வேலை மும்முரத்தில் இருந்த போது "இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கு சாகப் போறீங்க.!"என்றது எதிர்காலம் கணிக்கும் பியூச்சர் பாட்.மனித சுரப்பிகளையும்,நாடி,வெப்பநிலைகளை கண்காணிக்கும் வாட்ச் போன்ற கருவிதான் பியூச்சர்பாட்.செல்,கேமிரா,ப்ளூடூத்,பேப்பர்,டிவி,எதிர்காலம் எல்லாமும் அதனுள் அடக்கம்.அது என் கையில் அடக்கம்.
"என்ன சொல்ர.?"என்றேன் பதட்டமாய்.
"மதியம் ஒன்றரை மணிக்கு எதிர்பாரா துரோகத்தால் அட்ரீனல் எகிறி நீங்க தற்கொலை முடிவுக்கு போவீங்கன்னு ரிப்போர்ட் சொல்லுது.!"
"உயிரோட இருக்க வேற வழியில்லையா.?"
"அது அதிர்ச்சிய எப்படி மடை மாத்துகிறீர்கள்,எதிர் கொள்கிறீர்கள் என்பதை பொருத்தது.!"
"குடும்பத்துலயா,தொழில்லயா அந்த துரோகம்.ஹிண்ட் கொடேன்.!"
"ஒரு மணிக்கு லஞ்சுக்கு வீட்டுக்கு போவீங்க.!அப்ப துரோகத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கலாம்.கூடவே மரணத்தையும்.!"
"வீட்டுக்கு போகலைன்னா சாகாம இருக்கலாம் இல்லையா.?"
"இப்போது தப்பிக்கலாம்.பின்னாளில் இதே துரோகம் உயிர் குடிக்கும்.!"
"இன்னைக்கு வீட்டுக்கு போகலை.!"
உணவைவிட உயிர் பெருசு.!
நான் யோசிக்க ஆரம்பித்தேன்.வீட்டில் மனைவி தவிர யாருமில்லை.அவளது பியூச்சர்பாட் நெம்பரை சர்ச் செய்த போது அவள் வீட்டில் இருப்பதை காட்டியது.என் தம்பி வினோத்தின் நெம்பரை போட்ட போது அவனும் வீட்டில் இருப்பதை காட்டியது.இதுதான் அந்த துரோகமா.?வேலையற்று திரிபவனுக்கு கிடைத்த உபரி வேலை.!யாரை தண்டிப்பது.?மனைவியையா.?இல்லை இவனையா.?இல்லை நானே சாவதா.?யோசித்தபடி சர்ச் செய்து கொண்டிருந்தேன்.கொதிகலனாக உள்ளம் கொதித்து கொண்டிருந்தது."டைட்டன் கிரகசுரங்க வேலைக்கு ஆட்கள் தேவை.!"
என் தம்பியின் விவரங்களை அனுப்பி அது ஏற்றுக் கொள்ளப்பட்டு நாளை வரவும் என்று பதில் ஒளிர்ந்தது.இரண்டரை மணிக்கு வினோத்துக்கு போன் போட்டேன்."பாரு வினோத்.!எங்கம்பெனில ஆள் குறைப்பு பண்ராங்க.!இனியும் உன்ன சுமக்க முடியும்னு தோணலை.!உனக்கு டைட்டன்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.மூட்டை முடிச்செல்லாம் எடுத்துட்டு காலைல கிளம்பு.!"பதிலை கேட்காமலே தொடர்பை துண்டித்தேன்."ஒரு பிரச்சனைய சமாளிச்சிட்ட.!அடுத்ததை என்ன பண்ணப் போற?"என்றது பியூச்சர் பாட்.
"அவள தண்டிக்கப் போறேன்.!"
"எப்படி.?"
"நைட்டு தெரியும்.!"
இரவு ஒன்பது மணிக்கு நான் குடிபோதையில் லூலுவுடன் கதவை தட்டிக் கொண்டிருந்தேன்.திறந்தவளைபார்த்து "வினோத் எங்க.?"
"பிரண்டு வீட்டுக்கு போயிட்டான்.ஆமா இது யாரு.?"
"இவ லூலு.இவளை இன்னைக்கு நைட்டு விலைக்கு வாங்கியிருக்கேன்.ஐ மீன் இவ உடம்பை.என்ன வேணா பண்ணலாம்.!வா கண்ணு போலாம்.!"
நான் லூலுவுடன் பெட்ரூமை நோக்கி போனபோது "நான் உங்களுக்கு என்ன குறை வைச்சேன்.?"என்ற என் டைலாக்கை அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
"இதுதான் பனிஸ்மெண்டா.?"என்றது பியூச்சர்பாட்.
"நீ மிஷின்.மனித சைக்காலாஜி உனக்கு புரியாது.!சாகப் போறதை சொன்னியே தவிர நான் ஏன் சாகனும்னு சொல்ல முடிஞ்சுதா? நியாயப்படி நான் நல்லவன்.நான் எதுக்கு சாவனும்.?நான் செத்திருந்தா இவங்க ஜோடி சேர்ந்திருப்பாங்க.!எந்த தப்பும் செய்யாத நான் ஏன் சாகனும்.?தப்பு செஞ்சவங்கதான் தண்டனை அனுபவிக்கனும்.பாட்.!நான் லூலுவோட கெட்ட காரியம் பண்ண போறேன்.வீடியோ எடுத்துராதே.!"
"என்னால் மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை."பாட் தன்னைத்தானே அணைத்துக் கொண்டது.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக