்க?"

"பொய் சொல்லாதே.அவன் உங்க ஆளு தானே?"

"அவன் எங்க ஆளுன்னு சொன்னானா?"

"இல்லை."

"அவங்க மாமா மாதிரி போலீசாகனும்னு வேணா சொன்னான்,

"அவங்க மாமா போலீசா?"

"அவரும் போலீசாக ஆசைப்பட்டாருனு சொன்னான் "

"குழப்பாதே! போனை வை" என்று போனை அணைத்தான் தம்பி.

"அந்த துரைபாண்டியன் ஏதோ தெளிவா பிளான் பண்ணியிருக்கான். இந்த வாசு அவனோட ஆள் தான். நமக்கு வாசுன்னு சின்ன மீனை போட்டு பெருசா எதையோ பண்ண நினைக்கிறான். இது ஒரு டிராப்னு நினைக்கிறேன். சதாம். அந்த துரைபாண்டியன் பைத்தியமாக நடித்து கூட நம்மை ஏமாற்றலாம். நீ போய் அவனை உடனே பாரு.அதுக்கு முன்னால அந்த குற்றாலத்தின் நெம்பரை கொடு. நான் பேசணும்"

என்றான் தம்பி.

நெம்பரை கொடுத்துவிட்டு வெளியேறினான் சதாம்.

தம்பிக்கு தெளிவாக புரிந்துவிட்டது.துரை பாண்டியன் தான் இதன் சூத்ரதாரி.வாசுவுக்கு தொழில் கற்றுகொடுத்ததும் அவன் தான். எதற்காக இந்த நாடகம்? அவன் குற்றாலத்தை போனில் அழைத்தான்.

" நான் தம்பி பேசறேன்"

"சொல்லுண்ணே"

"அந்த வாசுகிட்ட போனை கொடு"

"இதோ"

"வாசு"

"சொல்லுங்க"

" நான் தம்பி. என்கிட்ட வேலைக்கு வர்ரியா? துரைபாண்டியனோட இடத்தை நீ எடுத்துக்க. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. தர்ரேன்"

"என்ன தருவீங்க?"

"என்ன வேணும்னு கேளு."

"எனக்கு மாயா வேணும்"

"எனக்கு புரியலை'

" எனக்கு துரைபாண்டியனோட பொண்ணுமாயா வேணும். இதை தவிர வேற டிமாண்ட் இல்லை."

"நேர்ல வா. பேசுவோம்" என்று போனை அணைத்தான் தம்பி.

மாயா தன்னிடம் இருந்து தப்பிபோய் இரண்டு நாட்களாகிவிட்டதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது காணாமல்போன அதே மாயாவை தேடிக்கொண்டு ஒருவன். தம்பிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இப்போது மாயாவுக்கு எங்கே போவது? அவன் வெகுவேகமாக சிந்திக்க ஆரம்பித்தான்.

அதேநேரம் சதாம் அரசு மன நல விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்

ரிசப்சனில்" நான் துரைபாண்டியனை பார்க்கனும்" என்றான்.

"நீங்க?"

"அவர் தம்பி."

"அது போலீஸ் கேசுங்க. போலீஸ் பர்மிசன் இல்லாம நாங்க யாரையும் விடக்கூடாது"

"ஓ! அப்படியா?சரி. நான் பர்மிசனுடன் வருகிறேன்" என்று திரும்பி நடந்தான் சதாம்.

"ஷ்" என்ற சத்தத்திற்கு திரும்பினான் அவன்.

ஓரமாக மறைந்து நின்றிருந்த வார்டன் "நான் துரைபாண்டியனிடம் கூட்டிபோனால் என்ன தருவ?" என்றான்.

சதாம் நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவனிடம் நீட்டினான். அவசரமாக அதை பதுக்கியவன்" என் பின்னாடியே வா" என்றான்.

வராந்தாவில் நடந்து சென்றவன் ஒரு கதவை திறந்தான்" உள்ளேதான் இருக்கான். போய் பாரு. பத்து எண்றதுக்குள்ள வந்துரு" என்றான்.

அறையின் நடுநாயகமாக ஒருவன் உட்கார்ந்து சுவரை வெறித்து கொண்டிருந்தான்.

"துரை பாண்டியன்" என்றபடி அவன் முதுகில் கைவைத்தான் சதாம்.

திரும்பியவன் துரைபாண்டியன் இல்லை. வேறோருவன். விகாரமாக சிரித்தவன்" நான் தான் துரைபாண்டியன்" என்று சிரித்தான்

"பத்து எண்ணியாச்சு. வெளியே வா" என்று வார்டன் அவனை வெளியே இழுத்தான்.

துரைபாண்டியன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான் என்று சதாமுக்கு புரிந்தது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்9

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்

அத்தியாயம் 9

வாசு சிறையைவிட்டு வெளியே வந்தபோது அவனுக்காக குற்றாலம் காத்துகொண்டிருந்தான்.

"என்னப்பா !உன்னோட வாத்யார்பூரா பாடமும் ஒழுங்கா சொல்லிகொடுத்தாரா? இல்லை அரியர் ஏதாவது வைச்சிருக்காரா?"

"முக்கியமான மேட்டரை மட்டும் இன்னும் சொல்லி தரலை."

"அதையும் சொல்லிகொடுத்தா அவன் பொண்ணை நீ கண்டுபிடிச்சு காப்பாத்தமாட்டியே? சரியான கொடக்கண்டன் அவன் "

" இருக்கட்டும். நானும் அந்த ஆள் இருக்கிற இடத்துல இருந்தா இதைத்தான் பண்ணுவேன்"

"சரி. ரெண்டுபேரும் பிளான் பண்ணினபடி ஒன்னாவே ஜெயிலுக்கு வந்து தொழில் கத்துகிட்ட. அடுத்தது என்ன பண்ண போற?'

" இரு. அந்தாளு கிளம்பும்போது ஒரு சீட்டை கொடுத்தான் .அதுல என்ன இருக்குன்னு பார்ப்போம்" என்ற வாசுதன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அந்த சுருட்டப்பட்ட சீட்டை பிரித்தான்.

அதில் ஒரு செல்போன் கடை அட்ரசும் அதன் கீழே 2112 என்ற நான்கு எண்களும் எழுதப்பட்டிருந்தன..

"இது என்ன நெம்பர்.? ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு மாதிரி இருக்கு" என்றான் குற்றாலம்.

" அந்தாளோட போனை போலீஸ் சீஸ் பண்ணிட்டாங்க. அதே நெம்பரை திரும்ப வாங்கனும்னா துரைபாண்டியனோட அதே ப்ரூப் வேணும். அது அவன் மககிட்டத்தான் இருக்கனும். அவளைத்தான் தம்பி பிடிச்சு வைச்சிருக்கானே?"

"அது அவனுக்கு டீ குடிக்கிற காசுப்பா. இது வேற ஏதாவது நெம்பரா இருக்கலாம்"

"முதல்ல அந்த சீட்டுல இருக்கிற செல்போன் கடைக்கு போகலாம்"

"அதான் சரி. முதல்ல ஒரு ஆட்டோவை பிடிப்போம்" என்ற குற்றாலம் கைதட்டினான்.அதை மதித்து நின்ற ஆட்டோ வில் இருவரும் ஏறிக்கொண்டனர்.

"அடுத்தது என்னப்பா பண்ண போற?"

" அதை அப்புறம் பார்ப்போம். நான் மூணு மாசம் உள்ளே போயிட்டேன். வெளியே என்ன நடந்ததுன்னு சொல்லவே மாட்டேங்குறியே?"

"தலை நீ. நீ இல்லா நாங்க என்ன பண்ணமுடியும்? முன்ன மாதிரி வாழ்க்கை செழிப்பா இல்லை. மூணு மாசமா நாய்படாதபாடு. நம்ம பசங்க ஏதோ கிடைச்சதை வைச்சு வாழ்க்கையை ஓட்டுறோம்.கிருஷ்ணாபுரம்னு ஒரு ஊர்ல கலவரம் பண்ணனுமாம். ஆள் வேணும்னு வந்தாங்க. ரொம்ப தூரம்னு அந்த புராஜக்டை வேணாம்னு சொல்லிட்டோம்"

வாசுவின் புருவங்கள் நிமிர்ந்தன.

"எந்த கிருஷ்ணாபுரம்?" என்றான் பரபரப்புடன்.

"கவலைப்படாதே! நீ நினைப்பது சரிதான். உன்னோட சொந்த ஊர்தான்.அந்த பெர்லைட் கம்பெனில தான் ஏதோ பிரச்சனை பண்ண நினைக்கிறாங்க"

வாசு சிந்தனையில் ஆழ்ந்தான்.அவனையே பார்த்து கொண்டிருந்த குற்றாலம்" என்ன யோசிக்கிற? அந்த ஊரே வேணாம்னுதானே இங்க ஓடிவந்தாய்? ஆனா பாரு இப்ப அந்த ஊர்ல ஒரு பிரச்சனைன்னு சொன்னதும் தானா உன் மனசு பதறுது. அது தான் ஊர் பாசம், "

"உண்மைதான்" என்றான் வாசு.

"சார். நீங்க சொன்ன இடம் வந்துருச்சு" என்றான் ஆட்டோ டிரைவர்.

கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் துரைபாண்டியன் குறிப்பிட்டிருந்த கடையை தேடி நடந்தனர்.

ஒரு சந்தில் யாரும் கவனிக்காத இடத்தில் ஒளிந்திருந்தது அந்த செல்போன் கடை.

இருவரும் கடைக்குள் நுழைந்ததை பார்த்து அவன் எழுந்தான் காதில் இருந்த ஹேட் போனை கழற்றியவன் "ரீ சார்ஜா சார்" என்றான்.

வாசு எதுவும் பேசாமல் பேப்பரை நீட்டினான்.

அதை பார்த்தவன் முகத்தில் பரபரப்பு தொற்றியது.

" ஒரு நிமிசம் இருங்க." என்றவன் கடை ரேக்குக்கு பின்புறமாக சென்றான்.

பத்து நிமிடத்தில் திரும்ப வந்தவன்"இந்தாங்க" என்று ஒரு செல்போனை கொடுத்தான்.

"அவ்வளவுதான் கிளம்புங்க" என்றவன் மறுபடியும் ஹேட் போனை காதில் மாட்டிகொண்டு சாய்ந்தான்.

இருவரும் திரும்ப நடந்தனர்

அவன் கையிலிருந்த செல்போனை வாங்கி ஆன் செய்தான் குற்றாலம்.

" இது ரொம்ப காஸ்ட்லி செல்போன். இதோட செட்டப்பை பார்த்தால் சாட்டிலைட் போன் மாதிரி தெரியுது"

"அதேதான்" என்றான் வாசு.

"இதுல எதை பேசினாலும் டிராக் பண்ண முடியாதே?"

"ஆமா. இதைப் பத்திதுரை ஏற்கனவே சொல்லி இருக்காரு. இப்ப நாம ரூமுக்கு போவோம்" என்றான் வாசு.

அவனது மூளை எப்படி துரைபாண்டியனை நெருங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தது. தானாக போனால் குலம் என்ன கோத்திரம் என்ன என்று விசாரிப்பான். நீ தானே என்னை தேடி வந்தாய் என்று குத்தி காட்டி பேசவும் வாய்ப்பிருக்கிறது. அவனே தன்னை தேடி வரனும். அதற்கு என்ன செய்யலாம்?

அவன் தன்னுடைய பழைய அறைக்குள் நுழைந்ததும் அவனது ஆட்கள் அவனை சூழ்ந்துகொண்டனர்.வாசு திரும்பி குற்றாலத்தை பார்த்தான்.

" நான் தான் போன் பண்ணி நீரிலீசுன்னு சொன்னேன். இவனுக யாரும் இன்னைக்கு தொழிலுக்கு போகலை"

"இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு தானே?" என்றான் ஒருவன்.

" வைச்சிட்டாப் போச்சு" என்றான் குற்றாலம்.

அன்று இரவு மொட்டைமாடியில் கச்சேரி துவங்கியது.

இரவு அனைவரும் தூங்கியபிறகு வாசு குற்றாலத்திடம் பேச ஆரம்பித்தான்.

"குற்றாலம். தம்பி என்னை தேடனும்? அதுக்கு என்ன பண்ணலாம்?"

"அவனும் தான் புது டிரக் டேஸ்டரை தேடிட்டு இருக்கான்"

"நம்மை அவனுக்கு அறிமுகப்படுத்திவைக்க யாராவது வேணும்"

"யாரு வருவா? நம்ம ஹிஸ்டரி ரொம்ப மோசமா இருக்கு. இது வேற புது தொழில். அதுவும் 80 பர்செண்ட்தான் தெரியும்"

"வேற வழி இல்லை. ரிஸ்க் எடுத்துத்தான் ஆகனும். இப்ப என்னோட சரக்கு தான் என்னை தேட வைக்கனும்"

"என்ன பண்ணலாம்னு யோசி. "

"யோசிக்கிறேன்".என்றான் வாசு சிந்தனை வசப்பட்டவனாக. 

மறுநாள் காலையில் சிறையில் கிடைத்த சொற்ப பணத்துடன் ரூமைவிட்டு வெளியேறினான் வாசு.

தனக்குபழக்கமான இடத்தில் கொஞ்சம் பவுடரை வாங்கியவன் ஒரு சைண்டிபிக் கடையில் சில எக்யூப்மெண்டுகளை, கெமிக்கல்களை வாங்கிகொண்டு அறைக்கு திரும்ப வந்தான். டாய்லெட்டுக்குள் நுழைந்து உள்ளே தாழிட்டவன் அதை மினிலேபாக மாற்றினான்.

வெளியே குற்றாலம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தான்.

இவ்வளவு நேரமாக டாய்லெட்டில் என்ன செய்கிறான்? ஒரு வேளை நைட் தின்றசில்லி சிக்கன்காரம் ஒத்துகொள்ளாமல் வயிற்றுபோக்கு ஏற்பட்டுவிட்டதோ என்றுகூட அவன் நினைத்தான்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவன் தரமுயர்த்தப்பட்ட சரக்கோடு வெளியே வந்தான்.

"இது 80 பர்செண்ட் தர முயற்த்தப்பட்ட சரக்கு. இதை தம்பி கண்ணுக்கு கொண்டு போகனும்"

"கவலைய விடு.சதாம்னு ஒருத்தன் தம்பி கேங்ல எனக்கு பழக்கம்.அவன்கிட்ட முதல்ல போவோம்"

"இப்பவே போன் பண்ணு"

" இரு கூப்பிடுறேன்" என்ற குற்றாலம் போன் போட்டான்

"யார் ரா?" என்றது எதிர்முனை.

"அண்ணே! நான் குற்றாலம் பேசறேன்"

"சொல்றா சப்பை. என்ன மேட்டரு? பணம்னா போனை வைச்சிரு. உன்னை நம்பி பத்து காசு தரமாட்டேன்"

"தம்பியண்ணன் ஏதோ பவுடர் தேடுறதா கேள்விப்பட்டேன்"

"அதுக்கு என்ன இப்ப?"

" ஒரு பார்ட்டி கைல இருக்கு. பாத்தா பவுடர் அதே மாதிரி இருக்கு"

"அதை முதல்ல பாத்துருக்கியாடா நீ? விளையாட்டு பண்ணாதே"

"நிஜமா ண்ணே. நீ முதல்ல சாம்பிள் சரக்கை பாரு. அப்புறம் பேசு."

"சரி.எங்கே வரனும்"

"கிளப்புக்கு."

"அரைமணி நேரத்துல அங்கே இருப்பேன்" என்று போனை வைத்தான் சதாம்.

"போலாம்பா, "என்றான் குற்றாலம்.

கிளப்.

டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தனர் மூவரும்.

" யாரு இவன்?" என்றான் சதாம் வாசுவை காட்டி.

"இவர் தான் தயாரிப்பு"

"மாசம் நூறு கிலோ வேணும் தரமுடியுமா?"

"முதல்ல சரக்கை பாருண்ணே"

சதாம் சாம்பிள் பாக்கெட்டை பிரித்து ஒரு சிட்டிகையை எடுத்து மூக்கில் வைத்தான் அவனுக்கு எந்தவித்தியாசமும் தெரியவில்லை.

"அதேமாதிரிதான் இருக்கு. ஆனா சில டெஸ்டுக்கு பின்னாடிதான் கன்பார்ம் பண்ணமுடியும். இதுக்கு மட்டும் காசு வாங்கிக்க. தம்பிகிட்டபேசிட்டு கூப்பிடுறேன்"

"சரிண்ணே "

" இதுக்கு எவ்வளவுன்னு சொல்லு?"

"நீ சொல்லுப்பா." என்றான் குற்றாலம் வாசுவை பார்த்து.

" ஒரு லட்சம்" என்றான் வாசு.

"இந்தா." என்று இரண்டாயிரம் ரூபாய் கட்டை டேபிளில் வைத்தான் சதாம்.

வாசு அதை எடுத்துகொண்டான்.

"சரி. கிளம்பு. நானே கூப்பிடுறேன்" என்றான் சதாம்.

இருவரும் கிளம்பிய பின்பு யாருக்கோ போன் செய்த சதாம்" துரைபாண்டியன் மாதிரியே இன்னொருத்தன் வந்துருக்கான்.அவன் கொடுத்த சாம்பிளை டெஸ்ட்பண்ணிட்டு பேசிக்கலாம்" என்று போனை அணைத்தான்.

அவன் தன்னுடைய காரை நெருங்கிய போது டிரைவர் பதட்டத்துடன் "நீங்க வரமாட்டிங்கன்னு நினைச்சேன்" என்றான்

சதாம் புரியாமல் ஏன் என்றான்.

"இப்ப ரெண்டு போலீஸ்காரர்கள் போனதை பார்த்தீர்களா?"

"போலீசா? யாரு?"

"கேப்பீங்கன்னு போட்டோ எடுத்து வைச்சிருக்கேன். பாருங்க" என்ற டிரைவர் போட்டோவை காட்டினான் அதில் வாசுவும் குற்றாலமும் இருந்தனர்

"இவனுக போலீசா?" என்றான் சதாம் அதிர்ச்சியுடன்.

"துரை பாண்டியனை காப்பாத்தி ஜெயில்ல போட்ட தே இவனுக தான் .இதுல ஒருத்தன் இன்ஸ்பெக்டர். இன்னொருத்தன் சப் இன்ஸ்பெக்டர்.எப்பவும் மப்டில தான் இருப்பாங்க" என்றான் டிரைவர்.

சதாமின் முதுகில் வேர்வை ஊறத்தொடங்கியது

#தொடரும்

வியாழன், 9 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்8

ஆப்ரேசன்அஷ்டவக்கிரன்

அத்தியாயம் 8

"வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார்.
மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன்
சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம்
அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல்
மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த
மகரிஷியின் அந்த விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான்.
இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.

உன்னோட ராஜ வாழ்வும்,
பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.

ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.
தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.

பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.
முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.

எந்த நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க
இந்த வாழ்க்கை நிலையில்லாதது என்றார்."

துரைபாண்டியன் கைதிகளை உயரத்தில் இருந்து கண்காணிக்கும் வாட்சர் டவரில் இருந்து விழுவதை முதலில் பார்த்தது வாசு தான் . அதற்கு முந்தைய தினம் இரவு தான் தன்னுடையஅண்ணன் அருணாசலத்தை பற்றி கனவு கண்டு விழித்து கொண்டு விட்டிருந்தான் அவன்.

அப்போது இருவரிடையே நடந்த உரையாடலின்போது தான் தம்பியிடமிருந்து தப்பிக்க நான்காவதாக ஒருவழியை கூறியிருந்தான் அவன். தம்பியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி பழைய நினைவுகளை இழந்ததுபோல் நடிப்பது இல்லை சித்த சுவாதீனமானவனைப்போல் நடிப்பது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தாலும் துரைபாண்டியன் மீதான தம்பியின் பிடி தளர்ந்துவிடும். துரையின் மகளை பிடித்து வைத்து மிரட்ட வேண்டிய தேவையும் அவனுக்கு இல்லை. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் திட்டத்தை வாசு அவனிடம் கூறியிருந்தான்.

தன்னுடைய திட்டத்தைத்தான் துரை இப்போது நிறைவேற்றிவிட்டான் போலிருக்கிறது என்று வாசு நினைத்தான். ஆனால் அவனது தலையிலிருந்து உண்மையாகவே ரத்தம் வெளியேறியதை பார்த்தபோது அவனது நினைப்பு தவறு என்று புரிந்தது.தம்பியின் எதிரிகள் இருந்த சிறை அறையில் சந்தோஷ கொண்டாட்டங்கள் தொடங்கிய போது தான் தன்னை மீறி எதிரிகள் துரையை தொட்டுவிட்டார்கள் என்பது அவனுக்கு புரிந்தது. அதில் ஒருவன்" நீ இருக்கும்போதே சம்பவம் பண்ணிட்டோம். பாத்தியா? "என்று அடிக்குரலில் அவனை கேலி செய்தபோது வாசுவிடம் கையலாகாத கோபம் ஒன்று பிறந்தது. நாளை காலை அவனுக்கு விடுதலை. இப்போது அடி தடியில் ஈடுபட்டு அதை கெடுத்து கொள்ள அவன் விரும்பவில்லை. எனவே மவுனமாக இருந்தான்.

படுகாயமடைந்த துரை ஜெயில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.அவனுக்கு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெயிலர் இந்த சம்பவத்தை தம்பியிடம் தெரிவித்த போது அவன் குமுறி கொந்தளித்துவிட்டான்

"என்னதான் பண்றீங்க எல்லாரும்? இவ்வளவு பணம் வாங்கிட்டு அவனை சம்பவம் செய்யவிட்ருக்கீங்க? அவன் எனக்கு பொன்முட்டையிடும் வாத்து. அவனை எப்படியாவது காப்பாத்துங்க"

"உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை. ஆனா தலையில் பலமா அடிபட்டதுல?"

"பழச மறந்துட்டானா?"

"இல்லைங்க. பைத்தியமாயிட்டான்"

"என்னய்யா சொல்ற?' என்கிட்ட துப்பாக்கி இருந்தா முதல்ல உன்னைத்தான் சுடுவேன்"

"சுடுங்க. உங்ககிட்ட வாங்குன பணத்துக்கு நாலுதடவை சாகலாம்"

"சுட மாட்டேன்னு நினைச்சு பேசுற போல. அடுத்த மாசம் 5 ம் தேதிக்குள்ள ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு அனுப்பியாகனும். இவன் வேற இப்படி பண்ணிட்டான். இவனை மறுபடியும் ஜெயிலுக்குத்தானே கொண்டு போவீங்க?"

"இல்லைங்க. அது சரிவராது. அவனோட டிரீட்மெண்ட் முடிஞ்சதும் மனநல விடுதிக்குத்தான் அனுப்பனும். நார்மலான ஆட்களோட அவனை வச்சிருக் கமுடியாது. அது தான் புரொசிஜர்.,"

"ஓ! இது வேறயா? அவனுக்கு அசிஸ்டெண்டா ஒருத்தன் இருந்தானே? அவன் பேரு கூட?"

"வாசு"

"ஆங். அவன் தான்.அவனால இதை செய்ய முடியுமான்னு கேட்டு பாரு."

"அவன் வெறும் எடுபிடிங்க. அந்த துரை தன்னோட தொழில் ரகசியங்களை சொல்ல சான் சே இல்லை."

' கல்லை வீசு.மாங்காயா கல்லான்னு பார்ப்போம். உட்கார்நத இடத்துலேயே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லாதே"

"சரிங்க. நாளைக்கு அவனுக்கு விடுதலை. வெளியே போகும்போது இதைப்பற்றி கேட்கிறேன்"

"கேட்டுட்டு கூப்பிடு" என்ற தம்பி போனை அணைத்தான்.

மறுநாள் ஜெயிலர் அறையில் கையெழுத்து போட்டுவிட்டு கைதிகள் உடையை துறந்து தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டிருந்தான் வாசு.

துணி மாற்றிகொண்டவன் மீண்டும் ஜெயிலர் அறைக்குள் நுழைந்தான்.

"இனிமேலாவது ஒழுங்கா இரு" என்றார் ஜெயிலர் மனதிற்குள் எதையோ யோசித்தபடி.

"சார். ஒரு விண்ணப்பம். நான் துரைபாண்டியனை ஒரு தடவை பாக்கனும். அதுக்கு நீங்க அனுமதி தரனும்

"அவன் சுயநினைவில் இல்லையேப்பா. அவனை பாத்து என்ன பண்ண போற?"

"தொழில் கத்து கொடுத்த குரு சார். கடைசியா ஒரு தடவை பாத்துட்டு போயிர்றேனே?"

"அப்ப முழுசா தொழில் கத்துகிட்டியா?"

"இல்லை.சார். எடுபிடிதான் சார் நானு. கோடிகளில் கொட்டும் விசயத்தை யாராவது சொல்லிதருவாங்களா சார்"

"அப்ப உனக்கு ஒன்னும் தெரியாது"

"சத்தியமா தெரியாது சார். எனக்கு வித்தை தெரிஞ்சா நேரா தம்பி கிட்ட போயிடமாட்டேன்?"

"அதுவும் சரிதான்."

"நானும் ஒழுங்கா படிச்சிருந்தா என்னோட மாமா மாதிரி போலீசாகி இருப்பேன்"

"உங்க மாமா போலீசா?"

"இல்லை சார். அவரும் போலீசாகனும்னு ஆசைப்பட்டாரு"

" பட வா' ஓடிரு. யோவ் செண்ட்ரி இவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் அந்தலூசைகாட்டுய்யா"

"ரொம்ப தேங்க்ஸ் சார்."

வாசு செண்ட்ரியோடு ஜெயில் ஹாஸ்பிடல் நோக்கி நடந்தான்.

வார்டுக்கு வெளியே நின்றுகொண்ட செண்ட்ரி" நீயே உள்ளே போய் அவனை பாரு" என்றார்.

"நீங்க கூட வரலை?"என்றான் வாசு.

"நான் உள்ளே வந்தா துப்பாக்கிய பிடுங்கிக்குவான் யா. அவனிடம் திரும்ப வாங்க முடியாது. ரெண்டுபேரும் ராணுவ ரகசியமா பேசபோறீங்க? நீ ஒரு மொள்ளமாரி. அவனோரு முடிச்ச விக்கி பாத்துட்டு சீக்கிரம் வந்துசேரு" என்றான் செண்ட்ரி.

வாசு உள்ளே நுழைந்தபோது துரைபாண்டியன் ஆடிகொண்டிருந்தான்.அவனது கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு படுக்கை காலோடு இணைக்கப்பட்டிருந்தது.

வாசுவுக்கு அவனது நிலைமையை பார்த்து பரிதாபமாக இருந்தது.

"வாத்யாரே" என்றான் மெல்லிய குரலில்.

பாபாமுத்திரையோடு ஆடிக்கொண்டிருந்ததுரை ஆட்டத்தை நிறுத்தினான்.

"இதெல்லாமஉண்மைன்னு நினைச்சியா?" என்றான் கண்ணடித்தபடி.

"நல்லாவேசம் கட்ற வாத்தியாரே!" என்றான் வியப்புடன் வாசு.

"அவர்கள் என்னை கொல்ல வந்தது உண்மை. மேலிருந்து தள்ளிவிட்டதும் உண்மை. காயமானதும் உண்மை. இந்த நடிப்பு மட்டும் பொய். நீ சொன்னதை நான் சரியான இடத்துல யூஸ் பண்ணிட்டேன். டாக்டர்தான் குழப்பத்துல இருக்கான். எப்படியோ என்னை இங்கிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள்.என் உயிரை நான் காப்பாற்றிகொண்டுவிட்டேன். தாங்க்ஸ் வாசு"

"கடைசியா உன்னை ஒரு தடவை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். உன்னை இப்படி ஒரு நிலமைல பாக்க சந்தோஷமா இருக்கு"

"என் மகளை எப்படியாவது காப்பாத்து வாசு. உன்னை நம்பித்தான் நான் இருக்கேன்"

"கவலைப்படாதே வாத்யாரே. சொன்ன சொல்லை காப்பாத்துவான் இந்த வாசு. உன் பொண்ணோட உன்னை வந்து பாக்குறேன். ஆனா உன் பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாதே? நீயும் போட்டோ காட்டலை.நானும் பாக்கலை. பின்ன எப்படி அடையாளம் கண்டுபிடிக்குறது?"

"சிம்பிள். தம்பியை பிடி. அவனிடம் இருப்பதுதான் என் மகள். அவனை நெருங்க ஒரே வழி நான் கற்றுகொடுத்த வித்தையை நீ அவனிடம் காட்டுவதுதான்"

"எனக்கு முழுசா தெரியாதே?"

"இப்போதைக்கு அவன் 80 பர்செண்ட்டே போதும்னுதான் நினைப்பான்.இந்தா இதை வெளியே போய் படி" என்ற துரை ஒரு உருட்டப்பட்ட சீட்டை அவன் கைகளில் திணித்தான்.

அதை வாங்கிகொண்டு"டிரை பண்றேன் வாத்யாரே" என்ற வாசு அங்கிருந்து செண்ட்ரியோடு வெளியேறினான்.

சன்னல் வழியாக அவன் போவதை பார்த்து கொண்டிருந்த துரைபாண்டியன தனக்குள் சிரித்துகொண்டான். "டெல்லி அப்பளம்" என்று முணுமுணுத்தான் துரை.

உண்மையில் தனக்கு தெரிந்த நூறு சதவீத தொழில் நுணுக்கத்தை அவன் வாசுவிற்கு கற்றுகொடுத்துவிட்டான். ஆனால் வேண்டுமென்றே எண்பது சதவீதம் மட்டுமே கற்றுகொடுத்ததாக வாசுவிடம் பொய் சொல்லிகொண்டிருந்தான். அதற்கு அவன் டெல்லி அப்பள டெக்னிக் என்று பெயர் வைத்திருந்தான்.

டெல்லியில் நடந்த ஒரு பொருட்காட்சியில்தான் அந்த அப்பளம் முதலில் அறிமுகமாகி சக்கைபோடு போட்டது. அதை எப்படி தயாரிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அதை தெரிந்துகொள்ள விரும்பிய ஒருவன் அப்பளமாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக வேலைக்கு சேர்ந்தான்

அப்பளமாஸ்டர் ஐந்து டப்பாக்களில் ஐந்துமாவுகளை கொட்டிவைத்து குறிப்பிட்ட விகிதங்களில் அந்த மாவை கலந்து அப்பளத்தை உருவாக்குவதை அவன் பார்த்தான். அந்த ஐந்துவகை மாவுகள் என்னவென்று அவனுக்கு தெரியவில்லை. கலக்கும் விகிதமும் தெரியவில்லை. முதலில் மாவை கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன் மாஸ்டர் வாங்கும் மளிகை கடையில் விசாரித்தபோதுதான் தெரிந்தது மாஸ்டர் ஒரே மாவை வாங்கித்தான் ஐந்து டப்பாக்களில் கொட்டி தன்னை திணற அடித்திருக்கிறார் என்று. புத்திசாலிகள் ரகசியத்தை வெளியே சொல்வதில்லை. காரணம் கற்றுகொண்டு தனக்கு எதிராக கடைபோட்டுவிடுவானோ என்ற பயம். அதே பயம்துரைக்கும் இருந்தது. அதனால்தான் அவன் நீ இன்னும் முக்கியமான விசயத்தை கற்றுகொள்ளவேயில்லை என்று பயமுறுத்தி கொண்டிருந்தான்.

தான் ஒரு டிரக் டேஸ்டராக மாறியதே தெரியாமல் சிறையிலிருந்து வெளியேறி கொண்டிருந்தான் வாசு. அவனுக்காக வெளியே குற்றாலம் காத்துகொண்டிருந்தான். அந்த சிறையில் இரண்டாவது டிரக் டேஸ்டர் உருவாகிவிட்டிருந்தான்